“...இப்பல்லாம்
யாரு சாதி பாக்குறா?”
சாதியினை ஒழித்த
அக்கரகாரத்து வீராதிவீரர்கள்
வினா எழுப்புகிறார்கள்?

வெண்மணிச் சாம்பலில்
உத்தபுரம் சுவர்களில்
மேலவளவின் இரத்தக் கறையில்
பாப்பாபட்டியில் தீட்டாகிப் போன நாற்காலிகளில்
திண்ணியத்தின் மலங்களில்
இன்னும்...
இன்னும்...
நாறுகிறது சாதி!
...............................
..................................
“இப்பல்லாம்
யாரு சாதி பாக்குறா?”

சாதித் தமிரோடு கேட்கும்   எவரையும்
திருப்பிக் கேளுங்கள்

“யாரு சாதி பாக்கல?”

- மங்கலம் பிரபாகரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.