எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உள்ளது. ஒரு பார்ப்பனன் புரட்சியாளனாக மாற முடியுமா என்று. ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியக் கூறுகள் எப்போதுமே இருப்பது போல தெரியவில்லை. தன்னுடைய உச்சிக்குடுமியையும், பூணூலையும் எடுத்துக்கொண்ட ஒரு பார்ப்பனன் புரட்சிகர குணங்கள் கொண்டவனாக மாறிவிடுவானா? இது மட்டுமே ஒரு பார்ப்பனன் புரட்சியாளனாக மாறிவிட்டதற்கான அடையாளமா? நிச்சயமாக இல்லை. அதை அவன் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் வாழ்வின் இறுதிவரை நிரூபிக்க வேண்டும். இந்த இரண்டில் எது ஒன்று குறைந்தாலும் அவன் அம்பலப்பட்டு அசிங்கப்படுவது உறுதி. ஆனால் பார்ப்பனர்களால் ஒருபோதும் தங்களை அப்படி மாற்றிக்கொள்ள முடியாது.

 இந்தியாவை பிடித்த சாபக்கேடுகளில் மிக முக்கியமானது சாதியே ஆகும். நம்மில் ஒவ்வொருவருக்கும் சாதி அழிக்கப்பட வேண்டும் என்று கருத்து வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் தவிர்க்க இயலாமல் ஏற்பட்டு இருக்கலாம். தான் காதலித்த பெண்ணை கரம் சேராமல் போகும் போதோ இல்லை குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள் ஆகியோருக்குப் பயந்து தன்னைவிட சாதியில் கீழ்நிலையில் உள்ள நண்பனின் உறவை முற்றிலும் முறித்துக்கொண்டபோதோ சமூகத்தில்  சாதி ஆணவ கொலைகளோ, இல்லை சாதிய படுகொலைகளோ நடைபெறும்போதோ அதைப் பார்த்துக் கொதித்துப்போய் இந்தச் சாதியத்தின் மீது மிகக்கொடிய வெறுப்பை நாம் அடைந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் சாதி மீதான வெறுப்பை பல பேர் தன்னுடைய சுயநல வேட்கையின் காரணமாகவும் சமூக அழுத்தத்தின் காரணமாகவும் மாற்றிக்கொண்டு அப்பட்டமான சாதிவெறியர்களாக மாறிவிடுவதுண்டு.

 ஆனால் சில பேர் எவ்வளவுதான் இடர்பாடுகள் ஏற்பட்ட போதும் தன்னுடைய கொள்கையில் இருந்து தவறாமல் எப்படியாவது சாதியின் மீதும் சாதிவெறியர்கள் மீதும் தாக்குதலைத் தொடுக்கவேண்டும் என மனதால் உந்தப்பட்டு முழு மனதோடு அதற்காக பாடுபடுவதாய் சொல்லிக்கொள்ளும் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் அது போன்ற அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் தோழர்கள் உண்மையில் அது போன்ற அமைப்புகளின் முழு செயல்பாடுகளையும் உற்று நோக்கியோ கட்சி தலைமைகளின் யோக்கியதை என்னவென்று பார்த்தோ எல்லாம் சேர்வது கிடையாது. இதற்காகவே கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள தோழர்களின் பேச்சைகேட்டோ இல்லை அது போன்ற அமைப்புகள் நடத்தும் பத்திரிக்கைகளைப் படித்தோ உந்தப்பட்டு அது போன்ற கட்சிகளில் சேர்கின்றனர்.

  கட்சியில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் கொண்ட கொள்கைக்காக தன்னை முழுவதுமாகவே அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக அதில் கரைத்துக் கொள்கின்றனர். அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி, அவர்கள் சொன்ன வேலைகளை செய்து தன்னுடைய நேர்மையையும் சாதி ஒழிப்பிலும் மற்ற பிற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போன்றவற்றிலும் தனக்குள்ள உணர்வு பூர்வமான நிலையை நிரூபிக்கின்றனர். தெருத்தெருவாய் அலைந்து பத்திரிக்கைகள் விற்பது, அவர்கள் பார்த்து அமைப்புக்கு அழைத்து வர சொல்லும் நபர்களை கால்கடுக்க காத்திருந்து சந்திப்பது, சில சமயம் அவர்கள் தரும் போலி முகவரியில் பலமணிநேரம் காத்துக்கிடந்து அவமானப்பட்டுத் திரும்புவது என அனைத்தையும் சகித்துக்கொண்டு அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். ஆனால் அப்படி பாடுபட்ட தோழர்களை ஒரு நேர்மையான அரசியல் இயக்கம் எப்படி நடத்தும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அதுவும் பார்ப்பனர்கள் தலைமைதாங்கும் ஒரு அரசியல் இயக்கமாக இருந்தால் அங்கே சூத்திர சாதி தோழர்களுக்குக் கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கும் என்று நாம் சொல்லவே தேவையில்லை.

