இம்மாதம் (மே, 1931) 24, 25ஆம் தேதிகளில் பிறையாற்றில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மற் றொரு பக்கம் பிரிசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமாகக் கருதப்படுவதும், பலருக்குத் திடுக்கிடும் படியான அளவுக்குப் பிரமாதமாய்க் காணப்படு வதுமான தீர்மானங்கள் மூன்று. அதாவது,

1. “மக்களுக்குள் இருந்துவரும் தீண்டாமை யும், சாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக் கப்பட வேண்டுமானால் அதற்கு முட்டுக் கட்டையாகவிருக்கும் ‘இந்து மதம்’ என்பது அழிக்கப்பட வேண்டியது மிக்க அவசிய மாகும்.”

2.  “மக்கள் உண்மையான சுதந்தரமும், சம தர்மமும், பொதுவுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு இடை யூறாகவிருக்கும் கடவுள் நம்பிக்கையும், எதற்கும் அதையே பொறுப்பாக்கும் உணர்ச் சியும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமா கும்.”

3. “பெண்கள் ஆண்களைப் போன்ற விடுதலை யையும், சமதர்ம ஒழுக்கத்தையும், சுதந் தரத்தையும் அடைய வேண்டுமானால், அவற்றிற்குத் தடையாயிருக்கும் பிள்ளைப் பேற்றை (கர்ப்பத்தை) அடக்கி ஆளவேண்டி யது அவசியமாகும்” என்பவைகளாகும்.

ஆகவே இதன் கருத்து மதஉணர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்க்கைக்குள் புகுந்துகொண்டு இருக்கக் கூடாதென்பதேயாகும்.

பொதுவாக, நமது நாடானது உண்மையான விடுதலையும், சுதந்தரமும், சமதர்மமும் அடைவதற்கு நாம் வெகுகாலமாகவே மேல்கண்ட இம்மூன்று தன்மைகள் - அதாவது மக்களுக்குள் தீண்டாமை ஒழி வதும், சாதி வித்தியாசம் நீங்குவதும், பொருளாதார சமதர்மம் ஏற்பட வேண்டுமென்பதும், பெண்கள் விடுதலையும், சமஉரிமையும் அடைய வேண்டு மென்பதையுமே முக்கியமாகச் சொல்லி வந்திருக் கின்றோம். இதை அன்று முதல் இன்று வரை மறுப்ப வர்கள் - மறுத்தவர்கள் யாருமில்லை. ஆகவே இம் மூன்று காரியங்களும் ஏற்பட வேண்டுமென்று உண் மையாயும், யோக்கியமாயும் விரும்பும் - ஒப்புக் கொள்ளும் ஒவ்வொருவரும் அவற்றிற்கு இடையூறு களாயிருப்பவைகளை ஒழிப்பதன் மூலம்தான் அவைகளை அடைய முடியுமென்பதை ஒப்புக்கொண்டே தீருவார்கள்.

இந்நிலையில் பார்த்தோமானால், நமக்குத் தீண் டாமைக்கும், சாதி வித்தியாச உயர்வு-தாழ்வுக்கும் ஆதாரமாக ‘நமது மதம்’ என்று சொல்லப்படும் “இந்து மதம்” என்பதாக ஒன்று இருந்து கொண்டுதான் முட்டுக் கட்டையாக இருக்கின்றதேயொழிய, வேறொன்று மில்லை.

இந்துமதம் என்பதன் ஜீவநாடியே தீண்டாமை யும், சாதி வித்தியாசமுந்தான் என்பதை, “இந்து மத” சம்பந்தமான ஒரு சிறிது ஞானமுள்ள மக்களும் உணருவார்கள்.

அன்றியும், இன்றைய தினம் தீண்டாமையையும், சாதி வித்தியாசத்தையும் ஒழிக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்களான நமது எதிரிகள் எதைப் பிரதானமாய்ச் சொல்லுகிறார்களென்றால், “இந்து மதத்தை”த்தான் பிரதானமாய்ச் சொல்லுகிறார்கள்.

