cuddalore flood 377

எல்லாம் சரியாகி வருகிறது

என்ன
அடுப்பு ஏற்ற வாய்க்கவில்லை
இன்னும் பொட்டலங்கள் வேண்டியிருக்கிறது
கும்பி அடங்க
இன்னும் யாரோ தரும் ஆடைகளில்
மானம் காத்துக் கொள்கிறோம்

கூரை எங்களுடையது போல இல்லை
பள்ளிகளில்
அலறித் தவித்து
வெளியேறிய நேரத்தின் பாதைகள்
சூழ்ந்திருந்த நீர்
எங்கள்
கைரேகைகளையும் அழித்திருப்பதைத் தவிர
எல்லாம் சரியாகி வருகிறது

மழை , ஆறு, ஏரி, குளம், தண்ணீர்
இதெல்லாம் கேட்ட மாத்திரம்
நடுங்க வைத்த கெட்ட வார்த்தைகளாக
இருந்தது மாறி
பாரம்பரிய கெட்ட வார்த்தைகளைக்
கண்டுகொள்ள முடிவதால்
இயல்புநிலை
திரும்பித்தான் விட்டது போலும்

வாசலில் குழையும் சொறிநாய்க்கு
ஒருவாய் போட்டால் மட்டுமே
சோறுண்ணும் பழக்கமுள்ள
கைப்பிள்ளைக்குத்தான்
எப்படிப் புரிய வைப்பது
வாசலுமில்லை
நாயுமில்லை
சோறுமில்லை என்ற
இந்த இயல்பு நிலையை

- உமா மோகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.