பூர்வீக சொத்து என்றால் பங்கு உண்டு. சுயசம்பாத்தியம் என்றால், அம்மா இறப்பதற்கு முன், அவருக்கு பின் அத்தனை சொத்துக்களும் மகன்களுக்கு மட்டுமே என்று உயில் எழுதி வைத்திருந்தால் அதில் மகளுக்கு உரிமையில்லை. அதே நேரத்தில் மகளுக்கு பங்குண்டு என எழுதியிருந்தாலோ அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் ஒரு பங்கு மகளுக்கும் உண்டு.
ஐயா வணக்கம். நான் எனது சொந்த வீட்டில் (என் தகப்பனார் தாயின் பெயரில் வாங்கியது) வசித்து வருகிறேன். இந்த வீடு நான் என் தகப்பனாருடன் கூட வேலைக்கு சென்று சம்பாதித்து வாங்கியது. நான் மைனராக இருந்ததால் என் தாயின் பெயரில் வாங்கப்பட்டது. எனக்கு ஒரு தங்கை உண்டு. எனது தாயாரும் தந்தையும் மரித்து 30 வருடங்கள் ஆகிறது. உயில் எதுவும் எழுதப்படவில்லை. அன்றையிலிருந்து எனது தங்கை என் பாதுகாப்பில்தான் இருந்துவந்தாள். பிறகு எனக்கு 1979ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு 1985ல் என் தங்கையை ரயில்வே வேலையில் உள்ள ஒருவரை மணமுடித்து வைத்தேன். கல்யாணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து திருமணத்தை நடத்தினேன். பிறகு என்னுடைய பணத்தில்் வீட்டை மீட்டேன். சில நாட்கள் சென்ற பிறகு 2005ல் ரூ.25,000 என் தங்கைக்கு கொடுத்தேன். அதற்கு ஈடாக என் தங்கை சொத்தில் எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அதில் பங்கு எதுவும் கேட்கமாட்டேன் என்று ரூ.25/- பத்திரத்தில்் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நான் அதை பதிவு செய்ய வில்லை. ஆனால் தற்போது வீட்டை விற்றுக்கொடுக்கும்படி கேட்கிறார். வழக்கு போடவும் செய்வேன் என்றும் மிரட்டுகிறார். என் வீட்டிற்கு சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை இதுவரை கிரமமாக கட்டி வந்துள்ளேன். நான் இப்போது ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று இபிஎப் உதவி தொகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். மூன்று பெண் குழந்தைகளுடன் இருக்கும் நான் இப்போது திடீரென்று வீட்டை விற்கமுடியாத நிலையில் உள்ளேன். தாங்கள் எனக்கு அலோசனைகள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.