எப்படியாவது ஆட்டத்தைக் களைத்துவிடலாம் என்று திமுக எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய் இருக்கின்றது. நாம் இன்னமும் இவர்களிடம் இருந்து எதிர்பார்த்தோம். ஆனால் வெறும் சட்டையைக் கிழித்துக் கொண்டதுடன் நிறுத்திக் கொண்டார்கள். இருவருமே சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு உன்னுடைய வேட்டியை நான் அவிழ்க்க மாட்டேன், என்னுடைய வேட்டியை நீ அவிழ்க்கக் கூடாது என கட்டுப்பாட்டோடு இருந்துவிட்டனர். இல்லை என்றால் சட்டசபையில் உள்ளே இருந்தவர்களும், வெளியே இருந்தவர்களும் அண்டர்வேயருடன் தான் இருந்திருப்பார்கள். சட்டசபை கூட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் உண்மையில் கொஞ்சம் அதிர்ச்சிதான் ஆகியிருப்பார்கள். ஜனநாயகத்தைப் பற்றி கொஞ்சம் உயர்ந்த மதிப்பீடுகள் வைத்திருந்தவர்கள் “அடக் கருமமே இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?” என காறித்துப்பி இருப்பார்கள்.
ஆனால் இது எல்லாம் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குத் தான் புதிதாக இருந்திருக்கும். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குப் பார்த்துப் பழகிப்போன ஒன்றாகவே இருந்திருக்கும். சட்டசபையில் மட்டும் அல்ல, பாராளுமன்றத்திலேயும் இதுதான் நிலைமை. சபாநாயகரின் மைக்கை உடைப்பதோ, இல்லை நாற்காலிகளை தூக்கி அடிப்பதோ ஏதோ நாம் பார்க்காத நிகழ்வுகள் அல்ல. வழக்கமாக சட்டசபையிலோ, இல்லை பாராளுமன்றத்திலோ எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட வழக்கமாக செய்பவைதான் இவை எல்லாம். ஆனால் ஏதோ புதிதாக திமுக மட்டும் தான் இப்படி செய்தது போல, பார்ப்பன கேடிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதும் பார்ப்பன ஊடகங்களும் தொடர்ச்சியாக ஊளை இட்டுக்கொண்டு இருக்கின்றன.
சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூரில் கொண்டுபோய் பத்து நாட்களாக அடைத்து வைத்தபோது, அதைப்பற்றி வாயே திறக்காத ஜனநாயகத்தின் காவலர்கள் இன்று குய்யோ, முய்யோ என கத்துவது அவர்களின் பிழைப்புவாதத்தைதான் காட்டுகின்றது. ஏதோ ஜனநாயகம் என்ற ஒன்று இருப்பது போலவும், அதைத் திமுக அழித்துவிட்டது போலவும் கூப்பாடு போடுகின்றார்கள். சசிகலா கும்பலால் சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள், எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மிரட்டப்பட்ட எம்எல்ஏக்கள் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதுதான் திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினரின் வேண்டுகோளாக இருந்துள்ளது. ஆனால் திட்டமிட்டே சபாநாயகர் தனபால் இதை மறுத்துள்ளார். அப்படி நடந்தால் மன்னார்குடி கும்பலின் ஆட்சி இல்லாமல் போய்விடும் என்ற உள்நோக்கத்தில் இந்தக் கோரிக்கையைத் தனபால் மறுத்துள்ளார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை... 122 எம்எல்ஏக்களும் மன்னார்குடி ரெளடி கும்பலின் பிடியில் இருக்கும்போது அதில் ஒருவராய் இருக்கும் தனபால் மட்டும் என்ன செய்ய முடியும்? இந்த மானங்கெட்ட அமைப்பு முறையில் அதிகபட்சமாக பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய முடியுமோ அதை அவர்கள் செய்திருக்கின்றார்கள்.
