நட்சத்திரப் பூக்களை
நண்பகலிலும்
நடத் தெரிந்தவள்

இமைகளின் வழியே
என் திசை திறக்க
அறிந்தவள்

மாய சோறு சமைப்பாள்
காலை மாலை
மதியம் இல்லை அதற்கு

தேநீர்க் கோப்பையில்
தேகத் துளி கலப்பாள்
நேரம் தவறாது சுவைக்கும்

ஒற்றை மரத்தடியே
ஒரு நூறு பாதங்களில்
அவள் காத்திருப்பு

மொழியற்ற கண்ணீர்
விழி மீறும் போதெல்லாம்
வாட்சப் அணைப்பு

செங்காந்தள் மலரில்
மௌன முத்தத்தை
விசும்புவாள்

மென் காந்த உளறி
மெலிதான யுத்தம்
விரும்புவாள்

மேக தூது சாத்தியம்
மழைத்துளியில்
சீனி காய்ப்பவள்

நீல வானம் சாட்சியம்
எங்கிருந்தும் என் மலையில்
தேனீ மேய்ப்பவள்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.