girl childகன்னத் துவாரங்களில் எல்லாம்
காற்று அறைந்து போகிறது
தலை மீதெல்லாம் பூக்களின்
மழை இடைவிடாது பொழிகிறது
தலை உயர்த்திப் பார்க்கிறேன்
ஊர்க்காரர்களின் அணிவகுப்பு
கால் கட்டோடு தாத்தா
எங்கே நால்வருடன் முன்னே
செல்கிறார் இந்த இருட்டு வேளையில்.
தூரத்தில் நாய்களின் குரைப்பு
இடைவிடாமல் ஒலிக்கிறது.
அம்மா அனாவசியமாய்
அழைகிறார் இந்நேரத்தில்
தலை குளிக்க.
தெரு விளக்கு விட்டு விட்டு
எரிகிறது
எந்நேரத்திலும் தாத்தா
கட்டவிழ்த்து வந்துவிடப் போகிறார்
எனை உப்பு மூட்டை தூக்க
என்று தெரியாமல் பாட்டி தலை விரி கோலமாய் வாசலில்.
திட்டு வாங்கப் போகிறார் தாத்தாவிடம்.

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

1 comment

1
Subash chandr bose
வெள்ளந்தியான் பேத்தியின் வரிகள் அருமை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.