என்ன செய்தீர்? இனி என்ன செய்வீர்? எனச் சட்டையைப் பிடித்துக் கேளுங்கள்!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

வெள்ளைக்காரன் பார்ப்பனப் பண்டிதர்கள், பணம் படைத்த சத்திரியர்கள், வைசியர்கள்; இஸ்லாமிய மவுல்விகள், நவாபுகள், இந்து மேல்சாதிப் பெருநிலக்கிழார்கள் இவர் களைக் கையாள்களாக வைத்துக் கொண்டுதான், 1757 முதல் 1947 வரையில் இந்தியா என்கிற பெரும் பரப்பில் உள்ள எல்லா வளங்களையும் சுரண்டினான்.

இரண்டாம் உலகப் போர் 1941இல் உலக நாடுகளை அச்சுறுத்தியது. அய்ரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப் பற்றிய இட்லர், சோவியத்து நாட்டைக் கைப்பற்றத் துணிந்து படையெடுத்தான். இரண்டு கோடி மக்களைச் சாகக் கொடுத்த ஸ்டாலின், தனித்து நின்று வெற்றி பெற முடியுமென எண்ணவில்லை. அன்றைய சோவியத்தை “இரும்புத் திரை நாடு” என்று வருணித்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இந்தியப் பெரும் பரப்புக்குள் இட்லர் நுழைந்துவிடுவானோ என அஞ்சினார்.

இவ் இருபெரும் வல்லரசுகள் அஞ்சியது போலவே, அமெரிக்காவும் அஞ்சியது. சோவியத்-அமெரிக்கா-பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்று கூடித் திட்டம் தீட்டியதால்தான், இட்லரைத் தோற்கடிக்க முடிந்தது. சோவியத்து நாடு 2 கோடி மக்களைச் சாகக் கொடுத்து நாட்டைக் காப்பாற்றியது.

மேலேகண்ட முத்தரப்பு நாடுகளிடையே ஆன ஒப்பந்தங்களின் - நிபந்தனைகளில் ஒன்றுதான், போர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் கைப்பற்றியுள்ள குடி யேற்ற நாடுகளுக்கு விடுதலை தரவேண்டும் என்பது.

1942 முதல் பலவீனப்பட்டிருந்த-பிரிட்டிஷ் இந்தியக் கப்பல் படையிலிருந்த வெள்ளை யர்களுக்கு அடங்க மறுத்து, இந்தியக் கப்பல் படைவீரர்கள் விடுதலை உணர்ச்சி பெற்று, வெள்ளைக் கப்பல் படை அதிகாரிகளை எதிர்த்துத் துப்பாக்கியைத் தூக்கினர். (அப்படி எதிர்த்த வீரர்களுள் நம் தாதம்பட்டி எம், இராசுவும் ஒருவர்).

எனவே தான், வெள்ளையன் இந்தியாவுக்கு விடுதலை தர, 1946 சூனில் ஓர் அறிவிப்பை வெளியிட்டான். ஏகாதிபத்திய அரசாக உள்ள இந்தியாவை, அப்படியே, காங்கிரசிடம் ஒப்படைக்க அவன் விரும்பவில்லை. அதற்கு மாறாக இந்தியாவிலுள்ள தனித்தனி மாகாணங்கள் - இராணுவம், பண அச்சடிப்பு, அயலுறவு ஆகிய மூன்று அதிகாரங்கள் தவிர்த்த மற்ற எல்லா அதிகாரங்களையும் பெற்றி ருக்க வேண்டும்-மேலே கண்ட மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டும் இந்திய மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என அறிவித்தான்,

அன்று 8 கோடி இஸ்லாமியர்களின் தலைவராக இருந்த முகமது அலி ஜின்னா அதற்கு உடன்பட்டார். அன்று காங்கிரசிலிருந்த இஸ்லாமியரான அபுல்கலாம் ஆசாத்தும் அதை ஆதரித்தார். ஆனால் காந்தி, நேரு, பட்டேல் ஆகிய மூன்று காங்கி ரசுத் தலைவர்களும் அதை வன்மையாக எதிர்த்தனர்.

எனவே தான், முகமது அலி ஜின்னா, “இஸ்லாமி யர்களுக்கெனத் தனி பாக்கிஸ்தான் நாடு அமைக்கப் பட்டே ஆகவேண்டும்” எனத் துலாம்பரமாக அறிவித்தார்.

