love separation

எப்படி
அத்தனை சுலபமாக
நீயும் உண்ணாமல்
என் தட்டையும் தட்டி விட்டு
வாசலில் இருக்கும்
நாயின் தட்டையும் உதைத்து விட்டு
விருட்டென்று
நடந்து போக முடிகிறது
உன்னால்...

உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை என்ற போதுதான்
"இருந்தது"
ஒன்றுமேயில்லை
என்பது புரிந்தது..

புரிதலின் வீரியம்
வெறும் தட்டா....
உதைபட்ட பிறகு சுவர் தேடி
ஒட்டிக் கொள்ள...
அது தீவிரக்காரனின்
ஆழ் மனப் பிளவு
அங்கிருந்து மூச்சு வாங்கிக்
கொண்டேயிருக்கும்
தெரு நாயின் இரவுப் பசியை
நிரப்ப நீ உதைத்த தட்டால் முடியும்
என்றா நினைக்கிறாய்...!

என்னவோ போ..
கடித்த எறும்பைக்கூட
ஊதிதான் தள்ளி விட முடிகிறது
என்னால்...

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.