நவம்பர் 27 மாவீரர் தினம். கடந்த முப்பாதாண்டுகால ஈழப் போரில் தங்களின் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளின் நினைவைப் போற்றும் அந்த நாளில் நீங்கள் ஒரு ஈழ ஆதரவாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்? மாவீரர் நாளை அனுசரிப்பீர்கள். தமிழ் தலைமகன் கருணாநிதியின் காவல்துறை பாயும் என்கிற பயம் உங்களுக்கு இருந்தால் அமைதியாக இருந்து அந்த நாளை நினைவு கூர்வீர்கள். ஈழத்து ஆதரவாளர், பிரபாகரனோடு நெருங்கிப் பழகிய ஜெகத் கஸ்பர் ராஜ் என்ன செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஈழப் போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ் மையம் சார்பில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்திருப்பார் என்று நீங்கள் நினைத்தால் இன்னமும் நீங்கள் ஜெகத்திடம் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அந்த மாவீரர் நாளில் அவர் மத்திய அமைச்சரும் ஈழப் போராட்டத்தில் புலிகளை ஒழித்தேக் கட்டுவது என்று கங்கணம் கட்டி செயல்பட்டவருமான சிதம்பரம் அவர்களின் மருமகளான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டிய நிகழ்ச்சியை தனது தமிழ் மையம் சார்பில் சென்னையில் நடத்தியிருக்கிறார். அதில் சிறப்பு விருந்தினராக சிதம்பரமே கலந்து கொண்டிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் அப்பாயின்ட்மெண்ட் வேண்டும் என்றால் அது பல மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர் நிகழ்வில் கலந்து கொள்வது சாத்தியம். ஆக மாவீரர் தினத்தில் உள்ளூர் மாவீரனான ஜெகத், சிதம்பரத்தின் மருமகளின் பரத நாட்டியத்தை அரங்கேற்றியது தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதற்கான பதிலை நீங்கள் கேட்டீர்கள் என்றால் உங்களை உலக உளவாளி என்று நக்கீரனில் எழுதுவார். அதை நக்கீரன் கோபாலும் அனுமதிப்பார். சரி கிடக்கட்டும்.....

இணையதளங்கள் மாற்று ஊடகங்களாக உருவாகி வளர்ந்து நிற்கின்றன. இணைய தளங்களின் பதிவுகளைத் தவிர்த்து விட்டு இன்றைய அச்சு ஊடகத்துறை செயல்பட முடியாது என்பதை இணையதளங்களின் வளர்ச்சி பறைசாற்றி நிற்கிற அதே வேளையில் அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்துமே ஆளும் கட்சிகளுக்கும் அதிகார வர்க்கங்களுக்கும் எடுபிடிகளாக மாறிப் போன ஒரு காலச் சூழலுக்குள் நாம் வாழ்கிறோம். இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளும் புகைப்படங்களுமே வணிக இதழ்களின் பக்கங்களை பெருமளவில் ஆக்கிரமித்து நிற்கிறது என்கிற யதார்த்தத்தை நாம் ஈழ விவகாரத்தில் காண்கிறோம். பிரபாகரன், ஈழம், புலிகள், மீண்டும் போர் என்கிற கருத்துக்கள் எல்லாவற்றுக்குமே இந்த பாப்புலர் இதழ்கள் சார்ந்திருப்பது இணையதளங்களைத்தான். ஈழம், பிரபாகரன், புலிகள் என்கிற பிராண்டைத் தவிர்த்து விட்டு எந்த இதழும் வீழ்ந்து விட்ட தங்களின் விற்பனையைத் தூக்கி நிறுத்த முடியாது என்பதை சம காலத்தில் நாம் கண்டு வருகிறோம்.

அந்த ஈழம் என்னும் பிராண்டிற்கான நக்கீரன் இதழின் அம்பாஸ்டராக உருவாக்கப்பட்டிருக்கும் அ(இ)ருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் கிறிஸ்தவப் பாதிரி ஈழம் பற்றி அடுத்த வாரம் என்ன வாந்தி எடுக்கப் போகிறார் என்று ஒரு காலத்தில் புலத்து ஈழ நண்பர்கள் காத்துக் கிடந்தனர். மொண்ணையான அரதப் பழைய மொழியில் வாந்தி எடுக்கும் ஜெகத்தின் எழுத்துக்களை தங்களின் இணைய தளங்களில் கொட்டை எழுத்துக்களிலும் வெளியிட்டு வந்தார்கள். இன்று அதே இணைய தளங்கள் இவரது கடைசி நேர கால் வாரல்களையும் கழுத்தறுப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. எப்போதோ ஒரு நண்பர் ‘‘ஜெகத் கஸ்பரை உன்னிப்பாக கவனிப்பது நல்லது; நடவடிக்கை சரியில்லை’’ என்றார். நாமும் கவனித்தோம். வினவு தோழர்கள் ஜெகத்தின் கடைசி நேர கழுத்தறுப்பை ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வர, ‘நேரம் வரட்டும் பதில் சொல்கிறேன்’ என்று எம்.ஜி.ஆர் பாணியில் பதில் அளித்தார் இந்தப் பாதிரி. நல்ல நேரம் பார்த்தா நடேசனையும் போராளிகளையும் காட்டிக் கொடுத்து கருவறுத்தார் இந்தப் பாதிரி?

சரி கிடக்கட்டும். தன் மீது ஆதாரப்பூர்வமாக ஒரு குற்றச்சாட்டை சொல்கிறவர்களைக் கூட சர்வதேச உளவாளிகள், அந்நிய கைக்கூலிகள், சிறு குழுவினர் என்றெல்லாம் தனது நக்கீரன் தொடரில் எழுதுகிறார். நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து ஆனந்த விகடனை ஜெகத் கஸ்பர் மூலமாகத் தாக்கி தன் வன்மத்தை தீர்த்துக் கொள்கிறது என்பதெல்லாம் தனிக் கதை... நமக்கும் விகடன் குழும இதழ்கள் மீது ஏராளமான விமர்சனங்கள் உண்டு, அவை கீற்று தளத்திலேயே பதிவாகியிருக்கிறது. ஆனால் ஜெகத் முன் வைக்கும் விமர்சனமும் நாம் வைக்கும் விமர்சனங்களும் ஒன்றல்ல. தவிரவும் கருணாநிதி வழமையாக தன் மீது விமர்சனம் கொட்டும் இதழ்களை "அவாள்", "ஆத்தூக்காரா ஆட்டம் போடுறா" என்றெல்லாம் நக்கல் செய்வார். ஈழத்துக்கு எதிராக கருணாநிதி செய்த துரோகத்தில் விழுகிற உள்குத்தில் இந்த அவா இவா... ஆட்டம் இப்போது எடுபடவில்லை என்பது தனிக்கதை. காரணம் பார்ப்பனீயம் என்னும் அதிகார பீடத்திலேயே இன்றைய கருணாநிதியின் அதிகாரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. திராவிடன் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து...........

கருணாநிதி சொல்லும் குற்றச்சாட்டுகளை இன்று ஜெகத் கஸ்பரும் இந்த இதழ்கள் மீது சொல்வார் என்று பார்த்தால் அப்படி எதையும் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? இந்த கேள்விக்கான விடை தெரிவதற்கு முன்னால் இந்த மோசடிப் பாதிரியின் ஈழம் தவிர்த்த சென்னை சங்கமம் முகத்தை தோலுரித்துப் பார்த்து விடுவோம். நாம் இதில் முன் வைக்கும் கேள்விகளுக்கும் ஜெகத் பதில் சொல்லாமல் விடலாம். இதெல்லாம் உங்களின் தனிப்பட்ட விஷய‌மோ நாலு கன்னியாஸ்திரிகளும், பத்து பாதர்களும், கூடி அல்லேலூயா என்று ஜெபம் செய்கிற விஷயமோ அல்ல... பொது விஷயம். பல லட்சம் மக்களின் ரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை நீங்கள் பணம் பண்ணுகிறீர்கள் என்பதை நினைவூட்டவே இதை எழுதுகிறோம்.

இனி.......... சென்னை சங்கமம்.........


அழகிரியைப் பற்றி, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை" என்றொரு நூலை மதுரையில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கருணாநிதியின் வாரிசுகளே முன்னின்று வெளியிட்டுள்ளார்கள். (என்ன அழகான தலைப்பு பாருங்கள்) இப்படி தன்னைப் பற்றி தானே புகழ்ந்து ஒரு கவிதை எழுதி அதை தனது இதழிலேயே வெளியிடுகிற கருணாநிதியின் கூச்சமற்ற அதிகார போதையின் இன்னொரு வெளிப்பாடாகவே அதன் அடுத்த தலைமுறையில் முளைத்து நிற்கும் ஜெகத்தையும், கனிமொழியையும் நாம் காண வேண்டும். சமீபத்தில் வெளியான நக்கீரன் இதழில் சென்னை சங்கமத்தின் அருமை பெருமைகளை எல்லாம் ஜெகத் பட்டியலிட்டிருந்தார்....... தானே தன்னுடைய சென்னை சங்கமத்தைப் பற்றி, தான் எழுதுகிற இதழிலேயே புகழ்ந்திருக்கிறார். இன்றைய ஆளும் வர்க்கங்களின் அரிப்புச் செயல்பாடுகளை அவர்களே புகழ்வது என்பது இந்தத் தலைமுறையில் இயல்புதான். ஆனால் அந்தப் புகழ்தல் என்னும் சுயமோகத்தைக் கடந்து சென்னை சங்கமம் என்னும் தமிழர்களின் ஆகப்பெரிய பண்பாட்டு நிகழ்வில் எத்தனை தீண்டாமையும், சுரண்டலும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு இக்கட்டுரையை எழுதுகிறோம்.

தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு என்று எவ்வளவு பெரிய மோசடிகளை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சென்னை சங்கமும் ஓர் எடுத்துக்காட்டு, (ஆனால் தமிழன் கொல்லப்பட்டால் அவனைக் காப்பாற்ற மாட்டார்கள். தமிழை மட்டும் அரியணை ஏற்றுவார்களாம்) சென்னை சங்கமத்தில் கடந்த பத்து நாட்களாக அதில் பங்கேற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள், புத்திஜீவிகள், உணவுப் பணியாளர்கள் என பல்வேறு சக்திகளுடனும் பேசியபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், சென்னை சங்கமத்தின் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்ட விதம் குறித்தும் அவதானித்த பின்பே இதை எழுதுகிறோம்.

நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வில் விளக்கேற்றுகிறோம், மடிந்து கொண்டிருக்கும் தமிழனின் கலைகளை காசாக்குகிறோம்... சீ..... கண்காட்சியாக்குறோம் என்றெல்லாம் பறைசாற்றி தமிழக அரசின் நிதி உதவியோடும், தமிழக சுற்றுலாத் துறையின் உதவியோடும் இன்னபிற ஸ்பான்சர்களின் உதவியோடும் வருடா வருடம் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு சென்னைவாசிகளுக்கு (?) விருந்து வைப்பதுதான் சென்னை சங்கமம். இது முழுக்க முழுக்க ஜெகத் என்னும் பாதிரியின் மூளையில் தோன்றி தமிழ் தலைமகனின் கடைசி வாரிசான கனிமொழியின் அதிகார உதவியோடு நடத்தப்படுகிறது. சென்னை சங்கமத்திற்கு செலவிடப்படுகிற பணம் ஜெகத் குமரி மாவட்டத்தின் காஞ்சாம்புரத்தில் இருந்து கொண்டு வந்த பணமல்ல அல்லது கனிமொழி தனது கவிதைப் புத்தகங்களை விற்று கொண்டுவந்த காசுமல்ல; திருக்குவளையில் இருந்து மஞ்சள் பையில் கட்டிக் கொண்டு வந்த பணமுமல்ல; மாறாக சென்னை சங்கமத்தில் செலவிடப்படுவது தமிழக மக்களின் பணம். சென்றவருடம் பல லட்சம் ரூபாயை சென்னை சங்கமத்திற்கு அள்ளிக் கொடுத்தார் கருணாநிதி. இந்த வருடம் கனிமொழி முதல்வரிடம் உதவி கேட்போம் என்றார். மகள் கேட்டாரா? அப்பா கொடுத்தாரா? என்பதெல்லாம் பரம ரகசியம். அது அந்த ஜீசஸ்சுக்கே வெளிச்சம். அல்லேலூயா..........

கிடையை காவல் காக்கும் உரிமையை நரி எடுத்துக் கொண்டது போல நாட்டுப்புறக் கலைகளை காவல் காக்கும் உரிமையை ஜெகத் கஸ்பர் எடுத்திருக்கிறார். நாட்டுப்புறக் கலைகளை உயர்த்த நடத்தப்படுவதாக சொல்லப்படும் சென்னை சங்கமத்தின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களில் (அகிலா சீனிவாசன், அருணா சுப்ரமணியம், இன்னொருவர் பெயர் தெரியவில்லை) மூன்று பேர் பார்ப்பனர்கள். கருணாநிதி ஊடகங்களை அவாள், இவாள் என்று திட்டுவது போல ஜெகத்தும் திட்ட முடியாது என்றோம் இல்லையா? அதற்கான பதில் இதுதான். மேலே சொன்ன அருணா சுப்ரமணியன்கள், சீனிவாசன்கள் இவர்கள் எல்லாம் யார்? சுத்த திராவிட ரத்தம் ஓடும், தலைவரைப் போல் தமிழன் செத்தாலும் பரவாயில்லை தமிழ் வாழட்டும் என்று தமிழுக்காக போராடுகிறவர்களா? அல்லது நாட்டுப்புறக் கலைகள், அந்தக் கலைஞர்களின் வாழ்வு பற்றி கரைத்துக் குடித்து அவர்களின் மேம்பாட்டுக்காக சதா உழைத்துக் கொண்டிருப்பவர்களா? இந்த வெள்ளைத் தோல் பார்ப்பனர்களை வைத்துத்தான் சென்னை சங்கமம் நடத்த முடியும் என்கிற உங்களது எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பது கலைகளுக்கு சேவை செய்யும் தியாகமா? அல்லது கலைகளை அழித்து காசு பார்க்கும் வழக்கமான வசூல் எண்ணமா?

பொதுவாக நமது மரபுரீதியான கலைவடிவமான பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலைவடிவங்களையும் எண்ணற்ற உழைக்கும் மக்களின் இசை வடிவங்களையும் புரட்சிகரத் தோழர்கள், முற்போக்கு அமைப்பினர் தங்களின் அரசியல் செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் யாரும் கிராமத்துக் கலைஞர்கள் ஏறும் மேடைகளில் சுதா ரகுநாதனையோ, பாம்பே ஜெயஸ்ரீகளையோ ஏற்றுவதில்லை. அங்கே முதல் மரியாதை மக்கள் இசைக்கும், மக்கள் கலைஞர்களுக்கும்தான். ஆனால் கிராமத்துக் கலைஞர்களை வாழ வைக்கிறோம்; கலைகளை வளர்க்கிறோம் என்று சொல்லி கலைத்துறைக்குள்ளும் குதித்த ஜெகத் கஸ்பர் முடமாகிப் போன பார்ப்பன இசை வடிவமான கர்நாடக இசைக்கு காவல் காக்கும் நாய்களாக நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்துகிறார். சுடலை மாடன் கோயிலுக்கு வெளியே காவல் காக்கும் சண்டாளனைப் போல எமது மக்கள் மரபை பார்ப்பனப் பன்னாடைகளுக்கு காவல் காக்க வைக்கிறது இந்த ஜெகத் கஸ்பர் ராஜ் & கனிமொழி கம்பெனி.

சென்னை சங்கமம் நாட்டுப்புற‌க் கலைஞர்களுக்கு வழங்கும் ஊதியம்...

சென்னை சங்கமத்தின் செலவுக் கணக்குள் குறித்து சென்னை சங்கமம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்கள். அது இந்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட வரவில்லை. அதுவும் அந்த ஜீசஸ்சுக்கே வெளிச்சம். அல்லேலூயா... இது பற்றி எல்லாம் எழுத, பதில் சொல்ல நேரம் வராத ஜெகத் கஸ்பர் சென்னை சங்கமத்தின் அருமை பெருமைகளை மட்டும் பட்டியலிடுகிறார். எங்கோ எவனோ சிந்துகிற வியர்வையை சென்னையின் சிங்கார எருமைகளுக்குப் பந்தி வைத்து அதை பணமாக்குகிற ஜெகத் கஸ்பரும், கனிமொழியும், சென்னை சங்கமத்தில் கலந்து கொள்ளும் - தமிழைத் தவிர வேறு மொழி தெரியாத - தமிழ் உணவுகளான கூழையோ, கஞ்சியையோ குடித்து வாழ்கிற கிராமப்புறக் கலைஞர்களுக்கு - வழங்கிய கூலி ஒரு நாளைக்கு ரூபாய் 800. அதாவது காலை பத்து மணி தொடங்கி இரவு 10 மணி வரை உடல் நோக பறையடிக்கிற, கரகாட்டம் ஆடுகிறவர்களுக்கு கொடுத்தது 800 ரூபாய். வயிற்றுப்பாட்டிற்காக இவர்கள் சொன்ன ஊதியத்திற்கு வந்து ஆடிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நமது தலித் சகோதரர்கள். ஆனால் உடல் நோகாமல் வியர்க்காமல் பட்டுச் சேலை சலசலக்க பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி ஏசி காரில் வந்திறங்கி ஆடாமல் அசையாமல் மேடையில் அமர்ந்து கர்நாடக சங்கீதம் பாடியவர்களுக்கும், மேற்கத்திய நடனம் என்று மானாட மயிலாட மார்பாட குத்தாட்டம் போட்டவர்களுக்கும் ஒரு நாள் கூலி எவ்வளவு தெரியுமா? 20,000 முதல் 50,000 ரூபாய் வரை, அவரவர்களது பேரத் திறமைக்கேற்ப. கடம், மிருதங்கம், வீணை உள்ளிட்ட பக்கவாத்தியக்காரர்களுக்கு எட்டாயிரம் ரூபாய். அதாவது ஒரு மணி நேரமோ... இரண்டு மணி நேரமோ வாசித்து விட்டுப் போக எட்டாயிரம் ரூபாய்.

நான் தொடர்பு கொண்டு பேசிய ஒரு நாட்டுப்புறக் கலைஞர், “காலையில் 10 மணியில் இருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை வாங்குறாங்க. ஆனா 800 ரூபாய்தான் கொடுக்கிறாங்க... நாங்க ஊர்ப்பக்கம் போற நிகழ்ச்சிகளுக்கு 2 அல்லது 3 மணி நேரத்திலே இந்தக் காசை வாங்கிவிடுவோம். ஊரிலே தொடர்ச்சியாக நிகழ்ச்சி வராததால், பொழப்புக்காக இங்க வந்து இவங்க சொல்ற நேரம் வரைக்கும் ஆடி, கஷ்டப்படுறோம். எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் நான் இருந்த அறையில் மொத்தம் 15 பேர் தங்கியிருந்தோம். பெரும்பாலான அறைகளில் இந்த நிலைமைதான். ஒரு நாளைக்கு நாலு, அஞ்சு இடத்துலே ஆடறது ரொம்ப உடம்பு வலியாப் போயிடறது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சியை முடிச்சுட்டு ஹாஸ்டல் வந்து சேரதுக்கு 11 மணி ஆயிடுது. பின்ன சாப்பிட்டு, கொஞ்சம் பேசிட்டு தூங்கறதுக்கு எப்படியும் 1 மணி ஆயிடுது. ஆனா சில ஆபிசருங்க மறுநாள் காலையிலே எட்டு மணிக்கு எல்லாம் தயாராகச் சொல்றாங்க. அவ்வளவு உடம்பு வலியிலே காலையிலே எப்படிங்க சீக்கிரம் எழுந்திருக்க முடியும்?

இங்க வந்து ஆடுறதால் எங்களுக்கு பெரிய பிரோஜனம் எல்லாம் இல்லீங்க. ஊருல பெரியாளுங்க தலையிட்டுதான் எங்களை இங்கே வரச் சொல்றாங்க. தவிர‌வும் எங்களை ஒரு மாதிரியாவும், பணக்கார பாடகிங்களை (பார்ப்பனப் பாடகர்களைச் சொல்கிறார்) வேறு மாதிரியும் நடத்துறாங்க. அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க... கடைசியா கனிமொழியம்மாவோட போட்டோ எடுத்ததுதாங்க மிச்சம். இத்தனைக்கும் அவுக பாடும்போது யாரும் அதைக் கேக்குறதில்ல. அதான் சபாவுல அவுக பாடும்போது கேக்குறாகல்ல வெளியிடத்துல எங்காளுக பாடும் போதும் ஆடும் போதும்தான் மொத்த செனமும் கைதட்டிக் கொண்டாடுது அது ஒண்ணுதாங்க இதுல பெருமை” என்று பெயர் சொல்ல விரும்பாத அந்தக் கலைஞர் சொல்கிறார். தப்பித்தவறி இவர் யார் என்று தெரிந்தால் அடுத்த வருடம் இவர் மட்டுமல்ல இவருடைய குழுவினரைக் கூட அழைக்க மாட்டார்களாம்.

