அழைப்பு மறுக்கப்படும்
அலைபேசிக்குப் பின்னால்
ஆயிரம் கதைகள்..!
 
பிரியங்கள் நிறமிழந்ததன்
அடையாளமாக இருக்கலாம்..!
 
விருப்பங்கள் நிராசையான
துயரின் குறியீடாக இருக்கலாம்..!
 
வார்த்தைகளில்..
வெளிப்பட்டு விடாத
வன்மங்களின்..
எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்..!
 
துரோகத்தை மறக்கும்..
தருணமாக இருக்கலாம்..!
 
சொற்களால்..
இட்டு நிரப்ப முடியாத
சோகத்தின் நிகழ்வாக இருக்கலாம்..!
 
நீங்கள் அழைக்கும் நபர்
புணர்ச்சியின்..
உச்சத்தில் இருக்கலாம்..!
 
மரணத் தருவாயில்
இருக்கலாம்..!
 
மரணித்தும் இருக்கலாம்..!
 
அலைபேசியால்..
அழைக்க முடியாத நபரை..
காலத்தின் அலைகள்
கரை சேர்க்கக் கூடும்..!
 
மெளனத்தின் வலி
தாங்கவியலாத..
அப்பொழுதுகளில்
வார்த்தைகள் வெடிக்கக் கூடும்..!
 
மீண்டும்..
உரையாடல் தொடங்கலாம்..!
 
எல்லோரின் அந்தரங்கத்தையும்
அறிய நேர்ந்த அலைபேசி
 
தண்ணீரில்..
தவறி விழுவதன் மூலம்
தற்கொலை செய்கிறது..!
 
உலர வைப்பதன் மூலம்
அதன் ஒத்துழையாமை இயக்கம்
சில காலம் ஒத்தி வைக்கப் படுகிறது..!
 
-அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
ஆதவன்
மிகவும் அருமையான கவிதை.. சினுங்கும் அலை பேசிக்குள் இத்தனை உயிரோட்டமா?.. மனிதர்களின் என்னங்களை பிரதிபளிக்கும் கருவி
தேவதை
அருமையான படிமக் கவிதை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.