நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது.

புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94 நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். எந்தக் கோளாக இருந்தாலும் சரி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த கோளின் ஒரு நாள் எனப்படுகிறது.

சூரிய குடும்பத்தில், நம் பூமிக்கு முன்னாடி இருக்குற வெள்ளி கோளின் ஒரு நாள் என்பது நமக்கு 243  நாட்கள் ஆகும்.

earth_370வெள்ளிக் கோளோட ஒரு வருஷமும், ஒரு நாளும் கிட்டத்தட்ட ஒண்ணு தான். வெள்ளி கோளில் ஒரு வருடம் என்பது, ஒரு முறை வெள்ளி சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம், 224.70 நாட்கள் . இதுதான் வெள்ளிக்கோளின் ஓர் ஆண்டு. ஆனால் அது தன் அச்சில் மிக மிக மெதுவாக சுற்றுவதால் தன் அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்கவே, கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கி வந்துவிடுகிறது. நம் பூமியோட 243 நாள்தான் வெள்ளி கோளில் ஒரு நாள். அது ஒரு தடவை தன்னோட அச்சிலே சுத்திமுடிக்க 243 நாள் ஆகிறது. ஆனால் ஒரு சூரிய உதயத்துக்கும் அடுத்த சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் 116.75 பூமி நாட்கள்.

அடுத்து நம் பூமியோட ஒரு நாள் என்பது சரியா துல்லியமா 24 மணி நேரம் இல்லை.  23 மணி  56 நிமிடம்  4.1 நொடிகள் தான். நம் பூமியின் துணைக்கோளான சந்திரனின் ஒரு நாள் என்பது நமக்கு 29.53  நாட்கள்.

செவ்வாயின் ஒரு நாள், 24 மணி  37  நிமிடம்  22.66 நொடிகள் தான். செவ்வாயோட சுற்று வேகமும், பூமியோட சுற்று வேகமும் சராசரியா ஒண்ணுதான்.

வியாழன்தான் சூரியக் குடும்பத்திலே வெகு வேகமா  சுத்தற கோள். அதனுடைய ஒரு நாள் என்பது நமக்கு 9 மணி 55 நிமிடம்  33 நொடிகள். இந்த வியாழன் நம்ம பூமியைவிட 317 . 5 மடங்கு அதிக நிறை உள்ளது. பூமியில் மட்டும்தான் எடை என்று குறிப்பிடுகிறோம். எடை என்பது ஈர்ப்பு விசைக்குத் தகுந்தாற்போல மாறும். எனவேதான் பூமியைத்தவிர மற்ற கோள், சூரியனில் எல்லாம் நிறை என்றே சொல்லவேண்டும்.

சனிக்கோளின் ஒரு நாள் என்பது 10 மணி 32 நிமிடம் 36 நொடிகள். சனிக்கு அடுத்து இருக்குற யுரேனஸ் கோளின் ஒரு நாள் என்பது 17  மணி 14  நிமிடம் 23 நொடிகள். நெப்டியூனின் ஒரு நாளுக்கும் கிட்டத்தட்ட அதே நேரம்தான் 16 மணி 6.6 நிமிடம்.

வேறு கோள்களில் உங்களின் வயது?

அது இந்த கோள்களின் ஒரு நாள் நேரத்துடனும், ஒரு வருஷ காலத்துடனும் சம்பந்தப்பட்டது.  உங்களது மகனின் பிறந்த நாள் 11 .02 .1990 என்று வைத்துக்கொள்வோம். பூமியில் தங்களது பையனின் வயது 22 வயது என்றால், புதன் கோள்லே 91 .3 வருஷம் ஆகும். ஆனால் அடுத்த பிறந்த நாள், திங்கள் கிழமை,  செப்டம்பர்  9, 2012 தான் வரும். அதே போல்  வெள்ளியிலே, 35.7 வயசு, அடுத்த பிறந்த நாள் 2012 , ஏப்ரல் 5 , வியாழக்கிழமை வரும். ஆனால் பூமியிலே, அடுத்த பிறந்த நாள் 2013 , பிப்ரவரி 10, ஞாயிறு அன்னிக்கு வரும். இந்த   ஆண்டு லீப் வருஷம்.

செவ்வாயில் வயது 11 .6. அடுத்த பிறந்த நாள் தேதி வியாழன்  செப்டம்பர்,  6, 2012. ஆனால் வியாழனில் தங்களது மகன் குழந்தைதான். வயது 1.85. அடுத்து வரும் பிறந்த தேதி சனிக்கிழமை, நவம்பர் 2, 2013 தான்.

சனிக் கோளில் ஒரு வயது கூட ஆகியிருக்காது. நம் பூமியிலே பிறந்த பிள்ளைக்கு 22 வயது என்றால், அது சனிக்கோள்லே பிறந்திருந்தால், அதற்கு  0.74 வருஷம் தான் ஆகி இருக்கும். அடுத்த , பிறந்த நாள் ஞாயிறு, ஜுலை 28, 2019லே வரும்.

இன்னும் தொலைவிலே இருக்கிற யுரேனஸ் கோளில் பூமியின் 22 வயது இளைஞருக்கு, வெறும் 0.26 வருடம்தான் ஆகும். அடுத்த பிறந்த நாள், 2074 , பிப்ரவரி 15ல், வியாழன்  அன்று நிகழும்.

joghanas_370எட்டாவது கோளில் குழந்தை 22 வருஷத்துக்கு முன்னால் பிறந்து இருந்தால், இப்போது அதற்கு வயது 0.13 வருடம்தான். அடுத்த பிறந்த நாள் 2154ல் தான். அந்த வருடம் நவம்பர் 28ல், வியாழக்கிழமை  வரும். 

ஒவ்வொரு கோளிலேயும் ஓர் ஆண்டு என்பது அதனோட சுற்று வேகத்தையும், அது எத்தனை நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும் பொறுத்தது. இதையெல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைகோ பிராகியும், அவரின் உதவியுடன் ஜொகான்னஸ் கெப்ளரும் (1571 -1630), கணித சூத்திரங்கள் மூலம் சரியாகக் கண்டறிந்தனர்.

Pin It

நம் அண்டை உலகமான சந்திரன் நோக்கிய பயணச் சாதனைகள் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தேறி வருகின்றன.

அப்போலோ பயண சாதனைகளுக்குப் பிறகு ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழித்து, 1992 டிசம்பர் 7 அன்று சந்திரனை உற்று நோக்கிய கலிலியோ எனும் அமெரிக்க விண்கலம் சந்திர வட துருவம் அருகே நிலாப்  பள்ளங்களில் நிரந்தரப் பனிக்கட்டி படிந்திருப்பதனை அறிவித்தது. அவ்வளவுதான். 

moon_370தொடர்ந்து 1994 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அமெரிக் காவின் ‘கிளமென்டைன்’ (Clementine) எனும் ஆய்வுக் கலம் சந்திரனின் தென் துருவத்தில் தண்ணீர்ப் பனிக்கட்டிகள் உறைந்தி ருப்பதாகத் தெரிவித்தது. நிலாவின் வட கோளத்தில் 10,000 முதல் 50,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், தென் பகுதியில் 5000 முதல் 20,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவிலும் ஏறத்தாழ 30 கோடி டன்கள் தண்ணீர் ஒளிந்தி ருப்பது நிச்சயம்.

இது ஏற்கனவே அறிவித்ததை விட ஏறத் தாழ 20 மடங்கு அதாவது 600 கோடி டன்கள், ஏறத்தாழ 30 கோடி லாரிகள் தண்ணீர் என்றால் சும்மாவா? இதையே வேறு விதமாகச் சொன் னால் சந்திர நிலத்தடி நீரின் அளவு இந்துமாக் கடலின் தண்ணீர் அளவில் ஒரு கோடியில் ஒரு பங்கு விண்வெளி நாடுகள் யாவுமே நிலாத் தண்ணீரைக் குறிவைக் கின்றன. 

நிலாப் பயணங்கள் மேற் கொண்ட நாடுகளின் வரிசையில் ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இன்று ஐரோப்பாவும், ஜப்பானும், சீனாவும் சேர்ந்து கொண்டன. அதற்கு அடுத்த ஆறாம் இடம்   இந்தியாவிற்கே என்று சொல்லவேண்டியது இல்லை.

