இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள். அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."

(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************

இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.

உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:

"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:

"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************

கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,

"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************

இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.

"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************

சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?

தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.

****************

சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.

ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

*************************

ஆதார நூல்கள்

1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி

2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி

3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி

4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி

5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி

6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி

*************************

- கற்பக விநாயகம்

நன்றி: poar-parai.blogspot.com

More articles by கற்பக விநாயகம்

Comments

72 comments

72
Kathiravan Moorthy
இது போன்ற தவரான கருத்துகளை பரப்புவதை இத்தோடு விட்டுவிடுங்கள். ஜாதி என்பது அவர் பேருக்கு பின்னால் மட்டுமே அது மக்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதை ஜாதியும் சண்டை போடுகிற என்னமும் அவரிடம் இருந்தது இல்லை அவர் சமுதாய மக்களிடம் இருக்கிறது அதை வேண்டுமானால் நாம் குறை கூரலாம் அது அன்றைய காங்ரசார் ஏர்படுத்தியது இந்த உன்மையை முதலில் நீங்கள் அரிய வேண்டும் பிறகு கட்டுரை எழுதுங்கள் கருமத்தை எழுதுங்கள்
MakizNan
இவரை பற்றி பல்வேறு கருத்துகள் பலர் அறிய தந்தாலும், இவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட முதுகுளத்தூர் கலவரம் என்ற நூலில், இவரை பற்றிய உண்மை தகவல்கள் நிறைய உள்ளன. இக்கலவரத்தின் உண்மை நிலையெய் எடுத்துரைந்த கரணியத்தால் படுகொலை செய்யப்பட்டவர் தினகரன் என்னும் நிருபர்.

இவர் செய்த நல்ல செயல்: குற்ற பரம்பறை சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்யதது.

இவர் விட்ட சென்ற தவறான வழிகாட்டல்கள், அதை மூர்க்கமான முறையில் பின்பற்றும் அடியர்களால் , இன்று தென் தமிழகமே இருளில் முழ்கிகிடக்கிறது.
மகிழ்நன்
சாதி வெறிக்கு எதிராக இயங்குதலுக்கு உடைக்கப்பட வேண்டிய பிம்பம்...... முத்துராமலிங்கம் என்னும் சாதிவெறி பிம்பம்
Shanthi.S
எல்லா அரசிய்ல்வாதிகலும் ஒரெ மாதிரிதான். இவர் மாதிரிநல்லவர் வெசம் எல்லரும்தான் பொடுவாஙக.
Vinoth kumar
உங்களை போன்று பல விசகிருமிகள் தேவர் அவர்கள் மீது சேற்றை பூச நினைகிறார்கள்.... இதை வரலாறு தெரிந்த உலகம் ஏற்காது.....
Rev
சுபாஷ் சந்த்ர போஷ் பாரட்டிய தேவர் பத்தி தவராக எழுத வேன்டாம் ...
pandian
கற்பக விநாயகம் என்னும் இந்த நபரை போல் உல்ல சாதி வெரியர்கலால் தான் இன்னும் சாதி கலவரஙகல் உருவகின்ட்ரன, இந்த பொயை யாரும் நம்ப வேன்டாம்.
Ahilan
This is ridiculous, Mr karpaga vinayagam mind your words, He did so many good things but you didn't mentioned those are all here. If you want to review a life of legend you should know in and out about him. Don't do this same again. Please keep in mind that this article could hurt millions of peoples in Tamil nadu. And this kind of article is good enough to agitate the caste clashes in south tamil nadu. There are so many things there to discuss, handle your sword in care.
Sivam
Karpagam, you have 100% right to criticize anybody in the democratic country in your view but doesn't mean that you write anyhow what you think. People will know about you based on your essay that you are a stupid and you don’t have any idea about the Thevar. I am sure that you are "Jathi Verian" Think before you write anything. look at your evidence reference collection books. all written by one person like you stupid. you people only giving wrong direction to the innocent people in south tamil nadu and creating problems between communities. Anyway people will identify you as a black dot. Don’t hurt millions of people heart.
chonkan
இவரை போன்ர அயொககியர்கால் தமிலகதின் தென் பகுதி இன்ரும் முன்னெராமல் இருக்கிரது. ஆனால் வேர தலைவர்கலெ இல்லாததால் இவரை வத்து கொன்டாடுகிரது ஒரு கூட்டம்.
PARTHIBAN
அன்னா இது போன்ட்ரு மேலும் எலுதெ என் வால்துகல்..
elayaraja
varalarru athigam padittha malkkalukku unmai theriyum. thayavu seithu visha seithi parappa vendam... mudinthal nalla thalithiya thalavari kattungal yengalai vali nadathi sella. summa ippadi saathi veri yethiye yengal valkkaiyai alithju vidatheergal. thalith makkalin vote bank than mukkiyam.... yella saathiyilum sathiya veri ullathu... thever makkal mattum thannn veri kondavargal yenpathu pondra mayai pira sathi thalaivargal uruvagapattahu...
ungalin varalaru patriya thagaval yengalai munnokki sithikka vaikka vendum... ippadi tharam thalthi allaaaaaaaaaaa.
Ramesh Elumalai
Dear Friends,

It is disheartening to note that the kind of negative reaction this article recieves for some section of people. This shows Tamil society's incresing intolerrence towards even constructive criticism. It is always better to counter the criticism instead airing voices of intimidation. One should understand that no one is abive board.By iconising someone we obstruct many facts reaching the future generation. We need to deconstruct many personalities. They include Gandhi, Nehru, Periyar Ramaswamy, Annadurai and many caste based leaders. Muthuramalinga thevar is no exeption to this. I hope Keetru would post articles eulogicing Muthuramalingam if the same is supported by facts.

