brahmins yagna

மழை நிறுத்த மந்திரம் சொல்!
வெயில் குறைய வேள்வி செய்! 

அண்டா நிறைஞ்சுடுத்து
அய்யர்மழை
பெஞ்சுடுத்து
சொன்ன மழை வந்துடுச்சா?
சொல்லுங்கய்யா மந்திரத்தை!

வருணனுக்குக் கேட்கலியோ?
வாய்ச்சத்தம் எட்டலியோ?
நிறுத்தாம சொல்லுமையா
நிக்காமல் பெய்யட்டும் !

வழியும் மழை நிப்பாட்ட
மந்திரமும் இருக்கிறதா ?
ஒளிச்சு வக்கக் கூடாது
ஒரிசாவுக்கு அனுப்புமய்யா

வெயில் குறையச் செய்யுமய்யா
விளைஞ்ச நிலம் காட்டுமய்யா
பயிர்பச்சை காப்பாத்த
பாய்ச்சிடுய்யா மந்திரத்தை !

மீத்தேனாம் அய்டிரோவாம்
வெடிவைக்கப் பாத்தானே!
பாத்தவனை மாத்திவிடு
பாத்திரத்தில் குந்தவிடு

மலைகுடைஞ்சால் நியூட்ரினோவாம்
மந்திரத்தால் உறிஞ்சிஎடு
உழைப்பெதுக்கு உணவெதுக்கு
உட்காரு அண்டாவில் !

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Pin It