எப்படியோ, சந்திராயன் விண்கலம் நிலாவை 100 கிலோ மீட்டர் துருவப்பாதையில் சுற்றியது. 

சந்திரனின் கனிம வளங்கள் பற்றி ஆராய்ந்ததில்  நம் நாட்டின் சந்திரயானில் இடம் பெற்ற  அமெ ரிக்காவின் ‘எம்-3’ (Moon Mineralogy Mapper -MMM) என்று குறிப் பிடத் தக்கது. அமெ ரிக்கா வின் ஜே.பி.எல். என்கிற‘ஜெட் புரொப்பல்ஷன்’ லேபோரட்டரி  (தாரை உந்தும ஆய்வுச்சாலை) ஆராய்ச்சிக் கூடமும், பிரௌன் பல்கலைக் கழகமும் இணைந்து வடிவமைத்த கருவி. இது ஏறத்தாழ 95 விழுக்காடு நிலாவைத் தனக்குள் பொதிந்து கொண்டது. சந்திரனில் செறிந்து உள்ள ஹைடிராக்சில் நீர்க்கூறு அம்சம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

உலக வரலாற்றில் இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு என்பது இருக்கட்டும்.

2009 ஆகஸ்ட் அன்று வடதுருவப் பனி அளவை ஆராய்வதற்கு சந்திரக் கண்காணிப்புச் சுற்றுகலம் (Lunar Reconnaissance Orbiter) என்கிற விண்கலனை நிலவுக்கு அனுப்பிற்று. அதில் நாசாவின் சிறு வானலை அதிர்வுஏற்பி (Miniature Radio Frequency) ஒன்று இடம் பெற்றது. அதன் பிம்பங்கள் நிலாவை முப் பரிமாணத் தில் பதிவு செய்தது. அங்குத் துரு வப் பகுதிக  ளில் பனி உறைந்து இருந்ததைக் கண்டுபிடித்து அறிவித்து உள்ளது.

அமெரிக்காவின் நிலாக் கண்காணிப்புச் சுற்று கலமும், சந்திரயானின் மினி சார் எனும் சிறிய செயற்கைத்துளை ரேடார் (Mini-Synthetic Aperture Radar) கருவியும் சேர்ந்து ஒரே தருணத்தில் நிலாவின் வட துருவத்தில் மேலாக நின்று ‘எர்லாங்கர்’ குழுவினைப் படம் பிடித்தன. நான்கு நிமிடங்களாக இவை பதிவு செய்த தகவல்கள் பூமியில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் பெறப்பட்டு ஆய்வுகள் நடந்தன.

அதே ஆண்டு செப்டம்பர் 7-8 ஆகிய நாள்களில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளிக் கழக அறிவியறிஞர் கள் கூடி அலசி ஆராய்ந்தனர். அதன்படி நிலாத்தண்ணீர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அது குடிக்கிற மாதிரி திரவ நீர் அல்ல. பனிக்கட்டிகளும் அல்ல. மண் படிகங்களிலும், மணலிலும் பிணைந்து உள்ள நீர்க்கூறுகள் அவ்வளவே.

moon_1_370இதற்கிடையில் நிலாப் பாறைகளில் ஆக்சிகரணப்படுத்தப்பட்ட உலோகத் தாதுக்கள் உள்ளன என்பதால், அவற்றில் இருந்த சுவாசிக்க ஆக்சிஜனைப் பிரித்து எடுக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் வெற்றி பெற்று உள்ளனர். இத்தனைக்கும் மத்தியில், சந்திரனின் சுற்று வட்டமும் ஆண்டு தோறும் 4 செமீ வீதம் விரிவடைந்து வருகிறது என்பது அதிர்ச்சித் தகவல்.

அது நம்மில் இருந்து மெல்ல மெல்ல விலகி வருகிறதாம். 2004ஆம் ஆண்டு கிரிகொரி ஏ.கிராசின்ஸ்கி (Gregory A.Krasinsky) மற்றும் விக்டர் ஏ.பரம்பர்க் (Victor A.Brumberg) ஆகியோர் ஆய்வுப்படி புவிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரம் கூட ஒவ்வோர் ஆண்டும் 15 செமீ வீதம் அதிகரித்து வருகிறதாம்.

