பனித்துளிகளால்
கழுவிக் கொண்ட கண்களை
பத்திரமாக வைத்திருக்கிறேன்
நகர்வலமற்ற பரிசுத்த மேகத்தை
அணிந்து கிளம்புகையில்
தூரத்து வெயில் மினுமினுக்கும்
கிட்டத்து வானம் சிலு சிலுக்கும்
நடுமுதுகில் துள்ளிடும் தகிப்புக்கு
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய நினைப்பு
எங்கிருந்து எப்போது கிளம்பினேன்
என்றெல்லாம் தெரியாது
மனம் குடித்த குருதிக்கு மாற்று
யாருமற்ற பொழுதுகளை
தலைக்குள்ளிருந்தெடுத்து
சாலையோரம் மரம் நடுகிறேன்
தயவு செய்து பின்னால் வராதீர்கள்
நிழலைக் கொண்டாடுங்கள்
நிஜங்கள் போர்வாள்களில்
சிக்கிக் கொண்டிருக்கின்றன
மரங்களே மானுட சுத்திகரிப்பு
அசோக வனம் சாட்சி
கலிங்க போரை நிகழ்த்திய பிண்டத்தை
இலையாக்கி இதயம் செய்கிறது
இன்னொரு மரமும்.......!
- கவிஜி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: கவிதைகள்