சங்கமத்திற்கு வந்து செல்கிற செலவு எல்லாக் கலைஞர்களுக்கும் ஓரே மாதிரி கிடையாது. இதிலும் வேறுபாடு காட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நாட்டுப்புறக் கலைஞர்கள் அரசுப் பேருந்தில் வந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு பஸ் டிக்கட்டுக்கான பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் வேன் பிடித்துதான் வருவோம் என்று சொன்னவர்களுக்கு அதற்கான‌ பயணச் செலவு தந்திருக்கிறார்கள். அதாவது எந்தப் பிள்ளை அதிகமாக அழுகிறதோ அதற்கு அதிக கவனிப்பு; மற்ற குழந்தைகளைத் தெருவில் விட்டுவிடுவது. சம்பள விஷயத்திலும் அப்படித்தான். இவ்வளவு ரேட் கொடுத்தால்தான் வருவோம் என்றவர்களுக்கு மட்டும் அந்தப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் ஒரு நாளைக்கு ரூ.800 மட்டும்தான். அதேநேரத்தில் சில கர்நாடக, மேற்கத்திய கலைஞர்கள் சென்னை சங்கமத்துக்கு விமானத்தில் வந்துபோவதற்கான செலவையும் விழா ஏற்பாட்டாளர்கள் ஏற்றிருக்கிறார்கள்.

பட்டுச் சேலை கோஷ்டிகளுக்கோ மினரல் வாட்டர்... நமது நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மொந்தக் கேனில் தண்ணீர். கர்நாடக சங்கீதப் பாடகிகள் பிளைட்டில் வருவதாக இருந்தாலும் பல்லக்கில் வருவதாக இருந்தாலும் வழிந்தோடி அவர்களுக்கு பயணப்படி வழங்கிய இவர்கள் கிராமப்புறக் கலைஞர்களை இழிவு செய்திருக்கிறார்கள். இந்த சலுகைப் பாகுபாடு கர்நாடக சங்கீகத வித்வான்கள், வயலின்ஸ்டுகள், கத்ரி கோபால்நாத், டிரம்ஸ் சிவமணி போன்ற கோடீஸ்வரக் கலைஞர்களுக்கு ஒன்றாகவும், தஞ்சை சின்னப் பொண்ணு, இன்னமுள்ள கரகாட்டக்காரர்களுக்கு வேறொன்றாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. கலைஞர் டிவியில் மானாட மயிலாட................ மார்பாட நடக்கும் குத்தாட்டம் போல இன்னமும் சில குழுக்களும் சென்னை சங்கமத்தில் களமிறக்கப்படுகின்றனர். அந்த குழுக்களுக்கு 50,000க்கும் மேல் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல முதல் வருட சங்கமத்தில் தப்பாட்டம் மாதிரியான ‘சண்டாள’க் கலைகள் நடைபெற்ற பின்பு, அந்த மேடைகளில் தாங்கள் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று சில பட்டுச்சேலைகள் எதிர்ப்புத் தெரிவிக்க இரண்டாம் ஆண்டு நிகழ்வில் ‘மாமி’களின் முகம் கோணாமல், முதலில் அவர்களை களமிறக்கி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் நான்கு பேர் ராக ஆலாபனை செய்தாலே, அந்த சேனல் பக்கம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தலைகாட்டாமல் தங்களைக் காத்துக் கொள்வதுதான் தமிழர்களின் இயல்பு. இந்த இயல்பின் காரணமாகவோ என்னவோ, இரண்டாம் ஆண்டில் முதல் நிகழ்ச்சியாக கர்நாடக வித்துவான்கள் மேடையேறியபோது கச்சேரி களை கட்டவில்லை. அடுத்ததாக நம்ம கலைஞர்கள் தங்களது திறமையைக் காட்டும்போது கூட்டமும், கைதட்டலுமாக நிகழ்ச்சி ஆர்ப்பரித்திருக்கிறது.

இது மறுபடியும் பட்டுச்சேலைகளுக்கு உறுத்தியிருக்கிறது. அவர்களின் மனக்குறையைத் தீர்க்க, கனிமொழி, ஜெகத் அண்ட் கோ என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? பிரைம் டைம் என்று சொல்லக் கூடிய ஆறரையிலிருந்து எட்டு மணி வரை என்கிற கால நேரம் இந்த கர்நாடக சங்கீத மாமேதைகளுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மாமிகளின் ஆலாபனைகள் முடியும் வரை நமது ஏழை பள்ளு, பறைகள் காத்திருக்க வேண்டும். முதலில் நாட்டுப்புற கலைஞர்களை ஆடவிட்டு கூட்டம் சேர்ப்பது, பின்பு கர்நாடகங்களை மேடையேற்றுவது. அவர்கள் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ பாடிவிட்டுப் போனபின்பு, மீண்டும் நாட்டுப்புறக் கலைஞர்களை இரவு 10 மணிவரை வேலை வாங்குவது. பார்ப்பனக் கலைகளுக்கும், பட்டுச் சேலை மாமிகளுக்கும், கத்ரி கோபால்நாத்துக்களுக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலம் கூட்டம் சேர்க்கும் வேலையைத்தான் சென்னை சங்கமம் குழு செய்கிறது.

மேலும் இதிலிலுள்ள பாரபட்சத்தைப் பாருங்கள்.. மாமாக்களும், மாமிகளும் மதியம் சாப்பிட்டு ஒரு தூக்கத்தைப் போட்டு, ஆற அமர மேக்கப் போட்டு, பட்டுப் புடவை, நகைகளை மாட்டி ஆறரை மணிக்கு வருவார்கள். வந்து கொஞ்ச நேரம் தங்களது அக்கப்போரை அவிழ்த்துவிட்டு, இரவு போஜனத்துக்கு சரியான நேரத்தில் ஷேமமாக ஆத்துக்குப் போய்விடுவார்கள். நாள் முழுக்க ஆடிப் பாடுகிற நமது கலைஞர்கள் இரவு 11 மணிக்குத்தான் சாப்பிடப் போகிறார்கள்.

அதுவும் மாமிகள் வருகிறார்கள் என்றால், சங்கமத்துப் பொறுப்பாளர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறார்கள். ‘அவங்க வர்றாங்க, சீக்கிரம் நிகழ்ச்சியை முடிங்க..’ என்று மற்ற கலைஞர்களை விரட்டுகிறார்கள். மாமிகளைக் காக்க வைக்கிற அபச்சாரம் எதுவும் நடந்துவிடக்கூடாது அல்லவா? ஒரு முறை 7 மணிக்கு கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. அவர்களது வாத்தியக் கோஷ்டி வந்துவிட்டது. மேடையில் இருந்த நாட்டுப்புறக் கலைஞர்களை அவசர அவசரமாக முடிக்கச் சொல்லி, 6.55க்கு எல்லாம் மேடையை தயார் செய்துவிட்டார்கள். ஆனால் அந்த பட்டுச்சேலை 7 மணிக்கு வரவில்லை. போக்குவரத்து நெரிசலோ அல்லது மேக்கப் போட நேரமாகிவிட்டதோ 7.30க்குத்தான் வரும் என்று தகவல் வந்தது. மறுபடியும் நாட்டுப்புறக் கலைஞர்களை மேடையேற்றி, அது வரும்வரை ஆட வைத்திருக்கிறார்கள். இதுமாதிரியான நிகழ்வுகள் பல இடங்களில் நடந்துள்ளன. கனிமொழியும், ஜெகத்தும் நாட்டுப்புறக் கலைகளுக்கு உச்சபட்ச அங்கீகாரம் வழங்குவது இப்படித்தான். ஆதிக்க சாதியினரின் கால்களில் தலித் மக்களை விழவைப்பது போன்ற கட்டப்பஞ்சாயத்துகளின் தீர்ப்புகளுக்கும், கனிமொழி, ஜெகத் அண்ட் கோ-வின் இத்தகைய செயல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

அதேநேரத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான துவக்க நாள் நிகழ்ச்சி போன்ற - நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் - இடங்களில் அம்மாஞ்சிகளை ஓரங்கட்டிவிட்டு, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற நுண்ணரசியல் ஏமாற்று வேலைகளையும் இவர்கள் கைக்கொள்ளத் தயங்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்டு, இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்காமல் நிராகரித்தவரும், முற்போக்கான கருத்துக்களை தனது நையாண்டி நிகழ்ச்சி மூலம் பரப்பி வருபவருமான புதுகை பூபாளம் கலைக்குழுவின் பிரகதீஸ்வரன் சென்னை சங்கமம் குறித்து கூறும்போது...

"பெரும்பாலான நாட்டுப்புறக்கலைகள் தலித் மக்களின் கைகளில்தான் இருக்கின்றன. அந்த மக்கள் தங்கள் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திற்கு எதிரான கோபத்தை கலைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஆண்டைகளின் முன் பணிந்து நிற்கும் ஒரு தலித், பறை எடுத்து ஆடும்போது, எந்த அச்சமுமின்றி, கம்பீரமாக வீரவேசமாக நெஞ்சு நிமிர்த்தி ஆடுவதன்மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான். இப்படி இயல்பாகவே அதிகாரத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பு அரசியல் நாட்டுப்புறக்கலைகளில் இருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தலித் அமைப்புகள் போன்ற முற்போக்கான சக்திகள் தங்களது கருத்துக்களைக் கொண்டு செல்லும் ஊடகமாக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்தினர். ஆனால் சென்னை சங்கமம் அந்த எதிர்ப்பு அரசியலை அதிகாரத்தின் கால்களில் போய் விழவைக்கிறது.

அதிகார சக்திகளின் மனமகிழ்வுக்காக, பட்டன் தட்டினால் ஆடும் பொம்மை போல் நாட்டுப்புறக் கலைஞர்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாராட்டுவதுதான் உச்சபட்ச அங்கீகாரம் என்ற மனநிலை உருவாக்கப்படுகிறது. பார்ப்பனியக் கலைகளுடன் நாட்டுப்புறக் கலைகளை மேடையேற்றும்போது, நாட்டுப்புறக் கலைஞர்களை விட பார்ப்பனர்களுக்கே அதிக மரியாதையும், அதிக வசதிகளும் தரப்படுவதை கிராமங்களிலிருந்து வரும் தலித் கலைஞர்கள் பார்க்கிறார்கள். இதனால் ஏற்படும் தாழ்வுணர்ச்சியும், அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கலும் நாட்டுப்புறக் கலைகளுக்கு மிகவும் ஆபத்தானது.

‘நல்லாத்தான் பாடுறீங்க... இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பயிற்சி வேணும். நித்யஸ்ரீயைப் பாருங்க...’ என்று அம்பிகள் அடிக்கும் கமெண்ட்கள், இறுதியில் நாட்டுப்புறக் கலைஞர்களை பார்ப்பனமயமாக்கலில் கொண்டுபோய்தான் சேர்க்கும். இதற்கு நம்முன் இருக்கும் மிகப்பெரிய உதாரணம் இளையராஜா.

