விடிந்தது கூட
தெரியாமல்
நடைபாதையில்
தலைபொதியோடு
படுத்துக் கிடந்தவனை
விரட்டிவிட்ட
காவல்துறைக்குத்
தெரியவில்லை
அவனுக்கு
விடியவில்லை என்பதும்
அவனை வீட்டோடு
விரட்டி விட்டோமென்பதும்

- பா.சிவகுமார்

Pin It