Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Inmai
Inmai
பிப்ரவரி 2008

மூன்றுகால் முயலின் கண்கள்
ஸ்யாமெயின்

இருப்பிடம் இழந்த குருவுக்கு குடல் அழுதது.

அம்மனைக் கும்பிடவோ அப்பன் முருகனை நேரவோ என்று அழுதுகொண்டு திரியும் ஆடுகள் மாடுகள் ஆகிய அறிவுள்ள ஜீவன்களுக்கு மத்தியில்
இந்த ஆடுகள் மாடுகள் பிடித்துண்ணும் காண்டா மிருகமொன்றின் (காண்டா மிருகம் மச்சம் தின்னாது என்போரை வெறுப்போம்). உறுமலில் பிறந்தது கணீரென்ற சண்டித்தனம்.

கடகம் கீறிய காதாவடியில் விழுந்தது பளார் என்றொரு அறை.
கயிரும் கம்பியும் கண்ட கண்ட மனிதற்ற வாயும் கடித்த கை காண்டாமிருக (சாணி) பிசைந்தது.

அம்மாவென நம்புவேன் அவர்கள் கதைகளை.
மூண்றுகால் முயலோடு வந்த முற்போக்கு என் பிடரியை குத்தி வருடியது.

என் முட்டி தட்டி முதுகில் பல்லக்கிறக்க சவுக்கெடுப்பர்.
இந்த காலிடப்பா அவர்தம் கால்களில் இடறி கீறி கிழியும்.

பருப்புகளுக்கும் பறவை இனத்துக்குமே ஒரு கேடு.

கட்டை விழ மறுக்கும் நித்திரை வெறியனின் கையிலிருக்கும் புனித புத்தகங்களின் வசனங்களை காலை ஓதி மாலை ஓதி காலம் இறக்கும் வரை ஓதி கடைசியில் எம் கழுத்திலும் கழிப்பர். குறைபாடுகளற்ற மந்திரம் இயற்றுவர்.

இரவிலும் இருட்டிலும் பல் நறும்பி கதிரை குரைக்கும்.
..எம் குடலுருவி கதிரை குரைக்கும்.
மில்லியன் தலைகள் உருண்டதால் தவளைக்கென்ன கவலை?
ஒரு கொக்கரிப்பில் கூரை கவிழும் - நம்பர்கள் தெறிக்கும்.

குரல்வரும் குரல்வளை அவர்தம் அரசுடமை.

வரலாறு அறும் அறும் என்று காத்திருந்தபின் பிடரியில் விழும் கோடரி.
எம் வரலாறு அறுந்து நிசக்கும்.
உம் மதம் பிறந்து உலுப்ப கண் மறைக்கும்.

தூரத்திருந்த பாயில் கிடக்கும் முள் துண்டு மேலும் மெலியும்.

பொறுக்கிகள் எம் குரல்களில் பேசுவர்.
எம் கனவுகள் வாழ்வர். உயிரில் வரி எடுப்பர். நுகர்வர்.
எம் பாட்டனுக்கு நடந்த கதை சொல்லி புதிய கதையில் எம் புகழை குடிப்பர்.

மூண்றுகால் முயலுக்கு எல்லாம் கண்மறைக்கும்.
கரும்பேரிருட்டு சுவைக்கும் மூளை
வரிக்கு வரி கண்கெட்ட முறையை வாந்தியெடுக்கும்.
-அது மொக்கு.

அது அப்படியிருக்க ஒரு கூட்டம் ‘கட்டிடம் வளர்க்கும்’ கண்கான மறுத்த கேள்விகள் தெறிக்க பைப்படி இருந்து பல்லடி வரையும் வீணே சிந்தி தெறிக்கும்.

மரம் மாடு ழூன்றுகால் முயல் என்று அன்பு செய்தல் நல்லது.
அன்பை உயிர் சொருகி உரசிப் பழகுவது ஓசியில் கிடைக்கும்.

மனிதவெள்ளம் மயக்கும் கருத்துத்தாகம் மௌனம் இருந்து பிறக்கும்.
நல்லது தோழர்கள்.
கண்ழூடி நன்மைக்கும் நட்புக்கும் உடன்படுவோம்.
உள்நெருப்பு கத்தும் வறுமைக்கும் உடன்படுவோம்.
நெருக்கி நொறுக்கி பற்களின் இடுக்கில் தப்பித்தவறி கிடக்கும் ஒருசொட்டு இரத்தத்துடன் நட்பும் நன்மையும் தவிர நெருப்பில் கூடி நிரப்பவா முடியும்?

நியாயமான கேள்வி.
நாமென்ன கட்டிடம் வளர்க்கவா உம் கைகளை கேட்டோம்.
ழூக்கிலடிக்கும் உங்கள் எதிரியின் பகலை கடித்து அவர்தம் முத்திய தடிப்பை உறிஞ்சத்தான் பங்கு கேட்டோம்.
வரலாறு கொண்டு காது குடைவதில் கண்கள் இருளும்.
நெருப்பின் பகுதிகள் கரம் நீட்டி அணைப்பது ஒரே ஒரு புரட்சிதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

http://semmalar.keetru.com/

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP