கேட்பாரற்று
எங்கோ கசியும் பாணனின் இசை
அலையாய் வருடிச் செல்கின்றது மனதை

நேற்று வந்த பட்டாம்பூச்சியை
Rain
எதிர்பார்த்திருக்கின்றேன்
குழந்தைகளின் நம்பிக்கையோடு

இங்கு நிகழ்பவை எல்லாம்
ஏதோ ஒரு தேவையை
மையப்படுத்தியே நிகழ்கின்றன
என்பதைப் புரிந்துகொள்வதற்குள்
என்னை விட்டு வெகுதூரத்தில் நீ

என் தனிமையின் பக்கங்களில்
இம்மழைப் பயணங்கள் எழுதுகின்ற
பாவனைகள் நன்றாகதான் இருக்கின்றன
உடலை குளிர்த்துச் சிலிர்ப்பூட்டி
மனதை சற்று இலகுவாக்கி
ஒருவித வரையறையற்ற மென்மையாக

சிறுவயதில் இருந்ததைவிட
மழை இன்று நல்ல சினேகிதமாகியிருக்கின்றது
உன்னையும்விட

உன் அலட்சியங்களால்
என்னுளேயே மெளனமான உணர்வுகளும்
இம்மழைப் போன்றதே

இடையூறுகளின்றி
தொடர்ந்து பொழியும் மழையானது
என்றேனும் பெரும் வெள்ளமாய் உருவாகிச்
சிதைக்கக்கூடும் அனைத்தையும்
எவ்விதப் பாகுபாடுகளுமின்றி

குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.