Tamil society has lost it's identity by blindly following many of its so called legendary leaders. Never repeat or encourage such trend. BE NEUTRAL AND UNBIASED. ACCEPT HISTORICAL MISTAKES AND INTROSPECT. THAT WILL SHOW WAY FOR REDEMPTION
balaji
dont write these rubbish things.. the above statements are purely false.. its a fake.. dont hurt the lovable peoples of devar by hard words like this.. it would boom in tamilnadu.. ok..dont continue.. first of all, delete
that imagined story..otherwise u will be caught..take care of yourself..next time i will visit this..if it remains same means then i would forward to the tamilnadu police commission and to the devar community..byeeeeeeeeeeeeeeeeeeeee
rams
காமராஜரை தவறாக விமர்சணம் செய்த தேவரை நாட்டைநேசிக்கும் யாரும் மன்னிக்க மாட்டார்கள்
ramesh elumalai
முட்டாள் இனத்திற்கு விடிவே கிடையாது. ஜாதி வெறீ தலைக்கு ஏறீ அடிச்சி அழிந்த பிறகு தமிழனல்லாதவனுக்குதான் கொண்டாட்டம். இப்படியே பேசிக்கிட்டு இருஙக, ஈழடத்தமிழன் கதிநமக்கு ஏற்பட ரொம்ப நாளீல்லை.
Dhana
முத்துராமலிங்கத்தை தேவராகவும், காமராஜரை நாடாராகவும், அம்பேத்கரை தலித்தாகவும் மட்டுமே பார்க்கும் சாதியவாதிகளே, கருத்து பதிக்கும்முன் கொஞ்சம் வரலாறை சமநோக்கில் படிக்க கற்றுக்கொள்ளுங்கள். கற்பகவிநாயகம் அவர்களே..உங்களுக்கு வேறு வேலை இல்லையா? திரு ரமேஷ் அவர்களே எதையாவது, எங்கிருந்தாவது சுட்டுக்கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்த நினைக்காதீர்கள்
EBU/PARIS
ELUTHIL KOODA VERI SILA AaTKALUKKU IRUPPATHU THERIGIRATHU ORU VAASAGAR SONNATHU POAL THEN THAMILAGAM IRUNNDATHARKKU "JAATHEE"ORU KAARANAM!!
Ramesh Elumalai
திரு தனா அவர்களே,
நான் எதையும் சுட வேண்டிய அவசியமில்லை. நடுநிலயோடு என் மனதில் பட்டதைதான் சொன்னேன். அதில் என்ன தவறூ கண்டீர். நீங்கள் முதலில் ஜாதி கண்ணாடியை கழற்றீ விட்டு பார்க்க துணீயுங்கள். சுட்டாவது நல்ல கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே.
Senthilnathan
திருவாளர் கற்பக விநாயகம் அவர்களே, நீங்கள் கூறும் பொய்களுக்கு அளவே இல்லையா... நீங்கள் மேற்கோள் காட்டிய புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்...
நீங்கள் கூறும் ஒரு கருத்தும் அதில் இடம்பெறவில்லை.

பசும்பொன் தேவர் அய்யா அவர்களை தேவர் சமூகத்தின் தலைவராக சித்தரிப்பதே முற்றிலும் தவறாகும். அவர் நேதாஜி போற்றிய தேசிய தலைவர் ஆவார்.

நீங்கள் எள்ளவும் சிந்தித்து எழுதியதாக தெரியவில்லை... நீர் கூறுவது போல் தலித் மக்களை அடியாட்களாக வைத்துக்கொள்ள ஒருவர் தன் சொத்துக்களை கொடுக்கமாட்டார்... மதுரையில் திரு. வைத்யநாத அய்யர் அவர்கள் தலைமையில் தலித்துகள் ஆலய பிரவேசம் செய்ய சில விஷகிருமிகள் தடையாக இருந்தபொழுது பசும்பொன் தேவர் அய்யா அவர்கள் முன்னின்று ஆலய பிரவேசம் நடத்தியதை மறப்பீர்கலானால் நீவிர் ஒரு சுத்த சந்தர்ப்பவாதி, பொய்யர், வரலாற்றை திரிக்கும் ***.

திரு. காமராஜரை Justice கட்சியினர் கடத்தி கொல்லமுயன்ற போது தேவர் அய்யா விடுத்த எச்சரிக்கையில் பயந்து பத்திரமாக விடுவித்த நிகழ்ச்சியை நீவிர் அறியாதவர் போலும். இல்லை அறிந்திருந்தும் சூதுரைக்கும் பொய்யர்...

இந்த மகத்தான தலைவனை இகழ்வோரின் அறியாமை கண்டு பரிதாபம் அடைகிறேன்
நீங்கள் தேவர் அய்யாவை பற்றி இகழ்வது ஒரு மங்காத சூரியனை பார்த்து குலைக்கும் நாயை போன்ற செயலாகும்...

அமைதியாக இருக்கும் சமூகத்தில் இதுபோன்ற பொய்யை பரப்பி சாதி வெறியை ஏற்றும் நீர் தான் மன்னிக்க முடியாத சாதி வெறியர் என்பதை அறிவிருக்கும் மக்கள் உணர்வர்...

இப்படிக்கு
செந்தில்நாதன்
MakizhNan
திரு செந்தில்,

முதுகுளத்தூர் கலவரம் அல்லது பயஙகரம் என்னும் நூலை படித்தால், விளக்கம் தெரியும்.
Senthilnathan
Thiru Makizhnan,
Please read this to get to know the truth
http://pasumpon-thevar.blogspot.com/
MakizhNan
Dear Senthil,

Thanks for the response. Two month ago, I have read that article. Of course, I have read many books which describing about Pasumpon, Kamaraj and Immanuvel, beliving that Pasumpon is having faults. Afet that I realized that history is not true and everybody is writting according to their caste feelings. It is like “irupatthiirandam Pulikesi”. Pasumpon is a good leader for his caste. If you read Muthukulatthoor kalavarm wrote by Chiookkalingam or immanuvel wrote by Tamizhvel, your view will be diffrent and hope it will be a impatial.
Senthilnathan
Dear Makizhnan,

I'm not viewing Pasumpon Thevar with a caste bias. I'm only saying he is not a leader for just a caste but he is a national leader.

My humble opinion is the ignorant people who are writing all these comments do not write based on any logic or proof.

These people do not have virtue to comment on a great leader like Pasumpon Thevar.

They writing as if they were watching all these incidents themselves.

One such debatable issue is Thevar's comments Netaji that he didnt die in any plane crash. Please read the Justice Mukherjee Commission of Inquiry submitted its report to the Indian Government on November 8, 2005. The report was tabled in Parliament on May 17, 2006. The probe said in its report that as Bose did not die in the plane crash, and that the ashes at the Renkoji Temple (said to be of Bose's) are not his.

Why cant be Thevar's claim of meeting Netaji be true?

My first question is what is the need for writing such a baseless article blaming someone who has expired. Dont you think this kind of articles will create a bitterness between the people belonging to two communities.

If these people, who are writing these kind of articles, intention is peace among people, they wont try to spread bitterness like this.

These people want to gain a propaganda for which they are using this kind of cheap unhealthy methods.

I would request these people to write this kind of articles in medias like newspapers with authentinc information.

Why are they not doing it? Because these are all baseless comments.

