இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு, தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களை கண்டறிய முடியவில்லை.
உலகின் தலைசிறந்த ஓவியர்கள் வசமிருக்கும்
நூற்றிற்கும் அதிகமான வர்ணங்களால்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்களைத் தீட்ட இயலவில்லை.
பசி என்பது முதல் துயரமாக
பெரும்பான்மையோரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
98-ம் துயரக்காரனான என்னை
1002-ம் துயரக்காரனொருவன் பரிகசிக்கையில்
எனக்கு சினம் மேலிடுகிறது.
ஒரு துயரமும் இன்னொரு துயரமும்
தமக்குள் சண்டை இட்டுக் கொள்வதையே
நாம் வரலாறு என்கிறோம்.
- இசை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- விஸ்வகர்மா யோஜனா - குலத்தொழிலை நிலைநிறுத்தும் பார்ப்பன சதி
- தலைவிரித்தாடும் மதவெறிக் கூட்டம்!
- காவிரி நீர்ப்பங்கீடு - உரிமையை விட முடியாது!
- இது ஆபத்தின் அறிகுறி?
- ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘பரதகண்ட புராதனம்’
- காந்தி ஜயந்தி
- கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 23, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- வாழ்விலிருந்து எனது இலக்கியம்
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- இசை
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009