இந்நாட்களில்
எப்பொழுதும் எதையாவது
எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்
வாகனங்களற்று நீளும்
சாலையின் தனிமையுடன்
கசப்பான நினைவுகள்
நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை
அவைகளை
ஒவ்வொறுமுறை கிளரும்போதும்
மீண்டுமொறுமுறை என்னில்
வலிகளை ஏற்படுத்த தவறுவதில்லை
காகிதமாக்கி கசக்கி எறியவோ
முற்றிலும் அழித்துவிடவோ முயலும்
என் முயற்சிகள் அனைத்தும்
தோல்வியையே தழுவுகின்றன
ஒருபோதும்
உன் வெளிச்சங்களால்
நெருங்க முடியாத என் இரவுகளோடு
இன்றும் கூட நிகழலாம்
ஏதேனுமொரு கசப்பான நிகழ்வு
என்னாலும் தடுத்துநிறுத்த இயலாதபடி
- குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- குட்டி செல்வன்
- பிரிவு: கவிதைகள்