நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் இது போன்ற வரிகளைக் கேட்டாலே தமிழ் வியாபாரிகளுக்கு வயிற்றில் புளி கரைப்பது ஏனோ தெரியவில்லை. வருகிற நவம்பர் 20 நீதிக்கட்சி நூற்றாண்டு துவக்க நாளை முன்னிட்டு சென்னையிலே திராவிடர் கழகத்தால் 'நீதிக்கட்சி நூற்றாண்டு விழா' அறிவிப்பு வெளியானது தான் தாமதம் பேனாவை தூக்கி விட்டது தமிழர் கண்ணோட்டம்.
"நீதிக்கட்சிக்கும் திராவிடர் கழகத்திற்கும் என்ன சம்பந்தம்? நாயரும், தியாகராயரும் தோற்றுவித்த நீதிக்கட்சியை கேரளாவில், ஆந்திராவில் கொண்டாடாமல் தமிழ்நாட்டில் கொண்டாடுவதன் உள்நோக்கம் என்ன? நீதிக்கட்சியினர் திராவிடர் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் இட ஒதுக்கீட்டிற்கு என்ன சாதித்து கிழித்துவிட்டார்?" இப்படி பொய்யும் புனையுமாக புரண்டோடுகிறது கட்டுரை.
நீதிக்கட்சியை தூக்கி நிறுத்த, பெரியார் சிறைபட்டிருந்த காலத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார் படத்திற்கு இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கிய வரலாறையெல்லாம் அறியாதவர்களா தமிழக மக்கள்?
பார்ப்பனரல்லாதாரின் நலனுக்காக 1916 நவம்பர் 20ம் நாள் தென்னிந்திய நல உரிமை சங்கம் திராவிடர் இயக்கத் தலைவர்களால் இதே சென்னை மாநகரில் விடோரியா பப்ளிக் ஹாலில் தானே துவக்கப்பட்டது. சென்னையில் துவக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆந்திராவில் ஏன் கொண்டாடவில்லை? ஆப்பிரிக்காவில் ஏன் கொண்டாடவில்லை? எனக் குதர்க்க கேள்விகள் ஏன்?
பின்னாளில் நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பிதாமகன்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் அவர்களாலே துவக்கப்பட்டதுதான் "மெட்ராஸ் யுனைட்டட் லீக்" அமைப்பு. 1912ல் துவக்கப்பட்ட அந்த அமைப்பின் முதலாமாண்டு விழா சென்னையில் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனை தோட்டத்திலே நடைபெற்றது. மெட்ராஸ் யுனைட்டட் லீக் எனும் பெயரை "திராவிடர் சங்கம்" எனும் பெயர்மாற்ற தீர்மானம் ஏகோபித்த ஆதரவில் அன்று இயற்றப்பட்டதுதானே வரலாறு. ஒருவகையில் நீதிக்கட்சிக்கும் இந்த திராவிடர் சங்கம் தான் முன்னோடி.
1916ல் துவங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்திற்காக "ஜஸ்டிஸ்" எனும் ஆங்கிலப் பத்திரிக்கை துவங்கப்பட அப்பத்திரிக்கையின் பெயரே பிரதானமாகி "ஜஸ்டிஸ் பார்ட்டி" என ஆங்கிலத்திலும், "நீதிக்கட்சி" என தமிழிலுமாக அந்த அமைப்பையே அழைக்கத் துவங்கினர். அதே ஆண்டில் நீதிக்கட்சியினரால் தமிழில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை "திராவிடன்" என்பதை இவர்கள் அறிவார்களா?
தமிழகத்தில் அன்றைக்கு சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே முதல்தரக் கல்லூரிகள் இருந்தன. அங்கே பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட விடுதிகளில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதை உணர்ந்த டாக்டர் சி.நடேசனாரால் 1916ம் ஆண்டில் சென்னை திருவல்லிகேணியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்காக துவக்கக்கப்பட்ட விடுதிக்குப் பெயர் "திராவிடர் சங்க விடுதி".
திராவிடர் இயக்கத்திற்கும் நீதிக்கட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது பாட்டனுக்கும்-தந்தைக்குமான உறவு! தந்தைக்கும்-மகனுக்குமான உறவு! என்பதை தமிழர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
பெரியாரை விமர்சிப்பதே ஒரு பிழைப்பாய், விளம்பரமாய் இன்னும் எத்தனை காலத்தை வீணடிக்கப் போகிறீர்கள்? தொடர்ந்து அம்பலப்பட்டு முகத்திரை தாறுமாறாக கிழிந்து தொங்குகிறது. பிசினஸை மாற்றுங்கள்!
