கோபுர கலசத்தின் உச்சியில்
கடவுளின் கடவுளாய்
அமர்ந்திருக்கிறதோர் பறவை
கடவுளை
ஆசீர்வதித்ததின்
அடையாளமாய் பிரசாதமென
எச்சமிட்டு பறக்கிறது
மின் கம்பங்களின் எண்ணிக்கைக்கு
இணையாகக்கூட
மரங்கள் நடப்படாத நகரத்தில்
பறவைகள் இறங்குவதில்லை
பறவைகளின் சிறகசைவில்
சுழலும் காற்றில் மாசு நீங்கக்கூடும்
தங்க நாற்கர சாலைகளால்
இணைக்கப்படும் இந்நகரத்தின்
பழைய வரைபடத்தில்
பறவைகள்
இரையருந்திப் பறக்கும்
மாபெரும் மண் கிண்ணத்தைப்போல்
குளமொன்று இருந்தது
பெரும் மழைக்காலங்களில்
குளம்தேடி நீர்சூழ
நகராத காங்கிரிட் கப்பல்களாய்
மிதக்கும் குடியிருப்புகள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சோழர் செங்கோல்!
- கருப்புப் பணம் இல்ல; கள்ளப் பணம்!
- இதுவும் ஒரு குறியீடு!
- வெற்றி முதலீடுகளுடன் தாயகம் திரும்பும் முதல்வர்!
- விண்வெளியில் தூசுப் புயல்
- வெக்கை சூழ் வாழ்விலும்...
- காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 27, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- தற்சார்பு மிக்க கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்குத் தேவை
- புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் - தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள்
- விவரங்கள்
- தென்பாண்டியன்
- பிரிவு: புதுவிசை - ஆகஸ்ட் 2005