These people dont have any common sense or basic manners not to spoil the peace in the soceity. Actually these people are anti-social.
kumar
Dont Spoil The Great Leader Name.. Dont Spread lie ok..
Nanda
பசும்பொன் கட்டாயமாக ஒரு ஜாதிய பிம்பம்தான்....

அவரை தேசிய தலைவர் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஒவர்....
raja
மர்ரைகபட்ட இம்மனுவெல் செகரன் படுகொலை
VINOTH THEVAN
u stupid idiot stpo d nonscence ur talking thevar a pathi thapa pesura vela vachikathinga da movana... mudinja nerla vnathu pesunga da ...... madhura pakam vanthudatha da karpagam avalo than ne..............
RaJeSh aNjaThEvAr ,australia
தேவரை பட்ரி இன்ட்ரும் பேச குடிய அலவிர்கு அவர் சேர்து வைதிருகிரார் புன்னியம் மட்ரும் தேச பக்தி ,.....
vijay thevar
hello friend plz don't spread rumours. lot of people from thevar community r lost life for indian freedom .compare to other cast thevar community peoples had guts to fight against british gov. dont make us angry...south tamilnadu-la nangatha athigam therinziko..
be carefull...
mani
neenga ellam ippa sathi veri illama irukkingala , ungaloda comments a parthale theriuthu oruthan thalithu nu solran innoruthan devar nu sollran anna rendu perum oru thalaivara pathi avathuru parappuringa. he is one of freedom fighter its not caste leader.
Pandian
Iyya karbagame...

Un pera solliyirukke.... un adress a konjam koduthina rembo savuriyama irukkum ****** *****
ஊர்வைத்தமிழ்
என்னப்பா பாண்டியா,
நீ என்ன தமிழ் நாட்டு ரௌடிய இல்லை இன்டர்நேஷனல் ரௌடியா? அவர் அட்ரஸ் தெரிஞ்சா எல்லா முடியையும் புடிங்கிடுவியா? சாதியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒரு தனி மனித செய்கையாக முத்துராமலிங்கத்தின் செய்கையை பாருங்கள். அவர் ஆள் வைத்து வெட்டியது தியாகி இம்மானுவேலுவை அல்ல மிகபெரிய
தமிழினத்தின் தலையெடுப்பை. சற்று சிந்தியுங்கள், கீ.பி 2 -ம் நூற்றாண்டுக்குப்பின் நம் தமிழ் மண்ணை ஒரு இனககலப்பிலாத் தமிழன் ஆண்டதாக தெரியவில்லை.
(நீங்கள் உடனே ராஜராஜனை சொல்லலாம் . ராஜராஜன் என்ன செய்தான் ?,
ஆரியர்களை கொண்டாடி இம்மண்ணின் மைந்தர்களிடம் இருந்து அவர்களின் நிலங்களைப் பிடுங்கி கோவில்களுக்கும் தெலுங்கர்களுக்கும் ஆரியர்களுக்கும் கொடுத்தான் . அவன் சோழ பரம்பரையாக இருந்தால் தம் மக்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி
அடுத்தவனுக்கு கொடுக்கமாட்டான். தம் மக்கள் தம் சொந்த நிலங்களிலேயே விவசாயக்கூலியாக மாற்றம் பெற்று , தம் சொந்த நிலத்தில் கூலிகளாக வேலை செய்து , ஒரு படி நெல் கூலி உயர்வுக்காக 44 தமிழர்களின் உயிர்கள் எரித்த்துக்கொல்லப்பட்ட கொடுஞ்செயலுக்கு தானும் ஒரு காரணமாக இருந்திருக்க மாட்டான் . தஞ்சை பெரிய கோவில் என்ன நம் பெருமைச்சின்னமா ? இந்து புராண கோவில்கள் தமிழனின் அடிமைச்சின்னங்கள் அல்லவா! )
அப்படிப்பட்ட தமிழினத்தின் விடிவெள்ளியாக தோன்றியவர் தான் இம்மானுவேலுவே தவிர
ஆரிய தெலுங்கர் அடிவருடியல்ல முத்துராமலிங்கத்தைப்போல!
கள்ளர்களும் எமது தமிழினத்தின் அங்கமே. ஒற்றை முத்துராமலிங்கத்தை நாங்கள் யாரும் ஒட்டுமொத்த கள்ளர் இனமாக காணவில்லை . அவர் செய்த ஒரே நல்ல காரியமாக பொதுவாக சொல்லப்படுவது குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பை . அவரை விட பெரியார் , ரோசாப்பு துரை என இன்னும் பலர் கைம்மாறு
பாராது குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்தனர். இவர்களின் சேவைக்கு முன்னாள் முத்துராமலிங்கத்தின்
தன் நலமும் சார்ந்த போராட்டம் பெரிதல்ல ! மேலும் தமிழ் இனத்தினை பெருமளவு துன்புருத்தினார் அவர் வாழ்ந்த காலத்தில் சாதியின் பெயரால். இம்மானுவேல் கொலைக்குற்ற விசாரிப்பு நீதிமன்றத்திற்கு வெளியே
காரில் அடியாட்களுக்குடன் நின்று கொண்டு, "எவன் சாட்சி சொல்ல வருகிறான் என்று பார்ப்போம் " என்று நின்றதை அப்போதைய சட்டப்பேரவை விவாதத்திலேயே கண்டிக்கப்பெற்று, சாட்ட மன்ற குறிப்பில் இன்றும் உள்ளதை நீங்கள் பொய் என்று சொல்கிறீர்களா? இதைப்போல் இன்னும் நிறைய போக்கிரித் தனங்களை கூறிக்கொண்டே போகலாம் .
அவருடன் அண்ணன் அழகிரியை ஒப்பிடுவோமேயானால், அண்ணன் அழகிரி ஒரு கோடி முறைக்கும் சிறியவர் ஆவார் .
நீங்கள் மற்றும் கீற்று வாசகர்கள் அல்லாது கணக்கில்லாத மக்கள் உங்களின் செய்கைகளை கீற்றுவில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் .
கற்பகமும் மிகப்பெரிய தமிழினத்தின் ஒரு அங்கம். தனி மனிதன் அல்ல.
தமிழினம் இப்பொழுது பீனிக்ஸ் பறவையாய் விண்ணை நோக்கி அதி வேகமாய் எழுந்து கொண்டிருக்கிறது .
இது தமிழரின் எழுச்சி, தமிழ் குலத்தின் மறுமலர்ச்சி !
kamal
அட பாவிகளா...! ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும்தான் வீரம் இருக்கு மத்தவங்க அப்பாவினு எல்லா இடத்தில உம் ஒரு நினைப்பு இருக்கு... ஆசிரியரே அதை உடைக்க ஏதாவது எழுதுங்க... please...
Guest
தேவர் என்பதே சாதி பட்டம் கிடையாது அதை என்னைக்கு இந்த சாதி வெறியன் முத்து ராமலிங்கம் தன்னுடைய பெயருக்கு பின்னால் போட்டு கொண்டா* அன்னைக்கே அது சாதி பெயராகவும் ஏனைய தமிழ் மக்களால் அருவருக்க கூடியா பெயராகவும் மாறி விட்டது தான் உண்மை . பூலித்தேவன், மருது சகோதர்கள் என ஏகப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள் இருக்க இவங்க இந்த சூனியம் பிடித்தவ* தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தான் வேதனையாக இருக்கிறது . நல்ல தலைவர்கள் ( காமராசர் , சௌந்திர பாண்டியன் ) கிடைத்தால் சமூகத்தில் கடைகோடியில் இருந்த ஒரு சமுதாயம் எப்படி சமூகத்தின் எல்லா துறைகளிலும் முன்னேறி நிற்கும் எனபதற்கு ஒருகாலத்தில் சாணார் ( சாணார் என்ற சொல் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது ஆகும். தமிழகத்தில் ஒருகாலத்தில் ஜைனர்களாக இருந்தவர்களே பிற்காலத்தில் சகல ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சாணார்கள் என்று அழைப்பட்டனர் என்று கூட ஒரு கருத்து உண்டு) என்றழைக்கப்பட்ட நாடார் சமூகம் நல்ல உதாரணம் . முன்னேருவதர்க்கு உரிய அத்துணை காரணிகள் இருந்தும் கற்காலத்தை நோக்கி செல்லும் சமுதாயத்துக்கு முத்துராமலிங்கத்தை தலைவனாக கொண்டாடும் சமுதாயம் நல்லதொரு உதாரணம்
கடல் நிலவன்
தேவர் என்பதே சாதி பட்டம் கிடையாது அதை என்னைக்கு இந்த சாதி வெறிய* முத்து ராமலிங்கம் தன்னுடைய பெயருக்கு பின்னால் போட்டு கொண்டா* அன்னைக்கே அது சாதி பெயராகவும் ஏனைய தமிழ் மக்களால் அருவருக்க கூடியா பெயராகவும் மாறி விட்டது தான் உண்மை . பூலித்தேவன், மருது சகோதர்கள் என ஏகப்பட்ட விடுதலை போராட்ட வீரர்கள் இருக்க இவங்க இந்த சூனியம் பிடித்தவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது தான் வேதனையாக இருக்கிறது . நல்ல தலைவர்கள் ( காமராசர் , சௌந்திர பாண்டியன் ) கிடைத்தால் சமூகத்தில் கடைகோடியில் இருந்த ஒரு சமுதாயம் எப்படி சமூகத்தின் எல்லா துறைகளிலும் முன்னேறி நிற்கும் எனபதற்கு ஒருகாலத்தில் சாணார் ( சாணார் என்ற சொல் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது ஆகும் .தமிழகத்தில் ஒருகாலத்தில் ஜைனர்களாக இருந்தவர்களே பிற்காலத்தில் சகல ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சாணார்கள் என்று அழைப்பட்டனர் என்று கூட ஒரு கருத்து உண்டு) என்றழைக்கப்பட்ட நாடார் சமூகம் நல்ல உதாரணம் . முன்னேருவதர்க்கு உரிய அத்துணை காரணிகள் இருந்தும் கற்காலத்தை நோக்கி செல்லும் சமுதாயத்துக்கு முத்துராமலிங்கத்தை தலைவனாக கொண்டாடும் சமுதாயம் நல்லதொரு உதாரணம்
koomappatti singam
The comments and folow up comments on this article wll only aggravate the ill feelings developed by the affected communities. It is certain that certain educated people are not willing to give up their caste affinity and propagate the same through others. Blaming the Aryans (read Brahmins) for each and every evil of the Sociiety is equal to saying that "Poonai Kankalai moodikkondal, ulagamay irundu vittadhu"
saravanan
please Don't write this much...please STOP your own make store telling..Are you mad..
saravanan
please remove the article in this site...
Pandiyan
அறிவாளிகளின் என நினைத்துக் கொண்டிருக்கும் சில முட்டாள்களின் பார்வைக்கு...

