எல்லா பொம்பளைய போல தா என்னையு பெத்தா
எல்லா தாய்மார போல தா எனக்கு பாலூட்டுனா
எல்லார போல தா பள்ளிகூடத்துக்கு அனுப்புனா
காதலிச்சு ஓடியாந்ததால
ஊரவுட்டு ஒதுக்கி வச்சுட்டாலு
காக்கா கழுகு நாயெல்லா இவ சொந்தமாக்கிகிட்டா
இட்டிலி சுட்டா மட்டு இல்ல எத சுட்டாலு
இலைல வக்கிறதுக்கு முன்னால
நாயி காக்கா கழுகுக்கு தா மொதல்ல வப்பா
ஒரு நாள் மாட்டீரல சுட்டவ வழக்கம் போல
நாலுதுண்டத்த சேத்து காலேசுக்கு வச்சுட்டு
தாந்திண்ணிபயலே பாக்கவச்சுட்டு திங்காம
பக்கத்துலருக்கவனுகளுக்கு
ரெண்டு துண்டத்த குடுத்துட்டு
திண்ணுன்னு சொல்றா...
அவகிட்ட எப்டி சொல்றது
காதலிச்சு கூட்டியாந்தா மட்டு இல்ல
மாட்டுக்கறி திண்ணாலு
ஒதுக்கி தா வைப்பாங்கனு

- அ.ஜோதிமணி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.