முன்னொரு காலத்தில்
நீர் ஓடிய தடம் அது
நீராடிய இடமும் தான் அது
எங்கிருந்தோ வந்த திசைக் குறிப்பென
நதி தாண்டும் மானை
கனா காண்கிறேன்
அந்தரத்தில் நிற்க மாரளவு சிலை
தலை பூத்த நதி
அன்று பூத்த மலராய்
ஏவாள் கண்கள்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை நதிக்கு
எவனுக்கு வாய்த்த ஓவியம் இது
காலம் நிறுத்தி கவிதை செய்யவும்
ஒரு வழிப்போக்கன்
இந்நேரம் இருந்திருக்க வேண்டும்
பாடும் பறவைகள்
தேடும் சிறகுகள்
இசை கோர்த்து இனிப்பு தூவ
இளங்காற்றில் மினுக்கி கொண்டோடும்
சிறு நதிக்குள் ஒரு ஜீவன்
படபடவென காற்றில் கரைகிறது எல்லாம்
நதி ஓடிய தடம் வழியே
வெயில் ஓட்டிச் செல்கிறான்
ஆட்டுக்கு கை கால் முளைத்த
மறுஜென்மன்
நதியா பிராண்ட் வாட்டர் பாட்டில்
முதுகுப் பையில்

- கவிஜி

Pin It