அடர்ந்து பொழிகின்றது
சில தினங்களாய்
பருவம் தப்பிய இம்மழை
வலுவான காற்றுடன்
வரும் அதன் நோக்கம் அறியயியலாதது
வரவேற்க விரும்பாதது
மழையாலும் காற்றாலும்
பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைகள்
ஒடிந்துவிழாமல் இருக்க
தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றேன்
இலைகளற்று
நிர்வாணமாக்கபட்ட பிறகு
கவலை கொள்ள ஒன்றுமில்லைதான் எனினும்
மனதை கணக்கச்செய்கின்றன
தொடர் போராட்டத்திற்கிடையே
கரைந்து வழியும் மழையுடனான
எனது பழைய நெருக்கங்கள்
ஏனிந்த மாற்றமென வியப்பளிக்கையில்
மேலும் அதி தீவிரமாகி
எனை முற்றும் சாய்க்க முயல்கின்றது
அதன் கோர முகங்காட்டி
என் சுயங்கள் வழியே
எனது கிளைகளை விரியச் செய்கின்றேன் இவ்வெளியெங்கும்
வேர்களை பரவச் செய்கின்றேன் மிக ஆழமாக
இப்பொழுது
சமாளிக்கக் கற்றுகொண்டிருக்கின்றேன்
இம்மழையை
அரவணைப்பதாயினும்
அடித்து வீழ்த்துவதாயினும்
- குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- குட்டி செல்வன்
- பிரிவு: கவிதைகள்