நிலாத் தண்ணீர் மனதுக்குக் குளிர்ச்சி. விலகும் சந்திரன் சந்திரனுக்கே குளிர்ச்சி தரும். இந்த நிலையில் சந்திரன் குறித்து இன்று புரியதோர் தகவல் கண்டு அறியப்பட்டு உள்ளது.

வேறு ஒன்றுமில்லை. சந்திரனின் பருவ ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறதாம். நிலாக் கண்காணிப்புச் சுற்று கலன் பார்வையில் நிலாவின் தரைப்பரப்பில் பல்வேறு ‘முண்டு விரிசல்கள் (Lobate Scarps) பதிவாகி உள்ளன - நிலா முகத்தில் வயதான சுருக்க ரேகைகள் மாதிரி.

கடந்த 100 கோடி ஆண்டுகளுக்குள் 100 மீட்டர்கள் அளவு சுருங்கி விட்டது என்கிறார் அமெரிக்காவில் ஸ்மித்சோனியப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் குழுத் தலைவர் தாமஸ் வாட்டர்ஸ். அதாவது ஒவ்வொரு நூற்றாண்டும் நம் நிலா 10 மைக்ரோன் அளவு மெலிந்து வருகிறது. சராசரி தலைமுடி அளவில் பத்தில் ஒரு பங்கு. இதற்குப் போய்ப் பயப்படுவானேன் என்கிறீர்கள்?

ஆனாலும் நம் நிலா சும்மா அழகுப் பதுமையாய்ச் சுற்றிவராமல் புவி வரலாற்றியல் அடிப்படையில் சதா இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய புதிய தகவல்.  

(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It

solarfamily_620

நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன என அறிவியல் கிட்டத்தட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது. சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும், பூமியில் இருக்கும் கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1% மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை மற்றும் பிரகாசம் போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456.7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும், பூமி, சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.

Pin It

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் முற்பகுதியிலேயே அதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. சந்திரனில் முதன் முதலாகக் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். விண்வெளியிலே முதன் முதலில் பறந்தவர்கள் சோவியத்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இரண்டு பேருமே இந்தக் களத்திற்குப் பின்னால் வந்தவர்கள்.

இந்தச் சிந்தனை முதலில் எந்த நாட்டில் தோன்றியது, எந்த விஞ்ஞானிகளிடமிருந்து அது வெளிப்பட்டது, எந்த நாடு முதல் முதலாக ராக்கெட்டைக் குறைந்தது 1000மீ. தூரத்திற்குப் பறக்கவிட்டுப் பரிசோதித்துப் பார்த்தது என்று கேட்டால் அந்த நாட்டினுடைய பெயர் இன்னமும் உலக வரலாற்றின் ஏடுகளில் சரியாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. ஜெர்மனிதான் முதன் முதலில் இந்த ஆய்வுக் களத்தில் முன்னால் நின்றது. ஜெர்மனிக்குத்தான் இதில் ஒரு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது.

1903-ஆவது ஆண்டில் ரைட் சகோதரர்கள் விமானம் பற்றிய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த முயற்சிகள் நடைபெற்று வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் விமானங் களுக்கும் ராக்கெட்டுக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில் விமானங் கள் காற்று மண்டலத்துக்குள்ளே பறக்கின்றன. ராக்கெட்டுகள் காற்று மண்டலத்தைக் கீறி வெளியில் பிரபஞ்சத்துக்குப் போகின்றன. இதுதான் அதனுடைய அடிப்படையான வேறுபாடு.

ஜெர்மன் நாட்டைச் சார்ந்த எருமன் என்கிற ஒரு விஞ்ஞானிதான் முதன் முதலாக ராக்கெட் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். 19-ஆம் நூற்றாண்டினுடைய இறுதியிலேயே அந்தச் சிந்தனைகள் வெளிப்பட்டன. ஆனாலும் அதற்கான முயற்சிகள் 1920-களிலே தான் நடைபெற்றன. முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒரு ராக்கெட் 1000 மீட்டர் அதாவது 3000 அடிக்குச் செங்குத்தாக மேலே எழுந்தது. அதுவரையிலே விமானம் என்பதெல்லாம் ஊர்ந்து, ஓடி, எழுந்து, பறப்பது, அதுதான் விமானத்தினுடைய அடித்தளம்.