இந்தியா இரண்டாக உடைந்தது. “என் பிணத்தின்மீது தான் இந்தியா பிரிக்கப்பட முடியும்”என்று சொன்ன காந்தியார், 1946 திசம்பர் 9 அன்றே, நேருவின் இடைக்கால அரசு, அரசமைப்புச் சட்ட அவையைக் கூட்டியதை - வரப்போகிற சுதந்தர இந்தியாவுக்கான சட்டம் செய்ய நேரு முயற்சித்ததைத் தடுக்க முயலவில்லை.

1946இல், இந்திய மத்தியச் சட்டமன்றத்துக்கு (Central Legislative Assembly) வாக்குப்போடும் உரிமை 4 விழுக்காடு இந்தியர்களுக்கே இருந்தது, அவர்கள் யாராக இருந்தார்கள்? 1) படித்த பார்ப்பனர். 2) பணம் படைத்த இரசபுத்திரர். 3) வைசியர். 4) டாடா, பிர்லா, பஜாஜ், டால்மியா போன்றவர்களே - சுதேச முதலாளிகளே அவர்கள்.

1946 இல், மாகாணச் சட்டமன்றங்களுக்கு (Provincial Legislative Councils) வாக்குப்போடும் உரிமை 14 விழுக்காடு இந்தியர்களுக்கே இருந்தது. அவர்கள் யாராக இருந்தார்கள்? படித்த இந்து-இஸ்லாமிய-கிறித்துவர்களாகவும்; பெருநில உடைமைக்காரர்களா கவும், பெருந்தொழிலதிபர்களாகவும் இருந்தார்கள்.

இந்த மக்கள் நாயகக் கொலையை 1946 முதல் முழுமூச்சாக எதிர்த்தவர்-இந்தியாவில், பெரியார் ஈ.வெ.ரா. மட்டுமே.

அன்று அவரோடு இருந்த எல்லோரும் இதைப்புரிந்து கொண்டார்களா? என்றால், தொண்டர்கள் ஓரளவே புரிந்துகொண்டார்கள். ஆனால், அதைப் புரிந்துகொண்ட படித்த தலைவர்கள் அவருக்கு எதிராகக் கொடி தூக்கி னார்கள். அப்போது, தொண்டர்களுள் அதைத் தூக்கிப் பிடிப்பார் எவரும் இல்லை. எனவே படித்தவர்கள் அமைதி காத்தார்கள்.

1949 செப்டம்பரில், 70 அகவை நிறைந்த பெரியார், 31 அகவை மணியம்மையை-ஆச்சாரியார் வேண்டாம் என்று கூறியதைப் புறந்தள்ளிவிட்டுத் திருமணம் செய்து கொண்டார்.

1947இல் தோற்றுப்போன படித்த தலைவர்களுக்கு, 1949இல் இது ஒரு பொருத்தமான காரணமாகப்பட்டது. உடனே தனிக்கட்சி தொடங்கினர்.

1931இல் “திராவிட இயக்கம் அனைத்திந்திய இயக்க மாக ஆகவேண்டும்” என்று, விருதுநகர் சுயமரி யாதை இயக்க மாநாட்டில் பெரியார் தீர்மானித்த தையாவது, 1949இல் பிரிந்தவர்கள் ஏற்றார்களா என்றால், இல்லை.

பெரியாரும் தொடர்ந்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யவில்லை. இந்தச் சூழலில்தான், 1952 தேர்தலின் போது - 21 வயது வந்த படித்த - படிக்காத; ஏழை-பணக்கார; என ஆண், பெண் அனைவர்க்கும் முதன்முதலாக வாக்குரி மை வந்தது. ஒருவருக்கு ஒரு வாக்கு; ஒவ்வொரு வாக்கும் சமம்.

1984க்குப் பிறகு 18 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவர்க்கும் வாக்குரிமை வந்துவிட்டது. இந்தத் தகுதியின் அடிப்படையில், 7.50 கோடி மக்கள் உள்ள இன்றையத் தமிழ்நாட்டில், 5.37 கோடிப் பேர் ஆண்களும் பெண்களும் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.

இவர்களுள் 100க்கு 70 பேருக்குமேல், நல்ல படிப்பு உள்ளவர்கள் இருப்பார்கள். ஏன் மீதிப் பேருக்குப் படிப்பு இல்லை.

