ஒரு நாள் எல்லாம்
மாறிப்போயிருக்கும்
அப்போது நான் ஒரு சராசரியாக
இருக்கப் பழகியிருப்பேன்

புத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தியிருப்பேன்
கூட்டங்களுக்குப் போக
எங்க நேரமிருக்கு என்று யாரிடமாவது
சலித்து பேசிக்கொண்டிருப்பேன்
எழுத்தாளர்களைப் பற்றி யாரும்
பேசினால்
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருபேன்
தீவிரமாய் வாசிக்கத் தொடங்கிய புதியவனை
ஏளனமாய் பார்க்கத் தொடங்கியிருப்பேன்

கவிதைகளை விட்டு விலகிப் போயிருப்பேன்
எழுத்த வச்சு ஒன்னும் ஆகாது என்று
உபதேசம் செய்யத் தொடங்கியிருப்பேன்

அறிவுரை சொல்வதற்கான அனுபவம்
என்னிடம் இருப்பதாய் ஒரு மமதை வந்திருக்கும்

சபிக்கப்பட்ட ஒருவனாய் என் வாழ்க்கையை
சுமந்து கொண்டிருப்பேன்

இப்படி இருந்தவர்கள் எல்லாம்
இப்போது இந்த மாதிரி தான் இருக்கிறார்களாம்

சொற்களின் போதை தெளிந்து போகும்
ஒரு வயதில்
எதாவது வரிசையில் மெதுவாக முன்னாடி
நகர்ந்து கொண்டிருப்போம்!!

- ஞா.தியாகராஜன்

Comments

2 comments

2
S. Arshiya
கவிதை நன்றாக இருக்கிறது தியாகு.ொடருங்கள்.
Rajesh_Athlete
Un mudhal kavidhai velieetirku vaazhthukkal nanbaa.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.