1. கரூர் நகரத்தின் ஐம்பதாண்டு கால வரலாற்றை முன்மொழியும் ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்’ நூலை எழுதியவர் யார்?
2. சமீபத்தில் தமிழில் வெளிவந்துள்ள அய்யப்ப மாதவனின் கவிதை தொகுதி எது?
3. ‘காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?’ நூலின் ஆசிரியர் யார்?
4. ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ - நூலின் ஆசிரியர்?
5. சுதீர் செந்திலின் கவிதை தொகுதியின் தலைப்பு?
6. சமீபத்தில் வெளிவந்த ‘இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு’ நூலின் ஆசிரியர்கள் யார்?
7. சாகித்திய அகாதெமி பத்தாவது முறையாக பதிப்பித்து இருக்கும் தமிழ் இலக்கிய வரலாறு நூலின் ஆசிரியர்?
8. ‘எதிர்பாராத கண்டுபிடிப்புகள்’ யாருடைய அறிவியல் நூல்?
9. திருக்குறளையும் நானோ தொழில்நுட்பத்தையும் இணைத்து இரா. நடராசன் எழுதியுள்ள சிறுவர் அறிவியல் நாவல்?
10. சமீபத்தில் தமிழில் வெளிவந்துள்ள ‘இந்திய வரலாறு ஒரு மார்க்சீய கண்ணோட்டம்’ நூலின் ஆசிரியர் பெயர்?
விடைகள்
1. எஸ். நீலகண்டன்
2. நிசி அகவல்
3. அ. மார்க்ஸ்
4. முனைவர் மு. வளர்மதி
5. உயிரில் கசியும் மரணம்
6. மா. இராமசாமி மற்றும் என். மருத்துவமணி
7. டாக்டர் மு. வரதராசனார்
8. பேரா. சோ. மோகனா
9. சர்க்கஸ் டாட்காம்
10. இ.எம்.எஸ். நம்பூதிரிபாத்