கைஉயர்த்தி
அடித்தொண்டையில் இருந்து
பீறிட்டெழும்
முழக்கங்களில் கனலும்
எதிர்க்குரல்கள்
தடியடிகளிலும்
கண்ணீர்ப்புகையிலும்
பீச்சியடிக்கப்படும்
சரமாரியான
நீர் அம்புகளிலும்
உருகி வழிந்தோடுகின்றன
மக்களின்
ரௌத்திரங்கள்
எரிந்துகொண்டிருக்கும்
கொடும்பாவியின்
தீச்சுவாலைகளில் தெரிகிறது
நசுக்கப்பட்ட மக்களின்
கோபக்கனல்
இத்தனைக்கும் நடுவே
நரமாமிசம் புசித்து
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நா.இளங்கோ
- பிரிவு: கவிதைகள்
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்....இது ஆசனத்தையும் குறிக்கும்..ஆதி னத்தையும் குறிக்குமோ!!!!!
RSS feed for comments to this post