  ஒரு பார்ப்பனன் முற்போக்கு இயக்கங்களில் குறிப்பாக திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போன்றவற்றில் இருந்தால் அந்த இயக்கங்கள்  எந்த மாதிரியான நிலையை எட்டும் என்றால் அது காலப்போக்கில் சாதிவெறியர்களை நக்கிப்பிழைக்கும் கீழ்த்தரமான நிலையை எட்டும். இது போன்ற கீழ்த்தரமான நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக தான் பெரியார் ஒரு போதும் திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனர்களை உள்ளே வர முடியாமல் தடுத்தார். ஒரு வேளை வந்திருந்தால் இந்நேரம் திராவிட கழகம் கூட ஒரு சங்கர மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். இதை நன்கு உணர்ந்த பார்ப்பன கூட்டம் திராவிட இயக்கங்களை விட்டுவிட்டு தன்னுடைய சித்தாந்த அரசியல் மேலாண்மையை நிலைநாட்டிக்கொள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை தேர்ந்தெடுத்தன.

 இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை அதில் பார்ப்பன மற்றும் சாதி இந்துக்களின் செல்வாக்கே மேலோங்கி நிற்கின்றது. இந்தத் தரித்திரம் பிடித்த நிலை தங்களை புரட்சிகர கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கங்கள் வரை ஊடுரூவி நிற்கின்றது. இந்தியாவில் முற்போக்குப் பேசினாலும் சரி, இல்லை பிற்போக்கு பேசினாலும் சரி அதை நாத்தம் பிடித்த பார்ப்பன வாய்களின் மூலமே நாம் கேட்கவேண்டி இருக்கின்றது. பார்ப்பன மூளைகளுக்கு இங்கே எப்போதுமே செல்வாக்கு அதிகம்.

 சாதி ஒழிப்பு என்ற கொள்கையைக் கட்சியின் அடி நாதமாக வைத்திருக்கின்றோமே அப்படி என்றால் கட்சியின் தலைமைப் பொறுப்பை நாம் யாருக்குக் கொடுத்தால் பெறும்பாண்மை சமூகமாக உள்ள சூத்திரசாதி மக்களின் ஆதரவையும், சிறுபாண்மை இன மக்களின் ஆதரவையும் வென்றெடுக்க முடியும் என்ற குறைந்த பட்ச நேர்மையைக்கூட அது போன்ற பார்ப்பன தலைமையின் கீழ்  இயங்கும் கட்சிகள் கடைபிடிப்பதில்லை. “ஏண்டா ஒரு பார்ப்பனனை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப்பொறுப்பில் உட்காரவைத்து அழகு பார்க்கின்றீர்கள்” என்று  யாராவது கேட்டால் “அவர் சாதி ஒழிப்பு பேசுகின்றார், மதத்தை எதிர்த்து நிற்கின்றார், குறிப்பாக மாட்டுக்கறி தின்கின்றார் அதனால் அவரை பார்ப்பனர் என்று சொல்ல முடியாது. அதனால் தான் பொறுப்பை ஒப்படைத்து இருக்கின்றோம்” என்று பதில் வரும். நீங்கள் தொடர்ச்சியாக கட்சியில் இருக்கவேண்டும் என்றால் “ஏண்டா நாயே மற்ற சாதிக்காரனுக்கெல்லாம் இந்தக் குவாலிபிகேசன் கிடையாதா” என்று எப்போதுமே கேட்கக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் படி நீங்கள் கட்சியில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதோ இல்லை நீக்கப்படுவதோ நடக்கலாம்.