ஆனால் ராக்கெட் என்பது நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக வானை நோக்கிப் பறப்பது. அப்படி முதன் முதலில் பறந்த ராக்கெட் ஜெர்மனியிலேயிருந்துதான் பறந்தது. அது 1931. பிறகு மெல்ல மெல்ல அந்தத் தொழில் நுட்பம் அங்கே வளர்ந்தது. ஹிட்லர் அந்த நாட்டுக்கு அதிபரானதற்குப் பிறகு ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்கு அவர் பேருதவிகளைச் செய்தார். அவருடைய நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனாலும் அந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் பேருதவிகளைச் செய்தார்.

அதனுடைய விளைவு என்னவாயிற்று என்றால் இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனிதான் முதன் முதலாக இங்கிலாந்தை நோக்கி ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான செய்தி.

ராக்கெட் தாக்குதலை முதன் முதலில் நடத்திய நாடு ஜெர்மனிதான். ஹிட்லர் அதிபராக இருக்கிறபோது இங்கிலாந்து நாட்டின் மீது அந்த தாக்குதல் நடைபெற்றது.

ஆனால் இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்குப் பிறகு, அமெரிக்கர்களும் சோவியத்து நாட்டைச் சார்ந்தவர்களும் அந்தத் தொழில் நுட்பத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். அதுவும் சொல்ல வேண்டுமென்றால் சோவியத்துதான் இரண்டாவது உலகப்போரின் இறுதியில் ஜெர்மனியை வெற்றி கொண்டது. அங்கே போன சோவியத்து விஞ்ஞான அறிஞர்கள் வீட்டோ என்கிற ராக்கெட்டையும் அதனுடைய தொழில் நுட்பங்களையும் கைப்பற்றித் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

பிறகுதான் சோவியத்திலே விண்வெளி ஆய்வகம் வளர்ந்தது. அதைப் போல ஜெர்மன் நாட்டிலே இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் சிலர் உலகப் போரினுடைய தோல்விக்குப் பிறகு அமெரிக்காவிலே குடி புகுந்தார்கள். அவர்கள் தான் அமெரிக்காவிலே இந்த விண்வெளி ஆய்வை வளர்த்தார்கள்.

எனவே சோவியத்தில் வளர்ந்தது ஜெர்மினியிலே தொடங்கிய ஆய்வு; அமெரிக்காவிலே உருவானது ஜெர்மனியில் இருந்து போன விஞ்ஞானிகள் கொண்டுபோன ஆய்வு. ஜெர்மனி தான் அதனுடைய அடித்தளமாக இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றைப் பயன்படுத்தி சோவியத்தும் அமெரிக்கர்களும் மிகப்பெரிய வெற்றியை இந்த அறிவியல் உலகத்திலே, விண்ணியல் உலகத்திலே அடைந்திருக்கிறார்கள். அதை மறுக்க முடியாது.

வரலாற்றிலே நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு சில நாட்கள் உண்டு. 1957-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி, அது தான் முதன் முதலாக விண்வெளியில் ஒரு ராக்கெட் சீறிப் பாய்ந்த நாள். ரஷ்யாதான் அதை அனுப்பிற்று ஸ்புட்னிக்-1 என்று அதற்குப் பெயர்.

அந்த ஏவுகணைதான் முதன்முதலாக பூமியைச் சுற்றி வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த ஏவுகணைக்குள்ளே ஒரு நாயை வைத்து அனுப்பினார்கள். ‘லைக்கா’ என்று அந்த நாய்க்குப் பெயர் பாருங்கள், வரலாற்றில் முதன் முதலாக ஏவுகணையில் பறந்தது காற்று மண்டலத்துக்கு வெளியேபோன பூமியைச் சேர்ந்த ஜீவன் ஒரு நாய்தான். ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு அந்த ஏவுகணையும், அந்த நாயும் அப்படியே எரிந்துபோய் விட்டன. எனினும் அந்த முயற்சி ஒரு பெரிய வெற்றி பெற்றது.

