1.
கோடைவெயில்
வீதிகளில் கூக்குரலிடும்
ஐஸ் வண்டிகாரர்

வீடுகளில் அமைதியாய்
கைப்பேசியில்
குழந்தைகள்.
........................
2.
சிறுவர்கள்
இருக்கும் வீடு
அமைதியாய் இருக்கிறது

யாரிடமும் பேசாமல்
அலைபேசியில் அமைதியாய்
சிறுவர்கள்.
........................
3.
சரவெடியை
கைகளில் வெடித்தவன்
பயப்படுகிறான்
மகளின் கைகளில்
மத்தாப்பு.
...................
4.
இரவினில் தூங்க விடுவதில்லை
அடகுக் கடையில் தூங்கும்
மகளின் கொலுசு.
...................
5.
பாலாற்றில்
இருபுறமும்
கரைபுரண்டோடும்
வெள்ளம்

குழந்தைகள்
துள்ளி விளையாட
தன்னிடம் வருமென
சிறு ஓடையாய்
காத்திருக்கும்
கொட்டாறு.

- மு.பிரபு, வேலூர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.