Rainy dayஇம்மழை நாட்களில்
உன்னிடம் பேசுவதற்கென்று
ஏதுமிருப்பதில்லை

எங்கு சென்றாலும்
பின்தொடர்கின்றன
ஈடுசெய்ய முடியாத சில இழப்புகள்
எதையோ நினைவுறுத்தியவாறு

அவற்றை தவிர்த்து
இயல்பாக இருக்க முனைகின்றேன்

பழைய நினைவுகளில் புதைந்து
மெதுவாய் நடக்கையில்
முற்றத்துத் தூணில்
சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில்
அசைவற்றக் குளத்தில்
தனியேக் கல்லெறிகையில்
நின்று போன மழையை வெறிக்கையில்
மங்கிய மாலையில்
மொட்டை மாடியில் தேனிர் அருந்துகையில்
என எக்கணத்திலும்
வெறுமையை நிறைக்கக்கூடும் இக்காலம்

எனினும் அடுத்து நடப்பவைகளுக்கு
எவர்க்கும் நிட்சயங்களில்லையென
நீட்டுகின்றேன் இப்பொழுதை.

இங்கு
இல்லாமலிருப்பதில்
எவ்விதப் பிரச்சனைகளுமிருப்பதில்லை
இருந்து பின் இல்லாமல் போவதைவிட

குட்டி செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.