சூரியனை சூரியனாகப் பார்க்க
சொல்லப்பட்டிருக்கிறது
நிலவை நிலவாகப் பார்க்க
சொல்லப்பட்டிருக்கிறது
நாயை நாயாகப் பார்த்த கண்கள்
மனிதனை ஏன் வெறுப்பாகப் பார்க்கின்றன
மனிதனை ஏன் சாதியின்
துண்டுகளாகப் பார்க்கின்றன
மதங்களின் மாமிசங்களாக
ஏன் பார்க்கப்படுகின்றன
எப்படி சொல்லித்தருகிறோமோ
அப்படித்தான் புரிந்துகொள்ளும்
இன்றைய நாள்
காலம் மாறிவிடவில்லை
பழைய பாடங்கள் மீண்டும் நடத்தப்படுகிறது
பார்த்துக்கொண்டிருக்கின்றோம்
பழைய காலத்தைப் போல
அடங்கிப் போக மாட்டோமென்று
அவர்களுக்குப் புரிந்திருக்கிறது
நாம் நிராயுதபாணியாக
நிற்கவில்லையென்று
நாம் காலத்துக்கு உணர்த்தியிருக்கின்றோம்
அவர்களுக்கு வேறு வழியில்லை
நம் கைகளோடு கை குலுக்க வேண்டும்.
கீற்றில் தேட...
நிராயுதபாணிகள் அல்ல நாங்கள்...
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.