http://uravukkalam.blogspot.com/2010/02/3.html
kalai
எங்கள் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசிய தலைவர் தான் என்பது சில நாய்களுக்கு தெரியாது..இந்திய துணை கண்டதிலே மக்களை சந்திக்காமல் வெற்றி பெற்ற முதல் தலைவர் தேவர் பெருமகன் தான்.இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆட்கள் தேவையென நேதாஜி அழைத்த போது நீங்க (நாடார்,தழித்) எல்லாம் மயிற புடுங்கிட்டு இருந்தீங்களா. தேசியமும் தெய்வீகமும் தன் இரண்டு கண்களாக வாழ்ந்த தலைவர் அவர்,அவரை பற்றி தவறாக எவன் எழுதுகிறானோ அவன்தான் உண்மையான சாதி வெறியன்..
Palaniraj
நண்பர்களே வேண்டாம்
ஜாதி வெறி ...
நாம் தமிழர் என்ற
எண்ணம் மட்டுமே
மேலோங்கி நிற்கட்டும்
பழனியப்பன்
கீற்று போன்ற தளங்கள் முத்துராமலிங்க தேவரை மோசமாக சித்தரிப்பது-தேவரினத்தை அடியோடு அழிக்க முயற்சிப்பது போன்றவற்றை மட்டுமே செய்து வருகின்றன.....தங்களை தாழ்த்தப்பட்டவர்களின் காவலர்களாக காட்டிக்கொள்ள தேவர்களை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கை மட்டுமே....
தாழ்தப்பட்டவர்களில் அருந்ததியர் பற்றி இவர்களுக்கு ஒருபோதும் கவலை இல்லை...
உழைக்கும் மக்கள் பற்றி இவர்களுக்கு ஒருபோதும் கவலை இல்லை-தேவர் ஜாதி மட்டுமல்ல இன்ன பிற பிற்பட்ட ஜாதியிலும்(உங்களால் ஜாதி இந்துக்கள் என வர்ணிக்க படுபவர்கள்) உழைக்கும் மக்கள் வறிய நிலையில் இருக்கிறார்கள்....நீங்கள் போற்றும் –வக்காலத்து வாங்கும் ஜாதியில் பண முதலைகள் –லஞ்சத்தில் கொழுத்த ஐ ஏ எஸ் ஐ பி எஸ் அதிகாரிகள் –அரசு அதிகாரிகள் லட்சக் கணக்கில் உள்ளனர்......இந்த நிலை பற்றி உங்களுக்கு கவலை இல்லை...
இதுதான் நவீன சாணக்கியம்-நீங்களே நவீன குல்லூக பட்டார்கள்...
ஒரு ஜாதிக்கு ஒரு நீதி எண்ணும் புதிய கம்யுனிசம் படைக்கும் முற்போக்கு வாதிகள்....
இணையத்தில் உங்களால் வாந்தி எடுக்கபடுவதேல்லாம் வரலாறு என இந்த ந”வீன” முற்போக்கு வாதிகளால் வாதிட ஆதார மாகின்றன....
இன்று தலித்களின் தலைவர்களாக உலாவரும் பலரும் முன்பு பகுத்தறிவு பாசறையின் ஜாதி மறுப்பு தொண்டர்கள்....இவர்கள் ஜாதியை உயர்த்தி பிடித்தால் தவறில்லை....ஆனால் தேவர்கள் என்ற இனமே அழிக்கப்பட வேண்டும் என்ற உங்களின் ஆவல் ....?...!
arulchezhian
கல்விக்கண் திறந்த காமராஜரை சாதிமத பேதமின்றி தமிழகமே போற்றிப்பாடும் போது இந்த சாதிப்பேய் தன்காலடி மண்ணை எடுத்து அவரைத் தூற்றுகிறது,
இந்த ஆளின் பேச்சுக்களை பார்த்தால் உண்மையிலேயே தேவர் ஒரு தெய்வத்திருமகன்தான்..!
k.srinivasan
படிக்காத மெதையை யெல்ல இனதவரும் போர்டுகிரார்கல் ஆனால் இந்த படித்த அரிவாலியை அவரது இனதவர் மட்டும்தான் பொர்டிப்பாடுகிரார்கல்.
senthill
MUDI SUDA MANNAR AYYA THEVARAI PATRI IVVALAVU AVADHURAHA PESUVADHU MUTRILUM TAVARANADHU.DHESIGATHAYUM DEIVEEGHATHYUM IRU KANGALAGHA NINNAITHAVAR.IVAR ORU THESYA THALAIVAR.NETHAJI POTRIA NALLAVAR.AYYA KARPAGHA VINAYAGAM AVARGALE ENGAL THEVAR SSLC THANDATHAVARTHAN ANAL KAMARAJARAI PONRU I IS THE CHIEF ENDRU SOLLUM ALAVUKU PADIPARIVILLATHAVARILLAI.AVAR THAIRIYAMAGA TAMILIL NAN THAN TAMILNATTIN MUDHALVAR ENDRU SOLLI IRUNTHAL TAMILAGHAM INNUM AVARAI PARATI IRUKUM. TAMILIL PESA THAYANGYA AVARAI VIDA ENGAL AYYA EVVALAVO MEL.ENTHA SATHIYIL ILLAI SATHI VERI.ELLA SATHIKUM OVVORU THALAIVAR IRUKKIRAR.AVARKAL OVVORUVARUKUM MARIYATHAI SELUTHATHAN PADUHIRATHU.ENNIKAYIL ATHIKAM ULLA NANGAL ENGAL AYYAVIRKU SELUTHUM MARIYATHAI MATRAVAR KANNIRKU PORAMAIYAI IRUKIRATHU.YARAI PARTHU SATHI VERIER ENDRU SOLGRIRGAL THAN SOTHUKKALAI INAM SASANAM SEYUM POLUTHU THANNUDAN DESIYA THONDATRIA 16 PERUKU PRITHU ELUTHI VAITHAR.ATHIL ARIGAN INATHAVAR 2 PER.NENGAL SONNA PADI SATHI VERI PIDITHIRUNTHAL YEN AVARKALUKU ELUTHI VAIKA VENDUM. AYYA THAYAVU SEITHU ITHAI PONDRU THAPPANA SEITHIYAI VARUNGLA SANTHATHIKU SOLLATHIRGAL.THIRU NETHAJI AVARGAL RANUVATHIRKU AL SERTHA POTHU ENGE PONEERGAL.AVAR SONNA ORU VARTHAIKAKA MATUMMALLA THESAPATRU IRUNTHTAL MARAVAR INA MKKAL SENTRANAR.

