கீற்றில் தேட...
இயற்கை & காட்டுயிர்கள்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சீனாவில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை விலங்கு பாண்டா கரடிகள். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, தாய்லாந்து, மெக்ஸிகோ மற்றும் பல நாடுகளின் வனவிலங்கு சரணாலயங்களிலும் இவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் சிச்சுவான், ஷான்சி மற்றும் கன்ஷி வனப்பகுதிகளில் இவை வாழ்கின்றன. உலகின் தற்போது 2000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உள்ளன. பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே உண்டு வாழும் இவை தற்போது தட்டுப்பாடான உணவின் காரணமாக நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் ஈனும் இந்த பாண்டா கரடிகள் பிறக்கும் போது 15 செ.மீ நீளமும் 200 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும். சுமார் 15 முதல் 20 வருடங்கள் வாழக்கூடியது. பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டுமே தாயால் பராமரிக்க முடியும். எனவே மிருக காட்சிசாலைகளில் பிறக்கும் குட்டிகள் மனிதர்களால் பராமரிக்கப்பட்டாலும் இவற்றை எளிதில் பாதுகாக்கமுடியாமல் போனது. எனவே அதன் உணவு முறை மற்றும் மரபணு குறித்த ஆராய்ச்சியை பின்பற்றி தற்போது உணவு கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பாண்டா கரடிகள் அரிய வகை உயிரினம் மட்டுமின்றி மிகவும் விலை உயர்ந்த உயிரினமாகவும் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், இவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவுகளே.
சீனாவிடம் இருந்து பாண்டா கரடிகளை வாங்குவதற்காக அமெரிக்கா நிறைய பணம் செலவு செய்கிறது. வருடத்திற்கு சராசரியாக மூன்று மில்லயன் டாலர்களை அமெரிக்க செலவிடுகிறது. ஒரு பாண்டா குட்டியை வாங்குவதற்கு 6,00,000 டாலர்களை அமெரிக்க சீனாவிற்குக் கொடுக்கிறது. இந்த பணம் வனப்பகுதிகளில் வாழும் பாண்டா கரடிகளின் வாழ்கை மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படுகிறது. அழிந்து வரும் மூங்கில் காடுகள் இவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மிருகக்காட்சி சாலைகளில் பராமரிக்கப்படும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் தற்போது முன்னேற்றம் காணப்பட்டாலும், வனப்பகுதியில் வாழும் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்ப்படவில்லை. United Nations Convention on International Trade in Endangered Species(CITES) மற்றும் U.S Endangered Species Act தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.
இன்று உலகம் முழுவதும் பாண்டா கரடிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டாலும் இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சீனாவின் கையில் மட்டுமே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சீனாவின் வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. வனப்பரப்பை அதிகப்படுத்தி நிறைய மூங்கில் காடுகளை உற்பத்தி செய்தாகவேண்டியுள்ளது. முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செயற்கை கருவூட்டல் முறையில் பாண்டா கரடி பிறந்தது (Tai Shan). பாண்டா கரடிகளை வைத்து சீனா பணம் பண்ணும் வித்தை கற்றது பாண்டவிற்குத் தெரியாது போனாலும், அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க சீனா முயற்சி எடுத்தால் மகிழ்ச்சியே.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் மட்டுமே காணப்படும் அரிய விலங்கு சுமத்திரா புலிகள். உருவத்தில் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இவற்றின் நிறமும் மற்ற புலி இனங்களைக் காட்டிலும் வேறுபட்டு காணப்படும். ஆண் புலிகளுக்கு பிடரி மயிர் உண்டு. வேகமாக நீந்தும் தன்மை கொண்ட இந்த புலிகள், நீர் வாழ் உயிரினங்களை எளிதில் வேட்டையாடி உண்ணும். இது தவிர காட்டுப் பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடும்.
