பறிக்கப்பட்ட நிலம்..!
பாலிதீன் பைகளிலிருந்து
மண்தொட்டிக்கு..
மாற்றப்பட்ட போதும்
தனக்கான பூமியை..
வேர்களால்
தேடிக்கொண்டே இருக்கின்றன
பூச்செடிகள்..!
வாய்க்கும் தருணங்கள்..!
பயணிக்கும் பொழுதுகளில்..
முகம் அறியாத
மனிதர்களுக்காக..
புன்னகைத்து கையசைக்கும்..
குழந்தைகள் உள்ள வரை..
பூமிக்கு மரணம் இல்லை..!
- அமீர் அப்பாஸ்