ஊழல், கொலை, அடிதடி பிரச்சினைகளில் சிக்கி, பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டால், மூன்றாந்தர அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? முதலில் நிருபரையோ, பத்திரிக்கை முதலாளியையோ விலை கொடுத்து வாங்கப் பார்ப்பார்கள். முடியவில்லையென்றால் மிரட்டுவார்கள்; அதற்கும் மசியவில்லையென்றால், ஆட்டோ அனுப்புவார்கள்; பத்திரிக்கையை முடக்கப் பார்ப்பார்கள். இந்த மூன்றாம்தர அரசியல்வாதிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல அ.மார்க்ஸ், ஷோபா சக்தி & குழாம்.

கீற்றில் யாரும் எழுதக்கூடாது என்று எழுத்தாளர்களிடமும், கீற்றில் உங்களது பத்திரிக்கைகளை வெளியிடாதீர்கள் என்று சிறுபத்திரிக்கை ஆசிரியர்களிடமும் பேசி வருகிறார்கள். எழுத்தாளர்களை அணிதிரட்ட ஒவ்வொருவரின் வீட்டுக்கதவையும் தட்டப் போவதாக லீனா மணிமேகலை சொல்கிறார். மினர்வா வேலை பார்க்கும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக பேசியிருக்கிறார்கள். இதன் நோக்கமென்ன? மினர்வாவை எழுத விடாமல் செய்ய வேண்டும் அல்லது வேலையை விட்டு தூக்க வேண்டும். இவர்கள்தான் கருத்துச் சுதந்திரத்திற்காக கூட்டம் நடத்தினார்கள். சிரிப்புதான் வருகிறது.

எப்படியாவது கீற்றினை முடக்க முடியுமா என்று தவிக்கிறார்கள்.  இந்தக் கூட்டத்திற்கு கீற்று மீது அப்படியென்ன விரோதம்?

கீற்று எல்லோருக்குமான பொதுவெளியாக கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாற்று அரசியல், மாற்று இலக்கியம் பேசுவோர் அனைவரும் அதை இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா மற்றும் இவர்களுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் அனைவரது படைப்புகளும் கீற்றினில் வந்திருக்கின்றன. விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியவாதிகள், தலித் அரசியல் அமைப்புகள், இலக்கியவாதிகள் என எல்லோரையும் விமர்சித்து இவர்கள் எழுதிய கட்டுரைகள் கீற்றில் வந்தபோது அந்தத் தளம் இவர்களுக்கு இனித்தது. இவர்கள் யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களை எல்லாம் வேறு சில இயக்கத்தவர்கள் ஆதரித்து எழுதியபோதும் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; தொடர்ந்து கீற்றில் எழுதி வந்தார்கள்.

இவர்களது அரசியல் விமர்சனங்களில் இருக்கும் பாரபட்சம், ஆதாரமற்ற பொய்கள், ஆணாதிக்கத்தனம் மிகுந்த கட்டுரைகள் தொடர்பாக கீற்றில் என்று எதிர்வினைகள் (http://www.keetru.com/index.php?option=com_aikeywords&key=புலி%20எதிர்ப்பு&Itemid=139) வர ஆரம்பித்ததோ அன்றிலிருந்து கீற்று இவர்களுக்கு கசக்க ஆரம்பித்தது.

shobasakthi_351கீற்றில் வெளிவரும் கருத்துகள் கீற்று ஆசிரியர் குழுவின் கருத்துக்களல்ல. அவை அந்தந்த படைப்பாளியின் கருத்துக்களே. எந்தவொரு கருத்துக்கும் எதிர்வினையாற்றிட கீற்றில் இடமளிக்கப்படுகிறது. அதேபோல்தான் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா மீதான விமர்சனங்களுக்கும் அதற்கு பதிலளிக்க இவர்களுக்கும் கீற்றில் இடமளிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர முன்வரவில்லை. மாறாக மூன்றாம்தர அரசியல்வாதிகளாக கீற்றின் மீது பாய்ந்தார்கள். இவர்களது பிரச்சினை இதுதான்: 'நாங்கள் புனிதர்கள்; எங்களை யாரும் விமர்சிக்கக்கூடாது; நாங்கள் ஊரில் உள்ளவர்களை எல்லாம் விமர்சிப்போம்'

முன்னெப்போதையும் விட கீற்றை முடக்கியே ஆக வேண்டும் என்று இப்போது இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதன் காரணம் என்னவென்றால், இவர்களது 'பரிசுத்த ஆவி' ஷோபா சக்தியின் முகம் கீற்றில் கிழிந்து தொங்கிக் கொண்டிருப்பதுதான்.

ஷோபா சக்தி பல ஆண்டுகளாக 'புலிகளின் தலைமை ஆதிக்கசாதியினரால் ஆனது' என சொல்லிவந்தது பொய் என்பது அம்பலமானது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழத்து மீனவர் சமூகமான கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும், அந்த சமூகம் ஆதிக்க சாதி சமூகமல்ல என்பதையும் மினர்வா தனது கட்டுரையில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12472:2011-01-17-04-29-48&catid=1:articles&Itemid=264) குறிப்பிட்டிருந்தார். புலிகள் அமைப்பை விமர்சிக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், ஷோபா சக்தி உள்ளிட்டவர்கள் ஆதிக்க சாதியினர்கள் என்பதும் அதில் வெளிச்சமானது. அக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஷோபா சக்தி இதுவரை தலித் வேஷம் கட்டி வந்ததும், 'அந்தோணியின் கதை' என்ற பேட்டியில் ஷோபாவும், கவின்மலரும் இணைந்து ‘ஷோபா ஒரு தலித்’ என்று பொருள்பட எழுதியதும் (http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html) அம்பலமானது.

அதுவரை ஷோபா சக்தியை தலித் என்றே நினைத்து வந்த பலர், கீற்றினைத் தொடர்பு கொண்டு, 'அவர் வெள்ளாள சாதியைச் சேர்ந்தவர் என்பது உண்மையா? அவர் தலித் இல்லையா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஆனால் ஷோபா சக்தி எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.

கவின்மலர் மட்டும் 'ஷோபா வெள்ளாளர் என்பது தெரியாத விஷயமா என்ன?' என்று பேஸ்புக்கில் எழுதினார். தெரிந்திருந்தும் தலித் போல் அவர் காட்டியது ஏனோ?

பிரபாகரனைக் குறிப்பிடும்போது ஆதிக்கசாதியைச் சார்ந்தவர் என்று பொருள்கொள்ளும்படியாக 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' எனக் குறிப்பிட்டவர்கள், ஷோபாசக்தியின் சாதிப்பின்புலத்தை மறைத்தது ஏன் என்ற வாசகர்களின் கேள்விக்கும் இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதோடு அந்தக் கேள்வியை ஷோபா சக்தியின் இணையத்தில் பின்னூட்டமாக வாசகர் ஒருவர் இட்டபோது, அதை வெளியிடாமல் ஷோபா சக்தி இருட்டடிப்பு செய்ததும் கீற்றில் பதிவானது.

அடுத்து, தமிழச்சி என்ற தோழரிடம் ஷோபா சக்தி தவறாக நடக்க முயன்று, அடி வாங்கியது தொடர்பாக மினர்வா பேஸ்புக்கில் எழுதியது கீற்றில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264) வெளியானது. தொடக்கத்தில் இதற்கு ஆதாரமிருக்கிறதா, நிரூபிக்க முடியுமா என்று கேட்டார் ஷோபா சக்தி. தமிழச்சியே 'இது உண்மைதான்' என்று சொன்னபின்பு, ஷோபா அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டார். 'தமிழச்சியை இரண்டாவது முறை சந்திக்கும்போது இருவருக்கும் மனம் ஒத்துப்போனதாகவும், மூன்றாவது சந்திப்பில் அது உடல் தொடர்பாக மாறியது' என்றும் சொன்னார். தமிழச்சி அதை மறுத்தார். ஷோபா தன்னிடம் தலித் என்று பொய் சொன்னது, பெரியாரியம் பேசியதால் அவருடன் நட்பாக இருந்தது, வேலை எதுவும் பார்க்காமல் ஷோபா அடிக்கடி வெளிநாடு சென்று வந்தது, சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தது, ஷோபாவுடன் நட்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பாலியல் சுதந்திரம் பேசி தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்று அடிவாங்கியது, இதை கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளங்களில் எழுதி வந்தது என விரிவாக கீற்றில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087:2011-02-19-01-17-42&catid=1:articles&Itemid=264) எழுதினார்.

மினர்வா, ஷோபா, தமிழச்சி மூவரும் எழுதியது கீற்றில் வெளிவந்தது. ஷோபாவின் நண்பர்களைத் தொந்தரவுக்குள்ளாக்கிய - இக்கட்டுரைகளிலும், பின்னூட்டங்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளை ஒரு தொகுப்பாக பார்த்தோமானால்...

1. ஷோபா சக்தி, தமிழச்சிக்கும் தனக்கும் இருந்த உறவு குறித்து இப்போதுதான் முதன்முறையாகப் பேசுவதாகக் கூறினார். அப்படியென்றால், ஷோபா சக்தி கூறுவது முன்னமே தங்களுக்குத் தெரியும் என்று அவரது நண்பர்கள் கூறுவது எப்படி? ஷோபா சக்தி சொல்லாமல் அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்?

2. ஷோபா சக்தி கூறுவதே உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஒரு பெண்ணின் அறியாமையையும், சந்தர்ப்ப சூழலையும் பயன்படுத்தி அவரை ஏமாற்றி நுகர்வதுதானே ஷோபா சக்தியின் நோக்கமாக இருந்திருக்கிறது. பெண்களை பாலியல் பண்டமாக நுகர்வதற்காகத்தான் பெண்ணியம் பேசுகிறாரா? பெண்களை ஏமாற்றிவிட்டு, அதை கம்பீரமாக தனது நண்பர்களிடம் சொல்லும் ஆண்களுக்கும் ஷோபா சக்திக்கும் என்ன வித்தியாசம்?

3. பிரான்ஸில் வேலை இல்லாதவர்களுக்கு ஆறேழு மாத காலம்தான் அரசு உதவித் தொகை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஷோபா அரசு தரும் உதவித் தொகையிலும், எச்சில் தட்டுகளைக் கழுவியும் வாழ்வதாக சொல்கிறார். ஷோபாவுக்கு மட்டும் ஆயுள் முழுவதும் அரசு உதவித் தொகை கிடைக்கிறது என்றால் அதன் பின்னணி என்ன? சொன்னால் மற்றவர்களும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்..

4. ஒருவேளை எச்சில் தட்டு கழுவுவதால் வரும் வருமானம் ஆண்டுக்கு நான்கு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல உதவுகிறதா? அப்படி செல்வதற்கு அந்த ஹோட்டலில் அத்தனை நாள் விடுப்பும் தரப்படுகிறதா? அதிகளவு பணமும், அதிகளவும் விடுப்பும் தரும் அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது? அங்கே சேர்ந்தால் மற்றவர்களுக்கும் இதே சலுகை கிடைக்குமா?

5. நண்பர்கள் தருவதாக தமிழச்சியிடம் ஷோபா சொன்னது உண்மையென்றால், அந்த பவர்புல் நண்பர்கள் யார்? எவ்வளவுதான் நட்பு இருந்தாலும் நண்பர்கள் ஒரு முறை கொடுத்து உதவலாம். ஆயுளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு அந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யார்? அவர்களின் வருமானப் பின்னணி என்ன?

6. ஷோபாவின் கஷ்டத்தைப் போக்க நண்பர்கள் உதவுவதாகவே வைத்துக் கொள்வோம். அந்த நண்பர்கள் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் கொடுப்பதற்குமா காசு தருகிறார்கள்?

7. சுகுணா திவாகருக்கு கொடுக்கப்பட்ட லட்ச ரூபாய் அவரது கஷ்டத்தைப் போக்குவதற்கா, இல்லை அவரது ஈழ எதிர்ப்பு அரசியலுக்கு கொடுக்கப்பட்ட ஊதியமா? கஷ்டத்தைப் போக்குவதற்குத்தான் என்றால், அதேபோல் கஷ்டப்படும் தலித் முரசு இதழுக்கு ஷோபா ஏதாவது நிதி வழங்கியிருக்கிறாரா? அவர்கள் பலமுறை நிதி வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஷோபா தலித் அரசியலுக்காகவே வாழ்பவராயிற்றே... உதவியிருப்பார் அல்லவா?

8.வீட்டில் இருக்கும் பெண்ணிடம் கற்பையும், வெளியே இருக்கும் பெண்களிடம் பரத்தமையும் வற்புறுத்துவதுதான் இந்து ஆணாதிக்கம். பாலியல் விடுதிகளுக்குப் போகும், மூன்றாவது சந்திப்பிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தயாராகும் ஷோபா இந்துமத ஆணாதிக்க மனநிலையிலிருந்து எப்படி வேறுபடுகிறார்?

9. ஒரு பேச்சுக்கு ஷோபா சொல்வதே உண்மையென்று வைத்துக் கொள்வோம். கல்யாணமான ஒருவருடன் காதல் வரும்போது, 'உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாருங்கள். நாம் கல்யாணம் பண்ணியோ, பண்ணாமலோ சேர்ந்திருக்கலாம்' என்று சொல்வதுதானே முறை. அதுதானே தனிமனித அறம்! ஆனால், எப்போதுடா வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் சராசரி ஆண் புத்திதானே ஷோபாவுக்கு இருந்திருக்கிறது!! இப்போது உங்களுடன் நட்பாக இருக்கும் பெண்களுடனும் இந்த எண்ணத்தில்தான் பழகுகிறீர்களா?

10. ஒருவர் இரண்டு மனைவியருடன் வாழ்வது ஆணாதிக்க சமூகத்தின் தொடர்ச்சிதானே! அ.மார்க்சும் அதையே செய்வது அவர் பேசும் பெண்ணியத்திற்கு எதிரானது அல்லவா?

கீற்றில் கேட்கப்பட்ட‌ இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், ‘தனிநபர் அவதூறு’என்று கீற்று மீது பாய ஆரம்பித்தார்கள்.

காரல் மார்க்சுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது என்று இவர்கள் கட்டுரை எழுதினார்கள். இடதுசாரிகளை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்தி, கவிதை எழுதினார்கள். சரி, இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று மற்றவர்கள் எழுதினால் 'அய்யய்யோ தனிமனித அவதூறு' என்கிறார்கள். மார்க்சுக்கு வேலைக்காரப் பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்று எழுதுகிறவர்கள், அ.மார்க்சுக்கு இரண்டாவது மனைவி இருப்பது குறித்து எழுதினால் மட்டும் அலறுவது ஏன்? மார்க்சுக்கு ஒரு நியாயம், அ.மார்க்சுக்கு ஒரு நியாயமா?