ATHU SARI MALIGAI KADAIL PATRU VARAVU PARKUM UNGALUKU THESA PATRU PATRI YENGETHERIYA POKIRATHU.
Albert
Wonerfull article, yet why thevar people get agitated by it?. Most violent events in south tamil nadu always instigated by this community for a long time, and they are proud of it too. Describing themselves brave and rest of the communitees as useless is can be seen in their blogs even today. But being this barbaric they lost many friends and isolated in the tamil community. They should become moderate and resonable if they are understand tamil culture. But to my knowledge they are too obedient to powerfull and too cruel to people who are powerless.
chandhana reddy
A Wonderfull article !!!!!!!!!!!
Perumal Thevan
This kind of articles has no social responsibility and will greatly serve the Dalit and Thevar communities.
MUNIYASAMY
மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார். இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர். இந்த எதிப்பை சமாளிப்பதற்காக, வைத்தியநாத ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார். பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.

இதை அறியாத சனாதனிகள், “மீனாட்சி கோவிலில் தரிசனங்களுடன் நுழைந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்” என்ற அச்சுறுத்தல் நோட்டிசை வெளியிட்டனர். இதற்கு பதிலாக தேவர், “ஸ்ரீ வைத்தியநாத ஐயர், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அரிஜனங்களை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறபோது சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகள் கழகம் விளைவிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன். ஹரிஜனங்களை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை ரத்தக்கறை படியச் செய்யப்போவதாக எல்லாம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத ஐயர் அரிஜனங்களை அழைத்து வருகிறபோது அடியேனும் வருவேன்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்”. என்றி துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்.

1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன் வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன் பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில் பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும் தயார் நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த அரிஜனங்கள் அங்கயற்கண்ணி மீனாட்சி தொழுது மகிழ்ந்தனர். இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சிங்கமே வந்துவிட்டது என்பதை எதிரிகள் உணர்ந்து கொண்டார்கள்.