இதிலே குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், அதிமுகவில் உள்ள 31 தலித் சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆதிக்க சாதி வெறியன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து இருப்பதுதான். சக்கிலியர் வகுப்பைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரை அவர் வண்டியில் இருந்து இறங்கி மரியாதை தரவில்லை என்பதற்காக சாதிவெறியோடு எடப்பாடி பழனிசாமி கட்டிவைத்து அடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தலைமறைவாக இருப்பதற்கு உதவியவர் எடப்பாடி பழனிசாமி என்ற குற்றச்சாட்டு இவர் மீது ஏற்கெனவே உள்ளது. அதுமட்டும் அல்லாமல் கோகுல்ராஜ் கொலை வழக்கை தீவிரமாக விசாரித்துவந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை அந்த வழக்கை விசாரிக்க விடாமல் கடுமையான நெருக்கடி கொடுத்து, இறுதியில் அவர் மர்மமான முறையில் இறப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு கவுண்டர் சாதிவெறியனை 31 தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருசேர ஆதரித்து இருப்பது அவர்கள் எவ்வளவு கேவலமான ஜென்மங்கள் என்பதைத் தான் காட்டுகின்றது.
தலித்துகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் அவர்களுக்கான விடுதலையைச் சாதித்துவிட முடியும் என நம்புபவர்களுக்கு இது ஒரு சாட்டை அடியான செய்தி. தேர்தல் அரசியல் எப்போதுமே பொறுக்கித் தின்பதற்கானதுதான் என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஆனால் இதைப் பற்றி இங்குள்ள தலித் கட்சிகள் வாயே திறக்காமல் கள்ள மெளனம் காக்கின்றார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை தேர்தலில் நின்று தன்னுடைய வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத்தவிர உண்மையில் தலித்துகளின் விடுதலை பற்றியோ, உண்மையான சாதி ஒழிப்பு பற்றியோ அக்கறை அற்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். எப்படி ஒவ்வொரு சாதிக் கட்சிக்காரனும் தன்னுடைய மக்களை ஓட்டுவங்கியாக மட்டும் பார்க்கின்றார்களோ, அதே போலத்தான் தலித் கட்சிகளும் பார்க்கின்றனர். இல்லை என்றால் இப்படி தலித்விரோதியை 31 தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் விமர்சனம் இல்லாமல் ஆதரித்ததைப் பற்றி வாயே திறக்காமல் இருப்பார்களா? ஆனால் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களை எதிர்க்காமல், திமுக சட்டசபை மாண்புகளை அழித்துவிட்டதாக நீலிக் கண்ணிர் வடிக்கின்றார்கள்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமிழகத்தில் பிஜேபியின் சதி முறியடிக்கப்பட்டுவிட்டதாக கி.வீரமணி போன்றவர்கள் புளகாங்கிதம் அடைகின்றார்கள். ஆனால் குற்றவாளி ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து துரத்தப்பட்ட டி.டி.வி.தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலா நியமித்ததைப் பற்றியோ, இது மன்னார்குடி மாஃபியா கும்பலின் மறைமுக ஆட்சிதான் என்பதைப் பற்றியோ அவர்கள் திட்டமிட்டே பேச மறுக்கின்றார்கள். பிஜேபியின் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக ஒரு கொள்ளைக் கும்பலை, ஆதிக்கசாதி வெறியனை ஆதரிப்பது தான் சரியான தீர்வா? பிஜேபி தனது அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் என்றால், நாங்களும் அதை எதிர்க்க எந்த எல்லைக்கும் போவோம், அது கொள்ளைக்காரி சசிகலாவை ஆதரிப்பதாய் இருந்தாலும் சரி, சாதிவெறியன் பழனிசாமியை ஆதரிப்பதாய் இருந்தாலும் சரி என்பதுதான் இதன் அர்த்தம்.
