நீர்யானைஉடல் புறத்தோற்றம், எலும்பமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலங்குகளை வகைப்படுத்துவது பழங்காலம். அதனடிப்படையில் நீர்யானையை பன்றிக்கு நெருங்கிய உறவாகக் கருதிவந்தார்கள்.

டி.என்.ஏ.வின் ஒற்றுமை அடிப்படையில் ஆராய்ந்ததில் நீர்யானையும் கடலில் வாழும் பாலூட்டியாகிய திமிங்கலமும்தான் நெருங்கிய உறவுகள் என்று ஜெஸ்ஸிகா தியடோர் (கால்காரி பல்கலைக்கழகம்) கண்டுபிடித்திருக்கிறார். நீர்யானைகள் எப்போதும் நீரில் இருந்தே காலத்தைக் கழிக்கின்றன. நிலத்தில் கொஞ்ச நேரம் நடந்தாலும் தண்ணீரைக் கண்டதும் அவற்றின் குஷியே தனி.

- முனைவர் க.மணி

Pin It