மனதுக்கு பக்கம்
நிறைவாய்
மயங்கிய நிலையில்
வால் சுருட்டி கண் அயரும்
துக்கம்
நாய் குட்டியை நினைவுபடுத்தும்.
கூர் உச்சி மலையில்
ஈக்களை புறமகற்றி
தேன் துளி சுவைப்பதில்
சுகம் வகுப்படுமாயின்
பிரதி வேளை
பற்றுதலோடு வாழ்ந்து காட்டுவேன்
சின்ன சின்ன ஆறுதல்கள்
ரொட்டித் துண்டுகளாய்...
துக்க நாய் குட்டி
இன்னமும் முன்னேறி
மனதின் அருகாமையில்
எச்சில் வடித்தபடி

- கொ.மா.கோ.இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It