   அது போன்ற பார்ப்பனர்களால் தலைமைதாங்கி நடத்தப்படும் கட்சியின் கடைமட்ட குறிப்பாக சூத்திரசாதி ஊழியர்கள் தங்களது அனைத்துவிதமான இன்பங்களையும் கட்சியின் வளர்ச்சிக்காக தியாகம் செய்து பாடுபட்டால் அதனால் விளையும் அனைத்துப் பயன்களையும் மேல்மட்டத்தில் இருக்கும் சில புல்லுருவிகளே எப்போதும் அறுவடைசெய்து கொள்கின்றார்கள். சாதிவெறியர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அயோக்கியர்களிடம் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். கட்சிக்குக் கணிசமாக நிதிகொடுத்தால் சங்கராச்சாரியையே அழைத்துவந்து சாதி ஒழிப்பு பற்றியும், பச்சமுத்துவை அழைத்துவந்து கல்வி உரிமையைப் பற்றியும் பேசவைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை கட்சியின் கடைமட்ட ஊழியர்கள் என்பவர்கள்  எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு லெவி கட்டவும், தெரு நாய்களைப்போல அலைந்து கட்சி சொல்லும் வேலைகளை ஏன் எதற்கு என்று கேள்விகேட்காமல் செய்வதற்கும்தான் தேவை. மற்றபடி மற்ற நேரங்களில் அவர்களுக்குக் கட்சி ஊழியர்கள் என்பவர்கள் திசு பேப்பர்தான்.

 கட்சியில் கடைமட்ட நிலையில் உள்ள பல தோழர்கள் அதன் வளர்ச்சிக்காக பாடுபட, பார்ப்பன கலாச்சார விழுமியங்களால் உள்வாங்கப்பட்ட தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளில் உள்ள அறிவுஜீவிகள் கட்சியே தாங்கள் தான் என்று கருதி தங்களை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனர். தங்களது புகைப்படங்களைக் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் மார்க்ஸ்,எங்கெல்ஸ், லெனின் போன்றோரின் புகைப்படங்களுக்கு மத்தியில் போட்டுக்கொண்டு தானும் ஒரு புரட்சியாளன் தான் என கூசாமல் சொல்லிக்கொள்கின்றனர். பெயருக்கு முன்னால் புரட்சி என்று போட்டுக்கொண்டாலே புரட்சி பேச்சாளன், புரட்சி கவிஞன், புரட்சி பாடகன் என எல்லா புண்ணாக்குகளும் மாறிவிடுகின்றார்கள். இவர்கள் செய்த ஒரே புரட்சி கட்சியில் உள்ள மற்ற தோழர்களின் உழைப்பை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தன்னை பெரிய புடுங்கிகள் போன்று விளம்பரப்படுத்திக் கொண்டதுதான்.

 இவர்களால் ஒரு போதும் இந்திய சமூகத்தில் புரட்சியைக் கொண்டுவரமுடியாது. அப்படி கொண்டுவந்தால் அது ஒரு பார்ப்பன புரட்சியாகத்தான் இருக்கும். பெளத்த இந்தியாவை புஷ்யமித்தர சுங்கன் தலைமையில் நடைபெற்ற பார்ப்பன புரட்சி அழித்ததல்லவா அதுபோன்ற ஒன்றாகவே அது இருக்கும்.

 எப்போது ஒரு முற்போக்கு அரசியல் இயக்கத்திற்குள் பார்ப்பனன் நுழைகின்றானோ அப்போதே அந்த அமைப்பு சீரழிய ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். எப்படி மனிதக்குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய பிறகும் கூட எச்ச உறுப்பாக குடல்வால் உள்ளதோ அதே போல ஒரு பார்ப்பனன் என்னதான் முற்போக்கு வாதியாக வேடம் போட்டாலும் அவனுக்குள் அந்த ஆதிக்கசாதி மனோபாவமும் அடுத்தவனைக் கீழ்த்தரமாக பார்க்கும் இழி பார்வையும் ஒரு போதும் மறையாது. பூணூலின் தடங்கள் அவனுக்குள் மறைந்து எச்ச உறுப்பாக இருந்துக்கொண்டே இருக்கும்.