1954 மார்ச் மாத்தில், அன்று “சென்னை ராஜதானி” என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், ” அரிஜன முன்னேற்றம்” பற்றிய விவாதம் நடந்தி. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24 அன்று தேவர் பேசியது கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,

“ஆதி காலத்தில் தொழிலின் பேரால் ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச் சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற உண்மை. அதற்கு உதாரணம் ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர் பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக, ஒரே பெயருடைய பலரை கூப்பிடும் பொழுது ‘இன்ன தேவர்’, ‘ இன்ன செட்டியார்’, ‘இன்ன ஐயர்’ என்று பெயர் வாய்த்த தமிழ் பெரியோர்கள், பெண்களை அழைக்கும் போது அந்த பெயரின் கடைசியில் வால் வைத்து கூப்பிடாமல், அதாவது, ‘இன்ன பிராமனத்தி’, ‘இன்ன செட்டிச்சி’ என்று கூப்பிடாமல், அனைவரையும், ‘இந்த அம்மாள்’, ‘அந்த அம்மாள்’ என்று கூப்பிடுவதுதான் பழக்கமாக இருந்து வருகிறது. இது நீண்ட காலமாக இந்த நாட்டில் அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும். அப்படி இருக்கும் போது ஆண்களுக்கு மாத்திரம் தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து, ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால் வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்’. என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும் உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.

ஒன்று வலது கரம்; இது உண்ணவும், என்னுடைய எண்ணத்தை எழுத்து மூலமாக வெளிப்படுததவும் பயன்படுகிறது. இன்னொன்று இடது கரம், உடம்பிலிருந்து வெளிவரும் அசுத்தங்களை அப்புறப்படுத்தி, உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.

ஆனால், இறைவனையோ, பெரியவர்களையோ வணங்குகிறபோது, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான் வணங்க வேண்டும். இதுபோல அனைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள் போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் செம்மையாக வாழ்த்திட முடியும்.”

1962 ல் பொதுத் தேர்தல் வந்தது. 14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றினார்கள். “நீண்ட நாட்களாகிவிட்டன அடியேன் உங்களின் ஒருமிப்பு சக்தியில் நின்று பேசி” என்று தனது உறைய ஆரம்பித்த தேவரின் பேச்சில் உதிர்ந்த முத்துக்கள் பின்வருமாறு.

பதவியை நான் நினைத்தவனுமல்ல; அப்படி நினைத்திருந்தால் அது என்னை பொருத்தவரையில் மிக எளிது.

தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செய்யும் கூட்டத்தைச் சேர்த்தவன் நான்.

நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.

நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ்காரர்களின் எதிர்ப்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.

18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்புவாதியாக இருக்கமுடியும்.

தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.

எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று. இரு கண்களும் சம சக்தியோடு செயல்பட்டாலன்றி ஜனநாகயம் வலிமையோடு நடக்க முடியாது.

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது. காசுக்காக காத்திருக்காமல் அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.

மேற்கண்டவாறு மணிக்கணக்கில் தனது பேச்சாற்றலால், மக்களின் உளங்களை தன் பால் ஈர்த்த தேவர் அவைகளின் கடைசி பேசும் அதுவே. ஆம் அதன் பின்னர் அந்த மனிதருள் மாணிக்கம் விண்ணகம் செல்லும் வரை எங்கும் பேசவில்லை.

பசும்பொன் தேவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும், அவருக்கு வாரிசு இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எழுதி வைத்த இனாம் சாசனம் பற்றி எத்தனை பேர் அறிவர்?

1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.

பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே. அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர். தீண்டாமை என்பது நாம் செய்யும் பாவம் என்ற மகாத்மா காந்தியடிகளின் சொல்லுக்கு ஏற்ப, நான் தமிழன், நான் இந்தியன் என்று முழக்கமிட்டவர் தேவர்.

பசும்பொன் தேவர் அரிஜனகள் மீது கொண்டிருந்த அன்பை, அதுவும் பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய காங்கிரஸ் கட்சியில் இருந்த அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த ஒருவர் சொல்லுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

1952 ல் பசும்பொன் தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆர்.எஸ். ஆறுமுகம் சட்டமன்ற உறுபினராக இருந்தார். 1957 ல் நடந்த தேர்தலின் போது நாடாளுமன்ற இரட்டை தொகுதிக்கு பொதுத் தொகுதியில் பசும்பொன் தேவர் போட்டியிட்டார். தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் தேவர் தம் கட்சின் சார்பில் ஒருவரை நிறுத்தினார். பசும்பொன் தேவரை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோருக்கான பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. அப்படி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம் சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த போது ஒருவர் வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதை தேவர் பார்த்துவிட்டு பையில் போட்டுக்கொண்டார்.

மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார். படித்துவிட்டு கையில் வைத்துக் கொண்டே பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ். ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். தேவர் நிதானமாகக் கூறினார்; ‘என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும் ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள் என்று தான் இருந்தது. நீங்கள் வற்புறுத்துவதால் நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ் ஆறுமுகத்தை நன்கு அறிவேன். ஆர்.எஸ் என்றே அவரை அழைப்பேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். நல்லவர். நல்ல பண்பாளர். சிறந்த நண்பர். நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர். எனது சகோதரனை போன்றவர்’ என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார். அதுவும் அரிஜன மக்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர் போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவ்வூர் மக்கள் எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.

சிறிதுநேரம் கழித்து நான் போனேன். நடந்ததை கூறினார்கள். எனக்கு போட மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ‘ நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக வாங்கிவந்த மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான் ஆனந்தப்படுகிறேன். நான் எதிர் கட்சியிலிருந்தும் என்னை பற்றி அப்படிக் கூறிய அந்த மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை’ என நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர் மாலையோடு ஓடிவந்தார். இது தேவருக்கு போட்ட மாலை. அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள் . அகவே, உங்களுக்கு அதை சூடுகிறேன்’ என்று சூதுவாது இல்லாமல் மாலை போட்டார். நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.

ஆம்! அரிஜன வகுப்பை சேர்த்த பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ். ஆறுமுகம் சொல்லிய இந்த நிகழ்விலிருந்து பசும்பொன் தேவரின் சாதி பேதமற்ற உள்ளதை அறியலாம்.