ஊரில் இருப்பவர்களிடம் எல்லாம் அ.மார்க்ஸ் குழுவினர் கணக்கு கேட்கிறார்கள். PUCLக்கு காசு எங்கிருந்து வருகிறது, தமிழ்த்தேசியவாதிகள் புலிகளிடம் காசு வாங்குகிறார்கள், மனுஷ்யபுத்திரனின் காசை அருந்ததிராய் ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். சரி, லீனா மணிமேகலை அஜீவனின் பணத்தை ஏமாற்றியது தொடர்பாக இணையதளங்களில் பல முறை செய்தி வந்ததே (ஒரு இணைப்பு இங்கே: http://thesamnet.co.uk/?p=18553), அதைப் பற்றி இவர்கள் எழுதினார்களா? இல்லை அணில் சேமியாவில் கள்ளக்கணக்கு எழுதி பெரிய தொகையை சுகுணா திவாகர் அபேஸ் செய்ததாக வளர்மதி சொல்லியிருக்கிறாரே, அதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறார்களா? மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு என்றால், எந்த ஒரு ஆதாரமுமின்றி பழி சொல்ல கிளம்பிவிடுவார்கள், நண்பர்கள் என்றால் அடக்கி வாசிப்பார்கள்.

ஷோபா சக்தி பிரான்சில் கோப்பை கழுவியும், அரசு உதவித்தொகை பெற்றும் வாழ்வதாகச் சொல்கிறார். பிரான்சில் வாழும் நண்பரிடம் விசாரித்தபோது, "அங்கு கோப்பை கழுவுதல் போன்ற உடலுழைப்புத் தொழிலாளருக்கான அடிப்படைச் சம்பளம் 1344 யூரோ ஆகும். இதில் பல்வேறு வரிகள் கழிக்கப்பட்டபின் கிடைக்கும் தொகை 1150 யூரோக்கள். இச் சம்பளம் ஒரு மனிதனின் அடிப்டைத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும். அதற்கு மேல் போதாது. இங்குள்ள அநேகமான இலங்கைத் தமிழர்கள் ஒருவேலை செய்வது குறைவு. எப்படியும் இரண்டு வேலை செய்வார்கள். அல்லது கூடுதலான மணித்தியாலங்கள் வேலை செய்வார்கள். அப்போதுதான் இவர்கள் தங்களின் கடன் மற்றும் உறவினர்களுக்கு உதவுதல் போன்றவற்றை செய்யமுடியும். ஷோபாசக்தி வேலை செய்வாராயின் இப் பணம் அவரின் மதுபாவனைக்கே போதாது. இங்கு ஒரு விஸ்கி வகை மதுபானத்தின் விலை 15 யூரோ. அவரது சகோதரி வீட்டில் தங்கியிருப்பதால், வாடகை பிரச்சினை இல்லையென்றாலும், மற்ற செலவுகளுக்கு இது போதாது. ஷோபா சக்தி கட்டற்ற குடியைப்போன்று கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைத்தேடி அலைபவர். அதற்கும் நிறைய செலவாகும். இங்கு கொட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு குறைந்த செலவு 60 யூரோக்கள் ஆகும்." என்று கூறினார்.

வேலையில்லாதவர்களுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை கிடைக்கும். அதுவும் கடந்த 22 மாதங்களில் குறைந்தது 6 மாதம் வேலை செய்திருந்தால் மட்டுமே, 7 மாதங்களுக்கான உதவித் தொகை கிடைக்கும். கோப்பை கழுவுவதற்கு 1344 யூரோ சம்பளம் வாங்கினார் என்றால், வேலையில்லாதபோது அதில் 75% அரசு உதவித் தொகையாக கிடைக்கும் (பார்க்க: http://www.easyexpat.com/en/paris/work/unemployment-benefits.htm).

எப்படியிருந்தாலும் இந்தப் பணம் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கோ, தினமும் குடிப்பதற்கோ உதவாது. அப்படியென்றால் ஷோபா சக்திக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இதைக் கேட்பதில் என்ன தவறு?

இவர்கள் மற்றவர்களைப் பற்றி எப்படியெல்லாம் எழுதினார்களோ, அப்படியெல்லாம்தான் இவர்கள் மீது எதிர்வினைகள் வருகின்றன. அதற்கு பதில்சொல்ல முடியாமல் கீற்று மீது பாய்கிறார்கள். கீற்று ஓர் ஊடகம். ஜெயேந்திரன் மீது அனுராதா ரமணன் பாலியல் குற்றச்சாட்டை வைத்ததை எப்படி செய்தி ஊடகங்கள் வெளியிட்டனவோ, அதேபோல்தான் ஷோபா சக்தி மீதான தமிழச்சியின் குற்றச்சாட்டை கீற்று வெளியிட்டிருக்கிறது. ஆனானப்பட்ட அரசியல்வாதிகளையும், சாமியார்களையும் விமர்சிக்கும் உரிமை ஊடகங்களுக்கு இருக்கிறது என்றால், ஷோபா சக்தி, அ.மார்க்சை விமர்சிக்கும் உரிமை மட்டும் ஊடகங்களுக்குக் கிடையாதா? பொதுவாழ்வில் இருக்கும் எல்லோரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான். பொதுவாழ்க்கையில் ஒன்றாகவும், சொந்த வாழ்க்கையில் வேறாகவும் வாழ்பவர்கள் நிச்சயம் விமர்சிக்கப்படுவார்கள். இதில் எழுத்தாளர்கள் மட்டும் விதிவிலக்கு கேட்பது ஏன்?

தமிழச்சியின் கருத்தை மறுத்து ஷோபா சக்தி எழுதியதையும், அவரது நண்பர்கள் எழுதிய பின்னூட்டங்களையும் கீற்று வெளியிடத்தானே செய்தது?

தங்கள் மீது வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக எதிர்வினை ஆற்றினார்கள்? கீற்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியபோது, அக்கூட்டத்தை நடக்கவிடாமல் செய்ய முயற்சித்தார்கள். கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டவர்களிடம் லீனா மணிமேகலை தொலைபேசியில் பேசியிருக்கிறார். கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார். தோழர் ஒருவரிடம் ஏழு பேர் பேசியிருக்கிறார்கள். அதையும் மீறி அவர் கலந்து கொண்டார். சுப.வீரபாண்டியனிடம் லீனா மணிமேகலை பேசியதை அவர் கூட்ட மேடையிலேயே கூறினார். 'உங்கள் எல்லோரையும் விட என்னை விமர்சித்துதான் கீற்றில் அதிக கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவர்களிடம் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதால் நான் இங்கு பேச வந்திருக்கிறேன்' என்று சொன்னார். அதுதான் ஜனநாயகம். ஆனால் இவர்கள் கூட்டத்தை நிறுத்த முயற்சித்தார்கள். அது முடியாதபோது, கூட்டத்தில் நடந்த சிறு சலசலப்பைப் பெரிதாக்கி, கீற்று இணையதளம் முஸ்லிம்களுக்கு எதிரான தளம் என்று காட்ட முயற்சித்தார்கள். அதுவும் எப்படி? பிலால் முகமது என்ற பெயரில் சுகுணா திவாகர் எழுதினார். இத்தகைய அயோக்கியத்தனமான வேலையைச் செய்வது ஆர்.எஸ்.எஸ். பாணி அல்லவா? இதை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் சுகுணா திவாகர் செய்தது ஏன்? 

அ.மார்க்ஸ் & ஷோபா சக்தி

கீற்று ஒரு நாளும் கருத்து சுதந்திரத்திற்கான வெளியை முடக்கியதில்லை. அதுதான் இவர்களுக்குப் பிரச்சினையே. இவர்களுக்கு கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும்; பதில் சொல்லத் தெரியாது. கீற்றில் இவர்கள் எழுதியபோது, நிறைய எதிர்க்கேள்விகள் வந்தன. அவற்றை கீற்றை பிரசுரித்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்தார்கள். கீற்றில் எழுதுவதை நிறுத்திவிட்டு, தனி இணையதளம் ஆரம்பித்தார்கள். அங்கு இப்போது தங்களுக்குத் தோதான பின்னூட்டங்களை மட்டும் வெளியிடுகிறார்கள்.

இவர்கள் நடத்தும் இணையதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு சிறிதளவு இடமேனும் இருக்கிறதா? இவர்களது கருத்துகளுக்கு மறுப்பு எழுதினால் வெளியிடுவதில்லை என்று பலர் இணையத்தில் புகார் சொல்லிவிட்டார்கள். கேட்டால், 'உங்களது கருத்தை உங்களது இடத்தில் பேசிக்கொள்ளுங்கள்' என்று ஏகடியம் பேசுகிறார்கள்.

ராஜன் குறை கீற்றில் இருக்கும் தனது கட்டுரைகளை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்தக் கோரிக்கையை ராஜன்குறை அச்சில் வரும் ஒரு பத்திரிகையிடம் வைக்க முடியுமா? அது நடக்கக்கூடிய காரியமா? ஒரு பத்திரிகையோடு உங்களுக்கு முரண்பாடு வந்தால் அதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். வெளியான கட்டுரையை நீக்கச் சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. அது எந்த ஜனநாயகத்திலும் சேராது. எந்த ஆதாயமும் இன்றி, எங்களது சொந்த உழைப்பை, பணத்தை செலவிட்டு ஐந்து ஆண்டுகள் நடத்தியிருக்கிறோம். கடந்த ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, வாசகர்களிடம் யாசகம் கேட்டோம். இரண்டே கால் லட்சம் ரூபாய் சேர்ந்தது. அதில் இன்னும் ஒரு ஐம்பதாயிரம் பணத்தை எடுக்க முடியாமல், paypal நிறுவனத்தில் முடங்கியிருக்கிறது. இன்றும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இரவெல்லாம் கண்விழித்துதான் கீற்றினை நடத்திவருகிறோம். இதில் ஏற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னால் எங்களது உழைப்பு இருக்கிறது. நீஙகள் சொன்னவுடன் அதை நீக்க முடியாது. அப்படி நீக்கினால், ஏகப்பட்ட broken links ஏற்படும். Search engine-ல் கீற்று பின்தள்ளப்படும். அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

கீற்றிற்கு எதிராக கவின்மலர் மிகத் தீவிரமாக எழுதியும், பேசியும் வருகிறார். அனுமதியில்லாமல் அவரது பின்னூட்டத்தைப் போட்டுவிட்டோமாம்! பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் சோஷியல் நெட்வொர்க் என்பதைத் தாண்டி, அவை ஒரு மாற்று ஊடகமாக வளர்ந்துவிட்டன. பல்வேறு விவாதங்கள் அங்கு நடைபெறுகின்றன. அப்படியான விவாதங்களில் கவின்மலர் பங்குகொண்டு, தான் யார் பக்கம் இருக்கிறார் என்பதை அடையாளப்படுத்துகிறார். அதனால்தான் இந்த விவாதங்களில் கருத்து தெரிவித்தவர்களின் பின்னூட்டங்களையும் கீற்றில் பதிந்தோம். யாருடைய கருத்தையாவது திரித்து வெளியிட்டோமா? Unparliamentary words மட்டும் நீக்கிவிட்டு முழுமையாக வெளியிட்டோம். கவின்மலரது கருத்தை முதன்முறை வெளியிடும்போது நட்பு கருதி அவரிடம் அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், அதன்பின்பு ஆனந்த விகடனில் யாருடைய அனுமதியும் பெறாமல், பேஸ்புக்கில் எழுதப்பட்டவற்றை போடுகிறார்கள் என்பதையும், அப்படி போடப்பட்டால் கவின்மலர் போன்றவர்கள் அதை அங்கீகரிப்பதையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது. அந்த வகையில்தான் அனுமதியில்லாமல் அவரது கருத்து கீற்றில் பதியப்பட்டது.

ஆனந்த விகடன் மீது பாயாத கவின்மலர், கீற்று மீது மட்டும் பாய்வது ஏன்? ஒருவேளை பாராட்டு வந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வாரோ? மாற்றுக்கருத்துகள் வந்தால் அந்த இடத்தில் இருந்து பின்வாங்குவாரா? அவர் கருத்து சரியென்றால், எல்லா இடத்திலும் அதை உறுதியாக சொல்ல வேண்டியதுதானே!

நீண்ட காலமாக கீற்றில் பின்னூட்டம் இடுவதில்லை என்ற கவின்மலரின் விரதத்தைக் கெடுக்கும்விதமாக அவரது பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது என்று அவர் சொல்லுவதும் பொய். இந்தப் பிரச்சினையெல்லாம் வெடிப்பதற்கு 25 நாட்கள் முன்புகூட அவர் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறார் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12614&joscclean=1#josc4932)

ஆதவன் தீட்சண்யா கீற்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், தான் தலித் என்பதால் தன்னை விமர்சிக்கிறார்கள் என்று ஒரு கவிதை எழுதினார். தலித் அரசியலை மோசமான முறையில் சுயநலத்துக்கு ஆதவன் பயன்படுத்துவது குறித்து எந்தவிதப் புரிதலும் இல்லாமல், கவின்மலர் அந்தக் கவிதையை தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டார் (http://kavinmalar.blogspot.com/2010/04/blog-post_7135.html).

ஷோபா சக்தி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், அவரை ஒரு தலித் போல் தனது வலைப்பக்கத்தில் சித்தரித்தார் (http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html) அது கீற்றில் அம்பலமானபோது அவரால் தாங்க முடியவில்லை. இப்போது, கீற்றில் தன்னைப் பற்றி கொச்சையாக எழுதிவிட்டார்கள் என்று சொல்கிறார். ஷோபா சக்தி மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார். முதலில் அப்படி நடக்கவேயில்லை என்று சொன்ன ஷோபா சக்தி, பின்னர் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்குப் பெரும்பாலான ஆண்கள் பயன்படுத்தும் 'அவள் ஒன்றும் பத்தினி இல்லை' என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.  ஆணாதிக்கம் மிகுந்த இந்தக் கருத்துக்கு உண்மையில் கவின்மலர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ‘ஷோபா சக்தி கண்ணியமாக எழுதுகிறார்’ என்று எழுதி அவர் ஷோபா சக்தியை ஆதரித்தார். அதற்கு கடுமையான எதிர்ப்பு வந்தது. பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் வந்த பின்னூட்டங்களும் அதுதொடர்பாகவே இருந்தன.