ஆகவே, இந்த மதத்தின் நிழலில்தான், தீண்டா மையும், சாதி வித்தியாசமும் அடைக்கலம் புகுந்து கொண்டிருக்கின்றதேயொழிய, வேறு எவருடைய பலத்தாலும், ஆதாரத்தாலும் அவை இருக்கவில்லை. அன்றியும், சாதி வித்தியாசத்தைக் காப்பாற்றுவதுதான், இன்று இந்துமதச் சம்பிரதாயமாக இருக்கின்றதே யொழிய, வேறு ஒரு காரியமும் இந்து மதத்தின் அனு பவமாய் எந்த இந்துமக்களிடமுமில்லை என்பதும் அனுபவ ஞானமுள்ள யாவரும் நன்றாய் அறியலாம்.

முதலாவது, இந்தச் சாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவைகள் அனுபவத்திலிருப்பதுதான் இந்துமதம் என்பதைத்தவிர, மற்றபடி இந்துமதம் என்றால் என்னவென்று இந்துக்கள் என்பவர்களில் கோடிக்கு ஒருவராவது விளக்க முடியுமா? அல்லது தங்களுக் காவது தெரியும்படி விளங்கிக் கொண்டிருக்கிறார்களா? என்று பந்தயம் கூறிக் கேட்கின்றோம். வார்த்தை யளவு அல்லாமல், கருத்தளவில் யாருக்காவது விளங் குமா? விளங்கியிருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

இஸ்லாம் மதத்திற்கு குர்-ஆன், கிறித்துவ மதத்திற்கு பைபிள் என்பவை இருப்பதுபோல், இந்து மதத்திற்கு என்ன இருக்கிறது என்பதாக இந்துமத அபிமானிகள் யாராவது சொல்ல முடியுமா? இருந்தால் அது இந்துக்கள் என்பவர்களுக்குத் தெரியக்கூடியதா? அது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரையும் கட்டுப் படுத்தக் கூடியதா? என்று கேட்பதோடு, இந்து மதத் தைக் காப்பாற்றக் கவலை கொண்டவர்கள் என்பவர் களாவது அதில் உள்ளவற்றிற்குக் கட்டுப்படச் சம்மதிப் பார்களா? என்பதன் மூலம்தான், ஒரு மதத்தின் ஆதாரமின்னதென்பதை நிச்சயிக்க முடியுமேயொழிய, மற்றபடி எவருக்கும் புரிவிக்கப்பட முடியாமலும், தங்களுக்கே புரியாமலும் பேசுவதில் யாதொரு பயனும் ஏற்படாதென்பதுடன், இந்த நிலையில் உள்ள இந்துமத சம்பந்தமான வக்காலத்தே பரிகாசத்திற்கு இடமாகுமென்பதையும் ஞாபகப்படுத்துகின்றோம்.

இந்தியப் பாமர மக்களின் முட்டாள்தனத்தையும், கற்ற மக்களின் அயோக்கியத்தனத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கு அறிகுறியாகத்தான் இந்துமத மென்ற உணர்ச்சி இருக்கின்றது என்பதோடு, இந்தியா வில் 100க்கு 10 பேருக்குக்கூட இந்து மதமென்றால் என்ன என்பது விளங்காமலே அதற்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களென்றும் நாம் பந்தயம் கூறிச் சொல்வோம்.

மேலும், தீண்டாமையும், சாதி வித்தியாசமும் ஒழிவதற்கு மாத்திரமல்லாமல், இந்து மக்களின் அறிவு விருத்திக்குமான உதயத்திற்கும் இந்துமதம் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டியது அவசியமென்று மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்லுவோம்.

ஆகவே, இவ்வித இந்துமதம் என்பதைக் கட்டிக் கொண்டு அழுவதும், அதற்கு ஏதேதோ வியாக்யானங் கள் சொல்லுவதும், அசிங்கத்தையெடுத்து மேலே பூசிக் கொள்வதையொக்குமே தவிர, புத்திசாலித்தனம் ஒன்றும் விளங்காது. பொதுவாக மதங்கள் என்பதே, “அதாவது, கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந் தத்தைக் காணவும், கடவுளை மனிதன் அடையவும்” என்று சொல்லப்படுவதான மதங்கள் என்பதே - “மூடநம்பிக்கை”யென்றும்; “ஹம்பக்” என்றும் உலக மக்கள் பெரும்பாலோரால் சொல்லிக் கொண்டு வரு கின்ற இந்தக் காலத்தில், பல இடங்களில் அவை ஒழிக் கப்படப் பிரச்சாரங்கள் செய்து கொண்டும் வரப்படு கின்ற இந்தக் காலத்தில் - கேவலம் அர்த்தமில்லாத, ஆதாரமில்லாத இந்துமதம் என்பதற்கு ஒருவர் வக் காலத்துப் பேசவருவதென்றால் இதைவிடப் பரிகாசத் திற்கிடமான காரியம் வேறில்லை என்று சொல்லு வோம்.

அடுத்ததாக, இந்துமதம் எதற்காகக் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நமக்குப் புலப்படவில்லை. அதில் ஏதாவது உயர்ந்த கெள்கைகளோ, பிரயோஜனப்படத்தக்க தத்துவங்களோ அல்லது ஞானங்களோ இருக்கின்றதென்று யாராவது சொல்ல வந்தால், அவர்களைப் பற்றி நாம் சிரிப்பதுடன் அவர்களுக்கு உண்மையாகவும் ஒரு பழமொழியைச் சொல்லிக்காட்ட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். அதாவது, ஒருவன் “பஞ்ச பாண்டவர்களை எனக்குத் தெரியாதா? கட்டில் கால்கள் போல் மூன்று பேர்களென்று சொல்லி, இரண்டு விரல்களைக் காட்டி. தரையில் ஒன்றை எழுதி, கடைசியில் அதையும் காலால் தேய்த்துவிட்டானாம்” என்பதையொக்கும்.

ஆகவே, இப்பழமொழிப்படி எப்படி இந்த நபர் பஞ்சபாண்டவர்கள் என்பவர்கள் கட்டில் குத்துக்கால் கள், ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று இவையொன்றுமே தெரியாதவர் என்று ஏற்படுகிறதோ அதுபோல், இந்து மதம் என்பது “எனக்குத் தெரி யாதா? அது அநேக உயர்ந்த தத்துவங்கள், ஆத்ம ஞானங்கள் முதலியவைகள் கொண்ட பழமை யானது” என்று சொல்லுபவர்களுமாவார்கள் என்று தான், நாம் அபிப்பிராயப்பட வேண்டியிருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட மக்களின் அபிப்பிராயத்துக்கு யாரும் பயப்பட வேண்டியதில்லையென்பதைத் தவிர, வேறு சமாதானம் பொது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லையென்றே கருதுகிறோம்.

மற்றபடி சமதர்மத்திற்கும், பொதுவுடைமைக் கொள்கைக்கும் கடவுள் உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டிய தென்பதும் நமது உறுதியான அபிப்பிராய மேயாகும். கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது பொறுப்புப் போடு பவனும் சுதந்தர மனிதனாயிருக்க நியாயமில்லை யென்று பல தடவைகளிலும் சொல்லி வந்திருக்கின் றோம்.

கடவுள் உண்டா? இல்லையா? என்கிற பிரச்சனை யில் நாம் புகவில்லை. அது முடிந்த விடயமாகும். எப்படியெனில், “தொட்டதற்கெல்லாம் கடவுள்! கடவுள்!! என்று சொல்லி, சதா பிரார்த்தனை செய்து கொண்டி ருக்கும் திரு. காந்தியும், சைவசமய நிபுணர்களின் மகாநாடு கூட்டமும், ஏற்கெனவே இதைப்பற்றி ஒரு முடிவு சொல்லியாய்விட்டது.”

அதாவது, “கடவுளிருப்பதாய் மனிதன் நினைத்துக் கொள்வது நல்லது” என்று மாத்திரந்தான் சொல்லி விட்டார்கள். ஆதலால், அது ஒரு மனிதன் ஒரு பலனை உத்தேசித்து, நினைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாய்ப் போய்விட்டதென்பதினால், புலனாகிறது. ஆகையால், நாம் இனியும் அதில் பிரவேசிக்க வேண்டிய வேலையில்லை. ஆனால், மனிதனுடைய தற்கால நிலைக்குக் கடவுள்தான் காரணமென்றால், மனிதனின் நிலையை மாற்ற வேண்டுமென்று சொல்ல நமக்கு யோக்கியதை ஏது? இப்படிப்பட்டவர்களுக்கு முயற்சி செய்யத்தான் மனம் எப்படி வரும்? என்பதுதான் நமது கருத்து. ஆதலால் தான், கடவுள் உணர்ச்சியையும், அதன்மேல் பொறுப்புச் சுமத்துவதையும் அழிக்க வேண்டுமென்கின்றோம்.

(“குடிஅரசு”, தலையங்கம் 31-5-1931 பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் வரிசை, தொகுதி 2, இயக்கங்கள் 3, பக்கம் : 1375-1379)

Pin It