நீளும் விரல்களுக்கு
எட்டாத்
தொடுவானம்..

கசப்பையும் உமிழும்
வாழ்வின்
ஒரு துளி நம்பிக்கை..

என் நூற்றாண்டுக்
கனவின்
பெரும் சுமை..

எளிதில்
கடக்க இயலாப்
பெரும் துயரம்..

அமுதமாய் மிளிரும்
கொடும்
விஷம் ...

பிரித்தறியா
விரும்பா
பேரின்பக் கொண்டாட்டம்....

புலரா பொழுதின்
புல் நுனி
பனித்துளி காட்டும் பிரபஞ்சம்..

பரந்த
வான் வெளியில்
விரிந்த வானவில்...

எப்போதும்
விரும்பித் தூக்கித்
திரிகிற துயர் ...

உயிர்பெட்டகத்துள்
ஒளிந்து கிடக்கும்
ஜீவ மூச்சு....

-இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.