கவின்மலர் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவரது மனம் புண்படும்படியான கருத்துக்கள் குறித்து கீற்று ஆசிரியர் குழுவிற்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கீற்றில் ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் இந்த அறிவிப்பு இருக்கிறது 'வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும்.' ஆனால் இவை எதையும் செய்யாத கவின்மலர், இந்த சந்தர்ப்பத்தையும் கீற்றினைப் பழிக்க பயன்படுத்திக் கொண்டார்.

ஷோபா சக்தி இவ்வளவு மோசமாக அம்பலமாகிய பின்பும், ஆதவனும் கவின்மலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தமிழச்சி கூறியது அவதூறு என்கிறார்கள். உ.ரா.வரதராசன் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, இப்போது பேசுவதுபோல் இவர்கள் பேசவில்லை. உ.ரா.வரதராசன் தற்கொலை செய்தபின்பும், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இவர்கள் மறுத்துப் பேசவில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பணியில் இருந்த உ.ரா.வரதராசன் மீது வராத நம்பிக்கை, ஷோபா சக்தி மீது மட்டும் ஆதவனுக்கும், கவின்மலருக்கும் வந்தது எப்படி? உ.ரா.வரதராசனை விட ஷோபா சக்தி எந்த வகையில் உன்னதமானவர்?

ஷோபா சக்தி வெள்ளாளராகவோ, பார்ப்பனராகவோ இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், தலித்தாக வேஷம் போட்டு, ஒரு இயக்கத்திற்கு எதிராக தலித் அரசியலை முன்வைத்ததன் அரசியல் நோக்கம் என்ன? இது அப்ப‌ட்ட‌மாக‌ வெளிப்ப‌ட்ட‌ பின்பும், ஷோபாவை ஆத‌ரிப்ப‌துதான் ஆத‌வ‌னின் அர‌சிய‌ல் நேர்மையா?

பிரபாகரன் மீது ஆயிரம்தான் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் லட்சக்கணக்கான தமிழர்களால் தேசியத் தலைவர் என்று கொண்டாடப்படுபவர். அவரை புதுவிசையில் ‘அவன், இவன்’ என்று மரியாதைக்குறைவாகவே எழுதினார்கள். அதேபோல் இவர்களை எழுதினால் இன்னேரம் எத்தனை அக்கப்போர்களை உண்டாக்கி இருப்பார்கள்?

செருப்பு என்ற வார்த்தை கீற்று பின்னூட்டத்தில் பயன்படுத்தப்பட்டதற்காக கவின்மலர் இல்லாத பிரச்சினை எல்லாம் செய்தார். ஆனால், இவர் ஊரெல்லாம் ‘பாட்டாலும் ஜோட்டாலும் அடித்தே துவைப்பாம்’ என்ற ஆதவனின் பாடலை பாடுவார். நீங்க செஞ்சா சரி, மத்தவங்க செஞ்சா தப்பு! நல்லாருக்குப்பா உங்க நியாயம்.

ஒவ்வொருவர் எழுதுவது ஒவ்வொரு பாணியில் இருக்கும். சிலர் கடுமையாக எழுதுவார்கள், சிலர் மென்மையாக எழுதுவார்கள். அடிபட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும், தார்மீகக் கோபம் உடையவர்களின் குரலும் எப்போதும் கடுமையாகத்தான் இருக்கும். அந்த வகையில்தான் ‘ரொம்ப crude ஆக எழுதுகிறார்’என்று சொல்லப்பட்ட ஆதவனின் படைப்புகளை கீற்று மனமுவந்து பிரசுரித்து வந்திருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டும் என்பதுதான் இப்போதும் கீற்றின் நிலைப்பாடு. ஆனால் ஆதவனிடம் குறைகாணாத கவின்மலர், மற்றவர்கள் எழுதும் கருத்துக்களில் மட்டும் ‘இது அப்படி இருக்கிறது, இது இப்படி இருக்கிறது, அநாகரிகமாக எழுதுகிறார்கள், எனக்கு மனநிம்மதி போச்சு’என்று ஆயிரம் குறை காண்கிறார். என்ன புரிதலோ!!

கீற்று அவதூறு செய்கிறது என்று சொல்லி இவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஏனென்றால், அவதூறுக்கு இவர்கள் தரும் விளக்கத்தை வைத்துப் பார்த்தால், கீற்றினை விட விகடன், குமுதம் குழும இதழ்கள் பல மடங்கு அவதூறு செய்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாம் எந்தத் தயக்கமுமின்றி இவர்கள் எழுதுகிறார்கள்.

அடுத்து, மினர்வாவின் கட்டுரைகளை வெளியிடுவதற்காக கீற்று நடத்தப்படுகிறது என்றும் அவதூறு பரப்பப்படுகிறது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் இருக்கும் கீற்று இணையதளத்தில் மினர்வாவின் கட்டுரைகள் மொத்தம் நான்கு மட்டுமே வெளியாகியுள்ளது. மாற்று அரசியல் பேசும் எல்லோருக்குமான இணையதளம் தான் கீற்று. இந்த 'எல்லோருக்கும்' என்பதில் மினர்வாவும் அடங்குவார். அவரது கட்டுரைகள் தொடர்ந்து கீற்றில் வெளிவரத்தான் செய்யும்.

கீற்று கொள்கைகளை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகிறது. நண்பர்கள் என்று எப்போதும் தயவு, தாட்சண்யம் பார்ப்பதில்லை. முன்னர் எழுதிய வரிகளை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். எங்களுக்கு இசைவான கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவதற்கான தனிச்சொத்தாக கீற்றை நாங்கள் பாவிக்கவில்லை. கீற்றில் வரும் கட்டுரைகளில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்ற தப்பெண்ணமோ, மாற்றுக்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் குறுகிய எண்ணமோ எங்களிடம் இல்லை. எந்தவொரு தனிநபரையும், அமைப்பையும் தாண்டி, கருத்தியல் இருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இந்தத் தளத்தை அடிப்படைவாதிகள் யாரும் பயன்படுத்தாமல் தடுப்பதையும், தளத்திற்கான செலவுகளை ஈடுகட்டுவதையும், படைப்புகளை கூடியமட்டும் பிழைதிருத்தி வெளியிடுவதையும் மட்டுமே எங்கள் வேலையாகக் கருதுகிறோம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது எங்கள் வேலையுமல்ல; எல்லாருக்குமான இனிப்பும் எங்களிடம் இல்லை.

இன்று கீற்றினை விமர்சிப்பவர்கள் எல்லோரும் தனிநபர்களை முன்னிறுத்தி இயங்குகிறார்கள். இவர்கள் கொள்கைகளைப் பின்பற்றி செயல்படுபவர்கள் அல்ல; தஙகளது செயலை நியாயப்படுத்த கொள்கை பேசுகிறார்கள். ஆதாயம் தரும் நண்பர்களுக்காக எந்தக் கொள்கையையும் விடத்தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் வெகுசீக்கிரமே அம்பலப்பட்டுப் போகிறார்கள். பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார்கள்; எதிர்க்குரலை அடக்க முயற்சிக்கிறார்கள். பெரியாரியம், பின்நவீனத்துவம் பேசியவர்களின் இன்றைய நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இவர்கள் பேசும் தலித், சிறுபான்மை அரசியலையும், இடதுசாரி அரசியலையும் கீற்று எந்த சமரசமுமின்றி தொடக்கநாள் முதலே செய்து வருகிறது. அதனால்தான் காலச்சுவடு, உயிர்மை பத்திரிக்கைகளை 'பார்ப்பன பத்திரிக்கைகள்' என்று விமர்சித்து ஓரங்கட்டியதுபோல் இவர்களால் கீற்று இணையதளத்தை ஓரங்கட்ட முடியவில்லை. கீற்றின் கொள்கை பலம்தான் இவர்களால் எதிர்கொள்ள முடியாத அரசியல் சவாலாக இருக்கிறது. அந்த எரிச்சலில்தான் மூன்றாம்தர அரசியல்வாதி மட்டத்திற்கு தங்களை தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் எழுதுகிற விஷய‌ங்கள் குறித்து விவாதிக்கவோ, பொதுமேடைக‌ளில் ப‌தில் சொல்ல‌வோ இவ‌ர்க‌ளுக்குத் துணிவிருக்கிற‌தா? இவர்களிடம் கேட்கப்பட்ட‌ கேள்விகளுக்கு அரசியல் கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்லியிருக்கிறார்களா? எல்லாக் கேள்விகளையும் தனிமனித பிரச்சினையாக மாற்றி திசை திருப்பும் வேலையைத்தானே இதுவரை செய்து வந்திருக்கிறார்கள்?

எந்த ஒரு அடிப்படை நேர்மையுமற்ற அ.மார்க்ஸ் குழுவினரின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் கீற்று அடிபணியாது. எப்போதும்போல் தொடர்ந்து செயல்படும். இவர்கள் வழியிலேயே கீற்று இவர்களை எதிர்கொள்ளும்.

நண்பர்களை சொறிந்து கொடுப்பதற்காகவே கைகளில் பேனா வைத்திருக்கும் இவர்களுக்கு தேனம்மை லெட்சுமணின் இந்தக் கவிதையை அர்ப்பணிக்கிறேன்.

முகஸ்துதி

வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..
 
என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..
 
பரிசில் எதுவும்
தேவையில்லை
திரும்ப இந்த
சொறிதல்களை
எரிச்சல் வராமல்
வழங்க அனுமதியோடு.
 
சோப்பு, வெண்ணை
ஐஸ், காக்கா
கழுதை, கால்பிடித்தல்
போன்றவை உங்கள்
ஞாபகத்தில் வந்தால்
சுலபமாக வேறு
பரிமாணத்தில்
சுய விளக்கம்
கொடுத்து விடுங்கள்
 
யாருக்கு நேரமிருக்கப்
போகிறது ஒற்றுப் பார்த்திட..
எகிறிக் குதிப்பவர்க்கும்
ஏதாவது பட்டயம் கொடுத்து
பேச விடாமல்
வாயில் அடித்து விடலாம்.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

49 comments

49
கே.மாசேதுங்
தங்களை இடதுசாரிகளாக, பெண்ணியவாதிகளாக, முற்போக்குவாதிகளாக காட்டிக்கொண்டு இருக்கும் போலித்தனமான எழுத்து வியபாரிகளை துணிவுடன் முகத்திரையை கிழித்த கீற்று தளத்திற்க்கு மிக்க நன்றி
இந்த சிற்ப்புமிக்க கட்டுரையை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் இந்த உத்தமர்களின் போலி கருத்துக்கள் மக்கள் மன்றத்தில் நாறிபோகும். கீற்றின் இந்தவிதமான போராட்டத்திற்க்கு ஆதரவு அனைவரும் தர வேண்டும்.
shoba sakthi
காலையில் எழுந்ததும் கணனியைத் திறந்து அவதூறுகளிற்குப் பதிலளிப்பதே எனது அன்றாட வேலையாகிப்போனது. சனி, ஞாயிறு கூட லீவு கிடையாது. பதிலளிக்காவிட்டால் அவதூறாளர்கள் "ஏன் பதிலில்லை" எனக் கொக்கரிக்கிறார்கள். பதிலளித்தாலோ தோழமைகள் "எதற்காக நேரத்தையும் சக்தியையும் விரயம் செய்கிறாய்" என என்னைக் கண்டிக்கிறார்கள்.



எதுவாயிருந்தாலும் சாத்தியமான தளங்களிலெல்லாம் வெளிப்படையாக எனது குரலைப் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது நிலைப்பாடு. எனது குரல், திட்டத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் அவதூறாளர்களை மனமாற்றம் செய்யப்போவதில்லை என்பது உண்மையானால் கூட பொதுவாசகர்களிற்கும் எனக்குமான உரையாடல் இதன் வழியே சாத்தியப்படும் என்றே நான் உறுதியாயாக நம்புகிறேன். நான் எப்போதுமே ஒரு நம்பிக்கைவாதி.



எனவே இந்தப் பதில் 'கீற்று' நந்தனுக்கானது அல்ல. அவர் இந்த விடயத்தில் பொய்மையையும் அரைவேக்காட்டுத்தனமான அரசியல் பார்வையையும் வதந்திகளையுமே முன்னிறுத்தியே உரையாட விரும்புகிறார். அதுவும் ஆயிரம் தடவை நான் வெவ்வேறு இடங்களில் பதில் சொல்லித் தீர்த்த விடயங்களை வைத்தே அவர் மல்லுக்கு நிற்கிறார். எனவே அவரை விட்டுவிட்டு பொது வாசகர்களுக்காகவே சில விளக்கங்களை மிகச் சுருக்கமாகத் தர விரும்புகிறேன்.



1. பிரியா தம்பி என்ற மினர்வா, தமிழச்சி குறித்து என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு நான் எனது பதிலைக் கீற்றிலேயே தெளிவாக அளித்துவிட்டேன். மினர்வா விவாதத்தைத் தொடக்கியதால் முதலும் கடைசியுமாக ஒரு தடவை அது குறித்துப் பேசவேண்டியதாயிற்று. இனிமேல் அது குறித்துப் பேச நான் விரும்பவில்லை. எனினும் இறுதியாக ஒரேயொரு சிறுவிளக்கம் மட்டும்: நந்தன் குறிப்பிடுவதுபோல முதலில் நான் குற்றச்சாட்டை மறுத்து பின்பு ஒப்புக்கொள்ளவில்லை. நான் எப்போதுமே அந்தக் குற்றச்சாட்டை ஒப்பவில்லை. அதற்கான எனது விளக்கமே நான் கீற்றுவுக்கு அனுப்பிய பின்னூட்டம்.



2. நந்தன் குறிப்பிடும் அவர் வகைப்பட்ட பண்பாடு, ஒழுக்கவாதம், கலாசாரம் எல்லாம் எனக்குக் கால்தூசுகள். இந்த மீறல்களை நான் இருபது வருடங்களாக எழுத்தில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருபவன். இந்த மீறல்களை எதேச்சையாக அல்லாமல் அரசியல் கோட்பாடுகளிடம் பெற்ற சுடரின் வெளிச்சத்தில் செய்துவருபவன் நான். எனவே நந்தன் தனது ஒழுக்கப் போதனைகளை என்னிடம் வைப்பது நம் இருவருக்குமே நேர விரயமே தவிர வேறொன்றுமில்லை.