பொதுவாக பறையாட்டக் கலைஞர்கள் தங்களது ஆட்டத்தைத் தொடங்கி உச்சத்தை அடைவதற்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். அதுவரையிலான அவர்களது ஆட்டம், அடுத்து ஆடவிருக்கும் வேகமான அசைவுகளுக்கான ‘warm up’ தான். உச்சத்திலிருந்து இயல்புக்குத் திரும்புவதற்கும் நேரம் எடுத்துக்கொள்வார்கள். இது ஏறக்குறைய கிராமத்தில் சாமியாடுவது போல்தான். ஆனால் சென்னை சங்கமத்தில் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் 15 நிமிடம், 20 நிமிடம் என்று நேரம் ஒதுக்குவது, கர்நாடக ‘வித்து’வான்கள் வந்தவுடன் முடித்துக்கொள்ளச் சொல்லுவது எல்லாம் அந்த கிராமக் கலைகளின் உன்னதக் கலையம்சத்தைப் பாதிக்கும். கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் தங்களது திறமையைக் காட்டவேண்டும் என்ற ஆவல், இறுதியில் கைதட்டலுக்கு ஆடும் கலைஞர்களாக அவர்களை மாற்றிவிடுகிறது. சென்னை சங்கமம் ஏற்படுத்தும் மிகப்பெரிய அழிவாக இதைத்தான் நான் பார்க்கிறேன்.

சென்னை சங்கமத்தை நடத்துபவர்களுக்கு உண்மையிலேயே நாட்டுப்புறக்கலைகளின் மீது அக்கறை இருந்தால், இந்தக் கலைகளை பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைத்து, அசல் கலைஞர்களை - அவர்களின் கல்வித்தகுதிக்கு முக்கியத்துவம் தராமல் - அந்தக் கலைகளை கற்றுத் தரும் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இவர்களிடம்தான் அதிகாரம் இருக்கிறதே! அதைப் பயன்படுத்தி இந்தக் காரியத்தைச் செய்யலாமே!" என்று பிரகதீஸ்வரன் கூறினார்.

மங்கலம், அமங்கலம் பார்த்து துவங்குகிறார்களோ என்னவோ, சென்னை சங்கமத்தில் காலையில் முதல் நிகழ்வை கர்நாடக சங்கீதப்பாடகர்களே துவக்கி வைக்கிறார்கள். பட்டுச் சேலைகள் பாடவும், அவர்களை மேடை ஏற்றவும் மயிலாப்பூர், கே.கே.நகர், தியாகராயர் நகர், பெசண்ட்நகர் மாதிரியான இடங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சென்னை பற்றிய நமது பொதுப்புத்தியில் பதிந்து போன மேட்டுக்குடி சிந்தனைகளின் அடிப்படையில் வடசென்னை மீதான நவீன தீண்டாமையும் சென்னை சங்கமத்தில் துல்லியமாக வெளிப்பட்டு நிற்கிறது. கோபாலபுரம் என்றால் படித்த மேதாவிகள் இருக்கும் இடம், ராயபுரம் என்றால் ரௌடிகளின் வசிப்பிடம் என்கிற பொதுப்புத்தி ஒரு பாமரனுக்கு இருக்கலாம். ஒரு ஃபாதருக்கோ, கவியரசிக்கோ இருக்கலாமா என்பதே நமது கேள்வி. இந்த பொதுப்புத்தியும் வர்க்க குணமுமே கிராமப்புறக் கலைஞர்களை இரண்டாம் தரக் குடிகளாக நடத்தவும், வெளித்தெரியாத ஆனால் நுண்மையான தீண்டாமையை கர்நாடக சங்கீதத்துக்காரர்கள் காட்டவும் சென்னை சங்கமக் குழு அனுமதித்திருக்கிறது. ஆமாம் தோழர்களே, வடசென்னையில் நடந்த எந்தவொரு சென்னை சங்கம நிகழ்ச்சிகளிலும் மாமிகளோ, அம்மாஞ்சிகளோ நிகழ்ச்சி நடத்துவதைப் பார்க்க முடியவில்லை. அவர்களது நிகழ்ச்சிகள் எல்லாம் அண்ணா நகருக்கு அந்தப்புறம் தாண்டவே இல்லை.

மிகத்துல்லியமாக சென்னை சங்கமம் கர்நாடக சங்கீதக்காரர்களையும் பணக்கார பட்டுச் சேலைகளையும் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கும்போது எங்கள் அப்பனையும், ஆத்தாளையும் கொண்டு போய் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் அறைகளிலும், அறை கிடைக்காதவர்களை எம்.எல்.ஏ. ஹாஸ்டல் வளாகத்தில் டெண்ட் அடித்தும் தங்க வைத்திருக்கிறது. கோடிகளில் புரள்கிற பாதிரி ஜெகத்திற்கும், கனிமொழிக்கும் நாட்டுபுறக் கலைஞர்களையும் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து அவர்களுக்கும் சம உரிமை, சமூக அந்தஸ்து வழங்க முடியவில்லையா? ஒரு வேளை இதையும் நேரம் வரும்போது செய்வார்களோ என்னவோ? இப்படிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் சொன்னால் உலக உளவாளி என்று ஜெகத் சொல்லி விடுவார் என்ற பயம் நமக்கு இருப்பதால் நாம் அடுத்த விவாகரத்திற்குச் சென்று விடுவோம்.

ஸ்பான்சர்களும் & கிராம உணவுத் திருவிழா என்னும் மோசடி.............

ஒவ்வொரு வருடமும் மூன்று கோடியில் இருந்து பல கோடி ரூபாய் வரை சென்னை சங்கமத்திற்கு வருமானம் வருவதாக ஒரு நண்பர் சொல்கிறார். பெருமளவு திராவிட, ஆரிய கருப்புப் பணங்கள் குவிக்கப்படும் ஒரு திருவிழாவாகவே சென்னை சங்கமம் நடத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஜெகத் கஸ்பர், தமிழ் மையம், கிறிஸ்தவப் பின்புலம், பட்டத்து இளவரசி கனிமொழியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நிரல் என்பதையும் தாண்டி இப்போது திமுக, கருணாநிதி, ஆளும்வர்க்க ஊடகங்கள் என்று அவதாரம் எடுத்து நிற்கிறது சென்னை சங்கமம். இன்றைய காலச் சூழலில் பலர் கருப்புப் பண முதலைகளை குறிவைத்து அவர்களை ஊடகம், சினிமா, என்று பல்வேறு துறைகளுக்கும் மறைமுகமாக இழுத்து வருவதை நாம் காண்கிறோம். சென்னை சங்கமமும் அதற்கான ஒரு வாய்ப்பாக உருவாகி நிற்கிறது என்ற உண்மையை நேர்மையாகப் பார்த்தால் நாம் புரிந்து கொள்ள முடியும். மர்மமான அதன் கணக்கு வழக்குகள், பெரிய வணிக நிறுவனங்களுக்கும் சென்னை சங்கமத்திற்குமான தொடர்புகள் என நெருக்கிப் பார்த்தால் இந்த கருப்பை வெள்ளையாக மாற்றும் வேதாந்தி வேலையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே இதன் கணக்கு வழக்குகள் பற்றி எழுதிய பத்திரிகையாளர் ஞாநியை பார்ப்பான் என்று திட்டிய ஜெகத் இப்போது நம்மை என்ன சொல்லித் திட்டப் போகிறாரோ தெரியவில்லை.

மிகப்பெரிய ஆளும் வர்க்க ஊடகங்கள், பைவ் ஸ்டார் ஹோட்டல்கள், மிகப்பெரிய தேசம் கடந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என்று பலரும் சென்னை சங்கமத்திற்கு ஸ்பான்சர் செய்கிறார்கள். அப்படி ஸ்பான்சர் செய்கிற ஹோட்டல்களே கிராமத்து உணவு என்று தாங்களே தயாரித்து விற்கிறார்கள். இரண்டு பரோட்டாவும் கறியும் எழுபது ரூபாய் என்று சென்ற வருடம் விற்றார்கள். இப்போது எவ்வளவுக்கு விற்றார்கள் என்று தெரியவில்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, கும்பகோணம் குல்மா போன்ற விதவிதமாக தேடித் தேடியே ருசிக்கும் மனிதர்களுக்கு இம்மாதிரி பிராண்டட் உணவுகளை மட்டும் அங்கிருந்தே இறக்கி இங்கு வைத்து விற்று காசுபார்க்கிறார்கள். மற்றபடி கிராமத்து உணவு என்று இவர்கள் விற்கிற எந்த உணவும் கிராமத்தானின் கைபட்டு தயாராகவில்லை, மாறாக இங்கே உள்ள நட்சத்திர விடுதிகளில்தான் தயாராகிறது. வழக்கம் போல ஏமாந்த தமிழினமோ இதுதான் கிராமத்து உணவு என்று வாங்கித் தின்கிறது. வாங்கித் தின்பது என்றவுடன் நினைவுக்கு வருகிறது சென்ற வருட கவிதைத் திருவிழா.

இலக்கியவாதிகளுக்கு சென்னை சங்கமம் வழங்கிய கௌரவம்

ஒவ்வொரு வருடமும் தமிழ் இலக்கியவாதிகளைத் திரட்டி சென்னை சங்கமத்தின் இன்னொரு அங்கமாக தமிழ்ச் சங்கமும், அதில் ஒரு பகுதியாக கவிதைத் திருவிழாவையும் நடத்துகிறார்கள். அந்த கவிதைத் திருவிழாவில் 'கடைசி வரை எல்லோரும் ஆடாமல் அசையாமல் இருந்தால்தான் கிளம்பும்போது பயணப்படி' என்று பணத்தைக் காட்டி எழுத்தாளனைப் பயமுறுத்தியிருக்கிறார்கள்... எழுத்தாளனை இப்படி டீல் பண்ணுவதை பொறுத்துக் கொள்ள முடியாத தோழர் ஆதவன் தீட்சண்யா விழா மேடையிலேயே தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆளும் கும்பலின் அடிவருடிகளாக கவிஞர்கள் செயல்பட முடியாது என்பதை வெளிப்படுத்தினார் ஆதவன். ஒவ்வொரு ஆண்டும் கவிதைத் திருவிழாவில் வாசிக்கப்படும் கவிதைகள் அடுத்த ஆண்டு திருவிழாவின்போது தொகுப்பாக வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டு வெளியான நூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா, தோழர் கவின்மலர் ஆகியோரின் கவிதைகள் இடம் பெறவில்லை. காரணம் இதுதான்: நாங்கள் சொல்வதைக் கேட்காமல், எங்களுக்கு குடைச்சல் கொடுக்கும்படியான கேள்விகளைக் கேட்டால் உங்களது கவிதைகளை நாங்கள் நிராகரிப்போம். தமிழில் எழுத்தாளன் என்று சொல்லக் கூடிய எந்த மனிதனும் இந்தக் கேவலமான போக்கை தட்டிக் கேட்க முன்வரவில்லை என்ப‌தோடு இந்த வருடம் கவிதைத் திருவிழாவில் கலந்து கொள்ள நமது இலக்கியவாதிகள் போட்டி போட்டார்கள் என்பது நம் தமிழ் இலக்கியவாதிகளின் போலியான இருத்தலை வெளிப்படுத்தி நிற்கிறது.