1. விடுதலை பெற்ற இந்தியாவில், “14 வயது நிரம்பிய எல்லோருக்கும், 1960க்குள் 8ஆவது வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி தரப்படும்” என 1950இல் அறிவித்த அரசமைப்புச் சட்ட 45ஆம் விதி, 63 ஆண்டுக்குப் பிறகும் நிறைவேற்றப்படவில்லை. ஏன்?

1857இல், இந்தியாவை வெள்ளையனிடமிருந்து விடுவிக்கச் சீறி எழுந்த முதலாவது விடுதலைப் போரை வெள்ளையன் நசுக்கிட எந்தக் காவல்துறை உயர் அதிகாரியான - நேரு பண்டிட் பார்ப்பனர் - அதாவது நேருவின் பாட்டனார் - மோதிலால் நேருவின் தந்தை, கையாளாக இருந்தாரோ - அந்த வழியில் வந்த சவகர்லால் நேரு குடும்பமே, 1946 முதல் 1964; 1966-1976, 1980-1984, 1984-1989 என, 37 ஆண்டுகள் தொடர்ந்து, நேரடியாக இந்தியாவை ஆண்டது. பிரதமராக வரமுடியாத நிலையில், இத்தாலி நாட்டு சோனியா தலைமையில், மறைமுகமாக நேரு குடும்பம் 2004 முதல் 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வருகிறது.

அரசமைப்பு அவை தொடங்கப்பட்ட 1946 திசம்பர் முதல் 2013 திசம்பர் வரையிலான 67 ஆண்டுகளில், 47 ஆண்டுகள் நேரு குடும்ப ஆட்சியே இந்தியாவில் நடைபெற்றது, காங்கிரசுக் கட்சி ஆட்சி என்று பார்த் தால் - 54 ஆண்டுகள் காங்கிரசே ஆண்டது.

“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே” என்கிற மனுநீதியைச் செயல்படுத்துகிற வகையில், பெரிய எண்ணிக்கையிலான சூத்திரர்கள், மற்றும் ஆதிசூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட தால்தான் - 127 கோடி மக்கள் உள்ள இன்றைய இந்தியா வில், 35 விழுக்காடு மக்களுக்கு 2014 சனவரியிலும் கல்வி தரப்படவில்லை.

1977-79இல் ஆண்ட ஜனதாவும், 1996-2004 இல் ஆண்ட பாரதிய சனதாவும் - இராமராஜ்யம் அமைக்கப்பாடுபட்டனவே அன்றி, மக்கள் அரசு அமைக் கப்பாடுபடவில்லை. காங்கிரசு அரசும் பாரதிய சனதா அரசும் - உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டுக்குமேல் கல்விக்குச் செலவிடவில்லை, அதனால்தான் இந்த இழிநிலை.

சரி! இவர்களின் ஆட்சியில், சோற்றுக்கு வழி பிறந்ததா? இல்லை.

2013இல், இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தேசிய வேளாண்மை மூலம் கிடைக்கும் வருமானம் 13 விழுக்காடு மட்டுமே. ஆனால் வேளாண்மையை நம்பியுள்ள மக்கள் 65 விழுக்காடு பேர். இது ஏன் அப்படி?

முதலாவது அய்ந்தாண்டுத் திட்டத்தின்போது, மூன் றில் இரண்டு பங்கு வேளாண் நிலம், வானம் பார்த்த நிலம் எனவும்; அதற்குப் பாசன வசதிகளைப் பெருக்க வேண்டுமெனவும் திட்டமிடப்பட்டது.

ஆனால் 1957க்குப்பிறகு, இருக்கிற பழைய பாசன ஏரிகள், வாய்க்கால்கள், 6 இலட்சம் சிற்றூர்களிலும் நீர்ப்பிடிப்புக்குத் தகுதியற்றவையாக ஆக்கப்பட்டுவிட் டன. பாதுகாக்கப்பட்ட காடுகளும் (Reserved Forests), ஊர்தோறும் இருந்த தோப்புகளும் துரவுகளும் - அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், வனத் துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்த ஊர்ப்போக்கிலிகள் ஆகியோ ரால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. அதன் விளைவாக பருவமழைப் தவறுதலும், சுற்றுச்சூழல் கேடும் சூழ்ந்துவிட்டன.