3. சுகுணா திவாகருக்கு நான் பணம் கொடுத்தேன் என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்யைத் தவிர வேறொன்றில்லை. இவ்வாறான ஓர் அயோக்கியத்தனமான கட்டுக்கதையை முன்வைத்து அதற்குப் பதில்வேறு சொல்லென்று நந்தன் நச்சரிப்பது அருவருப்பான தந்திரமே தவிர அரசியல் விவாதமல்ல. இதற்கு ஒரு துணைக் கேள்வியையும் நந்தன் உருவாக்கியுள்ளார். நீ பேசும் தலித் அரசியலில் உனக்கு பற்றுறுதி இருந்தால் ஏன் நீ தலித் முரசுவுக்குப் பணம் கொடுக்கவில்லை என்பது அவரது அடுத்த லொஜிக்கான கேள்வி. சரி நான் தலித் முரசுவுக்கு பணம் கொடுத்திருப்பின் என்னை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து கீற்று விடுவித்துவிடுமா? அப்படியானால் சொல்கிறேன். ஆம், 'தலித் முரசு' நெருக்கடியான ஒரு சூழலை எதிர்கொண்டபோது நான் முன்னின்று அய்ரோப்பாவில் தோழர்களிடம் பணம் திரட்டித் தலித் முரசுக்குக் கொடுத்திருக்கிறேன். தவிரவும், சந்திரகேசன் காலத்திலேயே தலித் முரசுவை அய்ரோப்பிவிற்கு வரவழைத்து அதை வாசகர்களிடம் எடுத்துச் சென்றது சுகன் முதலான தோழர்களே. இதையெல்லாம் நந்தன் அறியமாட்டார். இவ்வாறு அவருக்குப் பல விடயங்களில் அறிவு கிடையாது.



4. நந்தனுக்கு பல விடயங்களில அறிவு கிடையாது எனச் சொன்னேன். அதன் உட்சபட்ச வடிவம்தான் இப்போது கீற்றில் நடந்துவரும் புலிகள் /சாதியம் /பிரபாகரன் /வெள்ளாளர் /கரையார் விவாதங்கள். அந்தக் கட்டுரையை எழுதிய மினர்வா ஈழத்தின் சாதியமைப்புக் குறித்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் தொகுத்த குப்பைகளிற்கு பதில்வேறு கேட்டு கொக்கரிக்கும் நந்தனது அறியாமை உள்ளபடியே நமக்குக் கடுப்பேற்றக்கூடியது.



புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர் என பழ. நெடுமாறன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட சில நாட்களிற்குள்ளாகவே அதை மறுத்து 'புதிய கோடாங்கி' இதழில் நான் சொல்லியிருந்தவற்றை எல்லாம் மினர்வா படித்திருக்க வாய்ப்பில்லை. பிரபாகரன் பிறந்த 'கரையார்' சாதி ஈழத்தில் வெள்ளாளருக்கு அடுத்தபடியில் உள்ள ஆதிக்கசாதி. மேலும் தெளிவு வேண்டுமெனில் 'எதுவரை' இதழிற்காக தோழியர் புஸ்பராணி வழங்கியிருந்த நேர்காணலை மினர்வா படித்துப் பார்க்கலாம். ஈழத்துச் சாதியமைப்புக் குறித்தும் அந்த சாதியமைப்பபைப் புலிகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் தெளிவாக அறிய விரும்பினால் புதிய சனநாயக் கட்சியைச் சேர்ந்த மூத்த தோழர்கள் சி.கா. செந்திவேலும், இரவீந்திரனும் இணைந்து எழுதிய ' இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" என்ற நூலை (சவுத் விஷன் வெளியீடு) அவர் படிக்கலாம். இதொன்றும் தெரியாமலே அவர் எடுத்தடி மடக்காக எழுதியிருக்கும் குப்பைத் தொகுப்பிற்கு நான் பதில் வேறுதர வேண்டுமாம். என்னவொரு கொழுப்பு!



புலிகள் இயக்கமே அதுவரையான வெள்ளாளத் தலைமைகளை உடைத்து எழுந்த முதலாவது இயக்கம் என்றும் பிரபாகரன் சிறுவயதிலிருந்தே வெள்ளாள ஆதிக்கத்திக்கு எதிரான மனநிலை கொண்டவர், புலிகளின் தலைமை தோற்கடிக்கப்படும்போது ஆதிக்கசாதி வெள்ளாளர்கள்

பிரபாகரனினின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்குதலைத் தொடுப்பார்கள்

என்றெல்லாம் நான் பல்வேறு இடங்களில் புலிகள் இயக்கத்தின் தனித்தன்மை குறித்து எழுதியிருந்ததையும் மினர்வா படித்திருக்கமாட்டார்.



அம்ருதா இதழ் நேர்காணலில் நான் (நவம்பர் 2009) இவ்வாறு சொன்னேன்:



"புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது. இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதை நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?"



மினர்வா இதையாவது படித்தாரா என்பது தெரியவில்லை.



"பிரபாகரன் கரையார் என்பதால் வெள்ளாளர்கள் புலிகளை எதிர்த்தார்கள்" என்று மினர்வா சொல்வதெல்லாம் அடி முட்டாள்த்தனமான கண்டுபிடிப்பு மட்டுமே. புலிகளின் ஆதரவுத்தளத்தின் முதன்மைச் சக்தியே யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களே என்பதெல்லாம் எத்தனையோ பேர்கள் எத்தனையோ தடவைகள் எழுதி நிரூபணம் செய்த விடயங்கள். புலிகளின் தோல்விக்குப் பின்பு மூழ்கிய கப்பலிலிருந்து முதலில் வெளியேறுபவவர்களும் அவர்களே என்பது இன்னொரு உண்மை.



புலிகளை விமர்சிக்கும் மூன்று வெள்ளாளர்கள் கொண்ட ஒரு பட்டியலைப் போட்டு தனது வாதத்தை தூக்கி நிறுத்த முயல்கிறார் மினர்வா. புலிகளைக் கடுமையாக விமர்சித்த, உறுதியாக எதிர்த்து நிற்கும் முன்னூறு தலித்துகளின் பட்டியலை நான் தரவா? கே.டானியல், தங்கவடிவேல், தெணியான் என்று மூத்த தலைமுறையினரின் பட்டியலைத் தரவா, இல்லை கலாமோகன் , ஜோர்ஜ் குருஷேவ், அருந்ததி என்று இன்றைய தலைமுறையின் பட்டியலைத் தரவா? அதேபோன்று புலிகளிற்கு ஆதாரவாக் கொடிபிடிக்கும் மூவாயிரம் வெள்ளாளர்களை நான் பட்டியலிடவா? அன்ரன் உருத்திரகுமாரன் என்று 'அ' வரிசையில் அரசியலில் ஆரம்பிக்கவா இல்லை மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம் என இலக்கியத்தில் ஆரம்பிக்கவா? அதேபோல் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட தலித் தலைவர்களை நான் பட்டியலிடவா? ஆனால் இந்தப் பட்டியலிடல்கள் மூலம் ஈழத்துச் சாதியமைப்பு மற்றும் புலிகளும் சாதியமும் என்ற மிகச் சிக்கலான விடயத்தை மினர்வா நினைப்பது போல அவ்வளவு சுலபமாக அவிழ்த்துவிட முடியாது. மினர்வா இட்ட பட்டியல் வெறும் சேறடிப்பின்றி வேறில்லை. அந்தப் பட்டியலிலிருந்து மினர்வா கட்டியெழுப்பிய கட்டுரை அறியாமையல் நிறைந்த குப்பையைத் தவிர வேறில்லை.



5. கீற்று நந்தனுக்கு எனது வெளிநாட்டுப் பயண வரவு செலவுக் கணக்குகள் தேவைப்படுகின்றன போலயிருக்கிறது. ஒரு சாதாரணனால் எவ்வாறு இவ்வாறு அடிக்கடி பயணம் செய்ய முடியும் என்பது அவரது கேள்வி. வேறொன்றுமில்லை, நான் ராஜபக்சவிடம் காசு வாங்குகிறேன் என அவர் சொன்னால் "ஆதாரத்தைச் சொல்லப்பா" என நான் அரியண்டம் கொடுப்பேனல்லவா, அதைத் தவிர்க்க அவர் இவ்வாறு சுற்றி வளைத்துப் பயணம் குறித்த கேள்விகளை எழுப்புகிறார்.



பயணம் செய்வதும் கிட்டத்தட்ட இலக்கியம் எழுதுவதுபோல ஒரு கலைதான். ஒரு சிறந்த கவிஞர் எவ்வாறு மிகக் குறைந்த சொற்களால் ஒரு மிகச் சிறந்த கவிதையை எழுதுவாரோ அதேபோல ஒரு சிறந்த 'ட்ரவலர்' பயணத்தின் இரகசியச் சூக்குமங்களைத் தெரிந்து வைத்திருப்பார். 2007ல் விமானப் பயணச்சீட்டுத் தவிர்த்து வெறும் 300 ஈரோக்களுடன் 20 நாட்கள் கியூபா முழுவதும் தனியே சுற்றித் திரிந்திருக்கிறேன். கையில் ஒரு சதமும் இல்லாமலேயே பிரான்ஸிலிருந்து ரஷ்யாவரை 'லிப்ட்' கேட்டுக் கேட்டே பயணிக்கும் நண்பர்களை எனக்குத் தெரியும். கீற்று நந்தன் எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து வைத்திருப்பது போலவே அய்ரோப்பிய வாழ்வு, வேலைமுறை, வேலையிழப்புக் காப்பீடு, சமூக நல உரிமைகள் - உதவிகள் போன்ற எல்லாவற்றையும் தவறாகவே விளங்கியுள்ளார். ஏதோ விபரங்களைத் தனது அய்ரோப்பிய நண்பரிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டாராம் நந்தன். அந்த அய்ரோப்பிய நண்பரை நந்தன் என்னிடம் அனுப்பிவைக்கட்டும். எனது கணக்கு வழக்குககளை அவரிடம் காண்பிக்கிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. எனக்குப் பயணமுகவர் நிறுவனங்களிலும் வங்கியிலுமுள்ள கடன்கள் அத்தனையையும் அவர் அடைக்கச் சம்மதித்தால் அவர் வந்து எனது ஆவணங்களைப் பார்வையிடலாம்.



6. அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் கேள்விகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்கள், பொதுமேடைகளில் விவாதிக்கப் பின்வாங்குபவர்கள் என்பது நந்தனின் கருத்து. இனி, நாங்களெல்லோரும் எத்தனை பொதுமேடைகளில் விவாதித்தோம், எத்தனை விவாதங்களை நடத்தி வெளியிட்டோம், எத்தனை கருத்தரங்குகளை வடிவமைத்து நடத்தியிருப்போம், எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம் என்றெல்லாம் நான் பட்டியல் போடவேண்டுமாக்கும். எங்களது வாழ்க்கையில் முக்கால்வாசியே பதில்சொல்லியே கழிகிறது. இதில் இவருக்குத் தனியாக, பேஸ்புக் தம்பிகளுக்குத் தனித் தனியாகப் பதில்களைச் சொல்ல வேண்டுமாம். அ.மார்க்ஸ் அவரது எழுபத்துச் சொச்ச நூல்களில் எழுதியிராத எந்தவொரு விடயத்தையும் நந்தன் புதிதாகக் கேள்வியாக்கியதில்லை. அதாவது இன்றைய கேள்விக்கு நேற்றே பதிலுள்ளது. இதனது பொருள் அ.மார்க்ஸ் 'அட்வான்ஸ்' என்பதல்ல. நந்தன் 'லேட்' என்பதுதான் இதன் பொருள்.



ஆகப் பதில் சொல்லவோ, விவாதத்திற்கோ, விவாதித்தை நூலாக்கவோ, அவற்றைத் தோழர்களிடம் எடுத்துச் செல்லவோ நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. வேண்டுமானால் நந்தன் விரும்பாத பதில்களைச் சொல்லியிருப்போம். அவ்வளவே. எனவே இந்தப் "பதில் சொல்லு!" என்ற நித்திய கூப்பாடுவைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு யாரை விமர்சிக்க ஆசைப்படுகிறார்களோ அவர்களை முதலில் ஒழுங்காகப் படித்துவிட்டு கீற்று நந்தன் போன்றோர் கீ போர்டில் கை வை க்கட்டும்.



7. இப்போது நந்தனின் கட்டுரையின் மையப் பொருளுக்கு வருவோம். 'கீற்றில் எழுத வேண்டாம் என்றும் கீற்றில் சிறுபத்திரிகைகளை வெளியிட வேண்டாம் என்றும் எழுத்தாளர்களைக் கேட்டு அ.மார்க்ஸ் குழு சதி செய்கிறது' என்பது நந்தனின் கருத்து. மொஸ்கோ சதி போல, நெல்லைச் சதிபோல ஓர் அடையாறுச் சதி அரங்கேறுகிறது என்று 'பில்டப்' செய்யும் வேலைதான் நந்தனின் கட்டுரையின் மற்றைய பகுதிகள்.



மிகத் தெளிவாகச் சொல்கிறேன்: ஓர் ஊடகம் தொடர்ந்து அவதூறுகளையே பரப்பும்போது அதனடிப்படையில் தவறான அரசியலையும் குழுக்களையும் கட்டியமைக்க முற்படும்போது அந்த ஊடகத்தை நிராகரிக்குமாறு தனது சக படைப்பாளியிடமும் சக களச் செயற்பாட்டாளரிடம் ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ கோருவது மிக அடிப்படையான சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு. இதில் சதியுமில்லை ஒரு மயிருமில்லை.



ஏற்கனவே அய்ரோப்பாவில் ஓர் இணையம் தொடர்ந்து அவதூறுகளை (கீற்றை விடக் கொஞ்சம் குறைய - இனியொருவைவிடச் சற்று அதிகம்) எழுதிக்கொண்டிருந்தபோது நாங்கள் எழுபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் இணைந்து அந்த இணையத்தைக் கண்டித்து ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தினோம். அந்த இணையம் எங்களால் நிராகரிக்கப்பட்டது. நிறப்பிரிகைக் குழுவினரால் இந்தியா டுடேயின் பக்கங்கள் மலம் துடைத்து அனுப்பி வைக்கப்பட்டன. எனவே இதுவெல்லாம் ஒன்றும் கீற்றுக்காகவென்றே வடிவமைக்கப்பட்ட புதிய எதிர்ப்பு வடிவமோ, கருத்துரிமை மறுப்போ, சதியோ கிடையாது.



சென்ற வருடம் கீற்றுவின் மேடையொன்றில் ஓர் ஈழத்து இஸ்லாமியத் தோழர் விடுதலைப் புலிகளை விமர்சித்துப் பேசும்போது இடையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டாரே அதற்குப் பெயர்தான் கருத்துரிமை மறுப்பு! கூட்டத்தின் முடிவில் "அவர் இப்படியெல்லாம் பேசுவார் எனத் தெரியாது, தெரியாமல் பேச வைத்துவிட்டேன்" எனக் கீற்று ஆசிரியர் மழுப்பி ஈழத்திலிருந்து நம்பி வந்த தோழரைக் காட்டிக்கொடுத்தாரே... அதுதான் சதி!



நன்றி, வணக்கம்!
AnonMan
ஒருவரை வெள்ளலரா தலித்தா என்று எப்படி கண்டறிவது?
திருமுருகன் காந்தி
ஒரு விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்த முயன்ற கீழ்த்தரமான எழுத்தாளர்களையும், அறிவுசீவிகளையும் அம்பலப்படுத்திய கீற்று இணையத்திற்கு நன்றி. ஷோபாசக்தி, அ.மார்க்ஸ் மற்றும் இதர ஜால்ராக்களின் எந்த முயற்சியையும் முறியடிக்க நாங்கள் துணை நிற்போம் தோழர்.
தமிழ்நதி
“மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க மறுத்தார்கள்“ என்பது, புலிகள் மீது புலியெதிர்ப்பாளர்களால் சுமத்தப்படும் பிரதானமான குற்றச்சாட்டு. மினர்வா சில கட்டுரைகளை எழுதினார் என்பதற்காக, அவரது அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தப்போவதாகச் சொல்வது மட்டும் எந்த வகையிலான கருத்துச் சுதந்திர நாட்டத்தினைச் சார்ந்தது?
Fan of kavinmalar
"ஓ... சச்சின் வந்தாரய்யா... ஓ சச்சின் வந்தாரய்யா..." இனி தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எல்லாம் அணி திரண்டு வருவார்கள். ஒரே காமெடிதான் போங்க...
Muthukumar
ஷோபா சக்தி! கீற்றில் வந்ததும் உங்களுக்குப் பெரும் நெருக்கடியாகப் போய்விட்டதா? கீற்று இணையதளத்தைப் பார்த்து அவ்வலவு பயமா? தமிழச்சி மூன்று ஆண்டுகள் எழுதி வந்தபோதெல்லாம் நீங்கள் அமைதியாக இருந்ததன் மர்மம் என்னவோ? தமிழச்சியிடம் வாங்கிய அடி, மூன்றாண்டுகளுக்கு வலித்ததா? ஒரு கொரில்லா இப்படி அடி வாங்கி வந்திருப்பது கஷ்டமாத்தான் இருக்கு...
வளர்மதி
”விக்கிரமாதித்தியனின் தெளிவான பதிலைக் கேட்டதும், வேதாளம் பலமாக நகைத்து அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு பறந்து மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி தலைகீழாகத் தொங்கியது. இந்தப் பொல்லாத வேதாளத்தை எப்படி அடக்குவது என்று வியந்துகொண்டே, தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியன் சுடுகாட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்” ;-)

விக்கிரமாதித்யன் அடக்கிய வேதாளமே தேவலை போலிருக்கு!

இந்த ஷோபா சக்தி என்ற முட்டாள் வெள்ளாளப் பூதத்திற்கு இருக்கும் தந்திரமும் திமிரும் கண்டிருந்தால், அந்த வேதாளம் அடங்கி ஒடுங்கிவிட்டிருக்கும்.

கேள்விகளை இந்த வெள்ளாளப் பூதம் எப்படி திசைதிருப்பி சிதற அடிக்கும் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள இப்போதைக்கு இந்தச் சுட்டியைத் தருகிறேன்: http://goo.gl/uY1oS

”எப்பா! காலையிலே எழுந்தவுடனே எத்தனை அவதூறுகள்! எல்லாக் கேள்விகளுக்கும் எப்போதோ நாங்கள் பதில் சொல்லிட்டோமே! திரும்பத் திரும்பக் கேட்டு உயிரை எடுக்கிறார்களே இந்த முட்டாள்கள்!” இதுதான் இந்த வெள்ளாள பூதத்தின் பாணி. :-)

மீண்டும் வருகிறேன்.
வளர்மதி
இந்த நவீன வேதளத்தை ’அடக்க’ முயன்று தோற்று, கபாலம் சிதறிப்போன ராஜகுமாரர் இருவரின் பதிவுகள் இவை:

முதல் ராஜகுமாரன் டிசே தமிழன் கேட்டவை =>

http://djthamilan.blogspot.com/2011/02/01.html

http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html

http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_19.html

இரண்டாவது ராஜகுமாரன் அருண்மொழிவர்மன் கேட்டவை =>

http://goo.gl/I0Lra

http://goo.gl/GYoVA

இந்த இருவர் போக ஒரு தேசாந்திரியின் அவதானங்கள் இவை =>

http://thesamnet.co.uk/?p=24255

இத்தனை கேள்விகளுக்கும் இந்த நவீன வெள்ளாள வேதாளம் பதில் சொல்லும் பாணி (இதையெல்லாம் படித்து சோர்வுற்றுப் போனால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக) இது =>

http://www.youtube.com/watch?v=rgANpyU48cw

இந்த நவீன வெள்ளாள வேதாளம் கேள்வி கேட்கும் பாணி இது =>

http://www.youtube.com/watch?v=8C4T68v5MiI

நான் சரியாத்தான் பேசுறனா ... நான் சரியாத்தான் பேசுறனா?

:-))
thirukumar
'தினமும் காலையில எழுந்திச்சா மானமதுரை போலீஸ் ஸ்டேஷன்லே கையெழுத்து போடனும். பின்பு மதுரை கோர்டுக்கு போகனும்.. அதுக்கப்புறம் போடி காவல் நிலையம் போகனும். வர்ற வழியிலேயே தேனி பஞ்சாயத்துக்காரங்களுக்கு பதில் சொல்லனும்' அப்படின்னு ஒருத்தன் கெத்தா சொன்னா நீங்க அவனைப் பத்தி என்ன நினைப்பீங்க... உலகமகா திருடன்னு சொல்ல மாட்டீங்க... இங்கேயும் அப்படிதான் நடக்குது.. பன்றது எல்லாம் அயோக்கியத்தனம், பித்தலாட்டம்.. பிறகு எல்லோரும் கொஞ்சவா செய்வாங்க..? அடியேய். நீ திருந்தாதவரைக்கும், காலத்துக்கும் இப்படியே பதில் சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான். ஒரு பயலும் நம்பமாட்டான்.
SRI
சோபாசக்தி "ஆத்திரக்காறனுக்கு அறிவு மட்டம்" என்று ஊரில் சொல்வதுபோல் உள்ளது உங்களது எழுத்தும் விளக்கமும். தயவு செய்து உங்களைப்பற்றி இருந்த கொஞ்ச மதிப்பையும் அம்பலப்பட்டு தொலைத்து நிற்கிறீர்கள். என்னதான் உங்களுடைய எழுத்து வல்லமையை பயன்படுத்தி நியாயப்படுத்த பூசி மெழுக மெழுக நீங்கள் வீணாக அம்பலப்பட்டுபோகிறீர்கள். முதலில் தமிழச்சி தொடர்பாக நீங்கள் மன்னிப்பை கேட்டு இப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பாருங்கள். நீங்கள் நிறையவே புழுடா விடுகின்றீர்கள். 300 யூரோவில் 20 நாட்கள் கீயூபாவில் சுற்றும் பயணம் செய்தீர்களோ ! யாருக்கு கதை சொல்கிறீர்கள். ஒருநாள் குடிக்கும், "கூத்துக்கும்" நீங்கள் எவ்வளவை செலவு செய்வீர்களென்று ஒருதரம் எண்ணிப்பாருங்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கையும் பொய்! வாயும் பொய்!!.
Ragavan
கும்புடறேன் சாமி!! எங்கப்பா ஊருலே சாதி ஆண்களைப் பார்த்து இப்படி கும்பிடறது வழக்கம்... ஷோபா சக்தி வேற பிள்ளைவாள் அல்லவா! அதனால்தான் ஒரு கும்பிடு போட்டு வைச்சேன்... தப்பா நினைச்சிக்கிறாதீக... எங்க ஊருலே சாதிப்பயலுக நிலம் வச்சி ஏமாத்துவானுங்க... வட்டிக்கு காசு கொடுத்து ஏமாத்துவானுக... ஆனா முதன்முறையா நானும் தலித்னு சொல்லி ஏமாத்துனதை இப்பதான் பார்க்குறேன். எப்பவுமே ஆண்டைங்க தாங்க தப்பு செய்யும்போது, எங்க பயலுகளையே அடியாளுகளா வச்சிருக்குவாங்க... இது எழுதுறவங்க கிட்டேயும் அப்படியே இருக்கு... காலச்சுவடுக்காரன் ரவிக்குமாரை யூஸ் பண்ணான். உங்களுக்கு ஆதவன் தீட்சண்யா வாச்சிருக்காரு... எங்க விரலை வச்சியே எங்க கண்ணையே குத்த வைக்கிற சாதிப்புத்திதான்... காலகாலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு... படிச்சி அம்பேத்கர் மாதிரி நம்ம சாதி சனத்துக்கு பயன்படுவான்னு நினைக்கிற பயலுக எல்லாம், படிக்காதவன்போலேயே ஆண்டைங்களுக்கு சேவகம் செய்றாங்க... எங்களுக்கு எப்ப விடிவுன்னு தெரியலை... உங்களுக்கு ஆயிரம் பேருக்கு பதில் சொல்ல நேரமிருக்கலாம். இந்த தலித் பயபுள்ளேக்கும் பதில் சொல்லுங்களேன். எனக்கு ஒரே ஒரு கேள்விதான். எதுக்கு தலித்தா நடிச்சீங்க? உங்க ஊத்துக்கு எங்களை ஏன் ஊறுகாயா யூஸ் பண்ணீங்க?
வெங்கடசாமி
உலகத்திலே இருக்கிற எல்லா கில்லாடிகளையும் மிஞ்சின ஜெகஜாலக் கில்லாடி இந்த ஷோபாசக்தி.. பேசுவது கம்யூனிசம், அடிப்பது கூலி கேட்ட தொழிலாளர்க்ளை... பக்கம் பக்கமா பெண்ணியம் பேசுறது, செயல்லே கண்ட இடங்கள்லே கையை நீட்டி அடி வாங்குறது.. நான் தலித்துன்னு ஊரை ஏமாத்துறது, உள்ளுக்குள்ளே வெள்ளாள சாதிப்புத்தியை அப்படியே வச்சிருக்கிறது...
Rajeevl.
ayyo saamy shoba sakthiyin kathai kaathai pilakkirathu naanum irnadu aandugal piraancel irunthavanthaan. ange oruvarin oru naal selavukku kooda intha koothaadi sollum panam pathaathu. ketpavargal ilichavaayargal ebraal enna venaalum solvaargal...
Senthilvasan M.
தமிழர்களின் துயரத்துக்கு நாம் பல பேரை கை காட்டிக்கொடிருக்கிறோம்; நமகெல்லாம் நூறு சுட்டு விரல்கள் இருந்தாலும் போதாது!
இன்றைய தேதியில் தமிழனுக்கு இருக்கும் ஒரே எதிரி, ஒற்றுமையின்மை...
இந்த சாதியை என்று குப்பையில் போடுகிறோமோ, அன்று தான் நாம் வாழ ஆரம்பிக்கும் முதல் நாள் என்று கொள்ளலாம்! பிரச்சனைகளை பேசித்தீர்க்கும் பழக்கம் நம்மை விட்டு போய் விட்டதா?
நல்ல விஷயங்களை பதிவு செய்யுங்கள், கருத்து வேறுபாடுகளை தனியே பேசுங்கள். எதை எடுத்தாலும் சாதி, சாதி, சாதி...
போதும் அய்யா, போதும்! இப்படி சிறு, சிறு விஷயங்களை செய்யும் போதே இத்துணை அக்கப்போர்.
நம்மை அழிக்க வேறு ஒருவன் எதற்கு?! நாமே போதும்.
இந்த அழகில் தமிழ் தேசியம் வேறு பேசுகிறோம்...
தமிழ் தேசியம் வாங்கிப்பல சாதிகளுக்கு அதை கூறு போட்டு, பத்து எத்தியோப்பியாக்களை உருவாக்கவா? என்ன தான் ஷோபா சக்தி அவர்கள் சாதியை பற்றி எழுதினால் கீற்று எதற்காக அதை வெளியிட வேண்டும்?
இன்று அவர் பகையான பின் அதே சாதியை பற்றி எழுத வேண்டும்?
தனி மனித தாக்குதல்கள், அந்தரங்க விஷயங்களை காட்டும் "எழுத்து" WEB கேம்கள், சாதீய மாச்சரியங்கள்...நன்றாக இருக்கிறது நமது இலக்கியம்!
இந்த விதத்தில் கீற்றும் கூட ஒரு விதத்தில் தரம் தாழ்ந்து தான் போய் விட்டது.

உண்மை தமிழன், பகுத்தறிவு, தமிழர் ஒற்றுமை இவற்றை எல்லாம் பேசும் மேதாவிகளே...
இன்று முதல் சாதியை பேச மாட்டேன் என்ற உறுதி எடுப்பீர்களா?நண்பர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்; இதை பேசித்தீர்த்து விடுங்கள்.
நண்பர் ஷோபா சக்தி அவர்களுக்கு - முதல் முனைப்பு உங்களிடம் இருந்து வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்!
"மன்னிப்பு கேக்குறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்!"

கரிசனத்துடன்,
அமுதன்
எனக்கு ‍‍சோபா சக்தி, அ.மார்க்சு குறித்தான தத்துவார்த்த முன்னேடுப்புகள் எழுத்துக்கள் ஏதும் தெரியாது, கொஞ்ச நாடக்ளாக ஒரு சராசரி வாசகனாக கீற்றைபடிகினறேன், இக்கட்டுரையின் பதிலாக தனது கருத்தை ‍வெளியிட்ட சோபா சக்தி சாதி குறித்தான கட்டுரையாளர் ‍கேள்விக்கு பதிலேதும் சொல்லவேயில்லை.
சண்முகராஜ்
ரமேஷ் அவர்களுக்கு,

வணக்கம். உங்களப் பார்த்து ரொம்ப நாளச்சி. நான் பொதுவாக அதிக மனிதமும், விவாததில் மிக உச்சப்பட்ச நாகரிகத்தினைக் கடைப்பிடிக்கும் இதுபோன்ற இடங்களுக்கு வருவதில்லை.

இன்று உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதில் யாரும் அறியாத பலத் தகவல்களை கொடுத்திருக்கீங்க. அதிலும் குறிப்பா புலிகளின் தலைவ்ர் கரையர் என்பதை அதுவும் ஒரு 25 வருடமா நான் யார்ட்டக் கேட்டாலும் தெரியாதுன்னே சொன்னாங்க. இப்ப மினர்வா அவர்கள் 2011-ல் அதைக் கண்டுபிடித்து சொல்லியிருக்காங்க. மினர்வா இதைப்பத்தி ஆராய்ச்சிப் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். அவர்களின் சிறந்தக் கட்டுரைகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நன்றி உடையவனாய் இருப்பேன்.

இரண்டாவது எனக்கு பெரியார கொஞ்சம் பிடிக்கும், ஆனால் படித்ததில்லை. நீங்க பெரியாரிஸ்ட்டுன்னு பொதுவா கேள்விப்பட்ருக்கேன். இந்தக் கட்டுரையில, திருவள்ளுவர் அறிவுருத்திய பேராண்மையைப் பத்தித் தெளிவா எழுதியிருக்கீங்க. இதுல எனக்கு ஒரு சந்தேகம்,
பெரியார் ”பெண்கள் விரும்பினால் ஒன்றுக்கு மேல் ஆண்களிடம் தொடர்பில் இருக்கலாம். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியல்ல”- ன்னு சொன்ன மாதிரி இருக்கு.

எனக்கு இதுபோன்ற கடினமான விசயங்கள் புரிவதில்லை. நான் பல நாளா என்னோட சொந்த செலவுல ஒரு அரங்குக் கூட்டம் ஏற்பாடு பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். பெரியாரைப் பற்றி ஒரு மூணு மணி நேரம் பேசக்கூடிய பேச்சாளரைத் தேடிக்கொண்டிருந்தேன். உங்கக் கட்டுரையைப் படிச்சப் பிறகு, நீங்கதான் சரியான ஆளுன்னு நான் முடிவுப் பண்ணிட்டேன். நீங்கள் ஒரு தேதியை முன்கூட்டியே சொன்னீங்கன்னா, கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

அப்புறம் பல மாசமா வேலைக்குப் போகாம சண்முகராஜ் எப்படி உயிரோட இருக்கான்னு கேட்டுறாதீங்க. எனக்கு அதற்குப் பதில் தெரியாது.

நன்றி. உங்கள் குடும்பத்தாரை நான் நலம் விசாரித்ததாக சொல்லவும்.
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
ம்..
nilavu
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்
jeyamkondan
தன்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்; அதைச் சொல்பவர்களுக்கு அறிவு கிடையாது என்று கிளிப்பிள்ள போல ஷோபா சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். வழக்கம்போல கேட்கப்பட்ட கேள்விகளில் மிக சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து பதில் சொல்லிவிட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார். எப்படி என்றுதான் தெரியவில்லை. மற்றவர்கள் பேசுவதர்கு ஆதாரம் கேட்கும் ஷோபா சக்தி, தான் சொல்வதற்கு எந்த ஆதாரமும், விளக்கமும் தர மறுக்கிறார். எல்லாவற்றையும் ஒற்றைவரியில் பொய்யெனக் கடந்துவிடுகிறார். தலித் முரசுக்கு பெருந்தொகை கொடுத்ததாக சொல்கிறாரே, அதற்கான ஆதாரத்தை தரமுடியுமா? அவர் அரசு உதவித் தொகையில் வாழ்வதாக சொல்கிறார்கள். அவருக்கு எவ்வளவு காசு கிடைக்கிறது? எப்படி வெளிநாடுகளுக்கு போகிறார்? சிக்கனமாக செலவு செய்து போகிறேன் என்றால் அது எப்படி என்று விளக்கமாக் சொன்னால் என்னைப் போன்றவர்களுக்குப் ப்யனுள்ளதாக் இருக்கும்.
jeyamkondan
//அந்த அய்ரோப்பிய நண்பரை நந்தன் என்னிடம் அனுப்பிவைக்கட்டும். எனது கணக்கு வழக்குககளை அவரிடம் காண்பிக்கிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. எனக்குப் பயணமுகவர் நிறுவனங்களிலும் வங்கியிலுமுள்ள கடன்கள் அத்தனையையும் அவர் அடைக்கச் சம்மதித்தால் அவர் வந்து எனது ஆவணங்களைப் பார்வையிடலாம்.// அயோக்கியத்தனமான பதில் இது. கீற்று நந்தன் கேட்டது பொதுவெளியில். யோக்கிய சிகாமணி சோபா சக்தி பொதுவெளியில்தான் பதில் சொல்ல வேண்டும். அதற்குத் துப்பில்லாததால்தான் அய்ரோப்பிய நண்பரிடம் பதில் சொல்கிறேன் என்கிறார். அதுவும் இவரது கடன்களைக் கட்ட வேண்டுமாம்... இந்த பொம்பளைப் பொறுக்கி கேட்கும் பதில்களுக்கு மட்டும் எல்லோரும் எந்த நிபந்தனையுமின்றி பதில் சொல்லிவிட்டுப் போகவேண்டும்... வெட்கங்கெட்டத்தனத்தின் உச்சம் இது.. சரி இவருக்குத்தான் வேலையில்லை... அரசு உதவித்தொகையில் வாழ்கிறார். பயணத்துக்கு கடன்வாங்கி போவதாக ஒத்துக்கொள்கிறார். வேலையில்லாத குடிகார பரதேசிக்குப் பணம் தரும் அந்த நபர்கள் யார்? பதில் சொல்ல வேண்டும் ஷோபா
இரா.முருகவேள்
மினர்வாவும் கீற்று நந்தனும் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். 1). ஷோபா சக்தி ஒரு மேல்சாதிக்காரர். தன்னை தலித் என்று காட்டிக் கொண்டு தமிழகத்தில் புலி எதிர்ப்பு அரசியலை தலித் அமைப்புகள், எழுத்தாளர்களிடையே பரப்பி வந்தார். 2) அ.மார்க்ஸ் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இரா.முருகவேள்
முதலாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை தமிழகத்தில் தலித்துகளுக்கும் பொதுவுடைமையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் இடையே பகைமையை மூட்டும் வேலையை அ.மார்க்ஸ் தொடர்ந்து செய்து வருகிறார் என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இக்குற்றச்சாட்டு மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகிறது. இரண்டாவது குற்றச்சாட்டைப் பொறுத்தவரை இதில் புதியதோ, அவதூறோ எதுவுமில்லை. ஏதோ ஒருவிதத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இரா.முருகவேள்
இரண்டு மனைவிகள் என்பது ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் ஆகும். இதன்மூலம் அ.மார்க்ஸின் சொல்லும் செயலும் எதிரெதிராக உள்ளன என்று கீற்று கூறுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஷோபாசக்தியின் நீண்ட எதிர்வினையில் எந்த விளக்கமும் இல்லை.
பத்து, பதினைந்து ஆண்டுகளாக அ.மார்க்ஸ் குழுவினர் மேற்கொண்டுவரும் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை அடியோடு புரட்டிப்போடக்கூடியவை இப்போது எழுந்துள்ள கேள்விகள். இவற்றைப் பற்றி அ.மார்க்ஸ் குழுவினர் வெளிப்படையாகப் பேசவேண்டும். மௌனம் இவர்களின் நேர்மையின் மீது எழுந்துள்ள சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.
தவிர, இவர்கள் மீது கீற்று விமர்சனம் வைக்கிறது என்பதால் கீற்றை மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கோருவது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினாலும், இந்தக் கோரிக்கையிலுள்ள ஆணவம் எரிச்சலூட்டுகிறது.
sivm
//அந்த அய்ரோப்பிய நண்பரை நந்தன் என்னிடம் அனுப்பிவைக்கட்டும். எனது கணக்கு வழக்குககளை அவரிடம் காண்பிக்கிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. எனக்குப் பயணமுகவர் நிறுவனங்களிலும் வங்கியிலுமுள்ள கடன்கள் அத்தனையையும் அவர் அடைக்கச் சம்மதித்தால் அவர் வந்து எனது ஆவணங்களைப் பார்வையிடலாம்.//

சோபா, நானும் உங்களைப்போல் ஐரோப்பா நாடொன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் தமிழ் நாட்டு தோழர்களுக்கு காதில் பூ சுற்றுங்கள். எங்களுக்கு வேண்டாம். ஐரோப்பா நாட்டில் அதுவும் நீங்கள் வாழும் பிரான்சில் வேலை அற்றவர்களுக்கு எந்த பயண முகவர் நிறுவனங்களில் வங்கிகளில் கடன் கொடுக்கிறார்கள் என்று கூற முடியுமா? இங்கு கடன் பெறுவதற்கான முன் நிபந்தனையே செய்யும் வேலை தொடர்பான சம்பள பட்டியலை சமர்ப்பிக்கவேண்டும். அதுவும் காலம் பூராவும் எந்த வேலையும் செய்யாமல் அரச உதவிப்பணத்தில் வாழும் உங்களுக்கு எந்த நிறுவனம் கடன் கொடுக்கும்? தயவு செய்து கூறவும். தொடர்ந்து தொடர்ந்து பொய்களையும் புரட்டுக்களையும் உங்கள் பதில் என்ற போர்வையில் கொட்டாதீர்கள்
thangapandian
pothumae intha' kelvi pathilkal'. thaninabar sandaikalukku oru samooka thalaththai payanpaduththa koodathu endra nakareekam anaivarukkum therinthal nallathu.
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
சொக்க‌த்த‌ங்க‌ம் சோபா ச‌க்தி அவ‌ர்க‌ள் கூறுவ‌தை நீங்க‌ளே பார்த்து அவ‌ர‌து ஒழுக்க‌த்தை புரிந்து கொள்ளுங்க‌ள்...

இது கீற்று ந‌ந்த‌ன் எழுப்பிய‌ கேள்வி ////9. ஒரு பேச்சுக்கு ஷோபா சொல்வதே உண்மையென்று வைத்துக் கொள்வோம். கல்யாணமான ஒருவருடன் காதல் வரும்போது, 'உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாருங்கள். நாம் கல்யாணம் பண்ணியோ, பண்ணாமலோ சேர்ந்திருக்கலாம்' என்று சொல்வதுதானே முறை. அதுதானே தனிமனித அறம்! ஆனால், எப்போதுடா வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் சராசரி ஆண் புத்திதானே ஷோபாவுக்கு இருந்திருக்கிறது!! இப்போது உங்களுடன் நட்பாக இருக்கும் பெண்களுடனும் இந்த எண்ணத்தில்தான் பழகுகிறீர்களா?////

ஞான‌ சூரிய‌னின் ப‌தில் /////நந்தன் குறிப்பிடும் அவர் வகைப்பட்ட பண்பாடு, ஒழுக்கவாதம், கலாசாரம் எல்லாம் எனக்குக் கால்தூசுகள். இந்த மீறல்களை நான் இருபது வருடங்களாக எழுத்தில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வருபவன். இந்த மீறல்களை எதேச்சையாக அல்லாமல் அரசியல் கோட்பாடுகளிடம் பெற்ற சுடரின் வெளிச்சத்தில் செய்துவருபவன் நான். எனவே நந்தன் தனது ஒழுக்கப் போதனைகளை என்னிடம் வைப்பது நம் இருவருக்குமே நேர விரயமே தவிர வேறொன்றுமில்லை//////////////

அண்ணே ஞான‌ சூரிய‌ன் எந்த‌ அர‌சிய‌ல் கோட்பாட்டு ஞான‌ சுட‌ரிலிருந்து பெற்றீர்க‌ள் என‌ தெரிந்து கொள்ள‌லாமா?
கீற்று நந்தன்
தலித் முரசு இதழுக்கு நிதியுதவியை வாரி வழங்கியதாக ஷோபா சக்தி கூறியது தொடர்பாக இதழின் ஆசிரியர் தோழர் புனிதபாண்டியனிடம் விசாரித்தேன். தலித் முரசு இதழுக்கு நிதி நெருக்கடியற்ற ஆரம்ப காலகட்டங்களிலோ, நிதி நெருக்கடி மிகுந்த கடந்த சில ஆண்டுகளிலோ ஷோபா சக்தி எந்தவொரு உதவியும் செய்ததில்லை என்று அவர் கூறினார். சந்தேகமிருப்பவர்கள் தோழரிடமே விசாரித்துக் கொள்ளலாம். நிதி கொடுத்தேன் என்று கூறுவது ஷோபாசக்தியின் வழமையான பொய்களின் தொடர்ச்சியே!!
kumar
கீற்றின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் ஷோபாசக்தியின் தவறான புரிதலுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். கீற்று.கொம் ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுகிறது என்று சொல்லி, ஷோபா சக்தி அதற்கு ஆதாரமாக சில தகவல்களையும் கொடுத்துள்ளார். இருக்கலாம்... அதே நேரத்தில் கீற்றுவின் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டும்.
“வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே!”.
கீற்று எங்களுக்கு முழுநேர வேலை இல்லை. பிழைப்புக்காக வேறு வேலை செய்வதால், கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும், பின்னூட்டங்களை அனுமதிப்பதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்தவொரு இயக்கத்தின் கருத்தையும் கீற்று பிரசுரிக்காமல் நிராகரித்ததில்லை, எங்கள் மீதான விமர்சனங்களையும் சேர்த்தே.
கட்டுரைகள், பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் எழுதுபவரது சொந்தக் கருத்துக்களே! அவை அனைத்துமே கீற்று ஆசிரியர் குழுவுக்கு உடன்பாடானது என்று யாரும் கருதவேண்டியதில்லை. பின்னூட்டங்களைப் பொறுத்தவரை, பொதுவெளியில் வைக்கத் தகுதியில்லாத வார்த்தைகள் ஏதும் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து அனுமதிக்கிறோம். விவாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், தரம் தாழ்வதும் அதில் பங்குகொள்பவர்களின் குணம், பண்பாடு சார்ந்த பிரச்சினை.
எங்களுக்கு இசைவான கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவதற்கான தனிச்சொத்தாக கீற்றை நாங்கள் பாவிக்கவில்லை. கீற்றில் வரும் கட்டுரைகளில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்ற தப்பெண்ணமோ, மாற்றுக்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் குறுகிய எண்ணமோ எங்களிடம் இல்லை. ஏனென்றால் கருணாநிதி மீதான அல்லது திமுகவின் மீதான விமர்சனத்தை, திராவிடக் கருத்தியல் மீதான விமர்சனமாக நாங்கள் சுருக்கிப் பார்ப்பதில்லை. எந்தவொரு தனிநபரையும், அமைப்பையும் தாண்டி, கருத்தியல் இருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.”
இதை கீற்றிலிருந்துதான் எடுத்துப்போட்டிருக்கிறேன். ஷோபாசக்தி போல் ஜால்ரா பின்னூட்டங்களை மட்டும் அவர்கள் வெளியிடுவதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்கிறார்கள். ஷோபா சக்தி கூறுவதுபோல் புலி எதிர்ப்பாளர்கள் மீதான தவறான குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல… ஈழ ஆதரவாளர்களின் மீதான தவறான குற்றச்சாட்டுக்களும் வெளியாகியுள்ளன. அதைச் செய்த்து யாரென்று கேட்கிறீர்களா? சாட்சாத் இந்த ஷோபாசக்தி, பேராசிரியர் அ.மார்க்ஸ், சுசீந்திரன் மாதிரியான பித்தலாட்டக்கார்ர்கள்தான்.
கோவை ராணுவ லாரி மறிப்பில் ஈடுபட்ட தோழர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள் என்று அ.மார்க்ஸ் எழுதினார். அது கீற்றிலும் வெளியானது. பின்பு ச.பாலமுருகனும், முருகவேளும் அ.மார்க்ஸ் சொன்னது பொய்யென்று நிரூபித்ததும் கீற்று தளத்தில் வெளியானது. இலங்கையில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்று சுசீந்திரன் சொன்னதும் கீற்றில் வெளியானது; அதேபோல் அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களும் டப்ளின் அறிக்கையாக கீற்றில் வெளியானது. தலித் வேடதாரி ஷோபாசக்தி தான் யாரிடமும் காசு வாங்கி வெளிநாடு செல்லவில்லை என்று கீற்றில் எழுதிய கையோடு, அது பொய்யென்று நம்பும்படியான தகவல்களை புலம்பெயர் தமிழர்கள் கீற்றில் அளித்தார்கள். ஷோபா இந்த்த் தகவல்கலையும் சேர்த்தே சொல்ல்லாம்.
ashokkumar
பொம்பளைப் பொறுக்கி ஷோபாசக்தி இப்படி அடிமேல் அடிவாங்குவதை அவரது சகாக்கள் எப்படித்தான் தாங்கிக் கொள்கிறார்களோ? அவரது பொய் ஒவ்வொன்னும் வரிசையா அம்பலமாகிவருகிறது. கடைசியா சொன்னா பொய்யும் சுடச்சுட வீதிக்குவந்துவிட்டது. தலித் முரசுக்கு நிதி கொடுத்ததை புனிதபாண்டியனே மறுத்துவிட்டபின்பு, ஷோபா ஆதாரத்தை எப்படி கொடுக்கப் போகிறார் என்பதை நினைத்தாலே பாவமா இருக்கு.. ஆனால் ஒண்ணு... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். இவன் ரொம்ப நல்லவன்..
Sathananthan.S
"ஒரு தொழிலாளியை ஊதியம் கேட்டதற்காக அடித்தேன் என்பது என் அடிப்படை அரசியல் அறத்தையே புரட்டிப்போடும் குற்றச்சாட்டு. ஒரு கம்யூனிஸ்டாக எனக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடிய குற்றச்சாட்டு அது.”