தோழர் ஆதவனின் எதிர்ப்புக் குரல் ஜூ.வி.யிலும், கீற்று தளத்திலும் வெளிவந்தது. ஆனால் வெளியில் தெரியாத ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்........

யூமா வாசுகி என்றொரு தமிழ் எழுத்தாளர்; சமகால தமிழிலக்கியத்தில் யூமாவின் பங்கு வீச்சு மிகுந்தது. கடந்த ஆண்டு சென்னை சங்கமம் நடத்திய கவிதைத் திருவிழாவுக்கு காலையில் சென்ற யூமா வாசுகி, மதியம் மூன்று மணிவரை அழைக்கப்படவில்லை. காலையிலே சென்ற யூமா வாசுகி பசி தாங்காமல் அங்கே உணவருந்தி விடுகிறார். யூமா வாசுகி கவிதை வாசிக்க அழைக்கப்பட்டபோது, மைக்கைப் பிடித்த அவர் “இங்கு நடக்கிற எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. இங்கு என்னால் கவிதை வாசிக்க முடியாது. ஆனால் என்ன செய்ய? நீங்கள் கொடுத்த உணவை உண்டு விட்டேன். நான் உண்ட அந்த உணவுக்கு ஈடாக இந்த நூலை தந்து விட்டுப் போகிறேன்’’ என்று தான் வைத்திருந்த நூலை கொடுத்து விட்டுச் செல்கிறார் யூமா வாசுகி. ஒரு தமிழ் தலைமகனின் ஆட்சியில் தமிழ் எழுத்தாளனுக்கு தலைமகனின் கடைசி மகள் வழங்கிய அதிகபட்ச மரியாதை இதுதான். ஆனால் பெரும்பாலான இலக்கியவாதிகள் சூடு சுரணை இல்லாதவர்களாக இருப்பதால், அதிகார வர்க்கத்தினர் அழைத்ததும் ஓடோடிச் சென்று கவிதை படிக்கிறார்கள். அவமானம் என்ற ஒன்றையே ஆடையாகக் கொண்டிருக்கும் இவர்கள் தமிழ் தலைவலி மகன் கருணாநிதி நடத்தும் செம்மொழி சங்கமத்திற்கும் ஓடிச் செல்ல இப்போதே ஆவலாக காத்திருக்கிறார்கள். (விரைவில் தமிழறிஞர்கள், தமிழ் இலக்கியவாதிகள் பற்றி விரிவாக எழுத இருக்கிறோம்)

டிசம்பர் சீஸனுக்காக வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் அம்மாஞ்சிகளின் பயணத்திட்டத்தை நிறைவுபடுத்தும் விதமாகத்தான் ஜனவரியில் சங்கமம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. பொங்கல் விடுமுறை நாட்களையொட்டி புத்தகக் கண்காட்சி நடைபெறும்போது, புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதும்; விற்பனையும் அதிகரிக்கும். ஆனால் இந்த வருடம் சென்னை சங்கமத்திற்காக புத்தகத் திருவிழாவை விடுமுறை தினங்கள் குறைவாக இருக்கும் நாட்களில் முன்கூட்டியே நடத்த வைத்து, தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பகங்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள் சங்கமம் குழுவினர்.

மாமிகளுக்கு வழங்கப்படும் சமூக அந்தஸ்தும், போலீஸ் காவலும் எப்படிப்பட்டது என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் நமது கலைஞர்களுக்கு அதே அளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. கரகாட்டம் ஆடுகிற கிராமத்துப் பெண்ணை ஊரில் பண்ணைகள் எப்படி ஈனத்தனமாக நடத்துவார்களோ, அப்படித்தான் நகரத்துக் கலாசாரமும். ஆனால் எந்த பண்ணையும், ஆண்டையும் மாமியைச் சீண்டுவதில்லை. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் மாயாஜால் அருகே எமது பெண்கள் நிகழ்ச்சி நடத்தியபோது அங்குள்ள ரௌடிகள் அந்தப் பெண்களை சீண்டியிருக்கிறார்கள். காரணம் அவர்களுக்குப் போதிய‌ பாதுகாப்பில்லை.

சென்னை சங்கமம் பற்றி எழுத இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. இதை எல்லாம் நாம் எழுதுவதற்கான காரணம் சென்னை சங்கமத்திற்கு நமது வரிப்பணம் செலவிடப்பட்டதை ஒரு ஆண்டு மட்டுமே நாம் பார்த்தோம். அதன் பிறகு நமது வரிப்பணம் இந்த சுயமோகிகளின் வசூலாட்டத்திற்குப் பயன்படுகிறதா என்பதை நாம் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. ரகசியமான முறையில் நாமும் நமது மக்களும் சூறையாடப்படுகிறோம். ஈழத்தை கடைசி நேரத்தில் காட்டிக் கொடுத்து சூறையாடிய ஜெகத் கஸ்பர் நாட்டுப்புறக் கலைகள் தொடர்பாக இப்போது எடுத்திருக்கும் இந்த அவதாரத்தை அம்பலப்படுத்துவதுதான் நமது நோக்கம். ஏனென்றால் இந்த நரிகள் நாளை நமது எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையை தீர்மானிப்பவர்களாக வளரும் வாய்ப்பு பிரகாசமாக உருவாகியுள்ளது. அன்பார்ந்த தோழர்களே! இக்கட்டுரையைப் பிரதி எடுத்து நாட்டுப்புறக் கலைஞர்களிடம் கொண்டு செல்லுங்கள். அவர்கள் மீது சென்னை சங்கமம் கும்பல் கடைபிடிக்கும் நவீன தீண்டாமையையும் சுரண்டலையும் அம்பலப்படுத்துங்கள். இந்தப் போலிகளை மக்களின் முன்னால் நிறுத்துங்கள்.

- வசந்தகுமார்

Comments

33 comments

33
mannan
கதிர் எது சிறு சிறு குறை நாட்டுப்புறக் கலைஞர்களை பட்டுப் புட்வைகளை விட கீழாக நடத்துவதையா? இவர்கள் திரா்டன் திராவிடன் என்று பேசி தம்ழி மக்களையும் தமிழ் மக்களின் கலை வடிவங்களையும், காசாக்கிவிட்டார்கள். கருணாநிதி மாதிரியான துரோகிகள் விஷத்தைப் போல இச்சமூகத்தின் மீது வாரிடு அரசியலை இறக்குகிறார்கள். இது மாபெரும் ஆபட்த்து.
kumarasamy
அழியும் நிலையில் கலைகளை சென்னை சங்கமம் வாழவக்கிறது என்றுதான் தலைநகருக்கு வெளியில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தக் கட்டுரையைப் பார்த்த பின்புதான் தெரிகிறது, 'இது நாட்டுப்புற கலைகளை உதாசீனப்படுத்துகிறது; பார்ப்பனக் கலைகளைத் தூக்கிப் பிடிக்கிறது'. இதற்கா கனிமொழியும் ஜெகத்தும் இத்தனை பில்ட் அப் கொடுத்தார்கள்?
miruna
நாட்டுப்புறக்கலைஞர்களை சென்னை சங்கமம் குழுவினர் நடத்தும் விதம் மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. மக்களின் வரிப்பணத்தில் மக்கள் துளியும் விரும்பாத கர்நாடக சங்கீதத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது அநீதியான செயல். அதிகாரத்தின் கையில் நாட்டுப்புறக்கலைஞர்கள் சிக்கி நசுக்கப்படுவது அக்கலைகளின் வளர்ச்சிக்கு நல்லதல்ல..
sureshkumar
What Jagath gaspar and Kanimozh did is completly wrong. Instead of treating folk artists like this, better they can stop Chennai sangamam.
kathir
எல்லாத்தையும் குறை சொல்றது ஈஸி. எடுத்து செய்வதுதான் கஷ்டம். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தும்போது, சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதைப் பெஇர்துபடுத்துவது நிகழ்வின் நோக்கத்தைக் குலைத்து விடும். இணையதள விமர்சகர்கள் இதை உணர வேண்டும்.
vinodkumar
எவ்வளவு சீக்கிரமாக இந்த கஸ்பரின் முகமூடி கிழிந்துவிட்டது!! இதை கஸ்பரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!!!
sukumar
நமது நாட்டுப்புறக் கலைஞர்களின் ஏழ்மையான நிலை, இவர்களின் ஆட்டத்திற்கு வசதியாகப் போய்விட்டது. என்ன செய்ய? இன்னும் என்னென்ன ஆட்டமெல்லாம் ஆடப்போகிறார்களோ? எல்லாவற்றையும் மெளனமாக வேடிக்கை பார்க்கும் தலைஎழுத்து நமக்கு வாய்த்திருக்கிறது.
Rangasamy
தலைப்பும் சரி, கட்டுரையும் சரி, நெத்தியடி
deelipan
வசந்தக்குமார் மிகச்சரியாக பதிவிட்டு உள்ளார். கடந்த வருடமே சென்னை சங்கமம் பல்லிளித்து விட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்த வருடமுழெஇம் .ஒரு குடும்பம் தன் ஆக்டோபஸ் கரங்களால் தமிழ் நாட்டை முழுமையாக வளைத்திருக்கிறது.அதன் கரங்களில் வளையல்களாக தொற்றிக் கொண்டு இந்த பாதிரி போன்ற ஆட் கள் பிழைப்பை ஓட்டுகின்றன. தேசிய தலைவருக்கே அறிவுரை சொல்வது போல உளறுவது,.. ஈழ விடுதலை வரலாற்றில் துரோக பக்கமாக அம்பலப்பட்டு நிற்கும் திமுக வை ...ஈழப் போராட்டம் சர்வ உலக சதி என்றெல்லாம் எழுதியும்.., யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என்று எழுதியும் சாமர்த்தியாக நியாயப்படுத்துவது..என சிங்கள எதிரிகளை விட அபாயகரமான ஆளாக ஜெகத் கஸ்பார் திகழுகிறார்.

இப்போது சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ் கலைகளை வைத்து காசு பார்க்கிறார்.ம்

ஏசுவே ,,,இவர்களை மன்னிக்காதீர்கள்.. இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் .என்பதை நன்கு தெரிந்தும் அறிந்தும் கணக்கிட்டும் தான் செய்கிறார்கள்.

