புதைத்து வைக்கப்பட்ட
பொம்மைகள்
உண்மைகளாகின்றன..!

மெய்ப்பிக்க முடியாத
கற்பனைகள்
சட்டத்தின் சாட்சிகளாகின்றன..!

திருட வந்தவனுக்கு..
வீட்டை ஒப்படைக்கும்படி
உத்தரவிடுகிறது
உயர்நீதிமன்றம்..!

ஆக்ரமிப்பாளனுக்கு
அனுமதி தருகிறது
மதச்சார்பின்மையின் பெயரால்
மனுநீதித் தீர்ப்பு..!

கொலை செய்ய வந்தவனை
மண்டியிட்டு வணங்கி
அகிம்சை வளர்க்கிறது
எம் தேசம்..!

ஆயுதம் தந்து
மனிதத்தைக் கொன்று
முள்வேலிக்குள் முடக்கிய
காந்தி தேசம் 
கோட்சேக்களின்
கொள்கை வழி நடக்கிறது..!

நீரோக்கள்-
இசைப்பதை மறந்து
தீர்ப்பு வாசிக்கிறார்கள்..!
தேசம் எரிகிறது..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.