”இந்தியாவுக்குச் செல்வதற்கு நான் ஊரில் பட்ட கடனையே ஆறுமாதமாகியும் இன்னும் நான் கட்டி முடிக்கவில்லை………… உண்மையில் அவ்வாறு தொழிலாளர்களின் ஊதியம் குறித்தவொரு பிரச்சினை அங்கே நடந்திருந்தால், அது அடிதடியளவிற்குச் சென்றிருந்தால் என்னிடம் தயாரிப்பாளர்தான் அறைவாங்கியிருப்பார். அதுதான் எனது வர்க்கப்பண்பு, அதுதான் எனது அரசியல் பாரம்பரியம்.”



”தொழிலாளியைத் தாக்கினேன் என்று எழுதுகிறீர்களே, நான் மட்டுமென்ன பிர்லா - டாடாவின் பேரப்புள்ளையா? நானும் கடந்த இருபது வருடங்களாக உணவுச்சாலைகளில் தட்டுக் கழுவியும் சுப்பர் மார்கெட்டுகளில் சுமைகளை ஏற்றியும் இறக்கியும் வேலை செய்துவரும் அடிமட்டத் தொழிலாளிதான்.”



மேற்; கண்ட வசனங்கள், அல்லைபிட்டி வேளாளன் அந்தோணிதாஸ் என்கிற , சிலகாலமாக சிறிலங்காஅரசின், பிரச்சாராக இந்திய இலக்கிய தளத்தில் செயற்படும் ஷோபாசக்தி என்பவர், கவுசாயினி லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்க எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.


இவ்வளவு காலமும் இப்படியான பல சுத்துமாத்துக்கள், அல்லைபிட்டி அந்தோணி தாஸ், தன்னை இலக்கியவாதி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள், கலகக்காரர்கள், மார்க்சிட்டுகள், கொம்யூனிஸ்ட்டுகள் என வேசமிடுவதன் மூலம், தமது சமூக அந்தஸ்தையும் காத்து வருகி றார் இந்த தலித் வேடமிட்ட வேளாளன் .



இதற்கு மேலாக, சோபாசக்தி போன்றவர்கள் புலம்பெயர முன், தேசத்தில் செய்த கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சுய தேவைக்கான களவுகள், சாதிவெறியாட்டங்கள் போன்றவற்றை மறைப்பதற்காகவே மேற்கூறிய வேசங்களை போடுகிறார்கள்.


இப்போது தேசத்தில் சண்டை முடிந்து விட்டது. இவர்கள் எத்தனை காலத்திற்கு தான் தொடர்ந்து, தங்கள் வேடங்கள் மூலம் தம் ஈனமான கொடூர முகங்களை மறைக்கப்போகின்றார்கள்?



இந்த அந்தோணி (ஷோபா சக்தியின்)மற்றவர்களுடன் சேர்ந்து சமூகவிரோதிக்கு மரனதண்டனை, என்ற போர்வையில் செய்த கொலைகள், சாதிவெறியாட்டங்கள், சரவனையிலும், நாரந்தனையிலும் செய்த பாலியல் கொடுமைகள், மிக விரைவில் சந்திக்கு வரும்.
அந்தோணி தாஸ், ஒரு வேண்டுகோள், நீ எல்லா வேடமும் போடுபறவாயில்ல. ஆனால் கொம்யூனிஸ்ட்டுகள் வேடம் மட்டும் போடாதே.....அது உனக்கு பொருந்தாது.......
பரணி
// தலித் முரசு இதழுக்கு நிதியுதவியை வாரி வழங்கியதாக ஷோபா சக்தி கூறியது தொடர்பாக இதழின் ஆசிரியர் தோழர் புனிதபாண்டியனிடம் விசாரித்தேன். தலித் முரசு இதழுக்கு நிதி நெருக்கடியற்ற ஆரம்ப காலகட்டங்களிலோ, நிதி நெருக்கடி மிகுந்த கடந்த சில ஆண்டுகளிலோ ஷோபா சக்தி எந்தவொரு உதவியும் செய்ததில்லை என்று அவர் கூறினார். சந்தேகமிருப்பவர்கள் தோழரிடமே விசாரித்துக் கொள்ளலாம். நிதி கொடுத்தேன் என்று கூறுவது ஷோபாசக்தியின் வழமையான பொய்களின் தொடர்ச்சியே! //

இதற்கும் அவரிடம் ஏதாவது சப்பைக்கட்டு பதில் நிச்சயம் இருக்கும். '' நான் நேரடியாக தலித் முரசுக்கு நிதி கொடுக்கவில்லை. நண்பர்கள் மூலம் அனுப்பி வைத்தேன்...உதவி செய்வதை வெளியிலே சொல்லி விளம்பரம் தேட எனக்கு விருப்பமில்லை...அதனால் எனது பெயரை சொல்லாமலே தலித் முரசுக்கு காசு கொடுத்தேன் '' என்கிற ரீதியில் அவரது பதில் இருக்கும். அப்படி இல்லையெனின் திருட்டு மௌனம் காக்கப்படும்.
எவ்வளவுதான் கேள்வி கேட்டாலும் எதிர்க் கேள்வி கேட்டு அல்லது திருட்டு மௌனம் சாதித்து அல்லது சப்பைக்கட்டு பதில் சொல்லியே காலம் கடத்துபவர்களிடம் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது வேண்டாத வேலையோ என்று நான் நினைக்கிறேன்.
shoba sakthi
தூற்று.கொம் - பகுதி 2
http://www.shobasakthi.com/shobasakthi/?p=805
சண்முகராஜ்
அன்புள்ள ரமேஷ்,

நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சில வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால், நீங்கள் மே 15,16,17,18 - 2009 தேதிகளில் நீங்கள் முல்லிவாய்க்காலில் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமில்ல ஒரு பழங்குடி இனத்தை உங்களைப்போல் யாரும் கேவலப்படுத்த முடியாது. திடீரென முளைத்தக் காளன்களே வாங்கள் பேசுவோம் ஒரு 50 வருட கதையை (இதில் நான் ஈழத் தமிழர்களை சேர்க்கவில்லை). உனக்கு உண்மையில் இம்மக்கள் மீது அன்பு இருந்தால் நானும் நீயும் விவாதத்தில் பங்கு பெருவோம். அதை அப்படியே பதிவு செய்து கீற்றில் போடத் தயாரா? எம்மக்களை வைத்து நீங்கள் அரசியல் செய்வதை என்னால் அதிக நாள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதில் எம்மக்கள் என்பது ஈழத்தமிழனையும் தமிழ் நாட்டு மீனவனையும். மீண்டும் சொல்கிறேன் அடுத்தவர்கள் அறையை எட்டிப் பார்க்கும் உன்னைப் போன்றவர்களை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொந்த பிரச்சினை இருந்தால் அதை நீயே பார்த்துக்கொள், பாதிக்கப்பட்ட மக்களை உங்கள் அரசியல் லாபத்துக்காக வம்பிலுக்காதே. உங்களைப் போன்றவர்களால் எங்களுடைய தியாகம் குப்பையில் எறியப்படுகிறது. கவலைப்படாதே நான் மட்டுமே உன்னை எதிர் கொள்வேன்.