பிஜேபியை எதிர்க்கும் அதே சமயம் நாம் அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். உச்சநீதி மன்றமே கொள்ளைக்காரி என தீர்ப்பளித்த ஒருவரின் சமாதியில் போய், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கீழே விழுந்து வணங்குகின்றார் என்றால், அந்த ஆட்சி இனி எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்? இன்னும் சிறைக்குச் சென்று சசிகலாவை எடப்பாடி பழனிசாமி பார்க்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, இந்த ஆட்சி எந்த வகையிலும் நேர்மையான ஆட்சியாக இருக்காது என்பதுதான் உறுதியாகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காதவர்கள் திமுகவின் மீது மட்டும் குற்றம் சாட்டுவது உள்நோக்கம் கொண்டதாகும். சட்டசபையில் சண்டை போட்டதால் ஜனநாயகம் அழிந்துவிட்டதாக புலம்பும் இவர்கள், குற்றவாளியின் சமாதியை ஒரு மாநில முதல்வர் வணங்குவதை மனதார ஏற்றுக் கொள்கின்றார்கள்.
இதற்காக நாம் திமுகவை ஆதரிக்கின்றோம் என்பது பொருளல்ல. திமுகவின் மீது மட்டும் திட்டமிட்டு குற்றம் சாட்டுவோரின் யோக்கியதை என்ன என்பதை அம்பலப்படுத்துவதற்காகத்தான் இதைச் சொல்கின்றோம். பன்னீர்செல்வம் பிஜேபியின் கைக்கூலி என்று அம்பலப்படுத்தும் நபர்கள், தவறியும் எடப்பாடி பழனிசாமி சாதிவெறியன் என்பதைப் பற்றியோ, எடப்பாடி பழனிசாமி சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதாவை போலவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்து வைத்திருப்பவர் என்பதைப் பற்றியோ பேசாமல், அயோக்கியத்தனமாக நடந்து கொள்வதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எதிர்ப்பது என்று வந்துவிட்டால் பிஜேபியை மட்டும் அல்லாமல், பன்னீர்செல்வத்தையும், பாப்பாத்தி தீபாவையும், சசிகலாவையும், எடப்பாடி பழனிசாமியும், தினகரனையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும். அப்படி இல்லாமல் திட்டமிட்டு பன்னீர்செல்வத்தையும், திமுகவையும் மட்டும் எதிர்ப்பது கேலிக்கூத்தானது ஆகும்.
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களது சொந்த சுயநலத்தின் அடிப்படையில் ஆதரவு, ஆதரவு இன்மை என்பதை அவர்கள் முடிவு செய்யக்கூடாது. அப்படி செய்தால் இது போன்ற சாதிவெறியர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவதை நாம் மறைமுகமாக ஆதரித்து போன்று ஆகிவிடும். அது மானமும் சுயமரியாதையும் உள்ள மனிதர்களுக்கு அழகல்ல.
- செ.கார்கி
நான்காவது விடயம்: ஜெயா செய்த அத்துணை அட்டூழியங்களையு ம் வசதியாக மறந்துவிட்டு மீண்டும் அவரையே ஆட்சியில் உக்கார வைத்த மக்கள் (அதிலும் முக்கியமாக சென்னையில் இருக்கும் அறிவாளிகளால் தான் அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தது-சென்னைவா சிகள் ஓட்டு போடாததாலும், போட்டவர்களும் அறிவாளிகளாக நோட்டாவுக்கு ஓட்டு போட்டதாலும் – இந்த இரண்டுமே ஆளும்கட்சிக்கு சாதகமாகத்தான் முடியும் என்றுகூட தெரியாத அறிவாளிகள்), இப்போது மீண்டும் ஓட்டு போடுவோம், மீண்டும் தேர்தல் வேண்டும் என்று கூறுவது எந்த ஊரு நியாயம்? உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்? மக்கள் விருப்பத்துக்கு ஆதரவா நடக்கும் ஆளுநரை கொண்டாடுவார்கள் (அவர் சட்டத்தை மதிக்கவேண்டியதி ல்லை), மக்கள் விருப்பத்துக்கு எதிராக நடக்கும் சபாநாயகரை காலில் போட்டு மிதிப்பார்கள் (சட்டத்தை ஏன் பின்பற்றவில்லை என்று கொந்தளிப்பார்கள ்). ஐந்து வருடங்கள் கழித்தும் கூட திமுகவை ஏற்காத மக்களுக்கு இப்போது திமுக புனிதமான கட்சியாக தெரிகின்றது. திடீரென்று திமுகவின் அராஜகங்கள் மறந்துவிட்டது. மறதி மக்களின் கொடுமையான வியாதி என்று செ.கார்க் கி எப்போதும் சாமானிய மக்களை மட்டுமே மிகக் கடுமையாக சாடுவார். இப்போது அந்த மறதி அவருக்கே மிக எளிதாக வந்துவிட்ட அவலத்தை என்னவென்று கூறுவது?
ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நிகராக ஒட்டுமொத்த மக்களும் மிகப்பெரிய அயோக்கியர்களாக மாறிப்போயிருப்ப து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற து. 2016 சட்டமன்ற தேர்தலின் போது, பார்பதற்கு நன்கு படித்த பணக்கார வீட்டுப் பெண் போல காட்சி தரும் ஒரு இளம் பெண்ணே வெளிப்படையாக தொலைகாட்சியில் என்ன கூறினார் தெரியுமா? “அதிமுக தான் பெண்களுக்கு scooty குடுப்பேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார ்கள் எனவே அதிமுக ஜெயித்தது சந்தோசம்” என்று அவ்வளவு மகிழ்ச்சியாக கூறுகிறார். எப்போதுமே கார்க்கி அவருடைய தேர்தல் நேர கோவத்தை சாமானியர் மீதுதான் கொட்டித் தீர்ப்பார். சூத்திர முற்போக்காளர்கள ை பொறுத்தவரை சாமானியர் என்றாலே தலித் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் என்று தானே அர்த்தம்? இப்போது இவ்வளவு நாகரீகமான உயர் வர்கத்தை சேர்ந்த பெண் scooty வேண்டும் அதனால் அதிமுக என்கிறார், சாமானியர் மட்டுமே பணத்துக்காக ஓட்டுப் போடுவதில்லை என்பது இதில் வெட்ட வெளிச்சமாக நிருபணமாகியிருக ்கிறது. அதுமட்டுமல்ல எனது ஊரிலேயே மிகவும் பணக்கார்கள் குடியிருக்கும் பங்களாக்கள் மட்டுமே இருக்கும் பகுதியில் ஒரு அரசியல் கட்சிக்காரர் வந்து ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்த போது, ஒவ்வொரு வீட்டிலும் இருந்த அந்த மிகப்பெரிய பணக்காரர்கள் வேண்டாம் என்று கூறவே இல்லை. எங்கள் வீட்டில் இத்தனை பேர் இவ்வளவு ஆயிரம் வேண்டும் என்று வாய் கூசாமல் கேட்டு வாங்கிக் கொண்ட அவலத்தை எனது கண்களாலேயே பார்த்திருக்கிற ேன். இந்த கேடுகெட்டத்தனத் திற்கு, பணமே இல்லாத சாமானியர்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒரு 200 ரூபாய் வாங்குவதால் இந்த ஜனநாயகம் ஒன்றும் குடிமுழுகிப் போகப்போவது இல்லை. இலவசங்களுக்கு அடிமையாகிப் போன இப்படிப்பட்ட மக்கள்தான் இன்று நியாயத்தை எதிர்பார்ப்பது வியப்பாக இருக்கிறது. இலவசங்களுக்காகவ ும், பணத்துக்காகவும் ஓட்டு போட்டும், அறிவாளியாக நினைத்து ஓட்டு போடாமலும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டதாலும் தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஜெயா அம்மையார் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக மட்டும் இப்போது மக்கள் “எல்லா கோட்டையும் அழித்துவிடு, மீண்டும் மொதல்ல இருந்து கோடு போடணும்” என்று கூறுவது எந்த ஊரு நியாயம்? மக்களின் இப்படியான அயோக்கியத்தனத்த ை கீற்று தூக்கிப் பிடிப்பது எந்த வகையில் நியாயம்?