ஏசுவே ..உங்களுக்கும் ஒரு விசயம்.. உங்கள் சிலுவை பத்திரம்...ஏனெனில் மரப் பொருட்கள் விலை அதிகம்..விற்று விடப் போகிறார்கள்..
மன்னிப்பு
திலீபன் சூப்பர். இயேசுவே இவர்களை மனியாதேயும். மன்னித்தால் நீர் சிலுவையில் தொங்கும் போது உமது இடுப்பில் இருக்கும் கோவணத்தைக் கூட இந்தப் பாதிரி திருடி விடுவார். இவர் பெரிய டக்கால்டியாக இருககார்... கிறீஸ்தவத்துகுள்ளே இவர் வேலையை கொஞ்சம் விசாரித்து யாராது எழுதுங்க, கண்டிப்பா ****** மோசடி பண்ணியிருப்பார் இந்த்தாளு........
Thamizhan
தமிழின துரோகி பாதிரி கஸ்பர் ராஜை தோல் உரிக்கும் மற்றொரு நேர்மையான பதிவு. "இது கனிமொழியின் ஆடம்பர விழா" என்று சொன்ன ஞாநியை தரக்குறைவாக மஞ்சள் பத்திரிக்கை நக்கீரனில் எழுதினான் இந்த பாதிரி. பதவி போதையால் 40000 அப்பாவி உயிர்களை ஈழத்தில் பலிகொடுத்த கருநா(ய்)நிதின் அருவடி. சிதம்பரம் வகையறாகளின் சொம்புதூக்கி. ஈழ உணர்வை தமிழ் மக்களிடம் உளவியல் போர் நடத்தி மட்டுபடுத்தியவன். மத்திய காங்கிரஸ் அதிகாரவர்க்கத்தின் கை கூலி. கடைசி கட்ட ஈழ போரில் 3000 காயம் பட்ட புலிகளையும் அவர்களது குடும்பகளையும் நம்ப வைத்து கழுத்து அறுத்து கொன்றவன். சிம்போனியில் திருவாசகம் என்று இளையராஜாவை ஏமாற்றி பணம் மோசடி செய்தவன்.
வரலாற்று சிறப்பு மிக்க தமிழின துரோகி பட்டியலில் இவனுக்கு முக்கிய இடம் உண்டு. நமது என்ணம் எல்லாம் இனியும் தமிழர்கள் இவனிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் . இவனை பற்றி மேலும் அறிய கிழ்கண்ட முகவரியை சொடுக்கவும்.
http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/
இப்படிக்கு மானம், சுடு, சொரணை உள்ள தமிழன்.
Guest
தோழர்களே இந்த சங்கமம் நிகழ்ச்சி ஜெகத் கஸ்த்பரின் மற்றும் கனிமொழியின் மூளையை செலவுபண்ணி கண்டுபிடிச்ச ஒன்று அல்ல ஏற்கனவே நம் முற்போக்கு எழத்தாளர் சங்கம் மற்றும் கலை இலக்கிய பெருமன்றம் போன்ற அமைப்புகள் நடத்திய கலை இரவுகள் நிகழ்ச்சியின் நகல்தான் இந்த சங்கமம் , இந்த இயக்கங்கள் கலைஞர்களை உரிய மரியாதையோடு நடத்துவார்கள் , கலைஞர்களை மக்களின் மத்தியில் கவுரவிப்பர்கள் அது கலைஞனை பெருமைகொள்ள வைக்கும் , இந்த சுரண்டல் கூட்டத்தை போல கலைஞனை கேவலபடுத்தமாட்டர்கள். தமிழனை காப்பாற்றாமல் தமிழனின் கலையை காபற்றுவார்கலாம்
இதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமாம் , தோழர் வசந்தகுமார் அவர்களை, இந்த கூட்டத்தின் முகமூடியை
கிழித்து எறிந்ததற்காக பாராட்டுகிறேன், தொடர்ந்து இதுபோல் போலிகளை மக்களிடம் அடையாலபடுத்துங்கள்
Ekambaram
யார் இந்தப் பூனைக்கு மணி கட்டுவது என்று பலர் யோசித்திருந்தார்கள். கீற்று மணி கட்டியிருக்கிறது. பூனை பதிலுக்கு பிறண்டாமல் இருந்தால் சரி... எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். பெரிய இடத்தில் மோதி இருக்கிறீர்கள்..
tamilan
நல்லது நாய்கு தெரியுமா
Pradeep Raj
My only question is - do kapspar deserve an article like this..? Is that necessary to give this much of significance to those power,money driven Gang ...? please,please dont try to mould dust & dirts to great heights...Tamilnadu is a land of Imposters. kaspar proves right.
noyyalnathi
ஒரு காலத்தில் நக்கீரன் பத்திரிக்கையை உண்மை ஏடாக நான் படித்ததுன்டு.. 1.5.லட்சம் ஈழ தமிழர் சாவைக்கூட தனக்கு சாதகமான விசயமாக்கி ஜெகத்கஸ்பர் மூலம் பொய் முலாம் பூசி வணிகத்தை பெருக்கிக் கொண்ட நக்கீரனின் எந்தவொரு செய்தியையும் ந்ம்புவதில்லை.. கோபாலுக்கு கொடுக்கப்பட்ட எலும்புத்துண்டுதான் பெரியார் விருதோ என்று சந்தேகிக்கிறேன். தமிழீல ஆதரவாளர்களும் அப்படித்தான் என்னிடம் சொல்கிறார்கள்.. நெருக்கடியான சூழலில் தான் துரோகிகளை இனம் காணமுடியும்... கருணாநிதி, சுபவீ, கனிமொழி, ஜெகத் வரிசையில் நக்கீரன் கோபால் வரலாற்றில் இடம் பெறுவார் என்றே கணிக்கிறேண்.
Guest
பாதிரி கஸ்பர் தொடர்பாக அதிர்வு இணையம் ஏற்கனவே பல செய்திகளை வெளியிட்டு எச்சரித்தது, யாரும் கண்டுகொள்ள வில்லை, மாறாக நக்கீரன் அவரை தூக்கி நிறுத்தினார். இப்போது கீற்றும் பல உண்மைச் செய்திகளை தெரிவித்துள்ளது. அவர் முகமூடி தற்போது கிளிந்துவிட்டது. ஈழத் தமிழர்களுக்கு தூரோகம் செய்த அவர் நிம்மதியாக இருக்கக்கூடாது, தமிழர்களிடன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் !
Sridar
அற்புதமான கட்டுரை. முற்போக்கு எண்ணங்களை தூண்டும் வகையான எழுத்துக்களை வெளியிடுவதைக் கண்டு உவக்கிறேன். இத்தளத்தில் சிறிது உளாவி, பல கட்டுரைகளை வாசித்தேன்.
இதில் சற்றே என் மனதை பாதித்தது, "பார்ப்பீனியம்". பல இடங்கள் பார்ப்பீனியத்தை எதிர்ப்பதே முற்போக்கான சிந்தனையாக சித்தரிக்கப்படுவதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.
இத்தகைய கட்டுரைகள் எனக்கு நினைவூட்டுவது இந்தி எதிர்ப்பு சம்பவத்தை. தாம் ஆட்சி பீடத்தை கைப்பற்ற , தமிழைக் காப்பாற்றுகிறோம் என்ற் தமிழை சூதாடிய சம்பவம். இப்பொழுது அவர்களின் வாரிசுகள் இந்தி படிக்கும்பொழுது நடுத்தர வர்க்கதில் பிறந்த நான் என்ன தவறு செய்தேன்.
தமிழனுக்கு பொதுவாக, யாரேனும் "தமிழருக்காக, தமிழுக்காக" என்றால் மயங்கி விடக்கூடிய மனம். இதைப் பயன்படுத்திக் கொன்டவர் ஏராளம்.
இதைப் போல சமூகநீதி, சமூக அவலங்களை எதிர்த்து எழுதிகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எதிர்த்து பேசுவது, அவதூறான கருத்துக்களைப் பரப்புவது, வேற்றுமையை வளர்க்குமேயன்றி நன்மை பயக்காது.
பல பள்ளிகளில், கல்லூரிகளில் சாதி பெயரே தெரியாத, அறிய விரும்பாத நண்பர்கள் உண்டு. கல்வி ஒன்றிற்க்கு மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை கலையக் கூடிய திற்ன் உண்டு.
பிறரை குறை கூறாமல், ஆக்கப் பூர்வமான சிந்தனைகளைப் படைப்பது மட்டுமே தாவிர் எம் போன்ற இளைய சமுதாயத்திற்க்கு செய்யக் கூடிய மிகப் பெரிய உதவி.
யான் பார்ப்பனன் அல்லன் !!!
lord
"ஏழை பறையை இழுத்தது சரி" பள்ளுவை இழுப்பதற்கான காரணம் என்ன? முதுகில அடி வாங்கு பொது கூட பக்கத்துல இருக்கிறவன சீண்டி பார்க்கிற இந்த அறிவிஜீவித்தனம் எத்தனை நூற்றாண்டானாலும் மாறப்போவதும் இல்லை. தலித்தியம் மறைய போவதும் இல்லை ஏனெனில் தலித்துக்களின் நிலையும் அப்படியே இருக்கும். மள்ளருக்கான அறிவுப் பாரம்பரியம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களிடம் அடிமை பாரம்பரியம் இல்லை. வாழ்க தலித்தியம் மற்றும் அதன் பாழாய் போன புரட்ச்சிகரம். "வசந்தம்" வீசட்டும்( மணமா? நாற்றமா?)
madduvil gnanakumaran
உனக்கு என்ன சிதை பட்டது நாம் தானே. வெலுது கட்டு நய வஞக. காலம் ஒருநால் உன்முக தொல்ல் உரிக்கும்
நட்புடன் மட்டுவில் க்னனகும்ராரன் கொலும்பில் இருந்து
Guest
தலைவிதியே என்று தமிழகத் தலைனகர் காணச்சகிக்காத சங்கமநிகழ்வு கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி போன கதை தான்.
ஆனால் இந்தக் கட்டெரும்போ மெள்ளமெள்ள காட்டெருதாகிக் கழிசடையாகிப் போன கருனாடக இசைவடிவில் நாட்டையும், நாட்டுப்புற் கலையையும் புரட்டியெடுக்க, மஞசுவிரட்டுப் பார்க்க வரலயோ மஞசுவிரட்டு என மஞசத்துன்டுத் தலைவர் புத்திரியும் புத்திரியின் மித்திரனும் தமிழ்கடை விரிக்க,
மலிவான விலையில் கிடைப்பதென்னவோ கடைசித்தமிழனின் தமிழ்நாட்டு கலைஞனின்,
கவிஞனின் மானம்தான்.
கடைசியில் நடப்பதென்னவோ கண்ணைவிற்று ஓவியம் வாங'கிய கதைதான்.
இதைச்சொல்ல வந்த கீற்று, அற்பங்கள் தேடும் அற்ப வியாபார-விளம்பரங்கள், அடிக்கும் கொள்ளைகள் பற்றி அங்கலாயிப்பது தேவைதானா?
ஈழத்தமிழினத்துரோக கொடுமையானக் கருங்காலித்தனம் அதையும் இங்கே போட்டு குளம்புவது சரிதானா?
-குமரன்
amal
இதயம் வெடிக்கிறது ஜெகத் கச்பரைப் பற்றி பெசுவதர்த்கு உலகத்தில் எவருக்கும் தகுதி இல்லை
1985 முதலே ஈழத்து விடியலுக்காய் தன பேச்சால் உலக மக்களை ஈழத்துப் பக்கம் திருப்பிய உத்தமரை பற்றி பேச எவருக்கும் அருகதை இல்லை

ஜெகத் என்பது ஓறூ மா மாமலை .. பச்சிழம் குழந்தையின் பிடிவாத கொள்கை பிடிப்பு
எவனவன் கேள்வி கேட்பவன் ?
1990 இருந்து தன மத வலையில் இருந்து புரட்சி செய்து மாபுரட்சி செய்த புரட்சியாளன் . தன அங்கியை 90 இல் கிழித்து ஈழத்துக்காய் தொடங்கிய பயணம் இன்றும் தன அரத்தத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது
நேற்று பெய்த மழையில் பூத்தவர்கள் உண்மை அறியாமல் புலம்புவதை ஈழத்து அழுகை அறியும்... எந்த நடயனுக்கும் பதில் சொல்லத் தேவை இல்லை...
தமிழீழத் தலைவன் அறிவான் .வேறெந்த புல்லன் சான்று தரவேண்டும்...