தேவர் திருமகனார் தனது பெயருக்கு ஏற்ற படி தேவர் இனத்திற்கு மட்டும் உரியவர் என்று நினைத்திருந்தனர் சிலர். ஆனால் தேவர் திருமகன் தமிழகத்தின் தங்கம், எல்ல இனத்திற்கும் பொதுவானவர் என்பதை பின்வரும் சம்பவம் விளக்கும்.
இராமநாதபுரத்தில் ஜாதிக்கலவரம் மூண்ட போது மதுரை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேவர் திருமகன் அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி. அவர்கள் காரில் கிளம்பிய போது, மதுரை கோரிப்பளையத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஓடிவந்து, நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார். அப்போது தேவர், “இது அரசியல் சூழ்ச்சி, இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும் ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப் பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச் சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும் அமைதி காக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு காவல் துறை வேனில் ஏறினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர் பசும்பொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின் மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர் தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது!
ராசுமறவன்
சாதி வெறி பிடித்த எவரும் தன்னுடைய சொத்துக்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதி வைக்கமாட்டார்கள். இப்பொழுது இருக்கும் அரசியல் தலைவர்கள் வேறு யாரும் முன் வருவார்களா? தலித் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு பொய் பித்தலாட்டம் போடும் திருமா,கருணாநிதி போன்றவர்கள் தன் சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுப்பார்களா? பசும்பொன் தேவரை சாதி வெறியன் என்று கூறும் கற்பகவிநாயகம் அவர்களே உங்களால் இதற்கு பதில் கூற முடியுமா?
Kumartuty
Kamarajarai parthu kevelamaga pesiyathu migavum varuntha thakathu kamarajar illai endral tamilnadu kalvi arivil pinthange irunthurukum.
Palanivel Rajan
எங்கள் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசிய தலைவர் தான் என்பது சில ****களுக்கு தெரியாது..இந்திய துணை கண்டதிலே மக்களை சந்திக்காமல் வெற்றி பெற்ற முதல் தலைவர் தேவர் பெருமகன் தான்.இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆட்கள் தேவையென நேதாஜி அழைத்த போது நீங்க எல்லாம் *** **** இருந்தீங்களா. தேசியமும் தெய்வீகமும் தன் இரண்டு கண்களாக வாழ்ந்த தலைவர் அவர்,அவரை பற்றி தவறாக எவன் எழுதுகிறானோ அவந்தான் உண்மையான சாதி வெறியன்..
munees
அனைத்தும் பொய் ... இதை எழுதியவந்தான் ஜாதி வெரியன். தேவர் மஹான் தேசிய தலைவர்.
vignesh
எதற்கு நண்பரே மக்களிடம் இப்படி ஜாதி வெறியை தூண்டி விடுகிறீர்.? இதில் என்ன உங்களுக்கு ஆனந்தம்.? கேட்டவர்களை நல்லவர்களாக சித்தரித்தாலும் பரவாயில்லை தயவு செய்து நல்லவர்களை இப்படி சித்தரிக்கதீர்.. முத்துராமலிங்க தேவர் மட்டுமல்லாது காமராஜர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற உலகம் போற்றும் உத்தமர்களை தவறுதலாக சித்தரிப்பவர்களை ஆண்டவன் ஒருபோதும் மன்னிக்கமாட்டார். பழைய தலைவர்களின் பெயர்களில் தான் சாதி இருக்கிறதே தவிர மனதில் இல்லை. அனால், இப்போது பெயரில் இல்லை சாதி, எல்லோருடைய மனதிலும் தான் இருக்கிறது சாதி. webக்கு சென்று google seachஇல் Old Dalith speak about muthuramalinga thevar என்று type செய்து videos openபண்ணி பாருங்கள். கெட்டவர்கள் கண்ணுக்கு குறைகள் மட்டுமே தெரியுமே தவிர நிறைகள் தெரியாது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். உங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னியுங்கள் நண்பரே.... இப்படிக்கு விக்னேஷ் ...
M.G.YUVARAJ
please every body should change dont mention caste name in anything
tear your caste certificate we are human we can think just think everybody equal in this world respect everyone everybody respect you
by yuvaraj
Prabhakaran
critisisam is not needed now. paricularly no one ask about the negative points of Thever. so Karpakam eassay is not necessory for any one. it will create many problem for the innocent people. mr Karpakam if you take any leader this tyoe of negative points may be.
sathya raj
இதெல்லம் ஒரு பிலப்பா? இப்பாடி கதை கட்டுபவாரை சும்ம விட கூடது,,,,,,,,,,
Dinesh
summa kadha kudukkadhinga yellarum. apo edhukku ella jadhi karangalum unga perukku pinnadi castle poduringa boss.........
m7kumars
Adutha velai so tukku vali illai. poi pulla kuttia Padika vainkada .MARAVAR - Vanthal puli nadunkum KALLAR- vanthal veethiee Kai kattum. AGAMUDAIYAR-pesinaal arangam adirum. Saathi enbadhu sandai poda illai . Ovvaru saathium sonna Neri padi vaalunkada .
raj
please don't write this type articles, all are good leaders. please don't spoil fot their good name.
Vasan
"தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர்.'

இது நூத்துக்கு நூறு சரியான தகவல்.
தினகரன் என்பவர் எழுதிய "முதுகுளத்தூர் கலவரம்" என்ற நூலிலும், டி.எஸ். சொக்கலிஙகம் எழுதிய "முதுகுளத்தூர் பயங்கரம்" எனற நூலிலும் இது பற்றிய செய்திகள் இருக்கின்றான. நானும் அந்த கலெகடர் சம்பவத்தை நேரில் பார்ததவரிடம் கேட்டதும் இந்த செய்திகளின் நம்பகத்ன்மைக்கு உத்த்ரவாதம் அளிக்கிறது.
ragupathy
one sentenace will tell about him

desiyam

deivigam the two eyes of a legend known as muthu ramalingam

i am surrender for the two eyes d(desiyam) and d(deivigam) and the third d called devar
Arun
ஆய்யவை பட்ரி கருது சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. ஆவர்கலம் என் கருது சொல்ல வந்தர்கல் என்ரு தெரிய வல்லை. வாழ்க அய்யா மட்ரும் நேதாஜி
shyam
நீ மேலே சொன்னதெல்லாம் நம்பும்படி இல்லை
velandran
" ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு...! "
பாடினாரு பாரதி..

நாமெல்லாம் ஒரே ஜாதி. அது மனிதஜாதின்னு பாரதி அழுத்தமா சொன்னாரு.

ஆனா அவர் பெயர்ல இருக்குற "பாரதியார் யுனிவர்சிட்டில" சேரணும்னா கூட, ஜாதி சர்டிபிகேட் கேக்கறாங்க.!

நா அடுச்சு சொல்லுவ ஜாதி என்பது இல்லவே இல்ல,.
ஜாதி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.? மனிதனால் உருவாக்கப்பட்டது.

Naama Ellarum 'கடவுளின்' padaippu. Naama 'கடவுள் சொன்ன நல்ல வழியில்' than Vazha vendum,. Aana Naama! கடவுள் Solra mathiri Vaalarathu illa. Atha Vittutu Namma Munnorlgal kandu pudicha JAATHI. Pathu Vaalarom?

