கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஆண்டீஸ் மலைத்தொடரில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் லியாலிமஸ் வார்ஜெண்ட்டே (Liolaemus Warjantay). இந்த இனம் பெருவின் தென்மேற்குப் பகுதியில் அரிக்கீட்டா (Arequita) என்ற பிரதேசத்தில் வாழ்கிறது. 4,500 மீ /14,700 அடி உயரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இதனை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் கண்டுபிடித்தது.அமைப்பும் பரவலும்
இதன் தலை அடர் சாம்பல் நிறத்துடன் உள்ளது. பெண் இனப் பல்லிகள் வெளிறிய மஞ்சள் நிற கண் இமைகளைப் பெற்றுள்ளன. அர்ஜெண்டினா, பொலிவியா, சிலி மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு இந்த இனத்தைக் கண்டுபிடித்தது. இதே வகையைச் சேர்ந்த 280 இனங்கள் பெருவில் உள்ள மத்திய ஆண்டீஸ் பகுதி முதல் தென்னமெரிக்காவின் தென்கோடி மூலையில் உள்ள படகோனியா (Patagonia) வரை காணப்படுகிறது.
தகவமைப்பு
இவை தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பல்வேறு தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. 2021 ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் இதே பிரிவைச் சேர்ந்த மற்றொரு பல்லியை இதே பகுதியில் 5,000மீ உயரத்தில் கண்டுபிடித்தனர். இதுவே உலகில் மிக உயரத்தில் வாழும் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் என்று அப்போது விஞ்ஞானிகள் கருதினர். இந்த கண்டுபிடிப்பு பூமியில் மனிதன் கண்டறிய வேண்டிய உயிரினங்கள் எண்ணற்றவை உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அண்டார்க்டிகாவில் மட்டுமே காணப்படும் இரண்டு பெங்குயின் இனங்களில் ஒன்றான எம்பரெர் பெங்குயின்கள் இன்று கடுமையான இன அழிவு அச்சுறுத்தலை சந்திக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. காலநிலை மாற்றத்தின் கெடுதியால் வரும் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கையில் மோசமான அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று அர்ஜெண்டினா அண்டார்க்டிகா ஆய்வுக்கழகத்தின் (IAA) நிபுணர்கள் கூறுகின்றனர்.
பசியும் பட்டினியும்
உணவுப் பற்றாக்குறை போன்ற கடும் பிரச்சனைகளால் இவை இன்று அழிந்து கொண்டிருக்கின்றன. உலகின் இப்பகுதியில் மட்டுமே காணப்படும் இவை பெங்குயின்களின் இனத்தில் மிகப்பெரியவை. புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் பனிப்பாறைகள் உருகுதல் இவற்றின் இனப்பெருக்க சுழற்சியை பாதிக்கிறது.
கடலில் கரையுடன் தொடர்புள்ள பனிப்பாறைகளில் இவை முட்டைகளை பொரிக்கின்றன. புவி வெப்ப உயர்வு காரணமாக பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகுவதால் இவை ஆண்டுகள் கணக்கில் இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இவற்றின் எண்ணிக்கை குறைகிறது. பனிக்கட்டிகள் உருகிய பகுதியில் குளிர்ந்த நீரில் நீந்துவதற்கும் முன்பே இவற்றின் குட்டிகள் நீரில் விழுந்து இறக்கின்றன. இது இவற்றின் இனம் பெருகத் தடையாக உள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழக்கும் பெங்குயின் குட்டிகள்
அண்டார்க்டிகாவில் ஹாலி பே காலனியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக முட்டை பொரிந்து பிறந்த குட்டிகள் முழுவதும் இது போல நீரில் விழுந்து குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் மூழ்கி உயிரிழந்தன.
சுற்றுலா மற்றும் மீன் பிடித் தொழிலில் ஏற்பட்ட பெருத்த மாற்றங்கள் இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணமாகிறது. இது உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வு இன்றுள்ள இதே நிலையில் தொடர்ந்தால் இந்த பெங்குயின்களின் காலனிகளில் 81% வரும் 2100ம் ஆண்டுடன் இன அழிவைச் சந்திக்கும் என்று அண்டார்க்டிகா பற்றிய ஆய்வறிக்கை (Scientific Community of Antarctica Research) கூறுகிறது.