சென்னை சங்கமத்தைப் பற்றி பேசுபவன் எவனுக்கு நெஞ்சில் தைரியம் இருக்கிறதோ அவன் தமிழ் மையம் வந்து உண்மை அறியட்டும்....சான்றுகளை கொஊட்டி வ துநிதவனை தமிழ் மைழ்யம் மெய்ப்பிக்கும்... குற்றமட்ட்ற குழந்தையை கொட்டுபவனை உலகம் வெட்டி வீழ்த்தும்...

எவன் அவன் ஜெகத் ஐ பற்றி பேசுவது...
தைரியம் இருக்கிரதாடா உனக்கு
ஜெகதொடு அமர்ந்து விவாதிக்க உனக்கு உரமிருக்கிறதா?
இன்றே வா ..தமிழ் மையம்.....விளக்கம் தரும்...

கோழைதான் பின்னாலிருந்து புறம் கூறுவான் ......
நேசுரமிக்கவன்...நேருக்கு நேராய்...இது தவறு ...என சொல்பவன் மாந்தன்...
மாந்தநேன்டால் வா....விடை பெற்றுப் போ ....
கேவப்பட்டுப் போவாய்...இத்தனை கட்டுப் பாடுள்ள ஒரு தமிழ் மையமா என்று ஒரு கலைஞன் வந்து சொல்லட்டும் அவன் ஏமாந்தவன் என்று.... வீதியில் கிடந்தவனுக்கு மாட மாளிகை காட்டியது இன்த தமிழ் மையம்... மறுப்பவன் வரட்டும் .... புலனாய்வுத் துறைகளே வியக்கும் தமிழீழத் தலைவன் பாணியில் ஒழுங்குறு இயக்கம் இது..
தமிழன் உள்ளவரை ஜெகத் உண்டு.. வரலாறு இதை மறக்காது... ஈழ்மறியும் ஜெகத்தின் குரலை...அதன் பண்பை...எவனவன் குறுக்கே...துண்டோடு
துணிவுள்ளவன் தமிழன் நேரே நின்று சொல்வான்...
நக்கீரன் தலைமுறை... நீ சரியானவனா....வா.. வாதிடலாம்
ஜெகத் இல்லைஎன்றால் தமிழக கலைகளே இல்லாமலைருக்கும் அந்த அளவுக்கு பார்ப்பன முதழைகள் காய்ந்து கிடக்கும் Wசந்திக்கலாம்...
ஜெகத் பித்தன்
சென்னையில் இருந்து

WRITE TRUTH ...IF NOT THE TRUTH WILL SUBMERGE YOU
TRUTH WINS
ARE YOU TRUTHFUL
OR JUST WRITE THE HEAR SAY?
Uthayamaran
எப்பொதும் விமர்சனம் செய்பவர்கல் ஏன் எந்த முன்னெடுப்பையும் செய்வதில்லை
கன்னியாஸ்த்ரீ...
டே எவண்டா ஜெகத்தை குற்றம் சொல்றது. படவா ராஸ்கர்ல் பிச்சி புடுவேன். அவர் தங்கம் . ஊழல் வசுல்ணா என்னண்ணே தெரியாது. கன்னியாஸ்திரிகளை திரும்பிக் கூட பார்க்கமாட்டார். கடைசி நேரத்தில் உளவு நிறுவத்திடம் பணம் வாங்கிக் கொண்டு அவர் நடேசனைக் காட்டிக் கொடுத்தார் என்று எவண்டா சொன்னான். எங்கள் தலைவர் அதெல்லாம் செயவே மாட்டர். அது போல மலையப்பன் பிஷப் போடும் சேர்ந்து திமுகாவிற்கு காவடி வேலையும் அவர் பார்க்கவில்லை. தந்தைக்கெல்லாம் தந்தை வின்செண்ட் சின்னத்துறையோடு சேர்ந்து திமுகவினரிடம் பழக்கமாகி கடைசியில் அவர் காலையும் வார வில்லை. சின்னத்தனமான சின்னத்துறைக்கே அல்வா கொடுத்த பெரிய அருட்தந்தை இனி ஈழத் தமிழத்துக்கே தலைவர். ஏண்டா அதுதாண்டா இப்போ கதவில்லாத வீடு. எவனாது ஃபாதரை திட்டுனீங்க. உண்மை பேசுனீங்க கொன்ணு போடுவேன்.
உண்மை
திரு. அமல் அவர்களே கணக்கு வழக்குகளைத் தெரிந்ஹ்டு கொள்ள ஏன் தம்ழி மையம் வரவேண்டும். முதல் வருடம் சென்னை சங்மம் துவங்கிய போது கணக்கு வழக்குகள் வெளிப்படையாக வைக்கப்படும் என்றும் அறிவித்த ஜெகத் ஏன் இன்று வரை அதை வெளியிடாமல் ரகசியம் காக்கிறார். சென்னை சங்கமத்தில் புழங்குவது தமிழக் மக்களின் பணம் என்னும் போது அதை வெளிப்படையாக அறிவிக்கத்தான் வேண்டுமே தவிற ஒரு கிறிஸ்தவ மதத்திர்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் தமிழ் மையத்திற்கு ஏன் வரவேண்டும். தனியார்களுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இருந்து கொண்ட் பொதுப்பணம் பற்றி பேசுகிறீர்கள். அது போல பிரபாகரனுக்கு ஜெகத்தைப் பற்ரித் தெரியும் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆமம் கடைசி நேரத்தில் ஜெகத்தை பற்ரி உண்மையிலேயே அவர் தெரிந்து மனம் வருந்தியிர்ப்பார். இப்படி ஒரு உளவாளியை ஊடுற விட்டு விட்டோமே என்று வருந்தியிருப்பார்,
aathavan
ஜெகத் கஸ்பர் புலத்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

சமீபகாலமாக கருணாநியின் ஆதரவு ஊடகமான நக்கீரன் இதழில் மறக்க முடியுமா என்னும் பெயரில் தொடர் எழுதிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பாதிரியான ஜெகத் கஸ்பர் ஈழ மக்களுக்கு தற்போது தலைமை இல்லை என்றும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு வீச்சோடு புலம் பெயர் மக்களின் நிதி உதவியோடு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வருகிறார். இந்த நபரின் காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தொடர்புகளும், அது எப்படி புலிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுத்தது என்றும் தொடர்ந்து தமிழகத் தோழர்கள் இவரை அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். இறுதிப் போரின் போது புலிகளை சரணடைய வைத்துக் கொன்றது. சென்னை சங்கமம் என்ற பெயரில் பெரும் பண்க்கொள்ளை என்று இவரின் போக்கிரித்தனமான பண வெறியும் அதற்கான உளவு வேலைகளும் தொடர்ந்து வந்தாலும் இவர் மீண்டும் மீண்டும் ஈழம் என்பதை குறிவைக்கிறார். காரணம் ஈழ மக்களுக்கான ஒரே நிதி உதவி ஆதாரமாக இருக்கும் புலத்து மக்களை நிவாரணம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து பெரும் பண வசூலை போடத்தான் என்று தகவல்கள் தெறிவிக்கின்றன. தமிழகத்தின் பிரபலாமான புலி ஆதரவு இயக்குநர் ஒருவரோடு சேர்ந்து இதே விதமான நிதி திரட்டலுக்கு ஜஸ்டிஸ் ஃபண்ட்‘ என்ற பெயரில் நிதி திரட்டலாம். அதற்கு அந்த இயக்குநருக்கு ஈழ மக்களிடம் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்று இவர் முயன்றிருக்கிறா. அந்த இயக்குநர் சிறையில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி அவரது நெருங்கிய புலி ஆதரவாளர்களிடம் இந்த பாதிரி வசூலைத் தொடங்க முயர்சித்திருப்பதும் தெரியவருகிறது. இப்போது தானும் ஏற்கனவே புலத்தில் புலிகளுக்காக வசூலிக்கிறோம் என்று வயிறு வளர்த்த வசூல் ராஜாக்கள் சிலருடன் சேர்ந்து ஈழ மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தப் பாதிரி களம் இறங்குவார் என்று தெரிகிறது. அன்பார்ந்த புலத்து மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் ஈழத்தில் துயரப்பட்டு நிற்கும் மக்களுக்கு உதவும் கடமை உண்டு. ஆனால் அதை எந்த தன்னார்வக்குழுக்கள் மூலமாகவோ, இம்மாதிரி மோசடிப் பாதிரிகள் மூலமாகவோ செய்யாதீர்கள். நேரடியாக நீங்களே ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்து நேரடியாக உங்களின் உதவிகள் அவர்கலுக்கு கிடைக்கும் படிச் செய்யுங்கள். அதுவே பயன் தரும். மற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தை எடுத்து சுவைக்க நினைக்கும் உளவாளிகளுக்கும், போலிகளுக்கும் நீங்கள் கடினப்பட்டு உழைக்கும் பணத்தை வழங்காதீர்கள். உங்களை நம்பவைக்க பல விதமாய் பேசும் இந்தப் பாதிரியை இனம் கண்டு உங்களின் எதிர்ப்பைப் பதிவு பண்ணுங்கள். அரசியல் ரீதியாக நமக்குள் ஆயிரம் பிளவுகள் இருக்கலாம். ஆனால் இம்மாதிரி சூதாடிகளை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது அப்படி அனுமதுப்பது நாமே நமது மக்களுக்கு கொள்ளி வைப்பது போலாகிவிடும். சமீபத்தில் நக்கீரன் இதழில் களத்தில் நிற்கும் போராளியின் நேர்காணல் என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிகவும் இருண்மையான அந்த நேர்காணல் “கேள்வியும் நானே பதிலும் நானே” என்கிற கருணாநிதியின் பாணியில் ஜெகத் கஸ்பரால் எழுதப்பட்டிருக்கலாம். அதில் தான் செய்த துரோகத்தை மறைக்க புலிகள் மீதே பழியைப் போடுகிற திருப்பணியை ஈழக் குரலிலேயே பேசும் அயோக்கியத்தனத்தையும் செய்யத் துவங்கி விட்டார் இந்தப் பாதிரி. அல்லது உண்மையிலேயே ஏதாவது ஒரு ஈழக் குரலிடம் எடுத்திருக்கலாம். ஆனால் அதை நாம் எப்படி நம்புவது. இந்திய உளவுப் படையின், போர் வெறியன் சிதம்பரத்தின் கைக்கூலியாக புலிகளுக்குள் ஊடுறுவி உளவு வேலை பார்த்த இவரிடம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

http://inioru.com/?p=10300
AMAL
MR. UNMAI

IT DOESNOT SEEM THAT CHENNAI CAHANGAMAM
HAS BEEN CONDUCTED BY YOUR MONEY

IT IS EVIDENT BY THE ADVERTISERS AND THE BANNERS
ADJOINING THE DEPARTMENT OF TOURISM

BEING A FOLK ARTIST .....I KNOW
HOW WE WERE TREATED WELL AND WELL ORGANIZED.

