வீரசாகச கதைகள் படிக்கும் அப்பா
கதைக்குள் உலவி வெகு காலம் ஆகிவிட்டது
குதிரைப் படைகளையும் யானைப் படைகளையும்
சுற்றிக்கொண்டிருந்தவர் நடந்து போகிறார்
வந்தியத்தேவன்
ரோமாபுரி பாண்டியன் செழியன்
கருணாகரத் தொண்டைமான்
யவனராணி மஞ்சளகி
கடல்புறாவின் அலைகளொடு நட்பு வத்திருந்தவர்
புதினங்களில்
திரைப்படங்களில் நுழைந்து
சர்வ சாதரணமாக
வெளியே வருவார்
எம்ஜிஆர் பாடல்களை
பாடிக்கொண்டு இரவுகளைக் கழிப்பது
என் எஸ் கிருஷ்ணன்
எம் ஆர் ராதாவைப்பற்றி பேசுவது
தியாகராஜ பாகவதர் சின்னப்பா
சுந்தரம்பாள் ஜிக்கி என்றிருந்தவரை
தொலைக்காட்சி தொடர்கள் தூக்கிச்சென்றது
குரோதம் வஞ்சகம் பொறாமை நிரப்பப்பட்ட
நிழல் மனிதர்களின் கைகளில்
இரவுகள் பகல்களின் குவியல்கள்
எல்லாம் எளிய மனிதர்களிடமிருந்து
பிடுங்கப்பட்டவை
இதில் அப்பாவின் இரவு எது
அப்பாவின் பகல் எது
இரவு பகல்களை திருடுகிறவன்
திறமையாளன் என்ற
பட்டத்தோடு வெளியே திரிகின்றான்.
கீற்றில் தேட...
இரவு பகல்களை திருடுகிறவன்
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.