கிழக்கிலும் மோசமான நிலை
கிழக்கு அண்டார்க்டிகாவிலும் பெரிய அளவில் வெப்பநிலை உயர்கிறது. இன்று நிலை அந்த அளவு மோசமானதில்லை என்று தோன்றினாலும் இந்த நூற்றாண்டின் இறுதியுடன் இவற்றின் எண்ணிக்கை இங்கு 31% குறையும் அபாயம் உள்ளது என்று உலக வன நிதியம் (WWF) கூறுகிறது.
எடுத்துக்காட்டாகும் எம்பரெர் பெங்குயின் குடும்பம்
இப்போது அண்டார்க்டிகாவில் 595,000 வயது வந்த எம்பரெர் பெங்குயின்கள் மட்டுமே வாழ்கின்றன. இவற்றை உயிரினப் பாதுகாப்பிற்கான சிறப்புப் பட்டியலில் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெண் பெங்குயின்கள் முட்டையிட்டு ஆண் பெங்குயின்களிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு உணவு தேடிச் செல்லும். அவை திரும்பி வரும்வரை ஆண் பெங்குயின்கள் முட்டையைப் பாதுகாத்து தன் இணையின் வரவிற்காகக் காத்திருக்கும். இந்த காத்திருப்பு 65 நாட்கள் வரை தொடரும்.
குழந்தை பிறந்தவுடன் பயணம்
இதன் பிறகு ஆண் பெங்குயின் முட்டை விரிந்து பிறக்கும் குட்டியை பையில் வைத்து பாதுகாக்கும். தாய் பெங்குயின் திரும்ப வரும்போது குழந்தையை இணையிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஆண் பெங்குயின் உணவு தேடிச் செல்லும்.
புவிப் பந்தின் தென் கோடி அழகு என்று வர்ணிக்கப்படும் இந்த அற்புத உயிரினங்கள் பேரழிவில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ வேண்டுமென்றால் புவியின் வெப்ப உயர்வு குறைக்கப்பட வேண்டும். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு குறைய வேண்டும். இதையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்த்த பூமியின் ஒரே ஒரு உயிரினம் மனிதன் மட்டுமே. காலநிலையில் நிகழும் மாற்றம் மனித மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வடக்கு மினிசோட்டா நன்னீர் பாதுகாப்பு மற்றும் சூழல் மண்டலப் பாதுகாப்பிற்கு நீர்நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மினிசோட்டா டுலூப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் எப்போகிராபி (Epography) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மினிசோட்டாவில் நீர்நிலைகளின் வளமான வாழ்விற்கு இவை முக்கிய பங்கு வகிப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து வெவ்வேறு இடங்களில் 70 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நடத்திய நீண்ட ஆய்வுகளின் முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு மற்ற பல ஆய்வாளர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும் என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் ஆய்வு மாணவர் டாம் காபிள் கூறியுள்ளார்.மனிதர்கள் மூலம் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளில் இருந்து கரையேற நீர்நாய்களை ஒரு உயிரி அறிவியல் கருவியாக பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மற்ற உயிரினங்களுக்கும் இவற்றின் செயல்கள் நன்மை அளிப்பதாக அமைந்துள்ளது. முக்கிய சூழல் மண்டலங்கள் எல்லாவற்றிலும் இதுபோன்று அவற்றைப் பாதுகாக்கும் உயிரினங்கள் வாழ்கின்றன.
இவை வாழும் இடங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தடுத்து நிறுத்த இவற்றால் முடியும். சூழல் பாதுகாப்பாளர் என்ற நிலையில் நீர்நாய்களின் செயல்கள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. வடக்கு மினிசோட்டாவில் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் சூழல் சீரழிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் இவை நன்னீர் சூழல் மண்டலங்களின் பன்மயத் தன்மையையும், அவற்றின் பாதுகாப்பையும் வளமூட்டும் முதன்மை சாளரங்களாக செயல்பட முடியும்.