TO SERVE US FOOD WE HAVE NEVER SEEN ANY WEBSITE HOLDERS HOICKING THEIR BAG TO THE STREETS.

WE HAVE GOT NATIONAL AND INTERNATIONAL RECOGITION

WE HAVE COME OUT OF OUR INFERIORITY COMPLEX TO ACHIEVE

WHAT THE HELL DO YOU KNOW THE MONEY THAT HAS BEEN SENT TO THE THAMIZH SCHOOLS RUN BY THAMIZH SCHOLARS...IT YOU ARE INTERESTED DIAL THIYAHU AND CHECK.

TO DO GOOD NO ONE NEEDS ACCOUNTABILITY......

YOU HAVE NEVER HELPED US IN ANY WAY OTHER THAN SHOUTING THROUGH YOUR INTERNET SINCE IT IS FREE OF COST AND ACTION FREE....WHY THE HELL SHOULD YOU WORRY ABOUT OTHERS WHO HELP US LIVE BETTER....

ANY ACT CAN BE CRITICIZED AND BACK FIRED...WHAT COMES OUT OF IT....ARE YOU ABLE TO DO ATLEAST A PENNY TO THE NEEDY.....

HOW MANY POOR CHILDREN ARE TAKEN CARE OF BY THAMIZH MAIYAM....WHAT HAVE YOU DONE MAN?

IF YOU CANT DO ANYTHING SHUT YOUR ITHU AND BE QUITE...

HAVE YOU EVER HEARD ABOUT TH E BOOKS OF MA. SO VICTOR WHICH WERE PUBLISHED BY THAMIH MAIYAM....THAT SPEAKS OF THE RICHNESS AND THE SUBMERGED CONTINENT OF THAMIZHS KUMARIK KANDAM.....AND

ALL THE LANGUAGES OF THE WORLD HAVE ROOT WORD IN THAMIZH....
YOU NEED POWER TO DO GOOD ......

AND THAT POWER IS CHANALIZED PROPERLY...

IF THERE IS A ROAD WALK ON IT....DONT POKE IT WITH A STICK AND SEE...WHO BUILT IT ...HOW BUILT....WHETHER ...THEY HAVE SHOWED YOU THE ACCOUNT.....
ARE YOU SO SILLY....LOOKS ASHAMED....

AND SPECIALLY YOU CANT INSULT A PERSON INDIVIDUALLY ....THERE IS A CODE OF RESPECT TO WRITE ......

WHAT DO YOU KNOW ABOUT VINCENT FATHER....I THINK YOUR POCKET IS FILLED BY VINCENT ...ALL THAT YOU SPOKE ON HIM IS FALSE....

I THINK YOU ARE BIASED....YOU STUDY THINGS PROPERLY......ANY ONE CAN DO ANYTHING IN TH ESOCIETY WITHOUT HARMING OTHERS...WHAT DO YOU LOSE BY THAMIZH MAIYAM IN A CATHOLIC BUILDING...ARE YOU UNCOUTH TO SAY SO........FROM YOUR WORDS IT SOUND ONE HAS TO SHUT HIS ITHU AND BE QUITE HOME WITH OUT BOTHERING ANYTHING...I THINK BECAUSE OF PEOPLE LIKE YOU EVEN THE KIND HEARTED NEVER COME OUT TO DO GOOD .....

YOU THINK .....ALL THAT HAS BEEN WRITTEN BY JEGATH IN NAKKEERAN IS WRONG....I DONT THINK SO ...THE FREEDOM OF THOUGHT AND WRITE (READ INDIAN CONSTITUTION) CANT BE PAUCED BY ANY BUGGER YOU KNOW....

FROM YOUR WORDS ...I COULD ASSUME THAT JEGATH'S WRITING CAUSED LTTE'S DEFEATED. ARE YOU NOT ASHAMED OF YOUR FOLLY ON POLITICS...I THINK CHEEMAAN HAS FILLED YOU AGAIN....EMOTIONS CAN NEVER CHANGE .....

HAVE YOU NOT KNOWN THE BETRAYEL OF KARUNA.....
I AM SURE ....YOU PUT THE BURDEN ON JEGATH FOR THE LTTE LOSS........EEEEEEE.....GETS LAUGHING

DONT YOU KNOW THE SUPPORT OF CHINA AND PAKISTAN...INCLUDING US ...BEHIND TH EDCREEN...TO HOLD INDIA FROM ALL THE CORNERS...GO MAN
GO AND READ THE HISTORY OF THE WORLD AND POLITICS...
IT IS EASY TO CURSE AN INDIVIDUAL.....

YOU DO GOOD IN YOUR WAY....JUST BY SHOWING PHOTOS DONT THINK YOU HAVE SHOWN THE WORLD THE TRUTH......

DISPLAY THE LIST OF GOODNESS YOU HAVE DONE TO THE SOCIETY.......HAVE YOU EVER HELPED A POOR LIVE....FROM WHERE HAVE YOU COME MAN.....?

RATIONALITY IS MORE IMPORTANT BEFORE PENNING...

LET ME SEE WHAT YOU GUYS DO IN FUTURE

I CAN KEEP TALKING ...

SO YOU DO YOUR GOODNESS NOT WALKING ON THE EVIL PATH

TILL WE MEET.....
AMAL
hello ini oru.....dont act too smart....it cant be shining ever.....

mind your words and read the above message
கிறிஸ்துதாஸ்
அமல் உன்னைப் போல ஒரு கிறிஸ்தவந்தான் நானும். நீங்கள் முதலில் தமிழில் எழுதி விட்டு பின்னர் ஆங்கிலத்திற்கு தவ்வி விட்டீர்கள் உண்மையில் நான் ஒரு ஃபாதாராக இருந்தால் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை வாசித்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் எங்களுக்கெல்லாம் கிறிஸ்தவத்தில் எங்கே சம நீதி கிடைக்கும். எளிய தலித்துக்களை புறக்கணித்து பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி கூடாராமாக மாறிப் போன கிறிஸ்தவத்தில் ஜெகத் மாதிரியான ஆட்களுக்கே இடமும் இருப்பும்.... அது இருக்கட்டும். ஜெகத் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் சொல்ல முன்வரவேண்டும். உண்மையில் நடேசன் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் எல்லாமே அவர் எழுதியதிலிருந்து எடுக்கப்பட்டதுதான் என்பதோடு சென்னை சங்கமம் கணக்கு வழக்கு பற்ரியதும் அவர் அறிவித்த அறிவிப்புப் படி நடக்க வில்லையே என்பாதாலும் தான் கேட்கிறோம். அதை விட்டு விட்டு மிரட்டுகிற தொனியில் எழுதினால் எப்படி? “HAVE YOU NOT KNOWN THE BETRAYEL OF KARUNA.....
I AM SURE ....YOU PUT THE BURDEN ON JEGATH FOR THE LTTE LOSS........EEEEEEE.....GETS LAUGHING............DONT YOU KNOW THE SUPPORT OF CHINA AND PAKISTAN...INCLUDING US ...BEHIND TH EDCREEN...TO HOLD INDIA FROM ALL THE CORNERS...GO MAN........GO AND READ THE HISTORY OF THE WORLD AND POLITICS........IT IS EASY TO CURSE AN INDIVIDUAL.....” இதுக்கு என்ன அர்த்தம் என்று தமிழில் எழுதினால் பதில் எழுத வசதியிருக்கும். சீனா, பாகிஸ்தான் ஆதரவாளரா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏன் நீங்கள் என்ன அமெரிக்க அல்லது இத்தாலி ஆதரவாளரா? என்று கேட்க எவ்வளவு நேரம் ஆகும். அத்தோடு எமது மக்களைக் கொல்ல படைகளையும், இராணுவ உதவிகளையும் செய்த சீனா, பாகிஸ்தான், மட்டுமல்ல இந்தியாவும் எங்கள் எதிரிதான். அப்புறம் கருணா பற்றி எழுதியிருக்கிறீர்கள்..... அது உங்களுக்கே பொருந்தும் அது எல்லோருக்கும் தெரியும்.
kopalamani
தோழர் அமல் அவர்களுக்கு ,
ஒரு குற்றசாட்டை ஒருவர் முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லும் முறையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் , போக்கிரி மாதிரி பேசகூடாது . உங்களுக்கு ஜெகத் உண்மையிலேயே தூயவர் என்று தெரிந்தால் அதற்கான ஆதரங்களோடு பதில் சொல்லுங்கள் தமிழர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
Suppan
I agree with the article. Even though I am a brahmin, i agree to what is said here. We should be creating a univesity where the folk music and dance can be taught. This is missing.

And the way they are treated, it is pathetic. Consider the way the folk artists are treated in the western world. We need to educate our masses. All our magazines focus on the carnatic music and bharatanatyam as if that is the only art of tamil nadu.

Chennai Sangamam is only a way to Hijack the folk arts and give it a christian shape. This is what they are trying to do to Thirukkural also.
How do they get so much money to make a movie on Thirvalluvar (full of lies).

Beware of Jegath kasper.
S.G.Rameshbabu
நல்ல பதிவு வாழ்த்துக்கள் வசந்தகுமார்
sasoudhin
அன்புல்ல கீட்டு வாசகர்கலுக்கு

திரு. வசந்தகுமார் எழுதிய "னரி கிடைக்குக்காவல் கச்பார் நாட்டுப்புரக்கலைகலுக்குக் காவல்" படித்தேன். பல உன்மைகலும் சில வெர்ரியுனர்வும் கட்டுரையில் இர்ருப்பதை உனர முடிந்தது. இது போன்ட்ட்ர மரபான கலைகல் அரங்க்கேட்ட்ரமும் இலக்கிய சிந்தனை பகிர்வுகலும் குரித்த அடிப்படைநெரிமுரைகல் கச்பர் பொன்ட்ரவலுக்கு தெரிவதில்லை. நீங்கல் கூருவது போன்ட்ரு நவீன அடிமையாக்கல் இன்ட்ரு நடைபெட்ருக்கொன்டிருக்கிரது. இதை எல்லொரிடமும் கூருவது நமது கடமையும் கூட.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.