கீற்றில் தேட...

புடம் போட்டு வளர்க்கிறேன்

உன் மீதான வெறுப்பை
உன் மீதான கோபத்தீயை
உன் மீதான காழ்ப்புணர்வை

உன் மீதான வஞ்சத்தை
உன் மீதான ஆற்றாமையை
உன் மீதான விரோதத்தை

உன் மீதான பழியுணர்வை
உன் மீதான பற்றற்ற ப்ரியத்தை
உன் மீதான சினத்தை

உன் மீதான பரிகாசத்தை
உன் மீதான விஷமத்தை
உன் மீதான வன்மத்தை

கங்கு ஊதி
கனல் பெருக்கும்
வீராய்ப்பாய்...

அத்தனையும் வீண்
விரோதி கண்டும் கெக்கலிக்கிற
குழந்தையைப் போல.

- இசைமலர்