இதன் மூலம் இந்த இடங்களின் செழுமை அதிகரிக்கும். வடக்கு மினிசோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில் நீர்நாய்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன என்றாலும் இவை வாழும் நீர்நிலைகளில் நீரின் அளவு, தரம் ஆகியவை பாதுகாக்கப்பட்டன.
மனிதன் தவிர பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் முதல் பாண்டாக்கள் வரை அனைத்து உயிரினங்களும் இயற்கையில் இருந்து பெறுவதைத் திரும்பிக் கொடுத்து வாழ்கின்றன. இவை சூழலிற்கு நன்மை செய்யாவிட்டாலும் சீரழிவை ஏற்படுத்துவதில்லை. மனிதன் செய்ய வேண்டிய சூழல் பாதுகாப்புப் பணியை நீர்நாய்கள் போன்ற சில உயிரினங்கள் செய்கின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
திமிங்கலங்களை வணிக நோக்கங்களுக்காக வேட்டையாடும் ஒரு சில நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. இந்நாடு இப்போது 2024ம் ஆண்டுடன் இதை முழுவதும் கைவிடத் தீர்மானித்துள்ளது. திமிங்கல இறைச்சியின் மீதுள்ள மக்களின் ஆர்வம் குறைந்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இதுபோல திமிங்கலங்களை வேட்டையாடும் மற்ற உலக நாடுகள்.
2019-2023 காலகட்டத்தில் நீலத் திமிங்கலங்கள் தவிர அளவில் பெரிய 209 பின் இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்களையும், அளவில் மிகச் சிறிய இனமான 217 மிங்க் வகை திமிங்கலங்களையும் வேட்டையாட அரசு ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது. இது இக்காலகட்டத்திற்குரிய வருடாந்திர ஒதுக்கீடு. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டைக்காக உரிமம் பெற்றிருந்த இரண்டு கம்பெனிகள் வேட்டையாடுவதை நிறுத்திக் கொண்டன.இந்த காலகட்டத்தில் 2021ல் ஒரே ஒரு மிங்க் திமிங்கலம் மட்டுமே வேட்டையாடப்பட்டது. இந்த வேட்டையாடல் காரணமாக கடல்வாழ் உயிரினங்களில் மிகப் பெரிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த திமிங்கலங்களின் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திமிங்கல பாதுகாப்பு சங்கத்தின் (International Whaling Commision IWC) உறுப்பினர் பதவியையும் ஐஸ்லாந்து ராஜினாமா செய்தது.
வணிக நோக்கங்களுக்காக இந்த உயிரினங்களை வேட்டையாட அனுமதி கிடைத்ததுடன் மக்களிடையில் இவற்றின் இறைச்சிக்கான தேவையும் குறைந்தது. 2006ல் அரசு முதல் முதலில் திமிங்கலங்களை வேட்டையாட அனுமதி அளித்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன.
சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மீன் பிடி தடை உள்ள கடலோரப் பிரதேசங்களின் (no fishing coastal zones) பரப்பு அதிகமானது. இதனால் திமிங்கலங்களைப் பிடிக்க வெகுதூரம் செல்ல வேண்டியதாயிற்று. இது வேட்டைக்கான செலவை அதிகரித்தது.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தர மதிப்பீடு உயர்த்தப்பட்டதுடன் இந்த உயிரினங்களின் இறைச்சி ஏற்றுமதியும் குறைந்தது.
இதனால் இப்போது அங்கு இந்த அற்புத உயிரினங்களின் வேட்டை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- வாழ வழியில்லாமல் தெருவில் அலையும் வனவிலங்குகள்
- புலி உள்ள காடே வளமான காடு
- 'காவலன்' புலி
- இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்
- தேனீ எனும் தோழன்!
- பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்
- வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?
- வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
- ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
- மாறிவிட்ட யானையின் வலசைத் தடங்கள்!
- புவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்
- அழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்
- காட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா
- பாம்புக்கு நடுங்க வேண்டுமா?
- புயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்
- அரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...
- தேரியில் குடியிருக்கும் ஒரு கொல்லாமரத்தின் தாகம்
- பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை
- விலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்