புனிதமென்று இப்போது சொல்லுவதை
புசித்தபடிதான் இம்மண்ணில் நுழைந்தனர்
புனிதமென்று சொல்லும் நதியை
பிணக்காடாக்கினர்
புனிதமென்று சொல்லும் மண்ணை
மலடாக்கினர்
புனிதமென்று சொல்லும் நாட்டை
விலைபேசினர்
மனித உயிரும் புனிதமென்று
அவர்கள் சொல்லும்வரை
பொறுமையுடன் காத்திருங்கள்!
- சேயோன் யாழ்வேந்தன்