பன்னாட்டுத் தொழிற்குழுமங்கள் கனிம வளங் களைக் கொள்ளையடிக்கவும், பெரிய பெரிய வேளாண் பண்ணைகளை அமைக்கவும் வேண்டி, ஒவ்வொரு குழுமத்துக்கும் பல இலக்கம் ஏக்கர்கள் காடுகளும், வேளாண் நிலங்களும் நடுவண் அரசாலும், மாநில அரசுகளாலும் - மறைமுகமாகக், கைக்கூலி வாங்கிக் கொண்டு ஒப்படை செய்யப்பட்டுவிட்டன.

வன அரசர்கள் போல் வாழ்ந்த ஆதிப்பழங்குடிகள், நின்ற நிலையில் அவர்களின் பாரம்பரிய வாழ்விடங் களிலிருந்து ஒரு நொடி நேரத்தில் இன்று துரத்தப்படுகிறார்கள்.

நிலக்கரிக் கனிமம் (Coal Deposits) , இரும்புக் கனிமம் (Iron Ore), அலுமினியக் கனிமம் (Bauxite) முதலானவை - பிரதமர், தொழிலமைச்சர், நிதி அமைச்சர் இவர்களின் ஒப்புதலோடு - கொழுத்த பணக் கொள்ளை அடித்த பிறகு, பெருமுதலாளிகளுக்கு ஒப்புவிக்கப்படு கின்றன.

எனவே எத்தியோப்பிய நாட்டு மக்களின் வறுமைக்கோட்டைவிடக் கேடான வறுமைக் கோட்டுக்குங்கீழ் 30 விழுக்காடு இந்திய மக்கள் இன்றும் வதைபடுகிறார்கள்.

இந்தக் கொள்ளையர்கள் தாம், 2014க்குப் பிறகும், கொடிகட்டி, இந்தியாவை ஆளப் பார்க்கிறார்கள்! இவை மட்டுமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில், “இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் இந்தியாவை முற்றுரிமை பெற்ற சமதர்ம மதச்சார்பற்ற மக்கள் நாயகக் குடிஅரசாக உருவாக்கவும்; இந்தியக் குடி மக்கள் அனைவர்க்கும் சமூகத்திலும், பொருளாதாரத் திலும், அரசியலிலும் நீதி கிடைக்கவும் .......... ................

..........................................

எங்களுக்கு நாங்களே இந்த அவையில் இச்சட் டத்தை நிறைவேற்றிக் கொண்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. 2014இல்கூட, சமூகத்தில் நீதி என்பது எங்கே இருக்கிறது? அதுவும், “இந்து சமூகத்தில் நீதி” என்பது, 2014 லும் எப்படி - எதன் பேரில் இருக்கிறது?

2014லும் இந்திய அரசமைப்பின் பாதுகாப்புடன் அமைந்துள்ள இந்துச் சட்டத்தில், தாயபாகப் பிரிவின் படி, சென்னை மாகாணம் தவிர்த்த வடமாநிலங்களில் - பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற - பிறவி காரணமாக - நான்கு பிரிவினர்கள் இருக் கிறார்களே! இவர்களுள் ‘பிராமணர்கள்’ மட்டுமே பிறவியால் மேலானவர்கள்.

பழைய சென்னை மாகாணம் என்கிற தென்னாட் டில், இந்துச் சட்டத்தின் மிதாட்சரப் பிரிவின்படி - பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வருணங்கள் மட்டும் உள்ளன. இவை பிறவி அடிப்படையால் மட்டுந்தானே உள்ளன?

தமிழ்நாட்டிலுள்ள 7.50 கோடி மக்களில், இந்துக் களுள், 20 இலட்சம் பேர்களே பார்ப்பனர்கள் (அ) பிராமணர்கள்; இந்த 20 இலட்சம் பேர் பிறவியால் உயர்ந்தவர்கள், இது, அரசமைப்புச் சட்ட விதிகள் 13(3) (b), 25, 26, 372 (3) (b) Explanation I, இவற்றின்படி 2014லும் கெட்டியாகப் பாதுகாக்கப்படுகிறதே! இதை உச்ச அதிகாரம் படைத்த, உச்சநீதிமன்றம் ஏற்கிறதே! இது எப்படி சமூகத்தில் நீதி வழங்கும் மன்றம் ஆகும்?

