அரிதாரங்கள் கலைக்கும் நேரத்தில்
இவன் தன்னிடம் எப்போதுமிருக்கும்
ஒரு பொம்மையைத் தேடுகிறான்

தையல் பிரிந்து பஞ்சு வெளியில் தெரியும்
இந்த பொம்மையை நிராதவராய்
அழுதுகொண்டிருந்த
ஒரு நடுநிசியில் அவன் கண்டெடுத்தான்

கொடூரமான கனவுகள் வந்த
ராத்திரிகளிலும் அந்த பொம்மை அவனிடம் இருந்தது

ஒரு பொம்மையை இவ்வளவு
நெருக்கமாய் வைத்திருப்பவனின்
உளவியல்
உங்களுக்கு விசித்திரமாக இருக்கிறது
உங்களுக்கேன் ஒரு பொம்மையை
நேசிப்பது குழந்தைத்தனமாக உள்ளது
என்ற கேட்படாத கேள்வி அவனிடமும்
இருக்கிறது

பொம்மை காணாமல் போகும்
ஒரு நள்ளிரவில்
அவன் தூக்கு மாட்டிக்கொள்வான்
என்பது உங்களில் பலருக்கு
ஓரு கேலியான செய்தி இல்லையா....?

- ஞா.தியாகராஜன்

Comments

1 comment

1
Vijayakumar Chandrasekaran
மூடர்கூடம் படத்தில் இடம்பெற்ற பொம்மை பாடல் நியாபகம் வருகிறது நண்பா......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.