ஆனால், முதலில் திருந்த வேண்டியதும், திருத்தப்பட வேண்டியதும் பொது மக்கள் அல்ல, கொள்கை ஒன்றும், பேச்சு ஒன்று, செயல்பாடு ஒன்றும், சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்தது ஒன்றும் என்று ஒட்டுமொத்தமாகவே அயோக்கியர்களாக இருக்கும் ஒட்டு மொத்த முற்போக்காளர்கள ் தான். இவ்வளவு அழுக்குகளையும் மனதிலே வைத்துக்கொண்டு எவ்வித செயல்பாடும் இல்லாமல் அன்றாட ம் கருத்து சொல்வதும், பிறருக்கு அறிவுரை கூறுவதும், மேதாவித்தனமாக கட்டுரைகள் எழுத ுவதையும் மட்டுமே வேலையாக செய்வதை இத்துடன ் நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்ப டியான மிகப்பெரிய மோசடியை உள்ளடக் கிய இக்கட்டுரையை எழுதிய செ.கார்க ்கியை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன் . இப்படியான அயோக்கியத்தனமான தலித் எதிர்ப்பு கட்டு ரையை வெளியிட்ட கீற்று வலைதளத்தை மிக மிக வன்மையாக கண்டிக்கின்றேன் . HUGE DISAPPOINTMENT (சில வருடங்களுக்கு முன்னால் கீற்றுக்கு எதிராக எதனால் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள் என்று இப்போதுதான் புரிகின்றது)
தங்களுடைய பின்னூட்டத்தைப் படித்தேன். மிக காட்டமாக விமர்சித்துள்ளீ ர்கள். உங்களது நீண்ட பின்னூட்டத்தில் இருந்து நான் சுருக்கமாகப் புரிந்துகொள்வது , நான் ஒரு சூத்திர தலித் விரோதி, திமுகவிற்கு சொம்பு தூக்குபவன், இப்போது திவிகவிற்கு சொம்பு தூக்குகின்றேன், அப்புறம் எவ்வித செயல்பாடும் இல்லாமல் பிறருக்கு கருத்து சொல்வதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருப்பவன், அதனால் நான் எழுதுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தோழர், என்னை எவ்வித செயல்பாடும் இல்லாமல் பிறருக்குக் கருத்துச் சொல்லுவதை மட்டுமே செய்துகொண்டுள்ள தாக சொல்கின்றீர்கள் . எதன் அடிப்படையில் இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று நீங்கள் நேர்மையான யோக்கியமான மனிதராக இருந்தால் பதில் சொல்ல வேண்டும்.
தேர்தல் அரசியல் தலித் சட்ட மன்ற உறுப்பினர்களை பிழைப்புவாதிகளா க மாற்றி இருக்கின்றது என்பதுதான் மையமான என்னுடைய அவதானிப்பு. எடப்பாடி பழனிசாமி தலித்துகளுக்கு எதிரானவர் என்பதற்கும், சாதிவெறி பிடித்தவர் என்பதற்கும் ஆதாரம் இருக்கின்றது. அதை நான் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கின்றேன். அதன் அடிப்படையில் தான் அவரை ஆதரித்த தலித் சட்டமன்ற உறுப்பினர்களை அம்பலப்படுத்தின ேன் //தலித்துகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் அவர்களுக்கான விடுதலையைச் சாதித்துவிட முடியும் என நம்புபவர்களுக்க ு இது ஒரு சாட்டை அடியான செய்தி. தேர்தல் அரசியல் எப்போதுமே பொறுக்கித் தின்பதற்கானதுதா ன் என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது // இதில் எங்கே நான் தலித்துகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடாத ு என்று சொல்லி உள்ளேன். வரதராஜன் மானமுள்ள மனிதராக இருந்தால் பதில் சொல்லவேண்டும்.