  இன்று கம்யூனிஸ்ட் இயக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பார்ப்பன தலைமைகளை நாம் கண்டிப்பாக எதிர்க்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இல்லை என்றால் அந்தப் பார்ப்பன நச்சுக்கூட்டம் ஒட்டுமொத்த கட்சியையுமே களங்கப்படுத்திவிடும் அபாயம் உள்ளது. அந்தக் பார்ப்பன கூட்டம் சாதிவெறியர்களுடனும், மதவெறியர்களுடனும் கள்ள உறவை பேணுவதை அறியாமல் அதுபோன்ற கட்சிகளுக்காக பாடுபட்டு நம்முடைய வாழ்க்கையே நாம் கேவலப்படுத்திக்கொள்வோம். அவர்கள் கட்சி உறுப்பினர்களா இல்லை சாதிவெறியர்களா என்ற ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சயம் அவர்கள் சாதிவெறியர்களின் பின்னால் தான் நிற்பார்கள். இதில் இருந்தே பூணூலின் எச்சம் அவர்களுக்குள் இருப்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அனைத்து மட்டங்களில் இருந்தும் இந்தப் பார்ப்பன கூட்டத்தை நாம் விரட்டியாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லை என்றால் சமூகமாற்றம் என்ற கொள்கையையே நாம் கைகழுவ வேண்டிய நிலை ஏற்படலாம். நாம் இங்கே நேரடியாக எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவிரும்பவில்லை. காரணம் இது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே உரிய பிரச்சினையாக பார்க்கவில்லை பார்ப்பனர்கள் முக்கிய பொறுப்பில் அமரவைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளுக்கும் குறிப்பாக முற்போக்கான ஒரு சமூக மாற்றம் வேண்டி போராடிக்கொண்டிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும் என்பதனால்தான்.

- செ.கார்கி

Comments

11 comments

11
jane
Good article, by Karki.
வன்பாக்கம் கொமாண்டூர் விஜயராகவன்
இனவாத வெறி சொட்டுகிறது
Ms. Surya
Well said Mr. Karki. சுட்டெரிக்கும் சூரியன் தன் பண்பை மாற்றி கொண்டாலும் மாற்றிக் கொள்ளும் ஆனால் பார்ப்பான் தன் குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டான்.
கோவை சத்யம் மு.திருமூர்த்தி
உங்களின் சந்தேகம் மிகச் சரியானதுதான் .தற்கால பார்பனர்கள் மற்றவர்களின் உழைப்பை சுரண்டி தின்னும் சும்மாதின்னி கல்தான் !இதை யாரும் மறுக்கமுடியாது ஆனால் !இதில் ஒருவர்க்கு மட்டும் விழக்கு வேண்டுகிறேன் அவர்தான் குரு ஆதிசங்கரர் பார்பனராக பிறந்தும் ,பார்ப்பனர்களின் சனாதன முரண்பாட்டை வெறுத்து தனது பூநூல்,குடுமியைசுயமாக துறந்து புரட்சியை செய்தார்கள்.இவருடன் மற்ற ஒருவரையும் சேர்த்துக்கொள்ளலாம் அவர் குரு இராமானுஜர் ! மேற்கண்ட இருவரின் சரித்திரம் படிக்க வேண்டுகிறேன் .எனதுமனமார்ந்த வாழ்த்துக்களுடன்
தமிழ்
பொதுவுடமை இயக்கங்கள்/கட்சிகள் சாதி வெறுப்பில் இயங்குவதில்லை.இந்தியாவில் அவற்றை வளர்த்ததில் பிராமணர்களுக்கும் பங்குண்டு. எந்தக் கட்சியிலும் பிராமணர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் தலைமைக்கு வருவதில்லை. இன்னும் சொல்வதென்றால் அவர்களும் அரசு அடக்குமுறைகளை எதிர்கொண்டுதான் அரசியல் செய்கிறார்கள்.

இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு உளறல் பேர்வழி.இவர் எந்த இயக்கத்தில் இருக்கிறார், என்ன பங்காற்றியுள்ளார் என்பதை சொல்வாரா. கீற்றில் கிட்டதட்ட தினசரி எதையாவது/யாரயையாவது திட்டி எழுதி வரும் இவருக்குத் தேவை மனநல சிக்ச்சை. இந்த வெறுப்புக் கட்டுரைகளை கீற்று பிரசுரிக்க மறுக்க வேண்டும்.
krishna prasath
உண்மையில் சுதந்திரம் ,சமத்துவம் மற்றும் சங்கோதரத்துவம் என்பது தான் பொது உடைமை. ஆனால் இங்கு கார்கி என்ற ஒரு ஆசாமி , எப்பொழுது பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது அல்லது தனி நபர் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருக்கிறார். சிறந்த மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது...
கயல்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவனுடைய பண்புகள் தீர்மானிக்கப்படுகின்றன என்ற பார்ப்பனியத் தத்துவத்தை இந்த கட்டுரையாளரும் ஏற்றுக்கொள்கிறார். பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு பார்ப்பனியத்தை எதிர்ப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. பார்ப்பனியம் என்பது சித்தாந்தம். பார்ப்பனர்கள் என்பது அந்த சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் பல்வேறு சாதிகளில் ஒரு சாதி. அதிலும் அதில் உள்ள அனைவரும் பார்ப்பனிய சித்தாந்தத்தை கடைப்பிடிகிறார்கள் என்று சொல்வது என்பது பிறப்பின் அடிப்படையில்தான் அவரின் பண்பும் தீர்மானிப்பதாக கூறுவதை தவிர வேறு எதுவும் இல்லை. பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதிகளின் ஆதிக்கத்தை காப்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரையாகவே இதை பார்க்கவேண்டும். இதை இனங்கண்டு வேரறுக்க வேண்டும். இவர்கள்தான் இந்த சாதிய சமூகம் மாறாமல் இருக்க வேண்டும். ஆனால் அது பார்ப்பனர் ஆதிக்கத்தின் கீழ் போகாமல் மற்ற ஆதிக்கச் சாதியில் இருக்கும் கும்பலின் கையில் கைமாற்ற வேண்டும் என்பவர்கள். சாதி ஒழிப்பிற்கு இந்த சித்தாந்தம் தடையானதாகும். எப்படி சாதியத்தை ஒழிப்பதற்கு பார்ப்பனியம் தடையாக இருக்கிறதோ அதே அளவுக்கு அந்த தத்துவத்தை எதிர்மறை வடிவத்தில் ஏற்றுக்கொண்ட திராவிட தத்துவமும் அதற்கு சேவை செய்துகொண்டிருக்கிறது என்பதற்கு இந்தக் கட்டுரை இன்னுமொரு சாட்சி.
லட்சுமணன்
பார்ப்பன புல்லுருவிகள் பொதுவுடைமை இயக்கங்களில் மட்டுமல்ல, கீற்று போன்ற தளங்களிலும் வந்து கமென்ட் போடுவார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? மார்க்சிஸ்ட் பார்ப்பான்களும், ம.க.இ.க. பார்ப்பான்களும், இப்படிப் புரட்சி பேசும் பார்ப்பான்கள் அனைவரும் என்ன செய்கிறார்கள் என்பது அறிவுடையவர்கள் அறிவதுதான். பார்ப்பனர்களை ஆதரிக்கும் அறிவிலிகளுக்குத்தான் மனநல சிகிச்சை தேவை.

வாழ்த்துகள் கார்க்கி!. சிலருக்கு வயிறிலிருந்து பின்பக்கம் வரை எரிவதிலிருந்து, நீங்கள் சரியான விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன்.
Dr.P.Muthukrishnan
Yes
THAMIZHAGAN
கட்டுரையாளரின் கருத்துடன் முழுவதும் உடன் படுகிறேன். மணியரசனிடம் ஒரு கி வெங்கட்ராமன் போல தமிழ்த்தேசிய அமைப்புகளிலும் பார்ப்பனர்கள் புகுந்து பெரியார், திராவிட எதிர்ப்பு உணர்வை ஊட்டிவிட்டார்கள். எல்லாம் பார்ப்பனமயமாகிவருகிறது. எங்கிருந்தாலும் பார்ப்பனரை புறக்கணிக்க வேண்டும்.
Arun
சிறப்பான கட்டுரை. சில விசயம் தெரியாத முற்போக்காளர்கள் பார்ப்பனியத்தை தான் எதிர்க்கிறோம் பார்ப்பனர்களை அல்ல என்று பார்ப்பனர்களை காப்பாற்றுவதையே வேலையாக வைத்துள்ளனர்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.