- கி.தளபதிராஜ்
1944ஆம் ஆண்டு சூன் மாதம் 17ஆம் நாளிட்ட குடியரசு ஏட்டில் பெரியார் எழுதுகிறார்:
”தென்னிந்தியப் பெருங்குடி மக்களுக்கு இலட்சியச் சொல் ஒன்று இல்லாமல் இருப்பது பெருங்கேடு. இந்தக் காரணத்தாலேயும் (பார்ப்பனர்) “அல்லாதார்’’ என்ற பட்டம் நமக்குக் கூடாது என்பதாலேயும், நாமெல்லாரும் ஒரு கூட்டிற்குள் வர வேண்டும் என்பதாலேயும் ஒரு குறிச்சொல் தேவை. மிகமிகத் தேவை. இதைப் பல நாட்களாகவே நான் கூறி வருகிறேன்’’ - ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி - 1.
“அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால், “திராவிடர்” என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காதக் காரணத்தால், பெரிதும் ஆந்திரர் ஒப்புக் கொள்ளாததால், “தென்னிந்தியர்” என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்.
“பார்ப்பனரல்லாதா ர் என்று கூறிக் கொள்ளும் ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனரிலிருந ்து வேறுபடுகின்றனர் ? நடை, உடை, பாவனைகளில், மதத் துறையில், வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கின்றார்கள ்! இந்தப் பார்ப்பனரல்லாதா ர் வீட்டுக் கலியாணம், கருமாதி, சாந்தி முகூர்த்தம், திவசம், பூசை எல்லாம் பார்ப்பான் இல்லா விட்டால் ஆகாது! உத்தி யோகத்தில், தேர்தலில் மட்டும் பார்ப்பானுடன் போட்டி போட வேண்டும் என்றால் யார் ஒப்புக் கொள்வார்கள்?’’.
பெரியார், கும்பகோணம் சொற்பொழிவு, 26, 27.11.1944, குடியரசு இதழ், 09.12.1944, ஈ.வெ.ரா. சிந்தனைகள் (வே. ஆனைமுத்து தொகுப்பு) பாகம் - 1.
“1917ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டு முடிய 26 ஆண்டுகள் மறைந்தன. காலஞ்சென்ற தலைவர்கள், ஆதியில் “திராவிடர் கட்சி’’ என்ற பெயரைக் கொள்வதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்க ள். இந்தத் திராவிடர் கழகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் தேவாங்கர், தங்களைப் பிராமணர்களென்றே கூறிக் கொண்டிருந்தனர். மேலும், ஆந்திர ஜமீன்தார்கள் தங்களை ஆரியர்கள் என்றே கருதி வந்தார்கள். காலஞ்சென்ற உறுதியான தலைவர் பனகல் அரசருக்கே பூணூலும் உச்சிக் குடுமியும் இருந்தன. அவர் பெரிய சமற்கிருதப் பண்டிதர்.
“ஸ்ரீரங்கத்தில் வடமொழியில் வாசித்தளிக்கப்ப ட்ட வரவேற்புக்கு, வடமொழியிலேயே பனகல் அரசர் பதிலளித்திருக்க ிறார். இந்தி எதிர்ப்புக் காலத்தில் ஆரியர் - திராவிடர் பிரச்சினை நம் கட்சியைப் பலமாக ஆக்கிரமித்தபோது , வெங்கடகிரிராஜா அவர்கள் அதற்காகவே கட்சியை விட்டு விலகினார்’’.
-பெரியார், சேலம் செவ்வாய்ப்பேட்ட ை சொற்பொழிவு, 16.1944, குடிஅரசு 29.01.1944 ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுப்பு 1 - பக்கம் 550.
நீதிக்கட்சித் தலைவர்கள் திராவிடத்தை ஏற்கவில்லை என்று பெரியாரே வேதனைப்படுகிறார ்கள். திராவிடத்தை மறுத்த நீதிக் கட்சியை திராவிட இயக்கத்தின் தாயாக இன்றையத் திராவிடவாதிகள் திரித்துக் கூறிக் கொள்வதின் உள்நோக்கம் என்ன?
தாங்கள் அளித்துள்ள வாக்குமூலப்படிய ே, “நீதிக்கட்சியில ் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகள் எற்றுக் கொள்ளப்படவில்லை தமிழ் முதன்மை ஏற்றுக் கொள்ளப்படவில்லை சமூக நீதிக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை இதனால்தான் திராவிடர்க் கழகம் தொடங்கப்பட்டது” என சொல்கின்றீர்கள் .
அப்புறம் என்னத்துக்கு, நீதிக்கட்சிதான் திராவிட இயக்கத்துக்கு முன்னோடி என சொல்கின்றீர்கள் என்பதுதான் இங்கு கேள்வியே!
அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல், எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறீர ்கள்..
தொடக்கத்தில் கம்யூனிஸ்டுக்கட ்சி காங்கிரசுக்குள் ஒரு அமைப்பாக காங்கிரசு சோசலிஸ்டுக்கட்ச ி என்று இயங்கியது. பிறகு பிரிந்து விட்டது இதனால் வரலாறு மாறிவிட்டதா? அது போல் நீதிக் கட்சியில் இருந்து திராவிடர்க் கழகம் தோன்றியது என்பதில் என்ன பிழை?/ இரண்டிற்கும் இடையே ஒர் ஒற்றுமை இருந்தது அது பார்ப்பனர் அல்லாதோரை வளர்ப்பதற்கு வெள்ளையனிடம் மனு கொடுப்பது என்பது. அதனால் அதில் பெரியார் உட்பட பலரும் இணைந்து இருந்தனர் பிறகு அவர்கள் கொள்கைகள் மாறுபடவே பெரியார் திராவிடர்க் கழகம் தொடங்கினார் இதனால் நீதிக் கட்சியிலிருந்து திராவிடர்க் கழகம் தோன்றியது என்பதில் என்ன தவறு? அது செல்க பெரியார் எதற்காக கழகத்தை தொடங்கியிருந்தா லும் அதனை தமிழ்த் தேசியர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் ஒரு இயக்கம் , (கட்சி கூட இல்லை) , அவரை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா? இதுவே அக்கட்டுரையின் சாரமென்று நான் கருதுகிறேன் அதற்கு விடையளிக்கமால் என்னை உளறுவாயன் என்கிறீர்களே!! உங்களுடைய நயத்தகு நாகரீகம் என்னை மெய் சிலிர்க்கவைத்து விட்டது அது செல்க தாங்கள் இணந்து இருக்கும் இயக்கம் எப்படி ?சி பி எம் லிருந்து விலகி எம் சி பி என்று தொடங்கினர். பிறகு அது எம் சி பி (அய்) என்று அகில இந்தியக்கட்சியா க ஒரே நாளில் மாறியது பிறகு தமிழ்த்தேசியக் பொதுவுடமைக்கட்ச ியாக மாறியது பிறகு பொது வுடமையும் மார்க்சும் கை கழுவப்பட்டு தமிழ் பேரியக்கம் ஆகிவிட்டது!! நாளை என்ன நடக்கும் என்பது அதில் உள்ள பார்ப்பன பார்ப்பனியத் தலைவர்களுக்கே தெரியாது கட்சி ஆரம்பிக்கும்போத ு அதற்கு கையெழுத்து இட்ட ஒருவரை ஒதுக்கினர் ஒருவரை விலக்கினர் இன்று அது தனியார் நிறுவனம் . இரண்டு பங்குதாரர்கள் பார்ப்னர்க்கு தலைமையில் 50 % இடஒதுக்கீடு. இந்திரனும் இந்திராணியும் மாறவே மாட்ட்டர்கள் உங்கள் நிலை இப்படி இருக்க நீதிக் கட்சியில் இருந்து திராவிடர் இயக்கம் தோன்றியது எனப்தில் என்ன பிழை ?
தமிழ் ஆனந்தன் அவர்களே! தமிழன் தமிழ் நாட்டை ஆளுவதில் தவறில்லை மக்கள் தேர்ந்து எடுத்தால் யார் வேண்டுமானாலும் ஆளலாம் ஆனால் மக்களுக்கு தமிழனை மட்டும் தேர்ந்து எடுக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கமுயல்வது ஏன்?தமிழன் விரும்பிதானே ஒரு மலையாளி பல ஆண்டுகாலம் முதல்வராய் இருந்தார் .இன்று கன்னடத்து / திருவரங்கத்து பெண்மணி!! மேலும் யார் தமிழர் என்று மரபணு சோத்னை செய்யலாமா அல்லது குடலை அறுத்து கருப்பை சோதனை செய்யலாமா? என்று ஒருகருத்து உலவுகின்றது நெடுமாறன், சீமான், கலைத்துறைக்கவித ாயினிகள், கலாமேதாவிகள் என்று சுற்றி விட்டு இப்போது எவன் கிடைப்பான் அன்று அலையும் தமிழ்த் தேசியர்களுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் கட்டுரையாளர் எழுதியிருப்ப்தை புரிந்து கொண்டு செயல்படாமல் அவர்மீதும் பின்னூட்டம் எழுதியவர்கள் மீதும் பாய்வது ஏன்?
RSS feed for comments to this post