தேர்தல் அரசியலில் நின்று அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக வந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும் தலித்விரோதி என்று வெளிப்படையாக ஆதாரப்பூர்வமாக தெரிந்தபின்னும் அவரை ஆதரிக்கும் இழிநிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது என்பதும் தான் நான் வைக்கும் மையமான வாதம். நீங்கள் சொல்வதுபோல அவர்களுக்கு தலித்விடுதலை பற்றி ஒன்றும் தெரியாது என்பதெல்லாம் உங்களுடைய சொந்த கருத்து, அதை நான் ஏற்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. தலித் மக்களில் தொண்ணூறு சதவீத பேருக்கு தலித் விடுதலை என்றால் என்னவென்றே தெரியாது என்று நீங்கள் சொல்கின்றீர்கள் . அப்படி என்றால் இங்கிருக்கும் தலித் இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்ற ன?. அவர்கள் எதற்காக இருக்கின்றார்கள ்?. நீங்கள் தான் பதில்சொல்ல வேண்டும்.
திமுகவிற்கு சொம்பு தூக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது. கட்டுரையின் முதல் பத்தியை ஒழுங்காகப் படித்தாலே நன்றாக இது தெரியும்.
//“சபாநாயகர் ஒடுக்கப்பட்டவர் என்பதற்காகவே திமுக எவ்வளவு கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்?”// இது என்ன வகையான தலித் அரசியல் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை சீமானுக்குத் தெரியும் என்று நினைக்கின்றேன். கேட்டுச் சொல்லுங்கள்.
நான் திவிகவை ஆதரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. நான் வெளிப்படையாகவே சொல்கின்றேன் தமிழ்நாட்டில் அடுத்து திராவிட இயக்க சித்தாந்தத்தை பெரியாரின் கொள்கைகளை வளர்த்து எடுத்துச்செல்லு ம் அமைப்பாக திவிக தான் இருக்கப்போகின்ற து. சரியான அமைப்பை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு ஒரு எழுத்தாளனாக எனக்கு உள்ளது. அவர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்தால் நிச்சயம் அதை நான் எதிர்பேன். அதில் எந்த மாற்றுக்கருத்து ம் இல்லை. ஜல்லிக்கட்டுக்க ாக போராடிய பலபேர் நந்தினிக்காக போராடவில்லை என்பதும், திவிக மட்டுமே தமிழகம் முழுவதும் நந்தினிக்காக தொடர் போராட்டம் நடத்தியது, நடத்திக்கொண்டு இருக்கின்றது என்பதையும் சேர்த்தே நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் எந்த அமைப்பு என்று சொல்லவில்லையே தோழர்? சொன்னீர்கள் என்றால் தலித்விடுதலைக்க ாக நீங்கள் செய்த புஜபல பராக்கிரமங்களை நாங்களும் தெரிந்து கொள்வோம் அல்லவா?
அப்புறம் கடைசியாக ஒன்று, என்னை எழுதுவதை நிறுத்தச் சொல்ல உங்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. வீட்டிலே உட்கார்ந்து கொண்டு கருத்துச்சொல்லு ம் அரசியல் கழிசடை நான் கிடையாது. என் பேனா ஒருநாளும் தலித்துகளின் விடுதலைக்கு எதிராகவோ, சாதி ஒழிப்பிற்கு எதிராகவோ, பிற்போக்குத்தனத ்திற்கு ஆதரவாகவோ, இல்லை முதலாளிகளுக்கு ஆதரவாகவோ எழுதாது. அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயம் நான் எழுதுவதை நிறுத்திக்கொள்வ ேன். அது என்னுடைய மரணமாகத்தான் இருக்கும்.
RSS feed for comments to this post