நாடெதுவென்றபோதும்
நாணம்கொள்ளும்
பெண்கள் அழகு
என்றெல்லாம்
எழுதி வந்தவன்
ஹரிகதா காலாட்சேபம்
சீதாக் கல்யாணம் என்று
தம்பதி சமேதராய்
தரிசனம் தருவதும்
ஒன்பது மணி நேரமும்
அலுவலகத்தில்
ஓயாமல் பேசும் நண்பனை
மனையாள் குழந்தையோடு
மார்க்கெட் ஒன்றில்
மௌனமூர்த்தியாய்
காண நேர்வதும்
தொலைதூரக் கட்டண
தொலைபேசி அழைப்புகளில்
மாதந்தோறும் அரைமணிநேரம்
மறக்காமல் பேசும் நண்பன்
இருவரி பதில்களாய்
ஈமெயில் அனுப்பத்தொடங்குவதும்
ஆகக்கூடி
சக்திக்குள்ளே சிவமென்பது
சாத்தியம்தான் போல.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- பிரிவு: கவிதைகள்