மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்
விம்மி வலித்து கசிகிறது எனதன்பு - நீயோ
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய்
வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி
ஓயாமல் அலைகின்றேன் - நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்
இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய்
வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு
புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு
- செ.சுஜாதா, பெங்களூர்.
*
வெறுமனே
அருமை என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்த விடாமல் மேலும் கொஞ்சம் அதைப் பற்றி எழுதத் தூண்டிய கவிதைக்கு நன்றி..
அன்பின் தீக்கொடி -
தலைப்பிலிருந்தே உள்ளே இழுத்துக் கொண்டன சொற்கள்
//புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு//
பேச்சற்று போகச் செய்யும் பதம்..
( முதல் பத்தியைப் பற்றி எழுதவே மனம் பதறுகிறது )
--இளங்கோ
வலியைக் கொடுக்கக்கூடிய வரிகள் மிகவும் லாவகப்பட்டிருக் கிறது உங்கள் கரங்களுக்கு.... .தொடருங்கள்..
RSS feed for comments to this post