பிறகு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, 1916-இல் மறுபடியும் சோவியத்து ஸ்புட்னிக்-2 என்கிற இன்னொரு ஏவுகணையை அனுப்பியது. முதன் முதலாக ஒரு மனிதன் பயணம் செய்தான், மிகத் துணிச்சலாக அந்த ஏவுகணையிலே. ஏனென்றால் முன்னாலே போன நாய் எரிந்து போயிற்று. இவன் திரும்ப வருவானா என்று தெரியாது. ஆனால் முதன் முதலாக ஒரு மனிதன் யூரிகாகரின் என்பது அவனுடைய பெயர். அவன்தான் முதன் முதலாக விண்வெளியிலே பயணம் செய்தான்.

அதற்குப் பிறகு 62-ஆவது ஆண்டு விண்வெளியிலே எழுந்து நடந்து, நடந்து என்பதைவிட மிதந்துகாட்டிய முதல் பெண்மணி வாலன்டினா என்பதை நாம் அறிவோம். வாலன்டினாவினுடைய பெயர் இன்னமும் வரலாற்றில், அறிவியலின் பக்கங்களில் எழுதப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணம் அந்த பெண்மணி தான் முதன் முதலாக வான்வெளியிலே மிதந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியவர்.

சோவியத்துதான் விண்வெளி ஆய்விலே இப்படிப்பட்ட முயற்சிகளிலே முதல் வெற்றி பெற்றது. ஆனாலும் நிலவில் போய் கால்வைத்த பெருமை அமெரிக்கர்களுக்கு வந்து சேர்ந்தது. அடுத்தடுத்த முயற்சிகளிலே அவர்கள் இருந்தார்கள். அன்றைக்கு அந்தத் தொழில் போட்டி என்பது தொழில் நுட்பப் போட்டியாக, விண்வெளி ஆய்வுப் போட்டியாக அடிமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையிலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியை அமெரிக்கர்கள் பெற்றார்கள்.

1969-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20-ஆம் தேதி மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக நிலவில் மனிதன் கால் வைத்தநாள் அது. மூன்றுபேர் போனார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் கால்வின் என்கிற மூன்று பேர் அந்த ஏவுகணையிலே பயணம் செய்தார்கள்.

அதிலே கூடப் பாருங்கள் மூன்றுபேரும் வான்வெளிக்குப் போனார்கள். ஆனால் மைக்கேல் கால்வின் அந்த ஏவுகணையிலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. இரண்டு பேர்தான் நிலவில் கால் பதித்தனர். நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முதன் முதலாகச் சந்திரனின் மீது கால் வைத்தார்.

உலகமே அந்த நாளைக் கொண்டாடியது. உலகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக, விஞ்ஞானத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.

சந்திரனில் மனிதன் கால் வைத்தான். நிலவே வா… வா… என்று நாம் அழைத்துக் கொண்டிருந்தோம். நிலா…நிலா…ஓடிவா என்றோம். அது ஓடிவராது என்று தெரிந்தது. சந்திர பகவான் என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம். இல்லை சந்திரன் என்பது ஒரு துணைக்கிரகம். பூமியைப்போல அது இன்னொரு கிரகம் என்பதையெல்லாம் அந்த அறிவியல் ஆய்வு இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தியது.

எனவே அன்றைக்குத்தான் மனிதர்கள் முதன் முதலாக நிலவிலே கால் வைத்தார்கள் என்பதைக் காட்டிலும் முக்கியமானது, ஜுலை மாதம் 24-ஆம் தேதி அவர்கள் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார்கள் என்பது தான். இது விண்வெளி ஆய்விலே மகிப்பெரிய வெற்றிப்படி என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இதிலே மிகப்பெரிய பங்கு இருந்தாலும்கூட, இந்த விண்வெளி ஆய்வைத் தொடக்கி வைத்தது ஜெர்மனிதான் என்பதை இந்த நேரத்திலே நாம் நன்றியோடு நினைவுகூர வேண்டும்.

(ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்து)

Pin It