Vella Kaara Ennanamo kandu puduchuttu pora, Ulagam Evalavo Develop Aairuchu, But, Naama Naatula? City.la padichan.la irunthu, village.la Antha Aalamarathukkadila Ukkanthavan varaikkaum, JAATHI, MATHAM.nu Pesittu irukkanuga? Vera Velaye illaya Ivangalukku?

Mel JAATHi Mattum kovilukkula poi Kadavula Pakanumama?,
keel Jaathi ellarum Veliya Ninnu Paakanumama???
Ippa varaikkum intha kodumaigal namma naatula.ல irukku.. Muttal makkaley Ippadi iruntha "கடவுள்" Kovilukkula Varave Mataru.??.....
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே........

உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
உடல் மட்டுமே கருப்பு
அவர் உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார் .......

கோழியை பாரு காலையில் விழிக்கும்
குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்........

எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு....

Ithuellam MGR Song,

Oraayiram aandugal aagattumey - nam
porumaiyin porul mattum vilangattumey
varungaalaththil nam parambaraigal naam
adimaiyillai endru muzhangattumey ............

Indaraya Ilaingargalukku naa 1.Solra,.
Oraayiram aandugal aairuchu...
PLZ....... Nammala mathiri Youths ninacha mattumthan namma naatula irukkara intha mathiriyana, JATHI,endra mooda nambikkaya Olikka Mudium....

Enakku therinchathu 2 JAATHI...?

1.Yelaigalukku Uthavi Seigiravan, Thannai pola pirar methu Anbu Seluthubavan, Perumai Pesamal thannaithaan thaalthuban, Kadavul Sonna Nalla Vazhigalin padi unmayai Vazhulubavan.. IVARGAL THAN UYARNTHA JAATHI.................

2.Pasinu vantha 10.kasu koda kodukkarathukku Yosikkaravan, Pirai Porul methu Aasai kolbavan, Thannaithaaney Perumayaga pesubavan, kadavulukku keelpadiyamal Poiyaga vaalbavan. IVANTHAN THAALNTHA JAATHI.................

1.St.point.la sonna Mathiri Naama KADAVULUKKU UNMAYA Vaanthu vantha pothu Naama Ellarum :MANITHA JAATHIYAGA MAARIDUVOM".

"JAI HIND"
pradeepan
karpaga vinayagam nalla amaithiya irukra makkal ta chuma ethum eluthanumgrathukaga eluthi kalavaratha undu pannanum...2 perum adichukittu saganum ne atha pathu santhosa pattutu athukum intha mathri waste ah ethum eluthuva....unna mathri alugala jail la podanum...unga veetu kalyanathla election la na jathi papinga ana oru caste people avanga avangloda virupathukaga panrathu unaku jathi veri ya....unaku yaar antha wrights kudutha namma leaders ah pathi thappa elutha..kattapomman jeyanthi kondadra naidu peoples ah um kamarajara ah thanuku mattum sontham nu solra nadara keka vendiyathu thaney..athuna un kannuku theriyathu...tamilnadu la evanukum jathi otrumai samuga neethi pathi pesa thaguthi illa...ithoda intha mathri eluthratha nippattu
thevan
Indha thiyagi ranuvathula irundhadhukku yendha adharamum kidaiyadhu, 50yrs munnadi valndha oru poralikku oru photo kooda kidayadhu ippo irukkuradhellam verum drawing, 11 date la kolla paduvomnu therinju 10 date laye uravukkarar veetla odi olinjukitta eedu inaiyatra maa veerar. Paramakudi police station la veru oru pennodu thodarbu vaithirundhdhaga ivaradhu manaiviye complaint kuduthirukirar ippadi patta oruvan thevar mun samamaga amara asaippattal yarukkudhan kovam varadhu, arivu jeevigalay mudhalil ungal thalaivanin varalarai therindhu kondu pinbu aduthavanai pesungal
Guest
இந்த பதிவினை படித்துவிட்டு பின்னூட்டங்களை பார்க்கும் போது இந்த பதிவிற்கு எதிராக கருத்துள்ளவர்கள் தங்களுடைய கோபத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார்கள் வழக்கம் போல, உண்மையிலேயே அவருடைய தேசியம் மற்றும் தெய்வீகம் மட்டுமே இவர்களை அவர்பால் இழுத்ததென்றால் மற்ற தேசிய தலைவர்களுக்கும் இவர்கள் இதே முக்கியத்துவத்தை அல்லவா கொடுத்திருக்கவேண்டும். இவர்கள் திரு.முத்துராமலிங்கத்தை தங்களின் சாதியின் கெளரவ குறியீடாகத்தான் பார்க்கின்றார்கள். இவர்கள் திரு. முத்துராமலிங்கம் எப்படி மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதுபோல மற்ற தலைவர்களை இவர்கள் மதிப்பார்களா? கண்டிப்பாக இல்லை என்பதே பதில்....
Prabusankar
அய்யோ என் தமிழ் சமுகம் சாதியால் அழியுதே.....
sundarapandi.k
ayyavai pattri thavaraga pesuvathu un thaiyai santhega paduvatharkku samam
jeyavel
முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஒரு தெய்வ கடாக்ஷம் பொருந்தியவர். அவரை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவரின் முழு வாழ்க்கையையும் படித்து பின் அவரின் சொற்பொழிவுகள் அனைத்தையும் கேட்டு பின் முடிவு செய்யுங்கள். மனிதன் அமைத்த விதிகள் கடந்த தெய்வீகத்தில் வாழ்ந்த ஒருவர் எப்படி ஜாதி வெறியராக வாழ்ந்திருப்பார்? சற்றேனும் மூளையை பயன்படுத்துங்கள். ஒட்டு மொத்த இந்திய மண்ணை நேசித்த ஒருவர் சாதி என்ற சிறு எலி வலைக்குள் இருந்து போரிட்டாரா? என்ன ஒரு மடத்தனமான பதிவு இது... சரித்திரம் படித்திருந்தால் இந்த அறிவீனம் நிகழ்ந்திருக்காது. இனிமேலாவது இம்மாதிரி அரைகுறை அறிவை வலைத்தளம் ஏற்றி உங்கள் மதிப்பை நீங்களே கெடுக்காதீர்கள்.. இதைப்படிக்கும் இளைய தலைமுறைகளும் ஆராய்ந்து பார்க்க துணிவின்றி இதை அப்படியே நம்பி, இதே வியாதியை எல்லோருக்கும் பரப்புகின்றனர்... இது வேண்டாம். நன்மையை தேர்ந்து தெளியுங்கள்..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.