முதலில் எம் தமிழ் உறவுகளுக்கு தமிழர்களின் புத்தாண்டான தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். வந்தேறி ஆரியர்கள் தமிழர்கள் மீது இந்து மதத்தையும், கேடுகெட்ட சாதியையும் புகுத்தி, தமிழர்களைக் கூறு போட்டு அழிக்க செய்த சூழ்ச்சியில், நம் தமிழர்களே விழுந்து, இல்லாத சாதி என்கின்ற சாக்கடையை சுமந்து திரியும் பன்றிகளாக மாறி, தென் மாவட்டங்களிலும், தருமபுரியிலும், உடன்வாழும் தமிழனையே அருவருப்பான சாதிவெறிகொண்டு, சொத்துக்களைக் களவாடி, சூறையாடி, நெருப்பிலிட்ட கொடுமையை அரங்கேற்றியதன் மூலமாக, நச்சுக் கிருமிகளான பார்ப்பனர்களை தன்னால் முடிந்தமட்டும் மகிழ்வித்தனர் சாதிவெறித் தமிழர்கள்! தமிழனின் சிந்தையிலிருந்து சாதி என்கின்ற நாற்றம்பிடித்த கழிவை வெளியேற்ற வேண்டுமென்றால், கேடுகெட்ட இந்து மதத்தை தமிழகத்தை விட்டு துரத்தினால் மட்டுமே அது இயலும்! இந்து மதம் துடைத்தெறியப்பட்டால் கிறித்தவ இசுலாம் எல்லாம் பகுத்தறிவுக் காற்றில் பஞ்சாய் பறந்து விடும்.
இந்து மதம் இருக்கும் வரை சாதியை, சாதி உணர்வை நம்மா£ல் அசைக்கவே முடியாது! சாதியை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்தக் கேடுகெட்ட இந்து மதமே! நம் தமிழ் மொழியை அழிப்பதும் இந்து மதமே! இலத்தீன் மொழியில் வழிபாட்டை நடத்திய கிறித்தவர்கள், இப்போது தூய தமிழுக்கு மாறி, தமிழ் மொழியில் வழிபாடு செய்கிறார்கள்! இசுலாமியர்களும் நம் தமிழுக்கு மாறி வருகிறார்கள்! ஆனால் இந்து மதம் மட்டுமே நம் தமிழ் மொழிக்கு எதிராக இன்னும் வரிந்து கட்டி, குடுமியை ஆட்டி, தொப்பையைக் காட்டி, குறுக்கே நிற்கிறது! தமிழ் மொழியை இந்து மதம் மட்டுமே தொடர்ந்து இழிவு படுத்தியும் வருவது மட்டுமல்ல, புறக்கணித்தும் வருகிறது! இந்த மோசமான நிலையில், நம் தமிழ் மொழி இழந்து போன நம் தமிழ் எண்களையும் திரும்பப் பெற வேண்டியுள்ளது. மட்டுமல்ல.. தமிழ் எண்களை தமிழ் மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டிய முதன்மையான கடமையையும் நமக்கு உணர்த்துகிறது.
தமிழர்களை நேசிக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு, பெரியார் தொண்டர்களுக்கு மற்றும் முற்போக்காளர்கள் முன் இப்படிப்பட்ட மிகப்பெரிய கடமைகள் அணிவகுத்து நிற்கின்றன!
இந்தக் கடமைகளை முதலில் நாம் உணர்ந்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நம்மை கொண்டு செல்ல இயலும்.
எனது அருமைத் தமிழ் உணர்வுச் சகோதரர்களே... முதலில் நம்மைப் பிடித்து வைத்துள்ள மத(ட) நம்பிக்கையிலிருந்து முதலில் நாம் வெளியேறுவோம். மத நம்பிக்கையை விட்டால்தான் நாம் தமிழர்களாக ஒன்று சேர இயலும்! மத நம்பிக்கையை தொடர்ந்து வைத்துக் கொண்டு செயல்படுவோம் என்றால், அது நமக்கும், நம் தமிழ் மொழிக்கும் சேர்த்து நாமே குழி தோண்டுவதற்கு ஒப்பாகும். மத நம்பிக்கையிலிருந்து முதலில் வெளியேறுவோம்! தமிழர்களாய் சேர்ந்தே களம் காண்போம்!
நன்றி! மீண்டும் எம் தமிழ் உறவுகளுக்கு தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! காசிமேடுமன்னாரு.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.