புனிதமென்று இப்போது சொல்லுவதை

புசித்தபடிதான் இம்மண்ணில் நுழைந்தனர்

புனிதமென்று சொல்லும் நதியை

பிணக்காடாக்கினர்

புனிதமென்று சொல்லும் மண்ணை

மலடாக்கினர்

புனிதமென்று சொல்லும் நாட்டை

விலைபேசினர்

மனித உயிரும் புனிதமென்று 

அவர்கள் சொல்லும்வரை

பொறுமையுடன் காத்திருங்கள்!

- சேயோன் யாழ்வேந்தன்

Pin It