அவன் ஆழங்கால் படவில்லை
எனச் சொல்லி
கைகளிலும் கால்களிலும் கற்களைக்கட்டி
இடுப்பில் கயிற்றினைக்கட்டி
பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லி
தள்ளி விட்டார்கள்
கைகளையும் கால்களையும் அசைக்கமுடியாமல்
மூச்சு முட்ட ஆழ்ந்து செல்கிறான்
மேலே வா எனச் சொல்பவர்களின்
ஒலியும் அவன் காதில் விழவில்லை
ஆழ்ந்து சென்று விட்டான்
இனி பிணமானாலும்
மேலே வர மாட்டான்
ஆழங்கால் பட்டவன்
மண்டை கனத்தால் மூழ்கிவிட்டான்
எனச் சொல்லி
கைப்பற்றியிருந்த கயிற்றையும்
விட்டு விட்டார்கள்...

- கி.இராம்கணேஷ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.