இவை எல்லாவற்றையும் நாடாளுமன்றம், 63 ஆண்டுகளாகக் காப்பாற்றுகிறதே! நாடாளுமன்றத்தில், இதுபற்றி என்ன நட வடிக்கையை, காங்கிரசு எடுத்தது? பாரதிய சனதா எடுத்தது? கம்யூனிஸ்டுக் கட்சிகள் எடுத் தன? திராவிடக் கட்சிகள் எடுத்தன? மற்றக் கட்சிகள் எடுத்தன? எந்தக் கட்சியும் இதுபற்றி மூச்சுக்கூட விட வில்லையே!

இப்படிப்பட்ட மானிட உரிமைக் கொலைகாரர் கள்தான், இன்னும் 100 நாள்களில் உங்களிடம் வாக்குக் கேட்டு வரப் போகிறார்கள்.

காங்கிரசு ஆட்சிக்காலத்தில், பிந்தரன் வாலேயைப் பிடிப்பதற்காக அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்ற கொலைகாரர் தான், பிரதமர் இந்திரா காந்தி!

இந்திரா காந்தி 30.10.1984இல் தம் சீக்கிய மெய்க் காப்பாளர்களால் கொல்லப்பட்டார்.

அதற்குப் பழிவாங்கிட, 3000 சீக்கியர்களைப் பட்டப் பகலில் தில்லித் தெருக்களிலும், சுற்றுப்புற ஊர்களிலும் கொன்றவர்கள், பிரதமர் இராஜீவ்காந்தியின் ஏவலாளர் களான காங்கிரசுக்காரர்கள்தான். இதற்கு இன்றுவரை நீதி எங்கே?

1984இல், போபால் நச்சுக்காற்றால் ஆயிரக்கணக் கான மக்கள் செத்தொழிந்தார்களே! அந்தத் தொழிற் சாலையின் தலைவன் ஆன்டர்சன் தப்பித்து அமெரிக்கா வுக்கு ஓட வழிவகுத்தவர்கள், காங்கிரசுப் பிரதமர் இராஜீவ் காந்தியும், காங்கிரசு முதலமைச்சர் அர்ச்சுன் சிங்கும் தானே?

6.12.1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன் தாக்கமாக, மும்பையிலும், சூரத்திலும் பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் இந்துத்துவ வெறியர் களால் கொல்லப்பட்டார்களே, அதை அனுமதித்த கேடர்தானே, காங்கிரசுப் பிரதமர் நரசிம்மராவ்!

2002இல் கோத்ராவில், அயோத்தியிலிருந்து வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இருந்த இரயில் பெட்டியை எரித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று பொய்க் குற்றஞ்சுமத்தி - காவல் துறையையும், இந்துமத வெறியர்களையும் தூண்டியும் கட்டவிழ்த்துவிட்டும், அகமதாபாத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் களைப் பதைக்கப் பதைக்க கொன்றவர் தானே, அன்றும் இன்றும் குசராத் முதலமைச்சராக உள்ள நரேந்திர மோடி!

“நரேந்திர மோடி ராஜநீதி (Rajdharma) தவறி விட்டார்” என்று நேருக்குநேர், அன்றைய பாரதிய சனதா பிரதமர் வாஜ்பாய் கூறியது உண்மையா? அல்லது அதற்குப் பிறகு, மறு சிந்தனையாக (after thought) உச்சிச் சாதிக்காரர்கள் ஆதிக்கத்திலுள்ள இந்திய உச்சநீதிமன்றம் சொன்னது உண்மையா?

வாஜ்பாய் சொன்னதே உண்மை.

எனவே அன்று நேரு குடும்ப வழி நிற்கும் கொள்ளைக்கார - கொலைகார காங்கிரசின் பேரால் - நேருவின் கொள்ளுப் பெயரர் ராகுல் காந்தியும்; பிற மத ஒழிப்பாளரான - இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தவரான நரேந்திர மோடியும் உங்களை நாடி உங்கள் வீடு தேடி வாக்குக் கேட்க வருகிறார்கள்!

இந்த இருதரப்புகளையும் சார்ந்த குட்டிக்குட்டிக் கொள்ளையர்களும், கொலைகாரர்களும் இவர்களுடன் வரப்போகிறார்கள்!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

Pin It