பெரு மரம் பெண்
சிறு பறவை ஆண்
பெருமரத்திலிருந்து
சில கனிகளைக்
கொத்தித் தின்பதிலேயே
நிறைவடைகிறது
பறவை..
தின்ற விதையை
ஒரு மரமாகவோ
பறவையாகவோ
விதைத்து விட்டு...

*

ஏந்தி நிற்கும் கைகளுக்கு
வெறுமையை அளிக்க
ஒருபோதும் துணியாதே..
அந்தக் கைகள்
நாளை உன்னைக்
காப்பாற்றும் சூழலைக்கூட
பெறலாம்..

பொங்கி நிற்கும்
கண்களுக்கு
தீயிட முனையாதே.
அந்த கண்களே
நாளை உன்னை
வழிநடத்தக் கூடுவதாக
இருக்கலாம்..

நாடிவரும் கால்களுக்கு
மூடிய கதவினைக்
காட்டாதே..
அந்தக் கால்கள்
நாளை உன்னை
சுமந்து செல்ல நேரலாம்..

ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும்
மௌனத்தையே
பதிலாய் தராதே..
அந்த வார்த்தைகள்
நாளை உன்னை
இக்கட்டிலிருந்து
காப்பாற்றலாம்..

- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.