நன்றி
சண்முகராஜ்
sundaresan
சோபா சக்தி இவ்வளவு பலவீனமான அரசியல் உள்ளவரா? கேட்கிற கேள்வி ஒண்ணுக்கும் நேர்மையா பதில் சொல்லத் தெரியலையே!! இவரெல்லாம் என்ன படிச்சி, என்ன எழுதினாரோ? மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை படிப்பவர் போல், கேள்வி கேட்டதும் இப்படி பயந்து ஓடுறாரு.. தலித் வேஷம் போட்டது, அ.மார்க்ஸ் ரெண்டு பொண்டாட்டி விவகாரம், சுகுணா திவாகரின் பிலால் முகமது டெக்னிக், வேலையில்லாமல் அடிக்கடி வெளிநாடு போய்வருவது, தலித் முரசுக்கு நன்கொடை தந்தேன் என்று பொய் சொன்னது என எல்லாக் கேள்விகளும் பதில் சொல்லப்படாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றது. பிள்ளைவாள் பதில் சொல்ல வருவாரா? என்னை மாதிரி பொதுஜனங்க மத்தியிலே ஷோபாசக்தியின் மானம் காத்துலே பறந்துட்டிருக்கு என்கிறதாவது இந்த ஏமாற்றுப்பேர்வழிக்குப் புரியுதா?
nilavu
ஷோபாவை தாலாட்டும் லீணா - மகளிர் தின சிறப்புக்கட்டுரை http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_2016.html
Subramanian
புலம்பெயர் நாடுகளில் ஷோபாசக்திக்கு எவ்வித மதிப்போ, மரியாதையோ கிடையாது. ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்த ஐந்தாம்படை ஆள் எழுதும் எந்தக் கருத்தும் எப்போதும் செல்வாக்கு செலுத்தியதில்லை. அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இலண்டன் நாடாளுமன்றத்தின் முன்பு கூடிய ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களில் 90 சதவீதம் பேருக்கு இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது. தமிழகத்தில் இருக்கும் சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு, புத்தகங்களை வெளியிட்டு ஷோபா சக்தி தனது ஏஜெண்ட் வேலையைத் திறம்பட செய்துவந்தார். இப்போது அதற்கும் ஆப்பு விழுந்துவிட்டது.. எல்லா காலத்திலேயும் எல்லாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை இவர் போன்ற ஆட்கள் உணர்ந்தால் சரி..
Vinayagam
சோபாசக்தி இவ்வளவு அடிவாங்குவதை என்னாலேயெ பார்க்கமுடியவில்லை.. அமார்க்ஸ், லீனா, சுகுணா எல்லாம் எப்படி கண்கொண்டு பார்க்கிறார்களோ!! தனிமனித ஒழுக்கம், வெட்கம், சூடு, சொரணை எல்லாத்தையும் கட்டுடைத்து கடாசிவிட்ட ஆளாக இருப்பதாலேதான் சோபாவால் உயிருடன் நடமாட முடிகிறது. இல்லைன்னா, உலகம் உய்விக்க வந்த ஒரு புரட்சி எழுத்தாளரை நாம் என்னைக்கோ இழந்திருப்போம்.. வாழ்க பின்நவீனத்துவம்!!
புரவி
//இருந்திருந்தா கேள்வி கேட்கிறவங்க எல்லோரையும் டப்டப்னு சுட்டிருப்பாரு..//
இப்ப மட்டும் என்ன செஞ்சுட்டு இருக்கார். ஈழ தமிழர்கள் வதை முகாமில் சித்ரவதியை அனுபவித்து கொண்டிருக்குபோது உலகம் முழுவதும் உல்லாசமாக சுற்றி கொண்டிருகிறார்.
kumar
நான் ஆறாம் தேதி எழுதிய பின்னூட்டத்தை ஷோபாசக்தியின் வலைப்பக்கத்திலும், கீற்றின் இந்தக் கட்டுரையிலும் போட்டிருந்தேன். கீற்றில் அன்றே வெளியானது. ஆனா ஷோபாவின் பக்கத்தில் இன்னிக்குவரைக்கும் வெளிவரவில்லை. அதன்பின்பு வேறு சில பின்னூட்டங்களை வெளியிட்டிருக்கிறார் இந்த திருட்டு வெள்ளாளர். கீற்றில் நிறைய தவறான தகவல்கள் வெலியாகுதுனு இப்போது யோக்கியவான மாதிரி குதிக்கிற ஷோபாசக்தி, 'தலித் முரசுக்கு காசு தந்தேன்' என்று கீற்றில் எழுதினார். அது பச்சைப்பொய் என்று அம்பலமானதும், கீற்று தளத்தில் விவாதிபப்திலிருந்தே ஓடிவிட்டார். இவர் மாதிரியான ஆட்கள் பொய்யான தகவல் த்ந்தால், அதற்கு எப்படி கீற்று இணையத்தை பொறுப்பாக்க முடியும்? கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லத் துப்பில்லை.. கேட்கிறவர் மீது பாய்கிறார்.. கீற்றுக்காரங்க உத்தமங்க இல்லைன்னு வச்சிக்குவோம். என்னை மாதிரியானவங்க கேட்குறதுக்கு பதில் சொல்லலாமில்லை.. அதை விட்டுட்டு கேள்விகளையே வெளியிடாமல் மறைக்கிறது இவரிடம் தப்பு இருக்குங்கிறதைத்தானே காட்டுது. இதற்குப் பேருதான் பாசிசம். கேட்கிறவன் குரல்வளை நெரிக்கிறது. நல்லவேளை இந்த கொரில்லாவிடம் துப்பாக்கி இல்லை.. இருந்திருந்தா கேள்வி கேட்கிறவங்க எல்லோரையும் டப்டப்னு சுட்டிருப்பாரு..
nilavu
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_08.html தூற்றுதலையே தொழிலாக கொண்ட ஷோபா சக்தி !
nilavu
இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html
கீற்று நந்தன்
தலித் முரசு ஆசிரியர் புனிதபாண்டியன், ஷோபா சக்தி பணவிவகாரம் தொடர்பாக முன்னர் தெரிவித்த தகவலைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நான் தொலைபேசியில் தோழரைத் தொடர்பு கொண்டு வெளியிட்ட தகவலைக் கண்ட சில நண்பர்கள், '2004/05இல் தோழர் செந்தில் பாபு ஒரு கருத்தர‌ங்கிற்காக பாரிசுக்கு சென்றிருந்தபோது, சில நண்பர்கள் அளித்த நன்கொடையை தலித் முர‌சிடம் வந்து கொடுத்தார். அது, ஷோபா சக்தி நண்பர்கள் கொடுத்தது தான்' என்றும், அதை சரி பார்க்கச் சொல்லியும் அறிவுறுத்தியதாகவும், தோழர் செந்தில் பாபுவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, மேற்சொன்ன உண்மையை உறுதிப்படுத்தினார் என்றும், கவனக் குறைவால் ஏற்பட்ட இந்தத் தவறுக்கு, த‌ன்னுடைய வருத்தத்தை தெரிவிப்பதாகவும் தோழர் புனிதபாண்டியன் தெரிவித்துள்ளார்.
shoba sakthi
ஓர் அவதூறின் முடிவு /தூற்று .கொம் - பகுதி 5: http://www.shobasakthi.com/shobasakthi/?p=819
palaniappan
ஷோபாசக்தி எவ்வளவுதான் மான்கராத்தே டெக்னிக் யூஸ் பண்ணி தப்பிக்கப் பார்த்தாலும், அவர் அம்மணமா நின்னது நின்னதுதான்... அவர் பக்கம்பக்கமா எழுதிக் குவிச்சதை வச்சிக்கூட அவரு அம்மணத்தை மறைக்கமுடியலை... தலித்தா நடிச்சி இத்தனை நாளு பொய்வேசம் போட்டது எதுக்கு?, வேலைவெட்டி இல்லாத பய வெளிநாடு சுத்துறதுக்கும், குடி, கூத்துனு கும்மாளம் அடிக்கறதுக்கும் காசு எங்கிருந்து வருது?, இவங்க பெண்ணியம் பேசுற யோக்கியதை இந்தக் கேள்விகளெல்லாம் எந்த சப்பைக்கட்டு கட்டினாலும் மறைக்க முடியாதவை. ஷோபாசக்தி இப்ப எழுதறதெல்லாம் மிஷ்கின் பத்தி சாருநிவேதிதா எழுதுன மாதிரிதான்.. உப்பு பெறாதவை...
nilavu
பிரபாகரனின் இலக்கிய பிரதி ஷோபா - ரோகண விஜயவீர வின் இலக்கிய பிரதி லீணா
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_821.html
P ILANGO
அ மார்க்ஸ் இவ்வளவு அயோக்கியனா, இரண்டாவது மனைவி வைத்துக்கொள்ளும் அளவுக்கு
Suresh Barathy
அன்புடன் நந்தன் அவர்கழுக்கு வனக்கம்.
ஷொபா ஷக்தி ஒரு ஒழுக்க கேடன் யென்பது உலகம் அரிந்த உன்மை. அவன் ஒரு பசுதொல் பொர்திய ரஜ பக்செயின் அடிவருடி. தமில் நட்டில் அவனை யெஙும் அனுமதிக்க குடது. அவன் ஒரு தமில் யெதிரி. சுரெஷ்
இலக்கிய வாசகன்
//நந்தனுக்கு பல விடயங்களில அறிவு கிடையாது எனச் சொன்னேன். அதன் உட்சபட்ச வடிவம்தான் இப்போது கீற்றில் நடந்துவரும் புலிகள் /சாதியம் /பிரபாகரன் /வெள்ளாளர் /கரையார் விவாதங்கள். அந்தக் கட்டுரையை எழுதிய மினர்வா ஈழத்தின் சாதியமைப்புக் குறித்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் தொகுத்த குப்பைகளிற்கு பதில்வேறு கேட்டு கொக்கரிக்கும் நந்தனது அறியாமை உள்ளபடியே நமக்குக் கடுப்பேற்றக்கூடியது. புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர் என பழ. நெடுமாறன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்ட சில நாட்களிற்குள்ளாகவே அதை மறுத்து 'புதிய கோடாங்கி' இதழில் நான் சொல்லியிருந்தவற்றை எல்லாம் மினர்வா படித்திருக்க வாய்ப்பில்லை. பிரபாகரன் பிறந்த 'கரையார்' சாதி ஈழத்தில் வெள்ளாளருக்கு அடுத்தபடியில் உள்ள ஆதிக்கசாதி. /////

அட லூசுக் கபோதி கரையார் சாதி வெள்ளாளருக்கு அடுத்தபடியா? எங்கடா கத விடுற? கரையார் சாதியில் பல உட்பிரிவுகள் இருக்கு! திமிலர், முக்குவர் என்றெல்லாம் இருக்கு! இவர்கள் ஒவ்வொரு பிரதேசத்தையும் அவர்களுக்குள்ளே இருக்கும் ''தொழில் முறை ஏற்றத்தாழ்வையும்'' அடிப்படையாக கொண்டது! அதில் கரையார் என்பது கொஞ்சம் பணம் உள்ள மீன்பிடி வசதி அதிகமாக கொண்ட [படகு வலை ஆள் அணி] சாதி! இன்னும் ஒன்று படித்து பதவி பெற்று சில தலைமுறையாக கடற்தொழில் செய்யாவிட்டால் அவர்களை மேலோங்கி என்று சொல்வார்கள்! இந்த மேலோங்கிகள் கடற்தொழில் செய்யும் குடும்பங்களில் திருமணம் செய்து கொள்வது அரிது! [இது அவர்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல] ஆனால் முக்கிய பிரச்சனை என்னென்றால் இவர்கள் எல்லோரும் தங்களை கரையார் சாதி என்றே அடையாளப்படுத்திக்கொள்வார்கள்! இப்போ ஈழத்தமிழர் ,தமிழகத் தமிழர் என்பது போல பொது பெயர் அது! ஆனால் குறித்த சாதியையும் குறிக்கும்!

இன்னுமொன்று இதுதான் இந்த கழிசடையின் உச்ச பொய் - வெள்ளாளர் சாதிக்கு அடுத்த படியில் இருப்பது கோவியர் என்கிற சாதி! இவர்களுக்கும் வெள்ளாளருக்கும் கலப்பாக வரும் குடிகள் வடுகர் என அழைக்கப்படுவர்! வடுகருக்கு அடுத்தபடியில் தான் கரையார்! இத்தனைக்கும் புலிகளின் தோற்றத்துக்கு முதல் கரையார் சாதி கடைநிலையில்தான் இருந்தது! அதன் பின்னர் தான் அதன் மீது மாறுபட்ட பார்வை உண்டானது! இதைத்தான் வெள்ளாளருக்கு அடுத்த நிலையில் உள்ள சாதி என்று இந்த மரமண்டை அவிழ்த்து விடுறார்!

/////////மேலும் தெளிவு வேண்டுமெனில் 'எதுவரை' இதழிற்காக தோழியர் புஸ்பராணி வழங்கியிருந்த நேர்காணலை மினர்வா படித்துப் பார்க்கலாம். ஈழத்துச் சாதியமைப்புக் குறித்தும் அந்த சாதியமைப்பபைப் புலிகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் தெளிவாக அறிய விரும்பினால் புதிய சனநாயக் கட்சியைச் சேர்ந்த மூத்த தோழர்கள் சி.கா. செந்திவேலும், இரவீந்திரனும் இணைந்து எழுதிய ' இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" என்ற நூலை (சவுத் விஷன் வெளியீடு) அவர் படிக்கலாம்.
///////
இதில் இரண்டு விடயங்கள் ஒன்று கொழும்பில் ஏசி அறையில் இருந்து வருமானத்துக்காக புத்தகம் எழுதும் அநியாயத்தினால் உண்மை வரலாறு திரிக்கப்படுவது! மற்றது தன்னுடைய குடும்பத்துக்கு நிகழ்ந்த ஒரு திட்டமிட்ட அல்லது தற்ச்செயலான ஒரு சம்பவத்தை அல்லது தீர்க்கப்ப்படுமுன் நிகழ்ந்த சில சம்பவங்களை வைத்து ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தொகுத்து ஒரு புனைவாக ஒரு உண்மையை ஊடறுத்து நகர்த்துவது! ஈழத்து சாதிய பிரச்சனைகளை புலிகளுக்கு முன் - புலிகளுக்கு பின் எனப்பார்க்க வேண்டும்!

கிளிநொச்சி மாவட்டம் [பொதுவாக வன்னி] பெரிய காணிகள் கிராமங்கள் கொண்ட பிரதேசம்! ஒரு வீட்டில் பெரிதாக அழுதால் தான் அடுத்த வீட்டில் மெதுவாக கேட்கும் அவ்வளவு தூரத்தில் இருக்கும் வீடுகள்! தொழில் நுட்ப வசதிகள் இல்லை! நிர்வாக பரிபாலனம் என்பது மிகவும் சிரமம்! இதனால் தண்டனைகள் மக்கள் கூடும் இடங்களிலே கொடுக்கப்படும்! அப்போதான் தகவல் காட்டுத்தீயாய் பரவும்! அப்போ ஒருநாள் இரண்டு பேருக்கு வேலிச்சண்டை..... அதில் ஒரு பெண் அடுத்தவரைப்பார்த்து ''பறையன்'' என்று எசிவிட்டார்! [இது நடந்தது வட்டக்கச்சியில்] அப்போது அங்கே வட்டப்பொறுப்பாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது! அவர் அந்தப்பெண்ணை அழைத்துவந்து வீதியை பெருக்கிக்கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் வேர்த்துப்போய் இருந்த முதுகில் சீனியை [சுகர்]கொட்டிவிட்டு அதை நாவினால் நக்கும்படி பணித்தார்! மக்கள் முன்னிலையில் கொடுக்கப்பட்ட அந்தத்தண்டனை அந்த கிராமத்து மக்களை மட்டுமல்ல முழு வன்னியின் ஆதிக்க சாதி வெறியில் ஆப்பை செருவியது! மித வேகத்தில் போகும் வண்டிக்கு திடீரென பிரேக் போட்டால் என்ன ஆகுமோ அதுபோல தட்டித்தடம் மாறி நின்று நிதானித்து தம்வழியே போனது சாதிய வெறி! இந்த புலிகளைத்தான் இவர் தன்னுடைய சிங்கள அடிவருடலுக்கு வசைபாடுகிறார்!

இந்த சிங்கள சக்தி அடித்து விடுவது எல்லோரையும் முட்டாள் என்று நினைத்து! தேசியத்தலைவர் சாதிய/வர்க்க எதிர்ப்பினால் உருவான போராளியோ அல்லது அதுபோன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஒரு வடிவமோ இல்லை! இன வன்முறையின் பிரசவம் தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் தேசியத்தலைவர் பிரபாகரனும்! சிங்களவனை விரட்ட வேண்டும் என்கிற ஒற்றை கோரிக்கையின் முன்னால் வேறு பல விடயங்களை அவர்களால் சடுதியாக கவனிக்க முடியவில்லை! அதற்க்கான கால அவகாசம் எடுக்கின்ற காலத்துள் சில தவறுகள் நடந்துவிட்டன! இதுதான் உண்மை! ஆனால் புலிகள் யதார்த்தத்துக்கும் உலக ஒழுங்குக்கும் என்றும் எதிரானவர்கள் அல்ல! அவர்கள் மிகவும் சரியான தூர நோக்கும் தீர்க்க சிந்தனையும் கொண்டிருந்தனர்!

[ஒரு உதாரணம் 2006௨007 காலப்பகுதியில் வன்னி மக்கள் அனைவருக்கும் (90%) ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது! காரணம் ஒருவேளை போராட்டத்தில் பின்னடைவு ஏற்ப்பட்டால் இராணுவத்தினரின் பாதிப்பு வன்னியில் மக்கள் மீது அதிகம் இருக்கும் என்றும் அதை தவிர்க்க இதுதான் நல்ல தெரிவு என்று கணித்து கட்டாயமாக பயிற்சி கொடுக்கப்பட்டது! அப்போது வன்னி மக்களாலேயே விமர்சிக்கப்பட்ட இந்த செயற்ப்பாடு இப்போது வன்னியின் நிலா அமைவைபபொருத்த வரை குறைந்தது ஒரு நாளைக்கு பத்து கர்ப்பளிப்பாவது நடக்கலாம்...... ஆனால் இன்று நிலைமை எப்படி? இதை சொன்னால் இந்த சக்திகள் படையினரின் ஒழுக்கம் என்பார்கள்! ஆனால் சிங்களவன் ஒன்னுக்கிருக்கப்ப்போகும்போதும் லைட் அடித்துத்தான் போறான் :-) ]

////////இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள்./////// இப்படி எல்லாம் பெரிதாக கூட்டம் போட்டு ஒரு இழவும் எடுக்கவில்லை! இயக்கத்தில் மூத்த உறுப்பினர்கள் - மத்திய குழு - உறுப்பினர்கள் என்றுதான் இருந்தது! இதில் எல்லோருக்குமே [தேசியத்தலைவர் உட்பட] திறமையின் அடிப்படையிலேயே பொறுப்புக்கள் வழங்கப்பட்டன! [சாதி பார்த்து வழங்கியது போல கட்டமைக்க முயல்வதை சாதாரண வாசகர்கள் அறிந்து கொள்ள மாட்டீர்கள்!] இதுதான் உண்மை! அங்கே சாதி பார்த்து கொடுப்பதற்கு இயக்கத்தில் சாதி சம்மந்தமாக எந்தக்கேள்வியும் இருக்காது! எப்படி சாதியம் தாக்கம் செலுத்தும்? இவர்களின் அயோக்கியத்தனங்கள் இப்படிப்பட்டவையே...............

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.