பொதுவாக அடர்ந்த மழைக் காடுகளில் இவை வசிக்கும். 12000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்தில் ஏற்பட்ட உயர்வு காரணமாக சுமத்ரா தீவுக்குள் மட்டுமே முடங்கிய புலிகள் பரிணாம வளர்ச்சியில் இன்று தனித்தன்மையோடு உருவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானூறுக்கும் குறைவான புலிகளே உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இவற்றைப் பாதுகாக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேளான் நிலங்களுக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதும், புலிகள் தொடந்து வேட்டையாடப்படுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மிகவும் அருகிவிட்ட (Critically Endangered) இனமாக இந்த புலிகள் International Union for Conservation of Nature ஆல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணமுடியாத இந்த வரையாடு தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தமிழ் நாட்டின் மாநில விலங்காகவும் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் நீலகிரியை ஒட்டிய பகுதிகளில் வாழும் இவை மிகவும் அரிதான விலங்காக மாறியிருக்கிறது. 80 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட இந்த வரையாடு சுமார் 1200 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான இடங்களில் வாழ்கிறது. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கிறது. பழனி மலை பகுதிகளிலும் அரிதாகக் காணப்படுகிறது. இந்த விலங்கை வேட்டையாடுவது தடை செய்யபட்டிருக்கிறது. நிறைந்த புல்வெளிப்பகுதிகள் இவற்றின் வாழ்வுக்கு சிறந்த இடமாக இருக்கிறது. தற்சமயம் வெறும் 2000 வரையாடுகள் மட்டுமே இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி.
International Union for Conservation of Nature - தகவலின் படி இந்த விலங்கு அருகிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும். ஆண் பெண் இரண்டுக்கும் வளைந்த கொம்புகள் உண்டு. இமாலய காட்டாடு மற்றும் அரேபிய காட்டாடு தவிர்த்து வனத்தில் வாழும் முக்கியமான ஆடு இதுவாக இருக்கிறது. இவற்றைப் பாதுகாக்க மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. வேட்டைகளில் இருந்து இவற்றைப் பாதுகாக்க இந்த வரையாடு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லப்படவேண்டும்.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருந்த நீர் நாய்கள் இன்று அரிதாகிவிட்டன. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட இந்த நீர் நாய்கள் பல்வேறு சீதோசன நிலைகளிலும் வாழக் கூடியது.
சுமார் 10 ஆண்டுகள் வரை வாழும் இவை, பிறந்து இரண்டு ஆண்டு முதல் குட்டி போடத் துவங்கும். பிறந்து இரண்டு மாதம் தொடங்கி நீரில் நீந்துகிறது. பெரும்பாலும் மீன்களையே உண்டு வாழும். இது தவிர தவளை, நண்டு போன்றவற்றையும் உணவாக எடுத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு வகையான நீர் நாய்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடலில் வாழும் நீர் நாய்கள் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.
நீர் நிலைகளின் தரத்தை அங்கு வாழும் நீர் நாய்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீர் நாய்கள் வாழாத இடம் இயற்கை சுழற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
அதிகப்படியான மீன் பிடிப்புகளால் இவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் இவற்றின் தோல்களுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. 2000 -ல் மட்டும் சுமார் 326 நீர் நாய்களின் தோல்கள் வட இந்தியாவில் கைப்பற்றப்பட்டன. இவற்றை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் நம் ஊரை சுற்றி இருக்கும் குளம், ஏரிகளில் கூட இவை விளையாடுவதைக் காண முடியும். மிகவும் எளிமையாக பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்களைக்கூட நாம் இழந்து வருகிறோம்.
- அழிந்து வரும் சோலை மந்தி
- பழனி மலை தொடர்ச்சி
- மிரட்டும் தவளைகள்
- எறும்புக்கூட்டம் - யார் அந்த ராணி?
- டார்வினின் விதி மீறும் நாய்கள்
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?
- நான்கு கொம்பு மான் (Four horned antelope–Tetracerus quadricornis)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை
- புலிகளும் புரிதலும்
- சப்தங்கள் பொதுவானதா?
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?