இந்தியாவின் எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சி யாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியதை அமெரிக்கா விற்கு எழுதித் தந்த அடிமை சாசனம் என்றெல்லாம் விமர்சித்தது வெறும் அரசியலே என்றும் அதை ஆழமாக பார்க்க வேண்டாம் என்று பாரதிய ஜனதா கூறியதாக இந்தியாவிற்கான அமெரிக்கத் துணைத் தூதர் வாஷிங் டனுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியின் பேச்சுக்கள் மற்றும் அவர் நடந்து கொண்ட முறையை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக ஆவணங்களில் பதியப்பட்டிருப்பதை ‘தி இந்து’ நாளிதழ் வெளிப்படுத்தி யுள்ளது. (கேபிள் எண்.48692)

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடாளு மன்றத்தில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் 2005 ஆம் ஆண்டு, டிசம்பர் 26, 27 தேதி களில் மும்பையில் பா.ஜ.க. மாநாடு நடத்தியது. அந்த மாநாட்டில் நிறை வேற்றிய தீர்மானத்தில் ஒன்று, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவிற்கு அடிமைப்படுத்தும் ஒப்பந்தம் என்று விமர்சித்திருந்தது.

இத் தீர்மானத்தை நிறைவேற்றிய சிறிது நேரத்திலேயே, பா.ஜ.க. தலைவர்கள், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அந்த தீர்மானத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினாராம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி (மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய தினம்) ப.ஜ.க. பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்துள்ளார் அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக்.
அப்போது, ‘பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத் துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகை யிலான எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படாது’ என்று தன்னிடம் அத்வானி கூறியுள்ளார். இதனை அதே நாளில் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார் பீட்டர்.

‘எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கை யுடன் காணப்பட்ட பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க. தலைமை யிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா - இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்’ - என அதில் குறிப்பிட் டிருந்தார்.

அமெரிக்காவுடனான  உறவு தொடர்பான பா.ஜ.க. நிலைப்பாட் டின் தன்மையை 2005 ஆம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப் பட்ட கேபிளில் விவரிக்கப்பட் டுள்ளது.

மும்பையில் 2005 டிச. 26 மற்றும் 27-ல் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது, அமெரிக்கா வின் அடிமையாக இயங்குகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பா.ஜ.க. தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி, பா.ஜ.க.வின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சும்மா ஒரு பேச்சுக்காக வெளியிடப் ட்டது’ என்று கேட்டுக் கொண்டதாக அமெரிக்க தூதரக அதிகாரி  ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட் டுள்ளது.

இதன் மூலம் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பா.ஜ.க. எதிர்ப்பது உறுதியாகிறது என்றும், உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள் தான் என்றும் விக்கிலீக்ஸ் வர்ணித்துள்ளது.


Pin It